"வராளி கேட்ட சர்ப்பம் செம்பனார் கோயில் சகோதரர்கள்
---------------------------------------------------------------------------------
நாங்க சுத்தமா "வராளி' வாசிக்கிறோம். அந்த பாம்பு தன்னைப் போலவே போய்விடும் பாருங்கள் என்றபடி அண்ணனும் தம்பியும் "வராளி' வாசிக்கத் தொடங்கினார்கள். "வராளி' என்றால் அப்படியொரு "வராளி'. இனிமேல் இந்த ஜென்மாவில் கேட்க முடியாது என்பது போன்ற "வராளி'. வாசித்து முடிக்கும்வரை படமெடுத்த நிலையில் அப்படியே ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நல்ல பாம்பு வாசித்து முடித்தவுடன் சாதுவாக சரசரவென்று கொட்டகை ஓரமாக ஊர்ந்து காவேரிக் கரையை நோக்கி நகர்ந்துவிட்டது. இப்போது நினைத்தாலும் அந்த சம்பவம் சிலிர்க்க வைக்கிறது."