ram1999 wrote: ↑03 May 2017, 11:46
Not sure of the year of publication !
The reason I ask is, if it was a recent interview - then I was the interviewer. (My interview in Tamil was translated and reproduced in sruti.)
The parts below was what he said in this context.
1970-லேயே இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸின் இசை விழாவுக்கு தலைமை வகித்தேன். அவர்கள் கூட, என்னை 1992 வரை மீண்டும் கச்சேரி செய்ய அழைக்கவில்லை.
என் கச்சேரி ரேடியோ நேஷனல் ப்ரோக்ராமில் வர வேண்டும் என்று பலர் கேட்டுக் கொண்டதற்கு, “அவர் musicologist. கச்சேரி செய்யும் வித்வான் அல்ல.”, என்றாராம் அன்று டெல்லியில் பொறுப்பில் இருந்த ஈமணி சங்கர சாஸ்திரி. இத்தனைக்கும் அவரும் ஆந்திரத்தைச் சேர்ந்தவர். பின்பு, 1972-ல் என்னை கச்சேரி செய்ய அவரே அழைப்பு விடுத்த போது, “If I was not fit twenty years before, my music has not become any better now”, என்று பதிலெழுதி மறுத்துவிட்டேன். என்னை மீண்டும் ஒரு முறை பரிசீலிக்கச் சொன்ன போது, “My previous reply stands good for now and for ever”, என்று எழுதினேன்.
1983-ல் எனக்கு சங்கீத கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது. அந்த வருடம் கூட, கச்சேரி செய்யும் வாய்ப்பை எனக்கு சங்கீத வித்வத் சபை அளிக்கவில்லை. ஏனென்று கேட்டதற்கு, “பினாகபாணி போன்ற உயர்தரக் கலைஞரை, வெறும் மேடைக் கலைஞருள் ஒருவராகச் சேர்க்க வேண்டாம்”, என்று சாமர்த்தியமாய் கூறினார்களாம். அந்த ஆண்டில் நடந்த காலை வேளை விரிவுரைகளுக்கு மட்டும் தலைமை ஏற்று வந்தேன். திடீர் என்று ஒருநாள், எம்.டி.ராமநாதனுக்கு உடல் நலமில்லை என்பதால், என்னை கச்சேரி செய்யச் சொன்னார்கள். “இப்போது மட்டும் எனது சங்கீதம் மேடைக் கலைஞரின் நிலைக்குத் தாழ்ந்துவிட்டதா”, என்று கேட்டேன். அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால் கச்சேரி செய்தேன்.
He mentioned that GNB was impressed with Dr. Pani's music and arranged for "one chamber concert". In my lengthy conversations with him he never mentioned that GNB "tried a lot".