
வர வேண்டும் வர வேண்டும்
எல்லோரும் வர வேண்டும்...
வேங்கடவன் இல்ல...
கொலு பார்க்க எல்லோரும் வர வேண்டும்
கை தட்டி கும்மி அடிக்க எல்லோரும் வர வேண்டும்..
கோலாட்டமும் போட வேண்டும்..
மகிழ்ச்சியுடன் கொலு பாட்டு பாட வேண்டும்.
படி படியாய் பொம்மைகள்
படிக்கு படி கணபதியின் அருளுமுண்டு
துர்க்கையுடன் திருமகளும் வாணியுமுண்டு
ராதையும் கண்ணனுமுண்டு
ராமனும் சீதையமுண்டு
கூடவே அனுமனும் உண்டு
அம்பிகாபதியும் அமராவதியும்
அழகூட்ட உண்டு
பாலாஜியும் பஜனை கூட்டமும்
சேர்திங்கு உண்டு..
கல்யாண கூட்டமும் உண்டு
மகான்களும் பொலிவூட்டவே உண்டு
வண்ண கோலமும் தாமரை மலருமுண்டு..
வேறு பலவுமுண்டு!
இனிப்பும் சுண்டலமுண்டு!
இளைப்பார பூங்காவும் பக்கத்தில் உண்டு.....
venkat k