KavithaigaL by Rasikas
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
திரு சஞ்சய் சுப்ரமண்யன், திரு வரதராஜன், திரு வெங்கடேஷ், திரு சுதீர்
இந்த வெள்ளுடை நால்வர் அணி அள்ளித்தந்த,
வர்ணத்தில் ஓடோடிவந்த தோடி
தியாகராஜஸ்வாமிக்கு 'அஞ்சாதே இவ்வுலகைக் கண்டு'
என்று பரிவுடன் கூறிய கமாஸ்
நரசிம்ஹனைத் துதித்த கமலாமனோஹரி
கமலையில் பிறக்க முக்தி, அந்த கமலாம்பாள் என்னைக்
காக்கட்டும என்று பாடிய பரம ஆனந்த பைரவி
ராஸவிலோல என்று சிகரம் தொட்ட காம்போஜி
மணியான தனி, தேரில் ஏறிய கல்யாணி
ராகம் தானம் பல்லவியாகப் பிறந்து திருப்புகழாய் வளர்ந்த சக்ரவாகம்
இடையே வந்து உலாவிய வராளி, நாடகுறிஞ்சி, சுத்த தன்யாசி
கோவிந்தனைக் கண்ட சந்திரகொ௱ன்ஸ்
காஞ்சியில் இருக்க முக்தி என கச்சி ஏகம்பனையும்
காசியில் இறக்க முக்தி என விச்வேஶ்வரனயும் பாடிய பூர்வி கல்யாணி, சிந்து பைரவி
நாராயணனைத் துதித்த கோமளாங்கி
மங்களமான சொ௱ராஷ்ட்ரமும் மத்யமாவதியுமாக
நிறைந்ததே இன்றைய தினம்
இந்த வெள்ளுடை நால்வர் அணி அள்ளித்தந்த,
வர்ணத்தில் ஓடோடிவந்த தோடி
தியாகராஜஸ்வாமிக்கு 'அஞ்சாதே இவ்வுலகைக் கண்டு'
என்று பரிவுடன் கூறிய கமாஸ்
நரசிம்ஹனைத் துதித்த கமலாமனோஹரி
கமலையில் பிறக்க முக்தி, அந்த கமலாம்பாள் என்னைக்
காக்கட்டும என்று பாடிய பரம ஆனந்த பைரவி
ராஸவிலோல என்று சிகரம் தொட்ட காம்போஜி
மணியான தனி, தேரில் ஏறிய கல்யாணி
ராகம் தானம் பல்லவியாகப் பிறந்து திருப்புகழாய் வளர்ந்த சக்ரவாகம்
இடையே வந்து உலாவிய வராளி, நாடகுறிஞ்சி, சுத்த தன்யாசி
கோவிந்தனைக் கண்ட சந்திரகொ௱ன்ஸ்
காஞ்சியில் இருக்க முக்தி என கச்சி ஏகம்பனையும்
காசியில் இறக்க முக்தி என விச்வேஶ்வரனயும் பாடிய பூர்வி கல்யாணி, சிந்து பைரவி
நாராயணனைத் துதித்த கோமளாங்கி
மங்களமான சொ௱ராஷ்ட்ரமும் மத்யமாவதியுமாக
நிறைந்ததே இன்றைய தினம்
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
திக்கு பத்தெங்கும் செல்லுமாம் அவன் தேர்
அதனாலே தஶரதன் என்று பேர்
புத் எனும் நரகம் , அங்குதான் கடைசியாக
சென்று சேர்வானோ என்ற நிலை
இறுதியாக 'புத்ர காமேஷ்டி' யாகப்பயனாக
பிறந்தனர் பிள்ளை நால்வர்
தலை மகன் இராமன் இடை கடை என
இலக்குவன் பரதன் சத்தருக்னன்
முடிசூட வேண்டிய வேளையில்
மரவுரி தரித்து வனம் ஏகினான் ராமன்
மனைவி சீதையும் இளவல் இலக்கவனும் உடன் வர
பொன் மானை ராமன் பின் தொடர,
இராவணன் சீதையைக் கவர்ந்தனன்
தேடினான் ராமன் ஓடினான் காடெங்கும்
கழுகுக்கிழம் உயிர் பிடித்துக் காத்திருந்தது,
ராமனிடம் சேதி சொல்ல,
வானரமாம் சுக்ரீவன் வழியில் கண்டு, தோழமை கொண்டு
அவன் சோதரன் வாலியை வதம் செய்து, அனுமன் துணை கொண்டு
அன்னையை இலங்கையில் கண்டு, இராவணனை வதம் செய்து
அன்னையை மீட்டு அரியணையில் அமர்ந்தானேஅண்ணல் இராமன்.
அதனாலே தஶரதன் என்று பேர்
புத் எனும் நரகம் , அங்குதான் கடைசியாக
சென்று சேர்வானோ என்ற நிலை
இறுதியாக 'புத்ர காமேஷ்டி' யாகப்பயனாக
பிறந்தனர் பிள்ளை நால்வர்
தலை மகன் இராமன் இடை கடை என
இலக்குவன் பரதன் சத்தருக்னன்
முடிசூட வேண்டிய வேளையில்
மரவுரி தரித்து வனம் ஏகினான் ராமன்
மனைவி சீதையும் இளவல் இலக்கவனும் உடன் வர
பொன் மானை ராமன் பின் தொடர,
இராவணன் சீதையைக் கவர்ந்தனன்
தேடினான் ராமன் ஓடினான் காடெங்கும்
கழுகுக்கிழம் உயிர் பிடித்துக் காத்திருந்தது,
ராமனிடம் சேதி சொல்ல,
வானரமாம் சுக்ரீவன் வழியில் கண்டு, தோழமை கொண்டு
அவன் சோதரன் வாலியை வதம் செய்து, அனுமன் துணை கொண்டு
அன்னையை இலங்கையில் கண்டு, இராவணனை வதம் செய்து
அன்னையை மீட்டு அரியணையில் அமர்ந்தானேஅண்ணல் இராமன்.
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
I am no poet, just got the inspiration from the shlokam 'पूर्वं राम तपोवनादि गमनम्'.
Thanjavooran , my humble attempt .
arasi, if you call yourself 'not a poet' I don't know what I should call myself as 'not'!
With Ramanavami around the corner, and with my father's 'Rama' echoing in my heart all the time, this is what I could write!
Thanjavooran , my humble attempt .
arasi, if you call yourself 'not a poet' I don't know what I should call myself as 'not'!
With Ramanavami around the corner, and with my father's 'Rama' echoing in my heart all the time, this is what I could write!
-
thanjavooran
- Posts: 3057
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
புனர்வசு அவர்களே,
கன்னி முயற்சியோ எனப்படுகிறது. அருமையான படைப்பு. தெளிவாக இருபது வரிகளில் இராமாயணம். அருமை போங்கள். தங்களின் இசை நிகழ்ச்சியின் மதிப்பாய்வுரை பாராட்டுக்கு உரியது.
வாழ்க வளமுடன்.
தஞ்சாவூரான்
22 02 2016
கன்னி முயற்சியோ எனப்படுகிறது. அருமையான படைப்பு. தெளிவாக இருபது வரிகளில் இராமாயணம். அருமை போங்கள். தங்களின் இசை நிகழ்ச்சியின் மதிப்பாய்வுரை பாராட்டுக்கு உரியது.
வாழ்க வளமுடன்.
தஞ்சாவூரான்
22 02 2016
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
நன்றி, தஞ்சாவூரான் அவர்களே.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
அவன் பிறந்த நாளில் பிறந்தீர், அருமை அப்பாவின் குமரியாய்!
நவ நவமாய் இராமன் புகழ் பாடியன்பு பகிர்ந்த தந்தைக்கே--
புனர்வசு என்ற பெயரும் கொண்டீர், அனைத்து நண்பர்களுமே
அனவரதமும் கேட்டும் கற்றும் மகிழும் ரஸிகாஸ் தளத்திலே--
அடிக்கடி நினைப்பதுண்டு, எதிர் பார்ப்பதுமுண்டு, உம் எழுத்தையே
அடி பணியத்தக்க உம் தந்தையின் குமரி என்பதை மறவாமலே...
தஞ்சாவூராரே!
நீர் எண்ணிய படியே இராமன் வந்தான்!
Veeyens would have added: may RamA be with you
நவ நவமாய் இராமன் புகழ் பாடியன்பு பகிர்ந்த தந்தைக்கே--
புனர்வசு என்ற பெயரும் கொண்டீர், அனைத்து நண்பர்களுமே
அனவரதமும் கேட்டும் கற்றும் மகிழும் ரஸிகாஸ் தளத்திலே--
அடிக்கடி நினைப்பதுண்டு, எதிர் பார்ப்பதுமுண்டு, உம் எழுத்தையே
அடி பணியத்தக்க உம் தந்தையின் குமரி என்பதை மறவாமலே...
தஞ்சாவூராரே!
நீர் எண்ணிய படியே இராமன் வந்தான்!
Veeyens would have added: may RamA be with you
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
அரசி, நன்றி.
I always write something when I am so overwhelmed with my dad's memory. It is as if he is writing through me.
I always write something when I am so overwhelmed with my dad's memory. It is as if he is writing through me.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Said he, "I see RamA everywhere, all around me
In the mighty Niagara, California's tall redwoods,
In humanity, in children, but mostly in music--
He lives in our memory evergreen, Veeyens--
The oldest young at heart at Rasikas.org...
In the mighty Niagara, California's tall redwoods,
In humanity, in children, but mostly in music--
He lives in our memory evergreen, Veeyens--
The oldest young at heart at Rasikas.org...
-
thanjavooran
- Posts: 3057
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
Arasi ,
Our memories are always green. 10 yrs back without knowing Shriaman Veeyens as our co forumite exchanged pleasantries [ since product of the same company ] at a concert in SIFA Bay area. Of course he retired few years before me.
Thanjavooran
23 02 2016
Our memories are always green. 10 yrs back without knowing Shriaman Veeyens as our co forumite exchanged pleasantries [ since product of the same company ] at a concert in SIFA Bay area. Of course he retired few years before me.
Thanjavooran
23 02 2016
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
Yes, Shri Thanjavooran. You were also from ICF. I remember the message you sent after my father passed away.
Thanks for your kind words.
Thanks for your kind words.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
Punarvasu,
With all our fond memories about him, why don't you post a picture of his? Since this is KavithaigaL sub forum, you may also add a verse or two about him?
With all our fond memories about him, why don't you post a picture of his? Since this is KavithaigaL sub forum, you may also add a verse or two about him?
-
PUNARVASU
- Posts: 2498
- Joined: 06 Feb 2010, 05:42
Re: KavithaigaL by Rasikas
arasi, I do not know how to upload a picture here! :
I will try to find out how to do it!
I will try to find out how to do it!
-
vgovindan
- Posts: 1951
- Joined: 07 Nov 2010, 20:01
மாக்கள் குரல்
இயற்கையை ஆளத்தெரிந்த மனிதன்,
இயற்கையின் நியதி அறிந்திலனே;
தனக்கென நீதிகள் செய்திட்டானே;
தனக்கொரு நீதி எமக்கொரு நீதியோ?
நாளும் உணவு தேடி உண்டோமே;
நாளைக்கென்று சேர்த்திலோமே;
வாழ்வதற்கு வீடு கட்டினோமில்லை;
வானமே கூரையாக வாழந்தோமே;
அண்டி எவரையும் வாழ விழைந்திலோமே;
அடிமையிலும் அடிமையாக்கி வைத்தானே;
எமக்கும் உணர்வுகளுண்டென்றறிந்திலனே;
எமது வாழ்வு அவன் பொருட்டே ஆனதந்தோ!
எம்மையும் ஈன்ற இறைவன் நீயேயன்றோ?
எமது நிலை கண்டு நீயிரங்கமாட்டாயோ?
பாரினில் எமக்கு விடிவு காலமில்லையோ?
பாராமுகம் உனக்கு மேலோ? பேசுமய்யா.
இயற்கையின் நியதி அறிந்திலனே;
தனக்கென நீதிகள் செய்திட்டானே;
தனக்கொரு நீதி எமக்கொரு நீதியோ?
நாளும் உணவு தேடி உண்டோமே;
நாளைக்கென்று சேர்த்திலோமே;
வாழ்வதற்கு வீடு கட்டினோமில்லை;
வானமே கூரையாக வாழந்தோமே;
அண்டி எவரையும் வாழ விழைந்திலோமே;
அடிமையிலும் அடிமையாக்கி வைத்தானே;
எமக்கும் உணர்வுகளுண்டென்றறிந்திலனே;
எமது வாழ்வு அவன் பொருட்டே ஆனதந்தோ!
எம்மையும் ஈன்ற இறைவன் நீயேயன்றோ?
எமது நிலை கண்டு நீயிரங்கமாட்டாயோ?
பாரினில் எமக்கு விடிவு காலமில்லையோ?
பாராமுகம் உனக்கு மேலோ? பேசுமய்யா.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
496
உறுதி
சென்றதை மறந்துவிடு.
இன்றொரு சபதமிடு;
குன்றனைத் தடைகளையும்
வென்றுவி டுவேனென்று !
ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2016
உறுதி
சென்றதை மறந்துவிடு.
இன்றொரு சபதமிடு;
குன்றனைத் தடைகளையும்
வென்றுவி டுவேனென்று !
ப்ரத்யக்ஷம் பாலா,
12.07.2016
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
497
இறைவா !
சல்லிக் காசு இல்லை.
தொல்லை தாள வில்லை.
அல்லல் எல்லாம் தீர
தில்லை நாதா, வா ! கா !
ப்ரத்யக்ஷம் பாலா,
09.09.2016
இறைவா !
சல்லிக் காசு இல்லை.
தொல்லை தாள வில்லை.
அல்லல் எல்லாம் தீர
தில்லை நாதா, வா ! கா !
ப்ரத்யக்ஷம் பாலா,
09.09.2016
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
498
கடிகாரம்
டிக் டிக் டிக் டிக் ...
மாயாது இருக்கும் மக்களுக்கெனவே
ஓயாது ஒலிக்கும் காலனின் காலடி !
ப்ரத்யக்ஷம் பாலா,
28.08.2012
கடிகாரம்
டிக் டிக் டிக் டிக் ...
மாயாது இருக்கும் மக்களுக்கெனவே
ஓயாது ஒலிக்கும் காலனின் காலடி !
ப்ரத்யக்ஷம் பாலா,
28.08.2012
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
499
ஆர்ப்பரிக்கும் ஆக்கள்
குழலோசை கேட்டு வந்த கோவின் பால் கொணர்ந்து
தழலிட்டுப் பிறையிட்டுத் தளிர்க் கையால் மாதர்
முழங்கிக் கடைந்து எடுத்த மூவா வெண்ணெய்த் தம்
அழகனுக்கே எனத் தெரிந்தே ஆர்ப்பரிக்கும் ஆக்கள்.
ப்ரத்யக்ஷம் பாலா,
19.03.2003
ஆர்ப்பரிக்கும் ஆக்கள்
குழலோசை கேட்டு வந்த கோவின் பால் கொணர்ந்து
தழலிட்டுப் பிறையிட்டுத் தளிர்க் கையால் மாதர்
முழங்கிக் கடைந்து எடுத்த மூவா வெண்ணெய்த் தம்
அழகனுக்கே எனத் தெரிந்தே ஆர்ப்பரிக்கும் ஆக்கள்.
ப்ரத்யக்ஷம் பாலா,
19.03.2003
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
500
துதி
அஞ்சாத நெஞ்சம் வேண்டும்;
............... அறிவுடை எண்ணம் வேண்டும்;
நெஞ்சாரக் கனவு கண்டு
............... நினைத்ததை நடத்த வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
02.04.2003
துதி
அஞ்சாத நெஞ்சம் வேண்டும்;
............... அறிவுடை எண்ணம் வேண்டும்;
நெஞ்சாரக் கனவு கண்டு
............... நினைத்ததை நடத்த வேண்டும்.
ப்ரத்யக்ஷம் பாலா,
02.04.2003
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
501
காவிரி மோதல்
ஓர்நதி நீருக்கே ஓயாச் சண்டை;
பார்நதி இணைத்தாலோ? படுகளமாகும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
06.07.2012
காவிரி மோதல்
ஓர்நதி நீருக்கே ஓயாச் சண்டை;
பார்நதி இணைத்தாலோ? படுகளமாகும் !
ப்ரத்யக்ஷம் பாலா,
06.07.2012
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
502
பூக்காரி சொன்னது !
"தொடுத்து முடித்த
அடுத்த நொடியில்
கிடைத்த விலைக்குக்
கொடுத்து விடுவேன் !"
ப்ரத்யக்ஷம் பாலா,
25.05.2006.
பூக்காரி சொன்னது !
"தொடுத்து முடித்த
அடுத்த நொடியில்
கிடைத்த விலைக்குக்
கொடுத்து விடுவேன் !"
ப்ரத்யக்ஷம் பாலா,
25.05.2006.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
அதை விடுத்து,இவளும், வாடிக்கைக்காரியும்
துடுக்காய்ப் பேசி இடக்கு செய்தால், பின்னே
வாடிப் போகும் பூவும், மிடுக்காய் வலம் வரும்
இடுக்கண் தீர்க்கும் வினாயகனும் ஓடிடுவான்
துடுக்காய்ப் பேசி இடக்கு செய்தால், பின்னே
வாடிப் போகும் பூவும், மிடுக்காய் வலம் வரும்
இடுக்கண் தீர்க்கும் வினாயகனும் ஓடிடுவான்
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
503
ஸ்ரீலஸ்ரீ
முடிகூட்டி வரியிட்டு
தடிகொண்ட வேடமிட்டு
அடியேன் கடவுளென்றால்
அடிபணிய அலைமோதும் !
ப்ரத்யக்ஷம் பாலா.
ஸ்ரீலஸ்ரீ
முடிகூட்டி வரியிட்டு
தடிகொண்ட வேடமிட்டு
அடியேன் கடவுளென்றால்
அடிபணிய அலைமோதும் !
ப்ரத்யக்ஷம் பாலா.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
504
அழகு
அலையிடை ஆதவன் எழவும்
இலையிடைச் சிந்திய ஒளியில்
கலையெழில் கோலம் கண்டேன்
சிலையெனச் சிலிர்த்து நின்றேன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.04.2012.
அழகு
அலையிடை ஆதவன் எழவும்
இலையிடைச் சிந்திய ஒளியில்
கலையெழில் கோலம் கண்டேன்
சிலையெனச் சிலிர்த்து நின்றேன் !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.04.2012.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
நல்லதோர் கவிதை...
கடைசி வரி மட்டும்: "சிலையென நின்றேன், சிலிர்த்தேன்" என்றிருக்கலாமோ?
கடைசி வரி மட்டும்: "சிலையென நின்றேன், சிலிர்த்தேன்" என்றிருக்கலாமோ?
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
ஆஹா, அருமை !arasi wrote:..."சிலையென நின்றேன், சிலிர்த்தேன்" என்றிருக்கலாமோ?
மிக்க நன்றி.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
505
வெல்லும் வழி
மெல்ல வளர்த்திடு உன் திறமை !
சொல்லித் திரியாதே திறனை.
மல்லுக்கு நிற்காதே வீணே !
சொல்லிக் கொல்லாதே பகையை !
ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.
வெல்லும் வழி
மெல்ல வளர்த்திடு உன் திறமை !
சொல்லித் திரியாதே திறனை.
மல்லுக்கு நிற்காதே வீணே !
சொல்லிக் கொல்லாதே பகையை !
ப்ரத்யக்ஷம் பாலா,
25.09.2006.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
506
அப்பனே !
பொன்னம்பல வானரே ! புன்னாக நாதரே !
குன்னக்குடி அப்பனே ! கோனேரி ராசனே !
தென்னங்கரைத் தெய்வமே ! தேவாதி தேவனே ! -- நீர்
என்னப்பன் அல்லவா ? அரும் எந்தாயும் அல்லவா ?
ப்ரத்யக்ஷம் பாலா,
28.09.2016.
அப்பனே !
பொன்னம்பல வானரே ! புன்னாக நாதரே !
குன்னக்குடி அப்பனே ! கோனேரி ராசனே !
தென்னங்கரைத் தெய்வமே ! தேவாதி தேவனே ! -- நீர்
என்னப்பன் அல்லவா ? அரும் எந்தாயும் அல்லவா ?
ப்ரத்யக்ஷம் பாலா,
28.09.2016.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
507
திருமதி நடிகை
"சினம் உண்டு மனதுக்குள்; சிரிப்பினில் மறைத்துள்ளேன்.
தினம் உண்டு உறங்கையிலே தீயினை ஊதிவைப்பேன்."
ப்ரத்யக்ஷம் பாலா,
18.10.2007.
திருமதி நடிகை
"சினம் உண்டு மனதுக்குள்; சிரிப்பினில் மறைத்துள்ளேன்.
தினம் உண்டு உறங்கையிலே தீயினை ஊதிவைப்பேன்."
ப்ரத்யக்ஷம் பாலா,
18.10.2007.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
453R
சேவிப்போம் வாருங்கள் !
பல்லாண்டு பாடுவோம் ! பரமனைப் போற்றுவோம் !
நல்லோர்கள் கூடியே நாதனை நாடுவோம் !
வல்லானின் பாசுரம் வானதிர ஓதுவோம் !
தில்லைநகர் தேவனின் திருவருள் சூடுவோம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.05.2015.
சேவிப்போம் வாருங்கள் !
பல்லாண்டு பாடுவோம் ! பரமனைப் போற்றுவோம் !
நல்லோர்கள் கூடியே நாதனை நாடுவோம் !
வல்லானின் பாசுரம் வானதிர ஓதுவோம் !
தில்லைநகர் தேவனின் திருவருள் சூடுவோம் !
ப்ரத்யக்ஷம் பாலா,
30.05.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
460R
பிறவி
தொல்லைப் பணிகள் துணிந்து சுமந்து
நில்லாது உழைத்து நிதியம் குவித்து
இல்லாதவரின் இடர்கள் துடைத்து
பல்லாண்டு போச்சு; பலவாறு இனித்தே.
ப்ரத்யக்ஷம் பாலா,
08.06.2015.
பிறவி
தொல்லைப் பணிகள் துணிந்து சுமந்து
நில்லாது உழைத்து நிதியம் குவித்து
இல்லாதவரின் இடர்கள் துடைத்து
பல்லாண்டு போச்சு; பலவாறு இனித்தே.
ப்ரத்யக்ஷம் பாலா,
08.06.2015.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
20R
தவம்
கண்ணாநின் அருளை விழைந்து
உண்ணாது தவத்தில் இருந்தேன்;
பண்ணாலே புகழ்ந்தும் கிடந்தேன்.
மண்ணெல்லாம் பொன்னானது ! என்னே !
ப்ரத்யக்ஷம் பாலா,
09.07.2006.
தவம்
கண்ணாநின் அருளை விழைந்து
உண்ணாது தவத்தில் இருந்தேன்;
பண்ணாலே புகழ்ந்தும் கிடந்தேன்.
மண்ணெல்லாம் பொன்னானது ! என்னே !
ப்ரத்யக்ஷம் பாலா,
09.07.2006.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
22R
சுடர் மனம்
சமயத்தில் துடிப்போம்; சற்றுநாம் கலங்கிடுவோம்.
சமயத்தைத் துறந்தால் சங்கடம் தொலைந்திடுமோ ?
இடம்மாறித் தொழுதால் இன்னலும் பறந்திடுமோ ?
சுடர்மனம் கொண்டுவிட்டால் சூழ்நிலை சிறக்குமன்றோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
31.03.2003.
சுடர் மனம்
சமயத்தில் துடிப்போம்; சற்றுநாம் கலங்கிடுவோம்.
சமயத்தைத் துறந்தால் சங்கடம் தொலைந்திடுமோ ?
இடம்மாறித் தொழுதால் இன்னலும் பறந்திடுமோ ?
சுடர்மனம் கொண்டுவிட்டால் சூழ்நிலை சிறக்குமன்றோ ?
ப்ரத்யக்ஷம் பாலா,
31.03.2003.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
316R
போற்றி !
கயிலைமலை மீதமர்ந்த காரணனே போற்றி !
இயலிசைக்கு உயிரளிக்கும் ஈஸ்வரியே போற்றி !
பயில்பவர் துணையிருக்கும் பாலகனே போற்றி !
மயிலொடும் அரவமுடை மாயவனே போற்றி !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.12.2013.
போற்றி !
கயிலைமலை மீதமர்ந்த காரணனே போற்றி !
இயலிசைக்கு உயிரளிக்கும் ஈஸ்வரியே போற்றி !
பயில்பவர் துணையிருக்கும் பாலகனே போற்றி !
மயிலொடும் அரவமுடை மாயவனே போற்றி !
ப்ரத்யக்ஷம் பாலா,
21.12.2013.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
305R
மணிவண்ணா !
கொட்டும் மழைக்கென குன்றெடுத்த லாலா !
சிட்டுக் கோபியர் சிந்தைகவர் லீலா !
சுட்டு விரலிடை சுழல் அணிந்த சூரா !
எட்டுத் திக்கிலும் இணையில்லா வீரா !
ப்ரத்யக்ஷம் பாலா,
08.12.2013.
மணிவண்ணா !
கொட்டும் மழைக்கென குன்றெடுத்த லாலா !
சிட்டுக் கோபியர் சிந்தைகவர் லீலா !
சுட்டு விரலிடை சுழல் அணிந்த சூரா !
எட்டுத் திக்கிலும் இணையில்லா வீரா !
ப்ரத்யக்ஷம் பாலா,
08.12.2013.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
303R
பெரும் கதை
மறையைக் கற்காது மனப்போக்கில் விரிப்பதுபோல்
மறையா மக்களெலாம் மறு உலகைத் திரிப்பதுபோல்
இறையைக் காணாதோர் இட்டம்போல் கதைத்திருப்பர் !
ப்ரத்யக்ஷம் பாலா,
07.12.2013.
பெரும் கதை
மறையைக் கற்காது மனப்போக்கில் விரிப்பதுபோல்
மறையா மக்களெலாம் மறு உலகைத் திரிப்பதுபோல்
இறையைக் காணாதோர் இட்டம்போல் கதைத்திருப்பர் !
ப்ரத்யக்ஷம் பாலா,
07.12.2013.
-
thanjavooran
- Posts: 3057
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
திரு ப்ரத்யக்ஷம் பாலா அவர்களே.
என்ன அற்புதமான படைப்புகள். அருமையான சொல்லாட்சி.
ஆர்வக்கோளாறினால் ' மனப்போக்கில் கரிப்பது போல் ' எனக் கொண்டேன் பின் தெளிவுற்றேன்.
வாழ்க வளமுடன்.
தஞ்சாவூரான்
11 10 2016
என்ன அற்புதமான படைப்புகள். அருமையான சொல்லாட்சி.
ஆர்வக்கோளாறினால் ' மனப்போக்கில் கரிப்பது போல் ' எனக் கொண்டேன் பின் தெளிவுற்றேன்.
வாழ்க வளமுடன்.
தஞ்சாவூரான்
11 10 2016
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
பாலா,
"மறையா மக்களெல்லாம் மறு உலகைத் திரிப்பது போல்..."
சிந்திக்க வேண்டியதோர் வரி...
"மறையா மக்களெல்லாம் மறு உலகைத் திரிப்பது போல்..."
சிந்திக்க வேண்டியதோர் வரி...
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
திரு தஞ்சாவூரான் அவர்களே,
மிக்க நன்றி !
மிக்க நன்றி !
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
நன்றி !arasi wrote:பாலா,
"மறையா மக்களெல்லாம் மறு உலகைத் திரிப்பது போல்..."
சிந்திக்க வேண்டியதோர் வரி...
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
508
அருள் வேண்டி !
திருமேனி மண் இடுவர்;
திருநீறு வரி இடுவர்;
பொருளள்ளித் தீ இடுவர்;
திருவருளைத் தேடிடுவோர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
06.04.2003.
அருள் வேண்டி !
திருமேனி மண் இடுவர்;
திருநீறு வரி இடுவர்;
பொருளள்ளித் தீ இடுவர்;
திருவருளைத் தேடிடுவோர்.
ப்ரத்யக்ஷம் பாலா,
06.04.2003.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
324R
நமச்சிவாய !
தழைத்த சடையில் தண்மதி பூண்டு
விழித்த மானை விரலிடை தூக்கி
பழுத்த தீயைப் பாங்குடன் ஏந்தும்
செழித்த தேவைச் சிந்தையில் சூடு !
ப்ரத்யக்ஷம் பாலா,
05.01.2014.
நமச்சிவாய !
தழைத்த சடையில் தண்மதி பூண்டு
விழித்த மானை விரலிடை தூக்கி
பழுத்த தீயைப் பாங்குடன் ஏந்தும்
செழித்த தேவைச் சிந்தையில் சூடு !
ப்ரத்யக்ஷம் பாலா,
05.01.2014.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
18
திருவருள்
கண்ணன் திருமாலன்
கந்தன் கதிர்வேலன்
எண்ண வருவானே
என்னை அருள்வானே !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.04.2003.
tiruvaruL
kaNNan tirumAlan
kandan kadirvElan
eNNa varuvAnE
ennai aruLvAnE !
Pratyaksham Bala,
11.04.2003.
திருவருள்
கண்ணன் திருமாலன்
கந்தன் கதிர்வேலன்
எண்ண வருவானே
என்னை அருள்வானே !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.04.2003.
tiruvaruL
kaNNan tirumAlan
kandan kadirvElan
eNNa varuvAnE
ennai aruLvAnE !
Pratyaksham Bala,
11.04.2003.
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
509
கல்யாண வைபோகம் !
கோதி, முடி கூட்டி, கோதை வேடமிட்டு,
வேதியனை நினைந்து, வெட்கத்தில் கரைந்து,
சாதி சனம் வாழ்த்திச் சாமர(ம்) செண்டு வீச,
சோதிமுன் மணந்தாள் சௌபாக்ய ஸ்ரீ கண்ணி !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.11.2008.
கல்யாண வைபோகம் !
கோதி, முடி கூட்டி, கோதை வேடமிட்டு,
வேதியனை நினைந்து, வெட்கத்தில் கரைந்து,
சாதி சனம் வாழ்த்திச் சாமர(ம்) செண்டு வீச,
சோதிமுன் மணந்தாள் சௌபாக்ய ஸ்ரீ கண்ணி !
ப்ரத்யக்ஷம் பாலா,
23.11.2008.
-
thanjavooran
- Posts: 3057
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
பன்மலர் இலக்கிய திங்கள் இதழ் வெளியீடான வெண்பூக்கள் என்ற நூலில் வெளியான என்னுடைய படைப்பு. இந்நாளில் இது மிகப் பொருந்தும் எனக் கொண்டு இதனை அளிக்கிறேன்.
அப்பாவி மக்கள் அழியும் அவலத்தைத்
தப்பாமல் நாளிதழ் சாற்றிடும்; - எப்போதும்
ஈவிரக்கமின்றியே ஈனச் செயலாற்றும்
தீவிர வாதத்தை தீர்
தஞ்சாவூரான்
18 10 2016
அப்பாவி மக்கள் அழியும் அவலத்தைத்
தப்பாமல் நாளிதழ் சாற்றிடும்; - எப்போதும்
ஈவிரக்கமின்றியே ஈனச் செயலாற்றும்
தீவிர வாதத்தை தீர்
தஞ்சாவூரான்
18 10 2016
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
510
கருப்பு
கைநிறைய காசிருந்தும் கவைக்கினி உதவாது;
ஐந்நூறும் ஆயிரமும் வையகத்தில் செல்லாது.
கையிலே வைத்திருந்தால் கணக்கு சொல்லவேணும்.
ஐயனின் கோயிலடி உண்டியே காப்பு !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.11.2016.
கருப்பு
கைநிறைய காசிருந்தும் கவைக்கினி உதவாது;
ஐந்நூறும் ஆயிரமும் வையகத்தில் செல்லாது.
கையிலே வைத்திருந்தால் கணக்கு சொல்லவேணும்.
ஐயனின் கோயிலடி உண்டியே காப்பு !
ப்ரத்யக்ஷம் பாலா,
11.11.2016.
-
thanjavooran
- Posts: 3057
- Joined: 03 Feb 2010, 04:44
Re: KavithaigaL by Rasikas
என்ன அருமையான கருத்துள்ள நகைச்சுவையுடன் கூடிய வெண்பா. ஆண்டவனையே வங்கியின் Q வில் நிற்க வைத்துப் பார்க்க உங்களுக்கு அவ்வளவு அவா போலும்.
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
12 11 2016
வாழ்க வளமுடன்
தஞ்சாவூரான்
12 11 2016
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
Thanks thanjavooran !
Thanks arasi !
Thanks arasi !
-
Pratyaksham Bala
- Posts: 4206
- Joined: 21 May 2010, 16:57
Re: KavithaigaL by Rasikas
511
வாய்ப்பு !
ஏட்டியெம்மில் காசில்லை;
ஏதும் வாங்க முடியவில்லை.
பெட்ரோல் போட வழியில்லை;
எட்டி நடக்க முடியவில்லை.
அரண்டு போக முடியுமா ?
சுருண்டு கிடக்க முடியுமா ?
இரண்டு கவிதை எழுதினேன் !
மருண்டால் வேலை ஆகுமா ?
ப்ரத்யக்ஷம் பாலா,
12.11.2016.
வாய்ப்பு !
ஏட்டியெம்மில் காசில்லை;
ஏதும் வாங்க முடியவில்லை.
பெட்ரோல் போட வழியில்லை;
எட்டி நடக்க முடியவில்லை.
அரண்டு போக முடியுமா ?
சுருண்டு கிடக்க முடியுமா ?
இரண்டு கவிதை எழுதினேன் !
மருண்டால் வேலை ஆகுமா ?
ப்ரத்யக்ஷம் பாலா,
12.11.2016.
-
arasi
- Posts: 16876
- Joined: 22 Jun 2006, 09:30
Re: KavithaigaL by Rasikas
இருட்டுப் பணத்தோர்க்கு இருண்டு போனதே--
சுருட்டிக் கொணர்ந்ததெல்லாம் சுமையாயிற்றே--
விரட்டி வாங்கியதெல்லாம் வெறுமையாயிற்றே--
விரலசைப்பில் கொண்டதெல்லாம் வீணாயிற்றே!
சுருட்டிக் கொணர்ந்ததெல்லாம் சுமையாயிற்றே--
விரட்டி வாங்கியதெல்லாம் வெறுமையாயிற்றே--
விரலசைப்பில் கொண்டதெல்லாம் வீணாயிற்றே!