Bhakthi movement

Post Reply
sam
Posts: 1041
Joined: 04 Mar 2020, 20:25

Bhakthi movement

Post by sam »

8

HISTORY .OF INDIA -SOME ASTOUNDING FACTS-BAKTHI MOVEMENT


18-8-2016

புத்தர் காலத்திலேயே ( கி.மு.600), அதற்கும் சற்று முன்பாக, ஆப்கானிஸ்தான், இன்றைய பாகிஸ்தான் , ஆகிய பிரதேசங்கள் , பெர்சிய பேரரசின் கீழ் இருந்தன. !. கி.மு. 700 ல் , இன்றைய பெஷாவர் ( புருஷபுரம்) , பகுதியில், உலகப் புகழ் பெற்ற பல்கலைக் கழகம் இருந்தது. மத்திய ஆசிய, அரேபிய, பெர்சிய , கிரேக்க அறிஞர்கள் பலரும் அங்கு கற்றும் கற்பித்தும் உள்ளார்கள். சம்ஸ்க்ருத மொழிக்கு புகழ்பெற்ற இலக்கண நூல் எழுதிய பாணினி அங்குதான் கற்பித்தார். ..இரு நூற்றாண்டுகள் பின்னர், பெர்சிய பேரரசு , அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்டபின், அலேக்சாண்டர் படைகளையும் இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் இருந்து விரட்டிவிட்டு சந்திர குப்த மௌர்யன் , அப்போது வலுவாக இருந்த கங்கைச் சமவெளியின் மகத சாம்ராஜ்யத்தையும் கைப்பற்றி, இன்றைய கர்நாடக sravanabelkola வில் , ஒரு சமண துறவியாக மாறி, உண்ணாநோன்பு இருந்து மறைந்தது வரலாறு. அசோகன் காலத்தில் ( கி,மு,200) தமிழ்நாட்டில் கூட, காஞ்சிபுரம் பகுதிவரை மௌர்ய சாம்ராஜ்யம் நிலவியது. .

.3) இஸ்லாம் அரேபியாவில் தோன்றிப் பரவியது கி.பி. 600. ! அதிலும் , இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந் மாவட்டத்த்தோடு நின்று விட்டது. ஆனால், மேற்கே இராக், சிரியா, பாலஸ்தீன், எகிப்து, லிபியா, அல்ஜீரிய, டியூனீஷியா ,மொரோக்கோ, வழியாக ஸ்பெயின் நாட்டில் கிட்டத்தட்ட முழு நாட்டிலும் அதன் ஆட்சி பரவியது. துருக்கியிலும் !.. இதை நேரு அரேபியாவின் எழுச்சியாகக் காண்கிறார்.

. 4) ஷியா பிரிவினர் இன்றைய இரான் ( பெர்சியா) நாடு முழுவதும் பெரும்பான்மை மக்கள். அதனை அடுத்த இராக் நாட்டிலும், ஷியா பிரிவினர்தாம் பெரும்பான்மை.

..ஆனால், உலகில் உள்ள மற்ற அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் சன்னி பிரிவினர் தாம் உள்ளனர்.
..சன்னி பிரிவினர் என்றால், சகிப்புத் தன்மை இல்லாதவர்கள், என்ற பார்வை மிக மிக தவறானது. . இன்றைய பங்களதேஷ் நாட்டில் சன்னி பிரிவினர் தாம் ..மிகமிகப் பெரும்பான்மை . ஆனால், வலதுசாரி இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்த நாட்டின் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் புதல்வி ஹசீனா வின் அவாமிலீக் கட்சியும், அங்கு உள்ள உச்ச நீதி மன்றமும், தயவு தாட்சண்யம் இல்லாமல் , நடவடிக்கை எடுத்து வருவது நாம் காண்கிறோம்.

துருக்கி பல ஆண்டுகள் மத வழிகாட்டும் மையமாக KHALIPHATE இருந்தது. ஆனால், முதலாம் உலகப் போர் காலத்திலேயே கமால் பாஷா தலைமையில், பழமைவாதத்தை ஒழித்து, மேற்கத்திய அறிவியல் பிரயாணத்தை மேற்கொண்டது. ( நேரு அதை ஆதரித்து எழுதியுள்ளார்) . பிற்போக்கு மௌல்விகளின் ஆதரவுடன் காந்திஜி கிலாபத் இயக்கம் தொடங்கியது ,நேருவுக்கு ஒப்புதல் இல்லை! )..

….வியத்தகு விஷயம் எதுவெனில், வட இந்திய -தென் இந்திய கலாச்சார – மொழி பரிவர்தனைகளுக்கு , ஈரான்- இராக் , பகுதிகள்தான் தோற்றுவாய். ! இன்றைய இந்திய கலாச்சாரம் முற்றாக ஈரான்-இராக் பண்பாட்டின் கலவை தான். ( காண்க : நீலகண்ட சாஸ்திரி..தென் இந்திய வரலாறு).

சங்க காலத் தமிழுலகிற்கு , பக்தி இயக்கம் புதிதல்ல. பரிபாடல் முற்றும் முழுவதும் வைணவ இலக்கியம்.. சமணரான் இளங்கோ அடிகளின் சிலம்பின் மதுரைக்காண்ட ஆய்ச்சியர் குரவை, வைணவத்தின் பொக்கிஷம்.

பின்னர் ஆழ்வார்கள். .அதன் பின்னர் ராமானுஜர். மாதவாச்சார்யர். ( கர்நாடகம்) .. பின்னர் ராமானந்தர். இவர்கள் எவருமே ஜாதி வேறுபாட்டையையோ ,தீண்டாமையையோ, , கற்பிக்கவில்லை.
..இஸ்லாம் இந்தியாவில் பரவியது, வெறும் முஸ்லீம் அரசர்களின் கட்டாயத்தினால் அல்ல. மாறாக , இந்தியாவின், பௌத்த, சமண, வைணவ பக்தி இயக்க துறவிகளின் வழியிலேயே , இஸ்லாமிய யோகிகளும், எளிய மக்களிடம் வாழ்ந்து, அவர்களுக்கு சேவை செய்து, அவர்களிடையே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று போதித்து, அவர்களின் மனம் கவர்ந்ததால் ஏற்பட்ட மாற்றம்.

இந்தியாவின் கிழக்கு கோடியில், கோடிக்கணக்கான வங்காள தேச மக்கள் அனைவரும் எப்படி இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்கள் என்று விவேகானந்தர் வினவுகிறார். .
அன்றும் இன்றும் , வைதீக ஹிந்து மதத்தில் நிலவும் பிறவி அடிப்படையில் ஆன சமூக அநீதிகளே , அவ்வர்று எளிய மக்கள் திரள் திரளாக இஸ்லாம் வழியை ஏற்றுக்கொண்டதற்கு காரணம் என்று சுட்டிக்காட்டுகிறார். .

.ஹிந்து மதமும், வைதீக மதம் அல்ல. குறிப்பாக, பக்தி இயக்கம் , இந்தியா முழுவதும் பரவி , இஸ்லாம் போதித்த சமத்துவச் செய்தியை பரப்பியது. ஒரு கலவை உண்டானது. அதன் குரல், கபீர், துளசிதாஸ், மீராபாய், துக்காராம், மராட்டிய பக்தி இயக்கம், குஜராத்தில் நரசி மேத்தா ,வங்கத்தின் சைதன்ய மஹாப்ரபு, ஒரிஸ்ஸாவின் ஜெயதேவர், ஆந்திர பத்ரசாலம் ராமதாசர், பஞ்சாபில் குரு நானக், கேரளத்தில், நாராயண குரு, ,,என நீண்ட ஒரு சமத்துவ ,சமரச பாரம்பரியத்தை உண்டாக்கியது. இன்றும் நீடிக்கிறது.

ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதத்தில் இதை நாம் நன்கு உணர்கிறோம். .. தமிழ்நாட்டில், மதுரை கோரிப்பாளையம், நாகூர் , ஏர்வாடி தர்ஹாவில், அனைத்து மதங்களை சார்ந்த மக்களும் ஒன்று கூடி , மறைந்த மகான்களுக்கு அஞ்சலி செலுத்துவது தொடர்கிறது.

.மராட்டிய மண்ணில் உள்ள ஷிரதி க்ஷேத்ரத்தில் கோடிக்கணக்கான அனைத்து மதத்தினரும் தொழுதேத்தும் சாய் பாபா ( அவர் ஒரு முஸ்லீம் துறவி…சித்தர் ). நினைவிடம் உள்ளது. அவர் இஸ்லாமிய ர்களைவிட இந்துக்களால் மிகவும் போற்றப்படுகிறார்.

காந்திஜி கூறியது போல ‘கடவுளுக்கு மதம் ஏது? “. .. சொல்லிக் கொன்டே போகலாம். ..

கர்நாடக சங்கீதத்தின் மூலவர் என்று போற்றப்படும் புரந்தரதாசர் ,ஜாதியத்தையும், தீண்டாமையையும் வெறுத்து ஒதுக்கி, சமத்துவப் பிரச்சாரம் செய்த புரந்தரதாசர் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்தவர். (கி.பி. 1500) . வட இந்தியாவில் (1600)அக்பர்! அவரும் மத நல்லிணக்கம் காண தீன் இலாஹி என்று புதிய சமயம் தோற்றுவித்தவர்.
அக்பர் காலத்தில் , அதே உத்தர பிரதேசத்தில் , அனைத்து மக்களும் போற்றும் ஹிந்தி ராமாயணம் எழுதிய துளசிதாசர் வாழ்ந்தார் என்று ஒரு PUNCH LINE கொடுத்து, நேரு அக்பர் பற்றிய கட்டுரையை முடிக்கிறார். .

…துளசிதாஸ் ராமாயணம் எப்படி, உத்தரப்பிரதேசத்தில் புரட்சிகர விவசாயிகள் இயக்கத்தை நடத்து உதவியது என்பதை, நேரு தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார். ..

vgovindan
Posts: 1950
Joined: 07 Nov 2010, 20:01

Re: Bhakthi movement

Post by vgovindan »

Even Swami Vivekananda went wrong by assuming the research and writings of Max Mueller about Aryan theory, to be true; what to talk of lesser persons like Nehru and Sastry! Therefore, please do not revive that debunked theory of 'Aryan'. It would be better to talk less about Dravida - it is a corruption of 'dramila' ' (द्रमील), which is the Sanskrit version of Tamil. I am not disputing anything about Bhakti movement.

sam
Posts: 1041
Joined: 04 Mar 2020, 20:25

Re: Bhakthi movement

Post by sam »

RSR has written somewhere that Pandyas migrated to Far South from the jana padhas of Mathsyadesam and Surasens desam on the bamks of Yamuna river. This happened sometime in 1000 BC at the time of Mahabaratha war. The Tamils were a distinct linguist group in north india living in gandharam ( afganistan) as sibians..chozhas, in Rajasthan as chera and in surasena as pandyas.
Perhaps, they had migrated from mesapotamia , the present day Iraq.
This might have happened during the great period of Persian empire of Xerxes. Just prior to Alexander.
.
The word Dravid as you say is the sanskritic name of thamizh.
.
That the Aryans..fire worsipers came from central Asia long back as pasoral nomads is the opinion of Lokamaanya Baala gangaadhara Tilak. He was primarily a vedic scholar. Kindly read jis Arxtic home of the Aryans.
.
K.A.Nilakata ssastry is a renowned schoar in history. Wiki will give full details about his dozens of acclamed research works.
You can also read about Sir. EDWARD JONES, the linguist genius.
.
My understanding is that the far south is primarily sumerian, chaldean and assyrian people who migrated to safe plave from mesapotamia after Zerzes defeated them. The Elamite civilization also was part of thar migration.
.
PuraNaanoou explicitly mentions Pandyas as the descendants of Paandavas.
Srimat Bhaagavatham also speaks about Pandyan king Sathyavrathan, noah-s arc, deluge, mathsya avathaaram.
It is a very faxcinating field of study.
,
In fact, V.V.S.Iyer no mean schoar, has written that the Tamils serrled in Iraq.
.
Essentiallly then, the Hindu religion is mainly a sumerian religion and not a vedic religion.

I had read a wonderful nook titled ARYA TARANGINI decades back which chronicles the persistent strubble between the central asian aryan tribet and the semetic people in middle esst.
An essential handbook for serious students of ancient history.
.one more great book is by PARGITRR based on Vishnu puraaNam.
.
.https://en.m.wikipedia.org/wiki/F._E._Pargiter
In his Ancient Indian Historical Tradition, taking the accession of Chandragupta Maurya in 321 BC as his reference point, Pargiter dated the Battle of Kurukshetra to 950 BC assigning an average of 14.48 years for each king mentioned in the Puranic lists.[
..





.

sam
Posts: 1041
Joined: 04 Mar 2020, 20:25

Re: Bhakthi movement

Post by sam »

TAMILS ARE ANCIENT PANDYANS




புறம்-56
======

pandyans

“நீயே,
தண்புனற் காவிரிக் கிழவனை;

இவனே
முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழுநிழல் நெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்குஅறத் தழீஇ
இளையது ஆயினும் கிளைஅரா எறியும்
அருநரை உருமின் பெருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவர் ஏறே;

நீயே
அறந்துஞ்சு உறந்தைப் பொருநனை;
இவனே,
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளியவென
வரைய சாந்தமும் திரைய முத்தமும்
இமிழ்குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே!

பால்நிற உருவின் பனைக்கொடி யோனும்
நீல்நிற உருவின் நேமி யோனும்என்று
இருபெருந் தெய்வமும் உடன் நின் றாஅங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இந்நீர் ஆகலின் இனியவும் உளவோ?

இன்னும் கேண்மின்நும் இசைவா ழியவே;
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடனிலை திரியீர் ஆயின் இமிழ்திரைப்
பெளவம் உடுத்தஇப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே;

அதனால், நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறியர் போலவும்
காதல் நெஞ்சின்நும் இடைபுகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது
இன்றே போல்கநும் புணர்ச்சி; வென்றுவென்று
அடுகளத்து உயர்கநும் வேலே; கொடுவரிக்
கோள்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆகபிறர் குன்றுகெழு நாடே.”
———————————————————————–
நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்;

இவனோ, பருத்த அடியுள்ள ஆலமரத்தின் அடிமரம் வெட்டப்பட்டு அழிந்தாலும், அதன் நெடிய நிழல் தரும் கிளைகளை விழுதுகள் தாங்குவதைப்போல், முன்னோர்கள் இறந்தாலும், தான் தளராது, நல்ல புகழுள்ள தன் பழங்குடியைத் தடுமாற்றமில்லாமல் காத்துத், தான் சிறிதே ஆயினும் பாம்பைக் கூட்டத்தோடு அழிக்கும் வெண்ணிற இடிபோல் பகவரைக் காணப் பொறாமல் போரில் சிறந்த பஞ்சவர் ஏறு .

நீயோ, அறம் நிலைபெற்ற உறையூரின் தலைவன்
இவனோ நெல்லும் நீரும் அனைவருக்கும் எளிதில் கிடைப்பவை என்று கருதி யாவர்க்கும் பெறுதற்கரிய மலையில் விளையும் சந்தனம், கடலில் விளையும் முத்து, முழங்கும் முரசு ஆகியவற்றுடன் தமிழ் பொருந்திய மதுரையில் செங்கோல் செலுத்தும் வேந்தன்.

பால போன்ற வெண்ணிற மேனியும் பனைக்கொடியும் உடைய பலராமனும் நீல நிற மேனியையுடைய திருமாலும் ஆகிய இரண்டு கடவுளரும் ஒருங்கே கூடி இருந்தாற் போல் அச்சம் பொருந்திய காட்சியொடு நீங்கள் இருவரும் விளங்குவதைவிட இனிய காட்சியும் உண்டோ? உங்கள் புகழ் நெடுங்காலம் வாழ்வதாக! மேலும் கேட்பீராக!
—————————————————-

கலித்தொகை..(.முல்லைக்கலி….104)….( முல்லைக்கலி 17 பாடல்களும் பாடியது சோழன் நல்லுருத்திரன் என்னும் கவிஞர்).—————

“மலி திரை ஊர்ந்து, தன் மண், கடல் வௌவலின்,

மெலிவு இன்றி, மேல் சென்று, மேவார் நாடு இடம்பட,

புலியொடு வில் நீக்கி, புகழ் பொறித்த கிளர் கெண்டை,

வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன்“…………..

.( ஒரு காலத்தில் , கடல் அலைகள் , பாண்டிய நாட்டின் நிலப்பரப்பை மூழ்கடித்ததால் , மனம் சோராது ,

மற்றவர் நாட்டில் புலிக்கொடியும், விற்கொடியும் நீக்கி , மீன் கொடியை நாட்டிய ஆற்றல் மிகு, குறைவில்லாப் புகழ் மேவும் தென்னவன்!

)……”ஆங்கு,தொல் கதிர்த் திகிரியாற் பரவுதும் ஒல்கா உரும் உறழ் முரசின் தென்னவற்கு ஒரு மொழி கொள்க, இவ் உலகு உடன்!”………(தொன்மைப்புகழ் ஒளிவீசும் , சக்கரப்படைபோற்றுவம் .!
இடியோசை எழுப்பும் தென்னவன் முரசம் !

அவன்தன் ஒருமொழியே , கொள்க இவ்வுலகு ! )========
“தோள் வலி துணி பிணி, துறந்து இறந்து எய்தி, மெய் சாய்ந்து,கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான்மேல் செல்லாது,மீளும் புகல் ஏற்றுத் தோற்றம் காண் மண்டு அமருள் வாள் அகப்பட்டானை, ‘ஒவ்வான்’ எனப் பெயரும் மீளி மறவனும் போன்ம் “—–( தோள் வலிமையினால், ஏறு தழுவத்துணிந்து ,தழுவ இயலாது , வழுக்கித் தன முன்னே கிடப்பானை ,தன் வாள் முன்பு வீழ்ந்தானை , தனக்கேற்ற பகை அன்றுஎனக் கோராமல் புறம் விலகும் மறவன் போல் ,விலகிச்செல்லும் காளை காண் )
—————————————————————————————————
“இலங்கையின் பழைய சரித்திரத்தை விளக்கும் “மகா வம்சம்” என்ற பௌத்த சரித நூல், அந்நாட்டின் முதல் வேந்தனும் , புத்தர் மறைந்த கி.மு.478ல் இலங்கையை ஆட்சி செய்தவனுமான விஜயன் , ஒரு பாண்டியர் குலப்பென்மணியை மணந்தான் என்றும், ஆண்டுதோறும் தன மாமனாகிய பாண்டியர்க்கு சிறந்த பரிசில் அனுப்பினான் என்றும் கூறுகிறது!……..( பாண்டியர் வரலாறு……கல்வெட்டு ஆராய்சிப்பேரறிஞர் சதாசிவ பண்டாரத்தார்.).
—————————————————————————————————-
சங்க இலக்கிய எட்டுத்தொகை நூலகளில் , கலித்தொகையும் ,பரிபாடலும் , காலத்தால் சற்று பிந்தியவை என்பது அறிஞர்களின் முடிவு. ….பரிபாடலில் முருகன் , திருமால் பற்றிய பாடல்கள் நிறையவே உண்டு. …….கலித்தொகையிலும் பல பாடல்களில் மகாபாரத கதையை ஒட்டிய பல குறிப்புகள் உள்ளன… கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன. அவற்றில் 17 பாடல்கள் மட்டுமே முல்லைத்திணைப்பாடல்கள். ,,,… இன்று அநத 17 பாடல்களையும் மீண்டும் படித்தேன். அனைத்துமே சிறப்பானவை….. அவற்றுள் 7 பாடல்கள் மட்டும் ஏறு தழுவுதல் பற்றிய பாடல்கள். … சங்க இலக்கியத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அகத்துறைபாடல்களில் ..இந்த ஏழு பாடல்கள் மட்டும் தான் ஏறு தழுவுதல் பற்றியவை என்று கூறுகிறார்கள்! இதனாலேயே முல்லைக்கலி தனித்துவம் வாய்க்கப்பெறுகிறது. .. மேலும் கலித்தொகை மட்டும், நாடக பாணியில் உரையாடல் போல அமைந்துள்ளது மிகவும் இனிமையாக இருக்கிறது. ….அனைத்துமே பாண்டிய நாட்டையும்,பாண்டியன் பெருமையையும் பாடுகின்றன! ….வியப்பேதும் இல்லை. “தமிழ் கண்டதோர் வையை , பொருணை ” அல்லவா!… சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவன் பாண்டியன் மட்டுமே அல்லவா! ..இன்றும் கூட , மதுரை, நெல்லைச்சீமையின் தமிழ் , மற்ற பகுதிகளின் வழக்குமொழியைவிட ,சிறப்பாக உள்ளதல்லவா! .. சங்க இலக்கியப் புலவர்களில் மிகப்பெரும்பான்மையினர் பாண்டிய நாட்டை ச்சேர்ந்தவர்கள் .! ராமாயணம் எழுதப்பட்ட கி.மு.500ல், தென்னாடு என்றாலே .. . பாண்டியநாடும் கபாடபுரம் என்ற கொற்கையும் அதன் ஒளிவீசும் முத்துக்களும் தான்…

. “இப்பி ஈன்று இட்ட எதிர்கதிர் நித்திலம் கொற்கையே அல்ல படுவது!”
என்று தொடங்கும் முத்தொள்ளாயிரப்பாடல்!” …பின் வேறு எங்கு கிடைக்கும் என்றால் ?

“கொற்கைக் குருதிவேல் மாறன் , குளிர் சாந்து அணி அகலம் கருதியார் கண்ணும் படும்!”… என்று முடியும் அந்தப்பாடல்!

Shared from a blog

vgovindan
Posts: 1950
Joined: 07 Nov 2010, 20:01

Re: Bhakthi movement

Post by vgovindan »

இசைக்கலையினை அறிவுக் கண்ணோட்டத்தோடு (intellectually) நோக்குவோருக்கு -

https://tamizhini.in/2023/01/30/%E0%AE% ... %E0%AF%8D/

sam
Posts: 1041
Joined: 04 Mar 2020, 20:25

Re: Bhakthi movement

Post by sam »

An inspiring book by Vinayaka Damodar Savarkar
https://gilbert-slater.blogspot.com/202 ... arkar.html
.
Absoljtely factual and ratiinal

Post Reply