
1. பருத்திபுர வாசா! ஷிரடி நகர் ஈசா!
ஒன்றென்று அறிந்தேன்
என்றென்றும் தொழுவேன்….
கணநாயகன் துணையுடன்...
சிதறி ஓடும் எண்ண சுமை நீக்கி
உள்ளத்தை ஒருமுகமாக்கி
உன் நினைவை இருத்தி
வாசமிகு பாக்களை தொடுத்து...
நின் பாத கமலத்திலிருத்தி!......
2. இங்கும் அங்கும் எங்கும் நிறைந்த
ஞான ரூபனே!
துன்ப துயரகற்றும் அருளாளனே!
சாய்! நீ அறிவாய்!..
உன் அருளன்றி எனதென்று
ஏதுமில்லை என்னிடம்....
நீ ஈந்த வாக்கும் செயலுமன்றி.......
3. பரிமள வாசா
வேத பொருளே
ஓங்காரநாத ஸ்வரூபா
ஆநந்த சிவ ரூபா
ஷிரிடீஸ்வரா
பருத்தி நகர் வாசா
பண்டரிபுர நாதனும்
காஞ்ச நகர ஈசனும்
நீயே என்று உணர்ந்தேன்
சஞ்சலமகற்றிடும் தேவா
பஜனாம்ருத பிரியா..
பௌதீக,ஆன்மீகத் துன்பங்களை அகற்றுபவா
சர்வாந்தர்யாமியாகியவா
ஞான நாட்டத்தை திருப்தி செய்பவா
தீவினை நீக்கி அருளும் சாயி
நின் நாம ஸ்மரணை ஒன்றே முக்தி தந்தருளும் எனக்கு!
உள்ளும் புறமும் நின்றறுளும் சாய் நாதா
பயம் நீக்கி துணை நிற்கும் சாய் நாதா
தாயமானாய் தந்தையுமானாய்
வேங்கடவன் எனக்கு!....
4. குறை ஏது வேங்கடவன் எனக்கு?
துவாரகமயீயின் பார்வை உண்டு!
அப்பார்வையில் அருளுண்டு....
ஊடியின் துணையும் கூடவே உண்டு..
கீதைக்கு பொருளானவன்
பொருளுக்கு உருவானவன்
செய்கைக்கு காரணமானவன்
வழிக்கு துணையானவன்
மனதிர்க்கு இதமானவன்…
கமலனும் அவனே!
விடையேரும் விமலனும் அவனே!
பார்கடலில் துயிலும் அமலனும் அவனே!
வேப்ப மரத்தடியில் துயில்பவனும் அவனே!
ஏழைகளுக்கு எளியவன்!
அனுமனுக்கு உற்றவன்!
ஞானியும் அவனே யோகியும் அவனே !
பூர்ண சரணாகதியை யாசிப்பவன்
ஆண்டியையும் அரசனாக்குபவன்
அவன் பாத கமலங்களை வேண்டி
துதிப்பவர்களுக்கு!!
venkat k….
5. கண்டு கொண்டேன் வேங்கடவன் நான்
நின் திருவடியை
சிக்கென்று பற்றிகொண்டேன்
என்றென்றும் இனி நழுவ விட மாட்டேன்
இன்னல் அகற்றும் திருவடி
குறை தீர்க்கும் திருவடி
தூக்கிய திருவடி..
தன்னொப்பாரில்லா ஐயன் திருவடி..
பரம புருஷனின் மலர் திருவடி..
கமலாசனின் பாத திருவடி..
மாயை நீக்கும் ஐயனின் திருவடி...
ஆத்ம பாவத்தையளிக்கும் ஈசனின் திருவடி..
ஷிரிடி நகர வாசனின் திருவடி..
ஊடி ஈந்து தளர்ச்சியை நீக்கும் ஐயன் திருவடி..
குரு தேவனின் உய்விக்கும் தெய்வ திருவடி!!
venkat k….
6. ஷிரிடிக்கு ஓடுங்கள்
சாயியை பாருங்கள்
சாயிமயீ சாயிமயீ ஓசையை கேளுங்கள்
ஷீர்டியின் கல்லும் புல்லும் கூட
இசைக்குமே அவன் நாமத்தை
மஞ்சள் நிறமலர்கள் மாலை தாருங்கள்
சாயி ஸ்மரணை செய்யுங்கள்
அவன் லீலையை அறியுங்கள்
தூபமேற்றி தினம் பாடுங்கள்
வேப்ப மரம் ஐயன் விரும்புமிடம்
ஏழைகளின் துன்பங்கள் துடைப்பது
விரும்பும் குணம்
அவன் கர உதி அருமருந்து
நீருற்றி தீபங்கள் எரியச்செய்து
அஞ்ஞான இருள் களைந்தது
அவன் லீலை..
அணுவிலும் அணுவாய் நிற்பவன்
நோக்குமிடமெல்லாம் சாயி
பரமனும் அவனே சக்தியுமவனே
கண்ணனும் அவனே அனுமனும் அவனே
வேங்கடவன் என்னை உய்விக்கும்
சாயி நாமம் ஸ்மரணை செய்யுங்கள்
பிணிகள் தொலைந்திடும் தரித்திரம் மறைந்திடும்
துன்பங்கள் நீங்கிடும்
ஓம் சாயிராம்!
venkat k…
7. பாடும் நாவிற்கு இனியனானாய்
கேட்கும் செவிகளுக்கு அமுதமானானாய்
நோக்கும் கண்களுக்கு அழகனானாய்
தொழும் கைகளுக்கு அருள் தருபவனானாய்
எண்ணங்களுக்கு அரணானாய்
வேங்கடவன் என்
நினைவில் நின்றவனானாய்
இதயத்தில் நிறைந்தவனானாய்
பரமனே அவன் என அறியாத
மூடர்களையும் அறவணைத்து
காத்தருளும் இறைவனுமானானாய்
venkat k…
8 வேப்ப மரத்து கிளையிலே
குயில் ஒன்று கூவுதம்மா
சாயிமயீ சாயிமயீ என்னும்
ஓசையும் கூடவே கேட்குதம்மா
கேட்ட என்மேனி சிலிர்குதம்மா
என் நாவும் நாமத்தை கூடவே இசைக்குதம்மா
காருண்ய ரூபனின் முருவலும் தெரியுதம்மா
முருவலில் மனமும் மயங்கியதம்மா
அருளுரை கேட்டு வேங்கடவன் என்
சஞ்சலமும் தீர்ந்தம்மா…
venkat k…
9. கேட்பாரும் இல்லை தீர்பாருமில்லை
சொந்தமென்றும் பந்தமென்றும் யாருமில்லை
எடுப்பாரும் துடைப்பாரும் எவருமில்லை
வருவாருமில்லை அழைப்பாருமில்லை
தவிர்காதவர் எவருமில்லை
மனமுமில்லை குணமும் இல்லை
சொல்லிலும் செயலிலும் இனிமைஇல்லை
சாய்த்து கொள்ள தோளுமில்லை
ஷீரடி வாசா காஞ்சி நகர் ஈசா
வேங்கடவன் என் நிலை
நீ அறியாயோ...
அறிந்து அருள் புரியாயோ??
venkat k…
10. படுத்துறங்க உன் மடி வேண்டும்,
அம்மா! கசியும் கண்ணீரை துடைக்க உன்
கைகளும் வேண்டும்..
நொந்து வந்தேன்! அம்மா!
உறக்கமும் இல்லை
மன இறுக்கமும் தணியவில்லை!
ஐயனும் கேட்கவில்லை
அம்மையும் பார்க்கவில்லை
தனயனும் மறந்து விட்டான்!
புகலிடம் ஏது? வேங்கடவன் நான்சரணடைந்தேன் உன்னையேசாயிமா! சாயிமா!
படுத்துறங்க உன் மடி வேண்டும், சாயிமா!
venkat k
11. அடக்க முடியுமோ காணும் ஆவலை?
அளக்கமுடியுமா உன் கருணையை?
மறக்கமுடியுமா உன் லீலைகளை?
தவிர்க்க முடியுமா நீ விரும்புவதை?
நான் சரண சரண மென்று
பல்லவி பாடலுற்றேன்....
வேங்கடவன் என்னை காக்கும்
தருணம் இதுவே!
காரணம் யாதென்று நீயே அறிவாய்!
கருணா சாகரனே! சச்சிதானந்தா!
மதி வதனா! பாஸ்கரா!பாண்டு ரங்க விட்டலாபரம தயாளா!
சரணம்! சரணம்! சரணம்!
12 நீல கடல் அலைமேலே
துயில் பயிலும் அரவிந்தன்
சோலை சூழ் நதி கரையில்
அரவமீது துயில் கொண்டு
அருள் புரிய வந் தான்.. அவன்
முக்காலமும் உணர்ந்தவன்
வேதம் தெரிந்தவன்
வறியவர் துன்பம் துடைப்பவன்
எளிமை உருவானவன்
கருணை உடையவன்
தெளிவு பெற்றவன்
ஸத்யமான வழி காட்டுபவன்
குறும்பு மிக்கவன்..
தர்மத்தை காப்பவன்..
தரணி போற்றுபவன்மங்கும் சனியால் வருந்துமவேங்கடவன் என்னை
வேண்டுமுன் காத்தருள்வான்..
venkat k
13. கிழக்கிலும் மேற்கிலும்
தெற்கிலும் வடக்கிலும்
மேலும் கீழும்
பின்னும்முன்னும்
தூரமுமாய் சமீபமுமாய்
பார்க்கும் இடமெல்லாம்
நின் ஆனந்த ஸ்வரூபமே!
தத்துவ சொருபா!
ஞான தேசிகா!
உன்னையே துணையென்று
நம்பிய வேங்கடவன் என்னை காப்பது
உனக்கு அருமையோ? அன்றி சிறுமையோ?
நெடுநாளாய் உன்னை நேசித்து
யாசிக்கும் என்நிலை நீ அறியாததா?
எம பாசம் வருமுன்னேபாசக் கடலில் மூழ்காமல்
நின் கமல பாதம் தந்தருளுவாய்!!
venkat k
14. ஆருமோ ஆவல்
நின் பாத தரிசனம் நாடும்
என் குறை தீருமோ?
சலித்தது என் மனம்
நகைப்பது உன் குணமோ?
பக்தி புரிந்து ஆனந்தக் கடலாடி
பாவங்களை தொலைத்து
சித்தம் மகிழ்ந்து
வேங்கடவன் நான்
உன் திருவடி அடைந்திடும்
நாள் என்நாளோ?
venkat k
15. சஞ்சலம் தீர்தருள்வாய்
அடிமை என் சஞ்சலம் தீர்தருள்வாய்
அடைகலம் தந்தருள்வாய்
ஓங்கார பரம் பொருளே
மன நோய் தீர்த்தளுவாய்
செங்கமல மலர் பாதா!
புரமெரித்தோன் சேயே!
வேங்கடவன் என்னை ஆண்டருள்புரிவாய்!
சிவஞான மெய் பொருளே!
மணங்கமழ் மலர் பாதா!
அருள் வேண்டி அலறும்
ஏழை என்னை ஏற்றருள்
தயாபரனே ஞானச் செழுஞ்சுடரே!
வேத வேதாந்த ரஷகா!!
venkat k
16. நீயே ஆதாரமென்று வேங்கடவன் நான்
உன்னை பாடினேன்
ஆடினேன் தேடினேன்
சத் குருவே சாயி
கருணை நிலவே
திருவடி தேடி வந்தேன்
வாடிய என் உள்ளத்தை
தெளிய வைத்தாய்
மலர வைத்தாய்!
அறிந்து கொண்டேன்!
அகண்ட ஆனந்த ஸ்வரூபனே!
புவன சுந்தரா!
இளவேனில் நிலவிலே
வேப்பமரத்த டியிலே
கல்லின் மடியிலே
அஞ்ஞான பயத்தை நீக்க
ஞான வழியை காட்டியவா
“உன்னுள் என்னை பார்
என்னுள் நீ தெரிவாய்”
venkat k
17. புகலிடம் வேறில்லை குருநாதா
எங்கு நான் செல்வேன் சாய் நாதா!
என்னை நீயும் வெறுத்து தள்ளினால்!
நீயே கதி என்று உன்னை நாடினேன்!
கதறினேன் கண்ணீரில் பாட்டிசைத்தேன்!
கூவி அழைத்தேன் ஏனென்று கேட்க வில்லை!
பரம்பொருளே! பொருளும் புகழும் நாடவில்லை!
உன் அருள் ஒன்றே நாடி வந்தேன்!
venkat k
18 குறை தீர்ப்பான் சாயி நாதன்
நிறை உள்ளம் அளிப்பான்
மறை ஓதும் அடியவரின்
குறை தீர்ப்பான் புண்ய ஸ்வூரபன்!
சாகர சாயி வேங்கடவன்
என் மனநோய் தீர்ப்பான்
முகம் மலரும் மோகன சிரிப்பு
கண்டால் மனக்கவலை ஓடிடும்
சோகங்கள் தீர்ந்திடும் !!
நோய் தீர்க்கும் தன்வன்திரி !!
கை தூக்கி தொழுதால்
கை கொடுத்து உதவுவான்
வேண்டி நின்றால்
ஏற்றம் தருவான்!
வரியவர் குறை தீர்க்கும்
அவனே தினகரன், பாஸ்கரன்,
ஞான பிரகாசன்…
சாயி சங்கரன்!!!
19. யாரிடம் மனகுறையை புகல்வேன்
நீயன்றி புகலிடம் வேறேது?
சிதறி ஓடும் எண்ண சுமை நீக்கி
நினைவை யாவையும்
நின் பாத கமலத்திலிருத்தி!......
பயம் நீக்கி துணை நிற்க
வேண்டி நின்றேன் சாய் நாதா!
உன் பார்வையில் அருளுண்டு....
ஊடியின் துணையும் கூடவே உண்டு...
பயந்த வழிக்கு துணையானவன்
மனதிற்கு இதமானவன் நீ
பிணிகள் தொலைந்திட தரித்திரம் மறைந்திட
வேங்கடவன் என்னை உய்விக்கும்
சாயி நாமம் ஸ்மரணை எப்பொழுதும் செய்வேன்
துன்பங்கள் நீங்கிடும்
ஓம் சாயிராம்!