Kabir Doha - கபீரின் கவிதைகள்

Post Reply
vgovindan
Posts: 1950
Joined: 07 Nov 2010, 20:01

Kabir Doha - கபீரின் கவிதைகள்

Post by vgovindan »

When I first heard doha of Kabir, I was struck by the simplicity with which lofty truths are expounded. Where is Sankara's Advaita and where is Kabir doha! But, both convey same truth. But, what a difference! One is topmost scholar-cum-philosopher-cum- jnAni, and the other an ignorant weaver of Varanasi, who got initiated by mere touch of the feet his preceptor!

There are many stories of Kabir. Readers may browse and find out. Here, I an endeavoring to translate some of the dohas - two-liner poem.

Kabir doha 'kaun thagwa' - lyrics

https://www.boloji.com/mystic-songs-det ... a-lutal-ho

sung by Asha; music composer - Jayadev
https://youtu.be/BRi1vr8YdRs?si=qQsr19OcuiLPmfaX

நகரினைக் கொள்ளையிடும் கள்வன் யாரோ!
சந்தனக் கட்டில் (இன்று) சிறு கட்டிலாகி
மணப்பெண் உறங்குகின்றாளே!

என்னருமைத் தோழீ! எழுந்திரடி;
மணவாளன் என்னுடன் பிணங்கிடுமுன்,
மணப்பெண்ணை அலங்கரிப்பாய்;
நமன் வந்து கட்டிலில் அமர்ந்துள்ளான்;
எனது கண்களில் கண்ணீர் தளும்புதடி;

நால்வர் கட்டிலை சுமந்து சென்றனர்;
நாற்புரமும் கொழுந்துவிட்டெரியுது;
இறையன்பா! கேள், கபீரின் கூற்றினை;
உலகோடுறவு முடிவுற்றதே!

நகரம் - உடல்
சிறு கட்டில் - பாடை
மணப்பெண் - பிணம் - சீவான்மா
தோழி - உறவினர்
மணவாளன் - இறைவன் - பரமன்

vgovindan
Posts: 1950
Joined: 07 Nov 2010, 20:01

கபீரின் ஈரடியார்

Post by vgovindan »

Kabir Doha - Meri chunari mein padh gayo daag piya
Lyrics -
https://www.boloji.com/song-details/18/ ... rigyo-daag

அன்பே! எனது முந்தானை கறை படிந்ததே!
ஐந்து தத்துவங்களாலான முந்தானை; அதனில் பதினாறு வேறுபாடுகளாம்;
இந்த முந்தானை எனது தாய் வீட்டினின்று வந்தது;
புகுந்த வீட்டினில் அது ஒளியிழந்தது;
எவ்வளவு துவைத்தாலும் கறை நீங்கவில்லை;
எனது மணாளன் ஞானமெனும் சவுக்காரம் கொணர்ந்தான்;
இறைவன் என்னைத் தனதாக்கிய பின்னரே கறை நீங்கியது - கபீரின் கூற்றிது.

This doha has been adapted by Hindi Film lyricist Sahir Ludhianvi for film 'Dil hi to hai'.

https://autarmota.blogspot.com/2014/04/ ... t.html?m=1

Sahir Ludhianvi's adaptation -
Film 'Dil hi to hai' - music - Roshan - singer Manna De
https://youtu.be/gMT5-nTq5Jo?si=MD_iEC4gmH8tmFEs

முந்தானையில் கறை பட்டதே!
எப்படி மறைப்பேன் அதனை?
எப்படி வீடு செல்வேன்?

தூய உடல் நிகர் தூய முந்தானை அது;
தாய்வீட்டில், பெற்றோரை எங்ஙனம் நோக்கிடுவேன்?
பெற்றோரிடம் விடைபெறுகையில் தந்த வாக்குறுதிகளை மறந்தேனே;
புகுந்த வீட்டில் என்னையே நான் இழந்தேனே;

முந்தானை எனது ஆன்மா நிகர் தூயது;
அதனில் கறை மாயையின் ஜாலத்தினால் உண்டானது;
அவ்வுலகம் எனது தாய்வீடு;
இவ்வுலகம் எனது புகுந்த வீடு.

முந்தானை - உடல்
கறை - பரமனின்று ஆன்மாவின் வீழ்ச்சி
தாய்வீடு - இறைவனுடன் ஒன்றிய நிலை
புகுந்த வீடு - உலக வாழ்க்கை
ஐந்து தத்துவங்கள் - ஆகாயம், காற்று ஆகியவை.
பதினாறு - ஐம்புலன்கள், ஐந்து உட்புலன்கள், ஐந்து கை முதலான கருவிகள், மனது.
இப்பாடலின் 'பதினாறு'க்கு அடுத்த சில சொற்கள் சர்ச்சைக்குரியவை.
இந்த சினிமா பாடல் மிக்கு இனிமையானாலும், அது படம் பிடிக்கப்பட்ட சூழ்நிலை முற்றிலும் மாறுபட்டதாகும்.
'Doha' - ஈரடி எனப்படும்

vgovindan
Posts: 1950
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kabir Doha - கபீரின் ஈரடியார்

Post by vgovindan »

Kabir Doha - Guru Govind Dau Khade (and 8 more)

https://www.lyrics-hindi-songs.in/2020/ ... -dohe.html

(This site has Hindi and English-transliterated versions and audio of the dohas.)
(Audio applicable for first 5 minutes only)

குரு, கோவிந்தன் இருவரும் என் முன்னர் நிற்கின்றனர்;
யாருக்கு (முதலில்) வணங்குவது?
குருவே, உமக்குப் பணிந்தேன்;
நீர்தான் கோவிந்தனை எனக்கு அடையாளம் காட்டினீரய்யா!

இவ்வுடல் ஓர் நச்சுக் கொடி;
குருவோ அமுதச் சுரங்கம்;
தலையையே அளித்தால் குரு கிடைப்பார்;
அதுவும் மிக்கு மலிவென்றறிவாய்.

உள்ள வெம்மை அகலத்தகு சொற்களுரைப்பீர்;
மற்றவரைக் குளிர வைத்து, நீரும் குளிர்வீர்.

ஈச்ச மரத்தைப் போன்று நெடிதுயர்வதனால் என்ன பயன்?
வழிப்போக்கனுக்கு நிழலில்லை; பழமும் எட்டாத உயரத்தில் காய்க்கும்.

இகழ்வோனை (குறை சொல்வோனை) அருகில் வைத்துக்கொள்,
உன்னிடத்திலுள்ள குறைகள் நீங்கிடவே;
நீரும் சவுக்காரமுமின்றி, உனது இயற்கை தூய்மையுற்றிடவே.

தீயவனைக் காணச் சென்றேன்;
தீயவன் யாரும் கிடைக்கவில்லை;
எனதுள்ளத்திற்குள் நோக்கினேன்;
என்னைப்போல் தீயவனைக் கண்டிலேன்.

துன்பத்தில் இறைவனை எல்லோரும் நினைப்பர்;
இன்பத்தில் யாரும் நினைத்திலர்;
இன்பத்தில் இறைவனை நினைத்திடின்,
துன்பம்தான் நேர்ந்திடுமோ?

குயவனிடம் மண் கூறியதாம் –
என்னையேன் இப்படிப் பிசைகின்றாய்?
ஒருநாள் வரும், நானுன்னைப் பிசைந்திடுவேன்.

தோட்டக்காரன் வருவது கண்டு, மொட்டுக்கள் முறையிட்டன –
பூக்களை மட்டும் பறிக்கின்றனை, முட்கள் மட்டுமா எம்மிடம்?

Post Reply