Kanchi Maha Periyava

Post Reply
thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Varagooran Narayanan
'பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று
எப்படிச் சொல்லலாம்' ?

சொன்னவர்-பிரும்மஸ்ரீ டி.எஸ்.நடராஜ சாஸ்திரிகள்.
..............................(ஸ்தானீகர்)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக்
கொண்டபிறகு (பெரியவா) நடந்த சம்பவம்)

ஸ்ரீமடத்தின் நிர்வாகத்திலுள்ள கோவில்களில்
நித்யபூஜை,விசேஷ பூஜை,உற்சவம் எல்லாம் ஒழுங்காக
நடைபெறவேண்டுமே? அந்தக் காலத்தில் ஸ்ரீமடம்
நிர்வாகத்திலிருந்த பல கோவில்களில் பொருளாதாரம்
வரவு-சிலவுக்கு ஈடுகட்ட முடியாத நிலையில் தான்
இருந்தது.ஸ்ரீபுதுப்பெரியவாள் இந்தத் துறையில்
கவனம் செலுத்தினார்கள். 'ஸ்ரீபங்காரு காமாக்ஷி அம்மன்
நித்ய பூஜா டிரஸ்ட்' என்ற அறக்கட்டளையைத்
துவக்கினார்கள்.அந்த அறக்கட்டளையின் முழு
விவரத்தையும், மகாப்பெரியவாளிடம் விண்ணப்பித்து
அவர்கள் இசைவைப் பெற்றுக்கொண்டு வரும்படி
பணித்தார்கள், புதுப் பெரியவாள்.

டிரஸ்ட் நிர்வாகிகளுடன், ஸ்ரீ அம்மன் பிரசாதம் எடுத்துக்
கொண்டு நானும் செல்லவேண்டும் என்று உத்திரவாயிற்று.

மகாப் பெரியவாள் ஷோலாப்பூர் அருகில் ஒரு
கிராமத்தில் முகாம்.

முகாம் இருப்பிடத்தைத் தேடிப்பிடித்துக்கொண்டு சென்றோம்.

பெரியவாள் முன்னிலையில் நின்றோம்.

அணுக்கத் தொண்டர்,சற்று பெரிய குரலில் கூறினார்.

'தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்
டிரஸ்டிகள் தரிசனத்துக்கு வந்திருக்கா. ஸ்தானிகர்
பிரஸாதம் கொண்டு வந்திருக்கார்...'

'முதலில் பிரசாதம் கொடு'-என்று சமிக்ஞை.

ஒரு மூங்கில் தட்டில், ஒரு சாதரா,வாடிப்போன
நிர்மால்ய மாலை,புஷ்கலமாகக் குங்குமம்.

குங்குமத்தை நெற்றியில் இட்டுக்கொண்டு,
மாலையை கண்ணில் ஒற்றிக்கொண்டார்கள்.

"இன்னும் என்ன இருக்கு.."

'அம்பாள் பிரசாதமாக, ஒரு சால்வை..'

மகாபெரியவா கண்களில் ஒரு தேஜஸ்.
நெஞ்சில் ஏதோ நினைவோட்டம்.

"ஸ்தானீகரைக் கூப்பிடு.."

நான் சற்று அருகே சென்றேன். பாதாதிகேசம்
அருட்புனலால் ஒரு நீராட்டு.

"நீ....சங்கரசாஸ்திரிகள் புத்திரன் தானே?.

'ஆமா..'

"என்ன ஒற்றுமை பார்! நான் பட்டத்துக்கு
வந்தபோது,அவர்தான் சாதரா கொண்டு வந்து,
பூவாலேயே அபிஷேகம் பண்ணி...ஹ்ம்?..
அப்புறம் பிரசாதம் கொடுத்தார். மடத்தின்
மூலமா, அவருக்குப் பதில் மரியாதை கூடப்
பண்ணினோம்...தெரியுமோ?...."

'அப்பா சொல்லியிருக்கார்...'

யுகமாகக் கழிந்த இரு விநாடிகள்.

"நீயும் அவரைப் போலவே...சாதரா,நிர்மால்யம்,
குங்குமம் கொண்டு வந்திருக்கே. உனக்கும் பதில்
மரியாதை செய்யணும்...ஆனா..என்னிடம்
ஒண்ணுமேயில்லை; நான், அகிஞ்சனன்.
(ஒரு பைசா கூட வைத்துக்கொள்ளாதவன்..)

(ஸ்ரீமடம் பொறுப்பிலிருந்து முற்றிலுமாக விலகிக்
கொண்டபடியால், இவ்வாறு கூறினார்கள்.)

மௌன இடைவெளி.

"இவனுக்கு,ஒரு முத்திரைப்பவுன் வாங்கி பதில்
மரியாதை செய்தால், தேவலை. உங்களால்
யாராலேயாவது முடியுமோ?..."

அந்த கிராமத்தில் நகைக்கடை ஏது?
சில மாதர்கள் நகைகளைக் கழற்றிக் கொடுக்கத்
தயாராக இருந்தார்கள்.ஆனால்,பெரியவாள்
முத்திரைப் பவுன் அல்லவா,கேட்கிறார்கள்.?

இந்தப் பரபரப்பில்,எனக்கு அழுகையே வந்து
விட்டது. 'பெரியவா, தன்னை அகிஞ்சனன் என்று
எப்படிச் சொல்லலாம்' என்று மனம் பரிதவித்தது.

கண்ணீர் விட்டபடியே நமஸ்காரம் செய்தேன்.

'பெரியவாளோட அனுக்ரஹம் எங்களுக்கு
இருந்தால் போதும்..காமாக்ஷி கருணையிலே
நாங்கள் எல்லாம் சௌக்கியமாகவே இருக்கோம்.

விம்மினேன், பெரியவா பரிவுடன் கடாக்ஷித்தார்கள்.

"இதே எண்ணத்தோடே இருந்து கொண்டிரு.
கடைசிவரை க்ஷேமமாய் இருப்பாய்..."

ஆனால்,பெரியவாள் வெற்றுச் சொல்லுடன்
நின்றுவிடவில்லை.முடிகொண்டான் கிராமத்தைச்
சேர்ந்த ஒரு தனிகரிடம் சொல்லி, விரைவில்
முத்திரைப் பவுன் அனுப்பிவைத்தார்கள்.

ஸ்தானீர்களாய நாங்கள் பங்காரு காமாக்ஷிக்கும்
பரமாசார்யாளுக்குமிடையே, எந்த ஒரு பேதத்தையும்
காண்பதில்லை.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

Image

Today, January 8th, is the Mukthi day of Sri Maha Periva as per the English Roman Calendar.Here is a Daily sheet calendar of Periva Siddhi day, carefully preserved by a devotee. And, as we are aware, this clock stopped when Jagathguru Sri Maha Periva left His mortal frame. The time is 2.57pm on Jan 8th 1994.

Read at: http://periva.proboards.com/…/mukthi-ma ... glish-roma

புழுதியில் எட்ட கிடந்த வேங்கடவன் என்னை
கிட்ட வந்து கை தூக்கி விட்டவன்!
இவன் யாரோ என்று எண்ணாமலே!
அண்டாதவர்க்கும் அருளும்
மனமுடையான்! கருணையே வடிவானவன்!
சாந்தி அளிக்கும் எழிலுடை சிவகுரு!
காற்றும்,கனலும்,புனலும்,மண்ணும்,வெளியும்
அகிலம் நேசிக்கும் அவனேயன்றோ!
கருணை பொங்கும் அவன் விழிகளை
காணாத கண்களும் கண்களோ!
கொஞ்சும் அவன் மொழியை
கேளா செவிகளும் செவிகளோ
உதடுகளில் தவிழும் புன்னகையில்
மயங்காத மனமும் உண்டோ!
நடமாடிதிரிந்த செங்கமல பாதங்களை
துதிக்காத வாழ்க்கையும் வீணே!
venkat k

Mahaperiyava Mukthi Videos – A true treasure
Shared from shri mahesh ..at: http://mahaperiyavaa.wordpress.com/2013 ... -treasure/

https://www.youtube.com/watch?v=tWjMIc0DwuM

https://www.youtube.com/watch?v=Ls_nLt3QQOg

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

ஜீவன்முக்தருக்கு முக்தியா - வேடிக்கைதான்!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

' டேய் பாலாஜி நேத்திக்கி பெரியவா சொன்னாளே
==========================
டாக்டர் சிவசங்கர் அமெரிக்காவே தஞ்சம் பிறந்த தமிழகமோ தாய் நாடு இந்தியாவோ ஒரு உபயோகமற்ற, உருப்ப டாத சாக்கடை, இந்தியர்கள் திருத்த முடியாத காட்டுமிராண்டிகள் தன்னைத்தவிர என்ற அமெரிக்க- தா(க் )க- இந்தியர். இந்தியாவுக்கு மனத்தில் விருப்பமில்லாமல் மனைவியின் தொண தொணப்பு தாங்காமல் வந்து கொண்டிருக்கிறார்.

போயிங் விமானத்தின் ஜன்னல் வழியாக சென்னையின் தென்னை மரங்கள் மெல்ல அணுகிக் கொண்டிருக்க, கட்டடங்கள் கான்க்ரீட் கொம்புகள் போல முளைத்தன. நுரை மீசை வைத்திருந்த கடலலைகளின் அருகே வெண்மணல் பாக்கி இருந்தது.

“சரியா இருபது வருஷம் ஆச்சு இந்த மெட்ராசை விட்டு”

“நிறைய மாறுதல் இருக்கும்” என்றாள் பாகீரதி.

“கடல் மட்டும்தான் மாறலை !”

பாகீரதி தன் கைப்பெட்டியைத் திறந்து, சின்னச் சின்ன பல வர்ணக் குப்பிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துத் திறந்து கவிழ்த்து கிடைத்த ரோஜா நிறக் குழம்பை எடுத்து முகத்தில் தேய்த்துக் கொண்டு தன் வயசைப் பத்து நிமிஷம் குறைத்துக் கொண்டாள். விமானத்தில் குப்பென்ற வாசனை சூழ்ந்தது.

“சங்கராச்சாரியாரைப் பார்க்கப் போறதுக்கு மேக் அப்பா ?”

“மேக் அப் இல்லை வெய்யில் தாங்காது என் ஸ்கின்.”

“மே ஐ ஹேவ் யுர் அட்டென்ஷன் ப்ளீஸ்…!” என்று மண்டை மேல் இருந்த ஸ்பீக்கர் கமறியது. அதற்கப்புறம் புரியவில்லை.

“உலகத்திலேயே மோசமான ஏர்லைன்னு வருஷா வருஷம் இந்தியன் ஏர்லைன்சுக்குத்தான் பரிசு தரணும்.”

பாகீரதியின் ஆழ்ந்த மௌனத்தைத் தொடர்ந்து, “உலகத்திலேயே மோசமானதொரு ஏர்போர்ட் பாம்பே” என்றார்.

பாகீ அவரைக் கடைக் கண்ணால் பார்த்து, “உங்க இந்தியா தூஷணையை ஆரம்பிச்சுட்டீங்களா ?”

“உண்மையைத்தானே சொல்றேன். இந்த நாடு உருப்படுமா சொல்லு. ஏர்போர்ட்டில் குடிக்க ஒரு வாய் தண்ணி கிடையாது. உட்கார ஒரு நாற்காலி கிடையாது. அமெரிக்கால Confirm பண்ண டிக்கெட் இங்க மெசேஜ் வரலைங்கிறான். ப்ளேன் மூணு மணி நேரம் லேட்டு. எதுக்காக இந்த நாட்டுக்கு ஏரோப்ளேன் ?”

பாகீரதி பேசாமல் இருந்தாள். இந்த மாதிரி கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னால் இன்னும் பெரிசாக வாக்குவாதம் வளரும்.

“காஞ்சீபுரத்தில் ஓட்டல் ஏதாவது உண்டா இல்லை வயக்காட்டு பக்கம் ஒதுங்கலாமா ?”

பேசவில்லை.

“அலுமினிய சொம்போட ?”

பேசவில்லை.

விமானம் தரை தொட்டு ஒரு தடவை குதித்தது.

“என்ன மோசமான லாண்டிங் !”

விமானம் ஊர்ந்தது.

“உனக்கு வேணும்னா அவரைத் தரிசனம் பண்ணிக்கோ. எதுக்காக என்னை இழுக்கறே !”

“நீங்களும் பார்க்கணும்.”

“எதுக்கு நான் ? எனக்குத்தான் இதில் எல்லாம் நம்பிக்கை கிடையாதே. நான் ஒரு ஃபிசிக்ஸ் ஆசாமி — அக்னாஸ்டிக் !”

பாகீ இந்தப் பேச்சைத் தொடர விருப்பமின்றி,

“இன்னிக்கு என்ன கிழமை ?” என்றாள்.

“இந்தியாவுக்கு வந்து இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்குக் காத்திருந்து கிழமையே மறந்து போச்சு….”

“எத்தனை நேரம்?இவங்களுக்கெல்லாம் எதுக்கு ஏரோ பிரிட்ஜ்?”

பிரயாணிகள் இறங்க அவசரப்பட்டு முன் வாசலில் நெருக்கினார்கள்.

“மூணு மணி நேரம் உட்கார்ந்திருந்தாங்க. மூணு நிமிஷம் கதவு திறக்கப் பொறுமை இல்லை ........ இந்தியன்ஸ்!”

“நீங்க இந்தியன் இல்லையா ?” என்று கேட்க விருப்பமின்றி பாகீ பேச்சை மாற்றினாள்.

“நீங்க முதல்ல அமெரிக்கா புறப்படறப்ப எத்தனை டாலர் வச்சிருந்தீங்க ?”

“ரெண்டு டாலர்! ஜஸ்ட் டூ டாலர்ஸ் !”

அது அவருடைய செல்ல ‘டாபிக்.’ எத்தனை தடவை சொல்லியிருக்கிறார் !

“கென்னடில வந்து இறங்கறேன், டெலிபோன் செய்யக் காசு இல்லை. ‘கலெக்ட் கால்’ னா என்னன்னே தெரியாது. அப்ப அங்க ஒரு….”

அவர் வாழ்க்கையில் முன்னேறிய கதையை 27வது தடவை கேட்கத் தயாரானாள்.

சீட்டிலேயே உட்கார்ந்திருந்து, எல்லோரும் இறங்கியதுமே அவர்கள் வெளியே வந்து பாலம் கடக்கும் போது, உஷ்ணம் அவர்களைத் தாக்கி, ஐம்பது அடி அவர்களுடனேயே கூட வந்து ‘ஏசி’க்குக் கொண்டு வந்துவிட்டது.

‘எஸ்கலேட்டர் அவுட் ஆப் ஆர்டர் ‘ என்று போர்டைப் பார்த்து சிவசங்கரன் நக்கலாகச் சிரித்தார்.

“இருக்கிற ஏழை ஜனங்களுக்கு உணவும் உடையும் கொடுத்து, பாப்புலேஷனை கண்ட்ரோல் பண்ணா போதும். மத்த எதுவும் வேண்டாம் இந்தியாவுக்கு. சாட்டிலைட் எதுக்கு ? எதுக்காக மிசைல் ப்ரோக்ராம் ?” என்று மூன்று வரியில் இந்தியாவுக்கு விமோசனம் சொன்னார்.

பாகீ மௌனமாகவே வந்தாள். அமெரிக்காவில் இருந்தால் விவாதித்திருப்பாள்…. ‘நாமெல்லாம் இதைச் சொல்வது ரொம்பச் சுலபம், நடைமுறை தான் கஷ்டம்’ என்று.

இங்கே பாகீரதி அவருடன் எந்த விதத்திலும் வாதாட விரும்பவில்லை, காஞ்சிபுரம் போய்ச் சேரும் வரையாவது!

கீழே ஹாலில் இறங்கினதும் கைவண்டி எடுத்துக் கொண்டார். அதன் சக்கரங்கள் சண்டி பண்ண, “சேச்சே ! ஒரு கைவண்டி சரியா பண்றாங்களா பாரு இந்தியாவிலே …”

கன்வேயரில் சுயம்வர ராஜகுமாரி போல் ஊர்ந்து வந்து கொண்டிருந்த அவர்கள் பெட்டியை, ஒரு சிப்பந்தி அதன் பாகேஜ் சீட்டைத் தப்பாகப் படித்து, எடுத்து வைத்துக் கொள்ள, சிவசங்கரன் “எக்ஸ்க்யூஸ்மி, எக்ஸ்க்யூஸ்மி” என்று ஓடிப் போய் அவன் கையைப் பிடித்துத் தடுக்க, அந்தச் சிப்பந்தி. “பொட்டி உன்னுதுன்னா சொல்லு – மேல கை போடாதே ! நீ கை வச்சா நான் கை வைக்க எத்தினி நேரமாகும் ? நீ சீமான்னா உங்க ஊரோட வச்சுக்க — இந்தப் பேட்டைல நான் சீமான் “ என்றான்.

“வாட் வாட் ?”

அவர் திரும்பிய போது முகம் சிவந்திருந்தது. கைகள் உதர ஸார்பிட்ரேட் மாத்திரை எடுத்து அடக்கிக் கொண்டார்.

“ஃபூல்ஸ் ! ஃபிலிஸ்டைன்ஸ்…” பாகீரதியின் மேல் பாய்ந்தார்.

“எல்லாம் உன்னால தான். எதுக்காக என்னை இந்த மாதிரி அவமானப்படுத்தறே? நான்தான் இந்தியா வர மாட்டேன்; பிரின்ஸ்டன்லயே இருக்கேன்; எனக்குப் பிடிக்காது இதெல்லாம்னு சொன்னேனில்லையா? எதுக்காக என்னை டார்ச்சர் பண்றே ? நான் எதுக்காக மெட்ராஸ் ஏர்போர்ட்டில ஒரு பொறுக்கி கிட்ட கெட்ட வார்த்தை கேட்கணும் ?”

“டேய் ...... யார்ரா பொறுக்கி! ஒரு உதை விட்டன்னா அரை டிராயர்லாம் ரத்தம் ஆயிரும் !”

“நீங்க வாங்க; அவனோட என்ன ?”

பாகீரதி அவசரமாக வெளியே வந்தாள்.

இந்த உச்ச சமயங்களில் பேசவே கூடாது.

வராந்தாவுக்கு வந்தார்கள். வாசலில் கார் காத்திருக்கும் என்று சொன்னார்கள். யார் என்று தெரியவில்லை. அவரவர் அவரவர் கார்களில் ஆரோகணித்துக் கதவு சாத்திக் கொண்டு புறப்பட்டுச் செல்ல, சற்று நேரத்தில் வராந்தா காலியாகி விட்டது.

“ஆட்டோ போலாங்களா ? செவண்டி ருப்பீஸ் கொடுத்துருங்க. எங்க மைலாப்பூர் தானே !”

“நான் எங்கே போனா உனக்கென்ன ?”

“அவனோட பேச வேண்டாம்.”

“சும்மனாங்காட்டியும் கேட்டேன். கோவிச்சுக்கிறியேம்மா !”

அப்போது ஒரு டிரைவர் வந்து, “நீங்க டாக்டர் சிவராமனா ?”

“டாக்டர் சிவசங்கர்.”

“காஞ்சி பார்ட்டி நீங்கதானே ?

ப்ரதிபா டிராவல்சிலே வண்டி கேட்டிருந்தீங்களே !”

“ஆமாம்.”

“இருங்க வண்டி வந்திருக்குது.”

“நான் சிவராமன் இல்லைப்பா.”

“சரி சிவசங்கர். வாங்க! உங்களுக்குத்தான் வண்டி.”

பாகீரதிக்கு அந்த டாக்ஸி டிரைவரைப் பிடித்திருந்தது. பெட்டியை எடுத்து வைத்துக் கதவை மரியாதையாகத் திறந்து, மூடி, ஓடிப் போய் சீட்டில் அமர்ந்தான்.

“ஒரு பேரை ஒழுங்காக் கொடுக்கத் தெரியலை; என்ன ட்ராவல் எஜெண்டுப்பா !”

“அது சில சமயங்கள்ள தப்பாயிருதுங்க, டெலெக்ஸ்ல….”

“எது சரியாய் இருக்கு உங்க நாட்டில ?”

“டிரைவர் உங்க பேரு என்ன ?”

“பால்ராஜு...ங்கம்மா. ஏசி போட்டுரலாங்களா…? காசட் போட்டுரலாங்களா…?” காசட்டைச் செருகினான்.

“கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்று அர்த்தம்….”

“எனக்குக் காதல் வேண்டாம்ப்பா !”

கார் கிளம்பி நெடுஞ்சாலையில் சேர்ந்து கொண்டது.

“பக்தி பாட்டு போடட்டுங்களா ?”

“எதுவும் வேண்டாம்ப்பா, ஆளை விடு!”

“பூந்தமல்லி பக்கம் திரும்பியதும், “பால் ராஜ், மெதுவாப் போங்க, அவசரமே இல்லை.”

“நீங்க பெரியவரைத் தரிசனம் பண்ண வேண்டாமா இன்னைக்கு ? போயிரலாங்க ரெண்டு அவர்ல.”

“நாளைக்கு மெதுவா தரிசனம் பண்ணிக்கறம்பா. எனக்கு அவசரம் இல்லை. நான் பார்க்கலைன்னாக்கூட பரவால்லை. இந்த அம்மாதான்… இதுக்காகவே அமெரிக்காவிலிருந்து வந்திருக்குது !”

“அப்படீங்களா ? சந்தோசங்க. மனித தெய்வம் சார் பெரியவரு. இதுவரைக்கும் எம்பத்தொன்பது முறை தரிசனம் பண்ணிட்டேங்க! இன்னம் பதினொன்று பண்ணா நூறாயிடும் — அவருக்கு நூறு வயசு ஆனாப்பல….”

“பால்ராஜ் நீங்க கிறிஸ்டியன்தானே ?

“ஆமாங்க அதனாலே என்ன சார் ?”

“Funny !” என்றார் சிவசங்கர்.

“எங்க வீட்டுல அவருதாங்க தெய்வம். அவரு என்ன சொல்றாரு ? நீ சர்ச்சுக்குப் போ – மசூதிக்குப் போ – கோயிலுக்குப் போ — கடைசில — எல்லா தெய்வங்களும் ஒண்ணு தானே ….”

“விபூதி வரவழைப்பாரா ?”

“அது சாய்பாபாங்க. அவர் உங்களைப் பார்த்தாலே போதுங்க — நினைச்ச காரியம் நடக்கும்.”

“உனக்கு நடந்ததா ?”

“பின்ன ? நம்ம புள்ள ரோஸ்மேரிக்குத் தபால் ஆபீஸ் உத்தியோகம் கிடைக்கணும்னு ஒருமுறை கேட்டேங்க. அடுத்த ட்ரிப்ல ஆர்டர் வந்துருச்சு !”

“அப்படியா டெலிபோன்ஸ்லயும் இருக்காரா இவர் !” என்றார்.

அந்தக் கேலியை பால்ராஜ் கவனிக்கவில்லை.

“பெரியவர்தாங்க தெய்வம். தூரக்க இருந்து பார்த்து மனசில கேட்டா காரியம் நடக்குது. உங்களுக்கு என்ன வேணுங்க !”

“காஞ்சிபுரத்தில நல்ல ஓட்டல்பா !”

“அம்மா உங்களுக்கு ?”

“நிம்மதி “ என்றாள்.

“அய்யாதான் கேலியாய்ப் பேசறாரு !”

“பால்ராஜ், பாருங்க எனக்கு இதிலே எல்லாம் நம்பிக்கை இல்லை. நான் செய்யற ஆராய்ச்சில கடவுள் தேவைப்படறதில்லை.”

“எனக்குத் தேவைப்படுதுங்க.”

“லுக் அவுட் !” என்று கத்தினார்.

வண்டி ஒரு லாரியை நூலிழையில் தவிர்த்து, தார் சாலையை விட்டு இறங்கி பாம்பு போல் நெளிந்து மரத்தருகே நின்றது.

அவர் உடல் நடுங்கி நெற்றி வியர்வை படர்ந்திருக்க, பால்ராஜ் இறங்கி டயரை உதைத்து, “பஞ்சர்ங்க! பதினைந்து நிமிஷத்தில ஸ்டெப்னி போட்டுரலாங்க. இளநி சாப்பிடுங்க.”

சிவசங்கர் சிகரெட் பற்றவைத்தார். மரத்தடியில் கயிற்றில் குலை குலையாக இளநீர் தொங்கியது.

“இளநி சீவலாங்களா ?”

“வேண்டாம்ப்பா .”

“சீவிட்டேங்களே…”

பாகீரதி பதற்றத்துடன் மற்றொரு வாக்குவாதத்தை எதிர்பார்த்தாள்.

“சரி, குடு” என்றார். நல்ல வேளை.

இளநீரை உறிஞ்சுகையில், “இந்தியால இது ஒண்ணு தான் உருப்படியா இருக்கு !”

பால்ராஜ் டயர் ஸ்பானரை டிக்கி இடைவெளியில் செருகி விட்டு, “போவலாங்க” என்றார்.

“இளநி சாப்பிடுங்க பால்ராஜ்” என்றாள் பாகீ.

“வேண்டாம்மா. பெரியவரைப் பார்க்கிற வரைக்கும் பச்சை தண்ணி பல்லுல படக்கூடாது.”

“மயிரிழைல தப்பினம்.”

“எல்லாம் பெரியவர் ஆசிங்க !”

“அப்படியா ?” மறுபடி கேலிக் குரல்.

காஞ்சிபுரத்தை அணுகும்போது மணி மூன்றாகிவிட்டது. ஏரியில் வாத்துகள் நீந்த, அதை அணைத்துச் சென்ற பாதையில் பனைமர சோல்ஜர்கள் காவல் நின்றன. கோபுரங்கள் வெண்மையாக, புதுசாகத் தெரிந்தன. நகரமே நூறாவது ஆண்டைக் கொண்டாட அலங்கரித்துக் கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்கும் தட்டியும் மூங்கிலும், சுதந்திர மாடுகளும், ஓடும் நாய்களும், லாட்டரி டிக்கெட் நிறைந்த சைக்கிள்களும்…. பாகீரதிக்கு உற்சாகம் பொங்கியது.

பெரிசாக பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

“இங்கதான் விழா நடக்கப் போகுதுங்க.”

“யாராவது இந்த ஊரைப் பார்த்தா பழைய பல்லவர் காலத்து தலைநகர்னு சொல்வாங்களா ? வாட்டிகனைப் பார்த்தியே எப்படி இருந்தது ? ஆயிரம் ஆண்டு பழசுன்னா அமெரிக்கால என்னமா ‘ப்ரிசர்வ்’ பண்ணுவா !”

“நமக்கு அதெல்லாம் முக்கியமில்லைங்க,”

“நான் உன்கிட்ட பேசலை பால்ராஜ்.”

“நேராப் போய்ப் பெரியவரை முதல் தரிசனம் பண்ணிரலாங்க. அப்புறம் போயி மத்த சாமிங்களைப் பார்த்துரலாம்.”

சிவசங்கர் தீர்மானமாக மறுத்தார். “முதல்ல ஓட்டல் போய் ‘செக் இன்’ பண்ணிட்டு அப்புறம்தான் மத்ததெல்லாம்.”

“இல்லைங்க. அரைமணிதான் அவரைப் பார்க்க சமயம். அதுக்குத்தாங்க வண்டியை விரட்டிக்கிட்டே வந்தேன்.”

“நாளைக்குப் பார்த்துக்கலாம். முதல்ல ஓட்டல். எனக்குப் பசிக்கிறது.”

ஆர்ச் வளைவுகளில் மூன்று பெரியவர்களும் ஆசிர்வதிக்க நரசிம்மராவ் எழுதிக் கொண்டிருந்தார்.

‘காமாந்தகார கன்னி’ என்ற சினிமா சுவரொட்டியை உரக்கப் படித்தார்.

ஒரே ஒரு த்ரீ ஸ்டார் ஓட்டல்தான் இருந்தது. அதிலும் ரூம் போட்டு உள்ளே சென்று படுக்கையில் உட்கார்ந்ததும் குறை சொன்னார்.

“பாத்ரூமில் கரப்பான் பூச்சி, சுவர்களில் ரத்தக் கரை, டவல் அழுக்கு, மருந்து நாற்றம்…அமெரிக்கால ஒரு மினிமம் comfort - ஆவது….”

பாகீரதி கடைசியாகப் பொறுக்க முடியாமல், “ரெண்டு நாளைக்கு அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்கு வாங்களேன். நாம வந்தது பரமாச்சாரியாளைத் தரிசனம் பண்ண. ஓட்டல் மூட்டைப்பூச்சியை எண்ண இல்லை.”

“நாம வந்ததுன்னு சொல்லாதே. நீ வந்தது! எனக்கு இதில இஷ்டமில்லை; நம்பிக்கை இல்லை.அவரைப் பார்க்காட்டிக் கூட எனக்குப் பரவாயில்லை. தலைவலி எனக்கு !”

அதற்குள் பால்ராஜ் வந்து, “அம்மா, அம்பாள் பூசை செய்யறாரு சின்னவரு. வாங்க… போய் தரிசனம் பண்ணிடுங்க.”

“வரேன் பால்ராஜ்… கிளம்புங்க.”

“நான் வரலை நீ போ. நான் ரூம்ல இருக்கேன்.”

“நீங்க வராம தனியாப் போக மாட்டேன்.”

“அதான் பால் இருக்கானே ?”

“அய்யா நான் உள்ளே வர மாட்டேங்க! வெளியே பெரியவரை ஒருமுறை தரிசனம் செய்தா போதும்….”

“ச்சே! உன்னோட வேதனை பாகீ !”

“ப்ளீஸ்! ஒரு நாளைக்கு, ஒரே ஒரு நாளைக்கு உங்க ஃபிசிக்ஸ் பேசறதை மறக்கக் கூடாதா, பிடிவாதத்தை விட்டுக் கொடுக்கக் கூடாதா ? இந்தப் பிடிவாதம் பிடிச்சுத் தானே பிள்ளையைப் பறிகொடுத்தோம் .”

அவர் சட்டென்று மௌனமாகத் தீய்க்கும் கண்களால் பாகீரதியைப் பார்த்து, “நான் தான் காரணமா ! நான் மட்டும்தான் காரணமா ?” என்றார்.

“மறுபடி ஆரம்பிக்க வேண்டாம்.”

“நான்தான் காரணமா சொல்லு ?”

“சரி நானும்தான் காரணம்.”

பால்ராஜ் தர்மசங்கடத்தை உணர்ந்து, “நான் ஓட்டல் வாசல்ல வண்டி கொண்டு வரேங்க!”

சிவசங்கர் “ஆல் ரைட் ! வரேன். ஆனா என்னால சட்டையெல்லாம் கழட்ட முடியாது. அப்பப்ப ஸ்மோக் பண்ணுவேன். நான் நாஸ்திகன். மதமும் ஒரு போதைப் பொருள். ஒரு ஏமாற்று வேலைன்னு நம்பறவன்.”

“சும்மா வாங்களேன் துணைக்கு!”

அவர் அரை டிராயரையும் யுனிவெர்சிட்டி பனியனையும் மாட்டிக் கொண்டு தலையில் பேஸ்பால் குல்லா போட்டுக் கொண்டு “லெட்ஸ் மூவ்!” என்றார்.

பாகீரதிக்கு அழுகை வந்தது. ஏன் இத்தனை பிடிவாதம் பிடிக்கிறார் ! ஏதோ நிகழப் போகிறது என்று வயிற்றில் பயம் முலாம் பூசியது.

மடத்துக்குள் நூற்றுக்கணக்கானவர்கள் உட்கார்ந்திருக்க மேடை மேல் பூஜை நடந்து கொண்டிருந்தது.

“ஹூ இஸ் திஸ் பாய் ?”

“புதுப் பெரியவா.”

“வாட் நான்சென்ஸ், இந்தப் பையன் கால்ல விழணுமா ?”

“நீங்க விழ வேண்டாம்.”

“இவர் நம்பர் த்ரீயா ? வேர் இஸ் நம்பர் டூ ?”

“பேசாம இருங்களேன் ப்ளீஸ்.”

ஆயாசம் தரும் அளவுக்குக் காத்திருந்த பின் ஆரத்தி எடுத்தார்கள்.

அங்கிருந்து சுவரோரமாக நடந்து நழுவி, பெரியவரைப் பார்க்கச் சென்றார்கள்.

சிவசங்கரன் ஓரமாக நிற்க ........

“நிக்கறேளே உட்காருங்கோ. பேரு ? “

“ஷிவ்ஷங்கர்.”

“ஊரு ?”

“அமெரிக்கால ப்ரின்ஸ்டன்ல பிசிக்ஸ் ப்ரொபசரா இருக்கேன்.”

” ப்ரின்ஸ்டன்லதானே ஜெயராமன்னு மடத்துக்கு ரொம்ப வேண்டப்பட்டவர் இருக்கார்.”

“எனக்குத் தெரியாது. ப்ரின்ஸ்டன்ல ஐன்ஸ்டைன்னு ஒரு மகாமேதை இருந்தார்.”

“உங்க பௌதீக சாஸ்திரம் என்ன சொல்றது, ஆதி சங்கரர் சொன்னதைத் தானே !”

“இல்லை சுவாமி. பௌதீகம் ரொம்ப தூரம் போயிட்டது. பிரபஞ்சத்தையே ஒரு துகள், ஒரே ஒரு சக்தி இதில் விளக்க முடியுமா பார்க்கறா !”

“அதையே தான் – சக்தியும் சிவமும்னு ஒரு சரீரத்தில் அர்த்தநாரீஸ்வர திருக்கோலத்தோட ஒரே பொருளா விளங்கறா !”

”இல்லை நாங்க சொல்றது வேற .”

“அது இங்கிலீஷ், இது சம்ஸ்கிருதம். பவானீத்வம். இனி நீயாவே நான் ஆகி விடுகிறேன். நான், என்னுடையது என்கிறதை உன்னிடத்திலேயே கரைச்சுடறேன்ன்னு சொல்றார்…”

“அப்படி இல்லை “ என்றார் சிவசங்கரன்.

“வாங்க போகலாம்” என்றாள் பாகீரதி.

“உங்களுக்கு மிராகிள்ஸ்ல நம்பிக்கை இல்லையா ?”

“இல்லை.”

“பால்ப்ரண்டன், ஆர்தர் கோஸ்லர் எல்லாரும் எழுதிருக்காளே படிச்சதில்லை ?”

“இல்லை.”

“பரமாச்சார்யாள் மெஹபூப் நகர்ல சாதுர்மாஸ்ய பூஜைக்காக காம்ப் இருக்கறப்ப, உங்களைப் போலத் தான் ஒருத்தர் அமெரிக்காவில இருந்து வந்திருந்தார். பஸ் ஸ்டாண்டில சைக்கிள் ரிக்‌ஷாவைப் போட்டுண்டு வந்தார். ஆசீர்வாதம் வாங்கிண்டார்.

அப்பல்லாம் மஹாபெரியவா நன்றாகவே எல்லோருடனும் பேசுவா. அவர் கொடுத்த குங்குமத்தைத் தன் தலையிலே அப்பிண்டு, ஆப்பிளைக் கொடுத்து அனுப்பிச்சார்.

அவர் மடத்திலேயே சாப்பிட்டுட்டு ஏதாவது கான்ட்ரீப்யூஷன் பண்ணலாம்னு பர்சை எடுக்கறார். காணோம். பதறிப் போய்ட்டார்.

பர்ஸ் மட்டும் இல்லை. பாஸ் போர்ட்டு, ‘டிராவலர் செக்’குங்கறாளே — பதினஞ்சாயிரம் டாலர் — எல்லாமே காணும். அப்படியே ஒடிஞ்சு போய்ட்டார். எங்கன்னு தேடுவார் ? சாப்ட்ட இடத்தில இல்லை. சைக்கிள் ரிக் ஷாக்காரனை வீடு தேடித் போனா அவங்கிட்டேயும் இல்லை.

கடைசில எங்க இருந்தது தெரியுமா ? பஸ் ஸ்டாண்டில சிமெண்ட் பெஞ்சில அவர் உட்கார்ந்திருந்த இடத்தில. அந்த இடத்தில் ரெண்டாயிரம் பேராவது புழங்கியிருப்பா. இதுக்கு என்ன சொல்றேள் சிவசங்கரன், மிராக்கிள் இல்லையா இது ? இதை உங்க பௌதீக சாஸ்திரம் எப்படி விளக்க முடியும் ?”

“நீங்க மிராக்கிள்ன்னு சொல்லலாம். நான் இதை பிராபபிலிட்டி — சான்ஸ் இப்படித்தான் சொல்வேன். தரிசனம் ஆச்சோல்லியோ போகலாமா பாகீ !”

அவர் புன்னகைத்துப் பிரஸாதம் படாமல் கொடுத்தார்.

வெளியே வரும்போது பாகீரதி கோபத்தில், “அவர் கிட்ட கூடவா ஆர்க்யுமென்ட்?”

“ஏன் ? அவரும் என்னைப் போல் ஒரு ஆத்மா தானே ? அதானே அத்வைதம் சொல்றது ?”

பால்ராஜ் வெளியே காத்திருந்தான். “வேகமா வாங்க, நீங்க அதிர்ஷ்டம் பண்ணவங்க. மஹா பெரியவரை இன்னும் அரை மணி பார்க்கலாமாம்!”

அந்த மண்டபத்தை ஒட்டி புறப்பட்ட க்யூ தெருவில் தொடர்ந்தது. மெல்ல மெல்ல நகர பாகீரதி ஓட்டமும் நடையுமாக அதன் வாலில் சேர்ந்து கொண்டாள். மற்றதெல்லாம் மறந்து போய் விட்டது.

ஒரு வெள்ளைக்காரி பல்பொடி கலரில் ஜிப்பா அணிந்து கொண்டு நிஷ்டையில் எதிரே திறந்திருந்த வாசலையே நோக்கிக் கொண்டிருந்தாள். உள்ளே இலேசான இருட்டாக இருந்தது. மெல்ல அணுகினார்கள்.

உள்ளே அந்த நூறு வயதுப் பெரியவர் ஏறக்குறைய மல்லாந்த வாக்கில் உட்கார்ந்திருந்தார். காவி முட்டாக்கின் மேல் இலைக் கிரீடம் வைத்திருந்தார்கள். முழங்கால் மடங்கியிருந்தது. யாரையும் குறிப்பாகப் பார்க்கவில்லை.

அருகே ஒரு பிராமண இளைஞன் வரிசையை “ம்ம் நகருங்க” என்று துரிதப்படுத்திக் கொண்டிருக்க, அவ்வப்போது மாலையை அணிவித்துக் கழட்டிக் கொண்டிருந்தான். இளைஞன் பால்ராஜை அடையாளம் கண்டு கொண்டு, “என்ன பால்ராஜ் எத்தனாவது தடவை தரிசனம் ?”

“தொண்ணூறுங்க ! அய்யா ..... அமெரிக்காவிலிருந்து வந்திருக்காரு”

“அமெரிக்காலருந்து நிறைய பேர் வரா ! வாங்கம்மா கிட்ட பாருங்கோ ” என்று பாகீரதியை அருகே அழைக்க .......

பாகீரதி அந்தக் கணத்தில் தன் சகல கட்டுப்பாடுகளையும் இழந்து கண்ணீர் உதிர்க்க, புடவை மேல் பட்டுத் தெறித்தது.

“பரமாச்சார்யாள் கிட்டே சொல்லுங்கோ. இந்த க்ஷணத்துக்குத்தான் பத்தாயிரம் மைல் கடந்து வந்திருக்கோம். மேம்போக்கா இவர் குதர்க்கம் பேசினாலும் உள்ளுக்குள்ளே இவருக்கும் நம்பிக்கைதான்.

ஒரே பிள்ளை. பாலாஜின்னு பேர் வச்சோம். 12 வயசு வரைக்கும் சமத்தா வளர்ந்தான். பாழாப்போன அமெரிக்காவில அப்பாவுக்கும் பிள்ளைக்கும் சரிப் படாம வாக்குவாதம் வந்து வீட்டை விட்டுப் போய்ட்டான் !

உலகம் பூரா தேடியாச்சு. நேபாள், சிலோன், ஜப்பான், எல்லாம் தேடியாச்சு. ஆக்சிடெண்டில போய்ட்டானா, செத்துப் போய்ட்டானா, இருக்கானா…. ? எம்புள்ளை போய்ட்டான். நிம்மதியே இல்லை. இன்னி வரைக்கும் !”

“பரமாசார்யாளைத் தரிசனம் பண்ணிக்குங்க. சார் நீங்களும்தான் சார்.”

அந்த இளைஞன், அருகில் சென்று அவர் காதுடன் சொல்ல, ஸ்ரீமஹா பெரியவா கைகளை உயர்த்தி வாழ்த்தினார். பாகீரதியின் நெஞ்சு நிறைந்தது.

காட்டராக்ட் கண்ணாடி வழியாகப் பெரிய கண் ஒன்று அவளைப் பார்த்தது.

ஆப்பிள் பழத்தையும் ரோஜாவையும் கொடுத்த அந்த இளைஞன்,

“எல்லாம் சரியாய்ப் போய்டும்.

கவலைப்படாதீங்கோ.

பையன் பேர் என்ன சொன்னேள் ?”

“பாலாஜி.”

அவர்கள் வெளியே வந்தனர்.

சிவசங்கர் கோபமாக, “ஏன் சின்னக் குழந்தை மாதிரி அழறே ?”

“சினிமாவில வர மாதிரி உன் பிள்ளை வருவான்னு நினைச்சியா !
அவள் அடங்காமல் அழுதாள்.

“பாகீ ! பாகீ ... டோன்ட் பி சில்லி. டோன்ட் மேக் எ ஸீன் ! கமான் !” அவளைத் தோளில் பற்றி, பரிவு என்பதன் முதல் அடையாளம் சற்றே தெரிய நடத்தி அழைத்துச் சென்றார். பின்னால் குரல் கேட்டது. மடத்து சிப்பந்தி ஒருவர் ஓடி வருகிறார். '' மாமி மாமி, பெரியவா உங்க கிட்ட யாரையோ அனுப்பியிருக்கா "'
யார்?
ஒரு கட்டுக்குடுமிக்காரர் ஒருவர் ஒரு இளம் வாலிபனுடன் வந்தவர் '' டேய் பாலாஜி நேத்திக்கி பெரியவா சொன்னாளே இன்னிக்கி வருவான்னு ''இவா தானே அது -
''எங்க அப்பா அம்மா தான் வந்திருக்கா !”

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

சமஸ்கிருத விரோதம் .... காஞ்சி பரமாச்சாரியார் ..

சீப் மின்ஸ்டருக்கு முதன் மந்திரி என்றார்கள் .. அதுவும் இல்லை இப்பொது "முதலைமைச்சர்" என்று ஆக்கி இருகிறார்கள்.எனக்கு சிரிப்பு தான் வருகிறது.சமஸ்கிருதத்தை அடித்து துரத்தி விட்டால் அதுவே தமிழ் வளர்ச்சிக்கு கொள்கை என்ற ஒரு நல்ல கொள்கை நடைமுறைக்கு வந்திருகிறது ..

அந்த சமஸ்கிருதம் என்னமோ இவர்கள் அடித்து துரத்தினதாக நினைக்கிற இடங்களில் இவர்களுக்கே தெரியாமல் வந்து பூந்து கொள்கிறது ..


"அமைச்சர்" சமாச்சாரம் இப்படிதான் .. மந்திரி என்ற சொல் சமஸ்கிருதம் அது கூடாது என்று அமைச்சராக்கினால் அந்த அமைச்சரும் "அமாத்யா" என்ற சமஸ்கிருத வார்த்தையின் திரிபுதான் ..பேச்சு வழக்கிலே மைத்துனன் -மச்சினன், பித்தன் -பிச்சன், வைத்து, புளித்து என்ற மாதிரி உள்ள வெச்சு புளிச்சு என்றெல்லாம் சொல்கிறோமே அந்த ரீதியில் தான் சப்தங்கள் மாறி மாறி சமஸ்கிருத "அமாத்யாரே" தமிழில் முதலில் அமர்தராகி பிறகு அமைச்சரானது ..

சமீபத்தில் மனித நேயம் என்று வார்த்தை வளம் வருவதை பார்கிறேன் .. நல்ல வார்த்தை தான் காதுக்கு கேட்க்கவும் நன்றாக தான் இருக்கிறது ..அனாலும் மனிதாபிமானம் என்று இத்தனை நாளாக சொல்லிவந்ததில் "அபிமானம்" என்ற சமஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் இப்படி மாற்றி இருப்பார்கள் என்பதை கவனிக்கும் பொழுது சிரிப்பு தான் வருகிறது .. நேயம் என்பது "ஸ்நேஹம்" என்ற வார்தையிம்ன் திரிபுதான் ...முதலில் மனித என்பதும் மனுஷய வின் திரிபு தானே ? இதே போல நீதிபதி என்பதிலும் நீதி என்ற சமஸ்கிருத வார்த்தையை வைத்து கொண்டு "பதி" என்பதை விரட்டி விட்டு "நீதியரசர்" என்று போடுவதாக தெரிகிறது ..

ஒருத்தருக்கும் ஒரு உபயோகமும் இல்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனத்தில் முடிகின்றன...

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

அகிஞ்சனன் - இதுதான் உண்மையான துறவியின் அடையாளம்.
இங்ஙனம் ஒருவர் உண்மையாகச் சொல்லக் கொடுத்துவைத்திருக்க வேண்டுமே!


venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

140-முகம் காட்டி
அருள் முகம் காட்டி
ஆனை முகம் காட்டி ஆறுமுகம் காட்டி
இனிமை கூட்டி
ஈயும் வகை காட்டி
உயிர் மையம் காட்டி
ஊனுக்கு உயிரூட்டி
எளிமைக்கு அழகூட்டி
ஏலத்தின் வாசத்தை காட்டி
ஐங்கரனின் சோதரனாகி
ஒப்பற்ற மறையவனுக்கு மணிமண்டபம்
ஓரிருக்கையில் காட்டி பிணி தீர்க்கும்
ஔடதமாகி இன்னல்களை நீக்கி
சுக வாழ்வு காட்டும்
உன் செங்கமல அடி பற்றினேன்
வேங்கடவன் நான்!
அரவிந்த லோச்சனா! தியான சாகரா!
காஞ்சிி நகர வாசா!
கவலைகளை நீக்க கண்களை திறப்பாயோ
venkat k

Image: Manimandapam at Orikkai

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

In olden days, when a sannyasi attained Samadhi, his mortal remains were interned and a Siva lingam was established (prathishTha). There was no concept of mUrti worship. How come we are seeing a new trend? Is it permissible as per Hindu Sastras?

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

The Samadhi (Adishthanam) of Kanchi Sankaracharya is at Kanchipuram Mutt premises. HE passed away on 8th January 1994, and the mortal remains were interned the next day.

The one at Orirukkai village near Kanchipuram, is a Manimantapam (monument). This is a project promoted by one Pradosham Thethakudi V. Venkatarama Iyer who constituted a Trust in 1989, with ‘Vikku’ Vinayakaram as the Head of the Trustees. The foundation for the Manimantapam was laid in 1997, and on completion of the first phase, the Kumbhabhishekam for the Paduka mantapam was held in 2011. The Padukas (sandals) worn by Sankaracharya are kept here.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Many thanx shri V K and P B
with regards
Thanjavooran
13 01 2015

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Thanks PB..

I am sorry that I was thinking that every one knows...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
Varagooran Narayanan
"பெரியவாளோட முதல் உபன்யாசம்"

(2013 ஆகஸ்டில் போஸ்டான மறு பதிவு)

1907 ல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக தன் 13 ஆம் வயஸில் ஆரோஹணம் செய்து, தனது வாக் அம்ருதத்தாலும், சாஸ்திரங்கள் சொன்னதை இம்மியளவு கூட பிசகாமல், சிஷ்டாச்சாரத்தோடு தானே கடைப்பிடித்து காட்டியதாலும், நூறு வர்ஷங்கள் அல்பங்களான நம்மிடையே நடமாடி, இன்றும் ஆத்மார்த்தமாக நினைப்போர்க்கு அபயம் அளிக்கும் மஹா பெரியவா.........இந்தப் பட்டத்தை ஏற்றுக் கொண்ட அன்று மாலை, உபன்யாஸம் பண்ணச் சொல்லி மடத்தில் உள்ள பெரியவர்கள் வேண்டிக் கொண்டார்கள்.

கும்பகோணமே நிரம்பி வழிந்தது! பெரியவா பேச ஆரம்பிக்கும் முன் கூட்டத்திலிருந்த ஒரு வயஸானவர் இந்த பால ஸ்வாமிகளை வியப்போடு பார்த்தார்.

"66 வது ஆச்சார்யாள் ரொம்ப அழகா உபன்யாஸம் பண்ணுவார்..அவரோட வாக்வன்மை எல்லாரையும் ஆகர்ஷிக்கும். ஆனா, இவரோ...... ரொம்ப சின்னக் கொழந்தையா இருக்காரே! என்னத்தை பேசப் போறார்?" என்று மனஸில் சந்தேகம் அலைபாய கூட்டத்தில் முன்னால் வந்து உட்கார்ந்தார்.

அன்று பெரியவாளுடைய முதன்முதல் உபன்யாஸம் "ஸ்யமந்தகமணி" திருட்டுப் போனது, கிருஷ்ணனுக்கு அபவாதம் வந்தது, அப்புறம் ஜாம்பவானோட சண்டை போட்டு ஜாம்பவதியை கல்யாணம் பண்ணிக் கொண்டு, ஸ்யமந்தகமணியை கொண்டுவந்து அபவாதம் நீங்கப் பெற்றது பற்றி ரொம்ப அழகாக பேசினார். அன்று அத்தனைபேரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். என்ன அருமையான, கோர்வையான உபன்யாஸம்!

அந்த வயஸானவர் ஓடி வந்து பெரியவா பாதத்தில் விழுந்தார்........"மஹாப்ரபோ!" என்று அரற்றினார். அப்புறம் கூட்டத்தினரை நோக்கி பேசினார்.

" 66 வது பீடாதிபதியான கலவை பெரியவாளோட உபன்யாசத்தை நான் நெறைய தடவை கேக்கற பாக்யத்தை அடைஞ்சிருக்கேன்.....இந்த பதிமூணு வயஸ் கொழந்தை என்ன பேசப் போறார்?...ன்னு நெனெச்சேன்.....ஆனா, இந்த மொதல்உபன்யாசத்லேயே....... 'தான், பழைய பீடாதிபதிக்கு ஏத்த வாரிசுதான் !' ன்னு நித்ரூபிச்சுட்டார்! என்னோட தப்புக்கு நான் மனஸார மன்னிப்புகேட்டுக்கறேன் ஆனா, என்னால இப்போ அழுகையை கட்டுப் படுத்த முடியலை.........ஏன்னா, எனக்கு இப்போவே எம்பதுக்கு மேல வயசாச்சு. இன்னும் இந்த ஆச்சார்யாளோட உபன்யாசங்களை எவ்வளவு நாள் கேக்கப் போறேன்?..ன்னு நெனைச்சா ரொம்ப தாபமா இருக்கு. அழுகையை அடக்க முடியலை " என்று அழுதார் அந்த பெரியவர்.

பெரியவாளோட முதல் உபன்யாசத்துக்கு அவருடைய பரமகுருவின் மஹா பக்தர் மூலம் கிடைத்த பாராட்டு!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
"ஓம் சரஸ்வதீஜயாய நம" (பெரியவா இயந்திர கதியில் பூஜைகளைச் செய்வதில்லை)

சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்

......................ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன், நவராத்திரி
நிறைவில் ஸ்ரீ சரஸ்வதி பூஜை தினம்.

மகாப் பெரியவாள், வழக்கமான ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வரர்
பூஜையை முடித்தபின்,தனியாக சரஸ்வதி பூஜை
செய்ய ஆரம்பித்திருந்தார்கள்.

ஒரு வைதிகர், பூஜா கல்ப புஸ்தகத்தைக் கையில்
வைத்துக்கொண்டு படித்துக்கொண்டு வந்தார்.

வரிசையாக சங்கல்பம் - ஆவாஹனம் - பிராணப்
பிரதிஷ்டை - அங்கபூஜை முடிந்து, சரஸ்வதி
அஷ்டோத்திரம் சொல்ல ஆரம்பித்தார்.

ஒவ்வொரு 'நம;'வுக்கும், ஒவ்வொரு புஷ்பத்தை
எடுத்து அருச்சித்துக் கொண்டிருந்தார்கள் பெரியவா.

'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' என்று வைதிகர் படித்தார்.

மகாஸ்வாமிகள் கையில் எடுத்த புஷ்பம் சரஸ்வதியின்
சரணங்களை அடையாமல் அப்படியே சுவாமிகளின்
கையில் அந்தரத்தில் நின்றது.

அஷ்டோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தவர்
மறுபடியும், 'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' என்றார்.

புஷ்பம் கையிலிருந்து புறப்படவில்லை.

திரும்பத் திரும்ப, அந்த நாமவளியை அவ்வாறே அவர்
சொல்ல, பெரியவா, புஷ்பத்துடன் உயரத் தூக்கிய கையுடன்,
சித்திரம் போல், அசையாமல் நிற்க...எல்லோருக்கும் கவலை
உண்டாகிவிட்டது. "என்ன தவறு நடந்துவிட்டது, இங்கே?"
என்று புரியாமல் தத்தளித்தார்கள்.

விஷயம் பெரிய மானேஜர் விசுவநாத அய்யர் செவிவரை
போய்விட்டது. அவர் பூஜை மண்டபத்துக்கு வந்தார்.

"மறுபடியும் படியுங்கோ..."

வைதிகர், மறுபடியும், 'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம:' என்று
சொல்ல, புஷ்பம் பெரியவா விரல் நுனியிலேயே நிற்க.....

நல்ல காலமாக பக்கத்திலிருந்த வேறொரு வித்வான்,
'ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம:'ன்று திருத்திச் சொன்னவுடன்
பெரியவா கையிலிருந்த புஷ்பம் கலைமகளின்
திருவடியை அடைந்தது!

இந்த இரண்டு நாமங்களில் அப்படி என்ன பெரிய
வித்தியாசம் என்று தோன்றலாம்.

ப்ரஹ்ம ஜயாயை நம: என்றால், பிரம்மாவை ஜயித்தவளுக்கு
நமஸ்காரம் என்று அர்த்தம்.

ப்ரஹ்ம ஜாயாயை நம: என்று,ஒரு 'கால்' போட்டுச் சொன்னால்,
பிரம்மாவின் பத்னிக்கு நமஸ்காரம் என்று பொருள்.

பெரியவா இயந்திர கதியில் பூஜைகளைச் செய்வதில்லை
என்பதற்கு இது ஒரு நிதர்சனமான உதாரணம்.
முழுமனத்தையும் பூஜையில் செலுத்தி, பொருள் உணர்ந்து
பூஜை செய்கிறார்கள் என்பதற்குச் சான்று.

ப்ரஹ்ம ஜயாவோ,ஜாயாவோ - எப்படியோ
இருந்து விட்டுப் போகட்டும்.

ஆனால் பெரியவாளை, "ஓம் சரஸ்வதீஜயாய நம"
என்று நாம் சரணாகதி பண்ணிவிட்டால் வித்தைகள்
எல்லாம் வரும்தானே?

sridhar_ranga
Posts: 809
Joined: 03 Feb 2010, 11:36

Re: Kanchi Maha Periyava

Post by sridhar_ranga »

ப்ரஹ்ம ஜயாயை நம: என்றால், பிரம்மாவை ஜயித்தவளுக்கு
நமஸ்காரம் என்று அர்த்தம்
ஆனால் பெரியவாளை, "ஓம் சரஸ்வதீஜயாய நம"
என்று நாம் சரணாகதி பண்ணிவிட்டால்
doesn't this go against what periyavaaL just indicated?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

கவிஞர் வாலி ஒரு முறை என்னை மகா சுவாமிகளை
தரிசிக்க அழைத்துக் கொண்டு போனார். மகா
சுவாமிகளிடம் ஏதோ சில விளக்கங்களைக் கேட்டு
பதில் பெறவேண்டும் என்பது அவருடைய விருப்பம்.
என்ன கேட்கப் போகிறாரோ என்று எனக்கு உள்ளூர
ஓர் ஆவல் குறுகுறுத்தது.
வாலி உள்ளே வந்தார்.அவர்களுக்கு எதிரே ஒரு
மூலையில் நின்று கொண்டார். ஒரு குழந்தையைப்
போலத் தேம்பித்தேம்பி அழத் தொடங்கினார்.
எதுவுமே பேசவில்லை. தரிசனம் அப்படியே முடிந்தது.
வெளியே வந்ததும் அவரிடம், "என்ன ஆயிற்று?
ஏன் அழுது கொண்டிருந்தீர்கள்?" என்று கேட்டேன்.
"செய்த பாவங்கள் எல்லாம் கண்முன்னே வந்தன.
எனக்கு மனசு தாங்கவில்லை. குமுறிக் குமுறி
அழுதேன்!" என்றார் வாலி.
அப்புறம் அந்த அனுபவத்தை ஓர் அற்புதமான
கவிதையாக் எழுதிக் கொடுத்தார்.'ஆனந்த விகடனி'ல்
அது பிரசுரமாயிற்று. அந்த வரிகள் இன்றும் என்
மனதில் பசுமையாக இருக்கின்றன.

"பார்த்த மாத்திரத்தில் பாவத்தை
..அலம்பிடும் தீர்த்தப் பெருக்கை
..திருவாசகத்தின் உட்பொருளைக்
..கூர்த்த மதியினை வேண்டிக் கொண்டேன்!"

சொன்னவர்-மணியன்-எழுத்தாளர்.
தொகுத்தவர்-எஸ்.லட்சுமிசுப்ரமணியம்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

"இந்த பையன் கனகதாராஸ்தவம் பாடும் போது பொன்மழையே பொழிந்தது,''

செப்டம்பர் 09,2014,-தினமலர்.

1942ல், காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் திருப்பணி தொடங்கி, 1944 பிப்.7 ல் கும்பாபிஷேகம் நடத்த காஞ்சிப்பெரியவர் தீர்மானித்திருந்தார். இதற்கிடையில், ஜன.31ல் பெரியவர் கோயிலுக்கு வந்தார். அம்பாள் கர்ப்பகிரகத்தின் மீதுள்ள விமானத்தின் செப்புக் கவசத்தைக் கழற்றிக் கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.

பணியாளர்கள் அதைக் கொண்டு வந்ததும், பெரியவர் உன்னிப்பாக பார்த்துவிட்டு, அதன் மீது தங்கமுலாம் பூச வேண்டும் என அபிப்ராயப்பட்டார். அதைப் பார்த்த தங்க வியாபாரி இதற்கு முலாம் பூச குறைந்த பட்சம் 100 பவுன் தங்கமாவது தேவைப்படும் என தெரிவித்தார்.

அப்போது, ஸ்ரீமடத்தின் மேனேஜர் தங்க முலாம் பூசுவதற்குத் தேவையான பணம் கைவசம் இல்லை என்பதைப் பணிவுடன் பெரியவரிடம் தெரிவித்தார். கோயிலில் கூடியிருந்த பக்தர்கள் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில், மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் அம்பாளைத் தரிசிக்க கோயிலுக்கு வந்திருந்தார். சங்கீத மும்மூர்த்திகளின் பாடல்களை பாடுவதில் சமர்த்தரான அவர், பெரியவர் வந்திருப்பதை அறிந்து, நமஸ்காரம் செய்ய வந்தார்.

அவரிடம் பெரியவர்,""நல்ல சமயத்தில இங்கு வந்தே . இங்கே உட்காந்து அம்பாள் மீது கீர்த்தனைகளைப் பாடேன்'' என்றார். அவரும் 20 நிமிஷம் பக்தியோடு பாடல்களைப் பாடினார். அதன்பின், பக்கத்தில் நின்ற சீடனான சிறுவனை அழைத்து, ஆதிசங்கரருக்காக திருமகள் தங்கமழை பெய்வித்த "கனகதாராஸ்தவம்' ஸ்தோத்திரத்தைப் பாட உத்தரவிட்டார்.

அவர் பாடத் தொடங்கியதும், அங்கு கூடியிருந்த பெண்களில் சிலர், தங்கள் தங்க நகைகளை கழற்றி பெரியவர் முன் இருந்த தட்டில் சமர்ப்பித்தனர். அம்பாளின் கர்ப்பகிரக விமானத்திற்கு தங்க முலாம் பூச இதனை ஏற்றுக் கொண்டு தங்களுக்கு ஆசிர்வாதம் அளிக்கும்படி வேண்டினர்.

விஸ்வநாத அய்யர், பெரியவரிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பத் தயாரானார். அவரிடம் பெரியவர், "நீ இங்க வந்தப்போ குழப்பமா இருந்தது. நீ அம்பாளைப் பற்றி பாடி முடித்ததும், தைரியம் உண்டானது. இந்த பையன் கனகதாராஸ்தவம் பாடும் போது பொன்மழையே பொழிந்தது,'' என்று சொல்லி அங்கிருந்த அனைவருக்கும் ஆசியளித்து மகிழ்ந்தார்.

அம்பாளைப் பாடி வணங்கினால் தைரியம் ஏற்படும். லட்சுமி தாயாரை நினைத்து கனகதாரா ஸ்தவம் பாடினால், நியாயமான விஷயங்களுக்கு போதுமான பணம் கிடைக்கும். பெரியவர் நம் முன் நிகழ்த்திய அற்புதநிகழ்வு இது.

Sundara Rajan
Posts: 1081
Joined: 08 Apr 2007, 08:19

Re: Kanchi Maha Periyava

Post by Sundara Rajan »

The following is in response to Sridhar_ranga's doubt above: "Saraswathi jayAya" could, in this context, be interpreted as "one who received all the knowledge/blessings from Sarasawathi", instead of one who conquered Saraswathi.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Varagooran Narayanan
இது என்ன கருணையா, கிண்டலா?'

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரை.

ஒரு சிறிய ஊரில் பெரிய கட்டடத்தில் ஸ்ரீமடம் முகாம்.

ஓர் இரவு, பெரியவாள் தங்கியிருந்த அறையை
ஒட்டியிருந்த அறையில் முகாம் அலுவலகம்.
அங்கே மரப் பெட்டிகளில் புதிய வேஷ்டி-புடவைகள்,
சால்வைகள், வெள்ளிக்காசு - தங்கக் காசு போன்ற
சாமான்கள் வைக்கப்பட்டிருந்தன.

பகல் முழுவதும் ஏகப்பட்ட வேலைகள்,உட்காரக்கூட
நேரம் கிடைக்காமல் உள்ளேயும், வெளியேயும்
நடந்து கொண்டேயிருக்க வேண்டியிருந்தது,
மெய்த்தொண்டர்களுக்கு. எனவே இரவில் அயர்ந்த தூக்கம்

நள்ளிரவில் ஒரு திருடன் அலுவலக அறைக்குள் புகுந்து
ஒரு பெட்டியைத் தூக்க முயன்றான்.கனமாக இருந்ததால்
சட்டென்று தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

சத்தம் கேட்டு விழித்துக் கொண்ட பெரியவா, திருடன்
வந்திருப்பதைத் தெரிந்து கொண்டார்கள். ஆனால்.
உடனே "திருடன்,திருடன்" என்று கூப்பாடு போடவில்லை.
எப்போதும் போன்ற மிருதுவான குரலில் ஓரிரு
சிஷ்யர்களை எழுப்பினார்கள்.

"பக்கத்து ரூம்லே மரப்பொட்டியைத் தூக்க முடியாமே
ஒருத்தன் சிரமப்பட்டுண்டிருக்கான். நீங்க போய்
ஒத்தாசை பண்ணுங்கோ..."

பாணாம்பட்டு கண்ணன் என்ற தொண்டருக்கு உடனே
விஷயம் விளங்கி விட்டது. அவரும் சத்தம் போடாமல்
மின்விளக்குகளின் ஸ்விச்சைப் போட்டார்.ஒரே வெளிச்சம்!

திருட வந்தவன் தலைதெறிக்க ஓடிப் போனான்.

"அடாடா... சொல்லாமல்,கொள்ளாமல் ஓடிப் போயிட்டானே!..
பொட்டியிலேர்ந்து வேணும்கிறதை எடுத்துண்டு போகச்
சொல்லியிருக்கலாமே?" என்றார்கள் பெரியவா.

'இது என்ன கருணையா, கிண்டலா?'
என்று சீடர்களுக்குப் புரியவில்லை.

ஏனென்றால் பெரியவாளுக்கு இவை இரண்டுமே
கைவந்த கலை.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
Christ and Krishna - Kanchi Mahaswamigal

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

1966லே பெரியவா சொன்ன கருத்துச் சுருக்கம் சொல்கிறேன் கேளுங்கள்:

''எப்போதும் கிறிஸ்மஸ் பண்டிகையும் திருவாதிரையும் பக்கத்திலே வரும். எல்லாமே டிசம்பர் மாசத்திலே தான்.

'' இந்த இரண்டுமே லோகம் பூராவிலும் ரொம்பப் பேர் ‘ஹோலிடே’ யாகவோ, வெறும் ‘ஹாலிடே’ யாகவோ – கொண்டாடும் நாளாக இருக்கிறது. இதன் காரண புருஷரையும் நம்மைச் சேர்ந்தவராக, அதிலும் தம்முடைய பேராலேயே நான் சொன்ன அந்த சிவ-விஷ்ணு அபேதத்தைக் காட்டுகிறவராக, சொல்லிக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது!

அவர் பெயர் என்ன? ஜீஸஸ் க்ரைஸ்ட்’ என்கிறோம். அது ஜெர்மானிக் என்றும் ட்யூடானிக் என்றும் சொல்கிற பாஷா ‘க்ரூப்’பைச் சேர்ந்த ஜெர்மன் பாஷை, இங்கிலீஷ், டச் (DUTCH ), இன்னும் ஸ்காண்டினேவியன் பாஷைகள் என்பதாக நார்வே, ஸ்வீடன், டென்மார்க் முதலான தேசங்களில் பேசப்படும் பாஷைகள் ஆகியவற்றில் அவருக்கு ஏற்பட்டிருக்கிற பெயர்தான்.

அவருக்கு மூலத்தில் ஹீப்ருக்களின் பாஷையில் என்ன பெயரோ அதுவே – ஸம்ஸ்க்ருத ‘ச்ராவணீ’ தமிழ் ‘ஆவணி’யாக உருமாறின மாதிரி – இந்த பாஷைகளில் ஜீஸஸ் என்று ஆகியிருக்கிறது.

ஆனால் ஜீஸஸ் இந்த பாஷைகள் வழங்குகிற ஐரோப்பாவைச் சேர்ந்தவரேயில்லை. நம்முடைய ஆசியாக் கண்டத்துக்காரர்தான் அவர்.

அவருடைய தாய்பாஷை அரமீனியன் என்கிறது. அது ஹீப்ருக்களின் பாஷைகளான ஸெமிடிக் க்ரூப்பைச் சேர்ந்த ஒரு பாஷையே. அதிலே அவருக்கு வைத்த பெயர் ‘யீஷுவ (Yeshua) என்கிறதே! அந்த final ’வ’ வை ‘அ’ மாதிரி பட்டும் படாமலும் சொல்ல வேண்டும். அதுதான் மற்ற ஐரோப்பிய பாஷைகளில் ‘ஜோஷுவா’ என்றும் ’ஜீஸஸ்’ என்றும் ஆயிற்று.

‘ய’ கர வரிசை ‘ஜ’கர வரிசையாவது எல்லா இடத்திலேயும் உண்டு. வேதத்திலேயே மற்ற சாகைகளில் (கிளைப் பிரிவுகளில்) ‘ய’ என்று வருவது வடதேசத்தில் இப்போதும் அநுஷ்டானத்திலிருக்கிற சுக்ல யஜுர் வேதத்தின் மாத்யந்தின சாகையில் ‘ஜ’ என்றுதான் வரும்…. யமுனாவை ஜமுனா என்கிறார்கள். யந்த்ரம் என்பதை ஜந்தர் என்கிறார்கள்.

தமிழிலே ஸம்ஸ்க்ருத ‘ஜ’வை ‘ய’ ஆக்குவது ஸஹஜம். வேடிக்கையாக இதற்கு ஒரு ‘கான்வெர்ஸ்’! ஸம்ஸ்க்ருதத்தில் ‘யாமம்’ என்றே இருப்பதை நாம் ‘ஜாமம்’ என்கிறோம்!

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால், ‘யீஷுவ’வின் ‘யீ’தான் ‘ஜீஸ’ஸில் ‘ஜீ’யாகியிருக்கிறது. அந்த ‘ஜீ’யை நாம் மறுபடி ‘ய’காரப்படுத்தி, ஆனால் கொஞ்சம் வித்யாஸமாக, ‘யேசு’ என்கிறோம்.

மூல ‘யீஷுஅ’ நம்முடைய ‘ஈச’ தான், அதாவது சிவ நாமாதான் என்று வைத்துக் கொள்ளலாமே என்று தோன்றுகிறது.

அப்படிச் சொன்னால் நம்மவர்கள், அந்த மதஸ்தர்கள் இரண்டு பேரிலுமே யாராவது அபிப்ராய பேதமாகச் சொல்வார்களோ, என்னவோ? பேதம் வேண்டாம் என்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்?

ஆனபடியால் வைத்துக் கொள்ளலாமே என்றில்லாமல் வைத்துக் கொள்ளலாமோ என்று சொல்லத் தோன்றுகிறது என்று வேண்டுமானால் திருத்திக் கொள்கிறேன்!

‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’டில் ‘ஜீஸ’ஸை ‘ஈச’னாகச் சொல்லலாமோ என்று!

‘க்ரைஸ்ட்’டுக்கு வருகிறேன். அது முழுக்கவும் ஐரோப்பிய பாஷையாகவே ரூபமான (உருவான) வார்த்தைதான்.

நாம் பட்டாபிஷேகம் என்று விசேஷமாக அபிஷேகம் பண்ணுகிறோமோல்லியோ? மங்கள ஸ்நானம் என்று தலைக்குத் தைலம் வைத்து அப்படிப் பண்ணுகிறது. இதே மாதிரி எல்லா தேசங்களிலும் மத சாஸ்த்ரபூர்வமாகத் தைலம் தேய்ப்பதாக இருந்திருக்கிறது. அப்புறம் ஸ்நானம் பண்ணுவிக்கிறது இல்லை; தைலம் தேய்த்து மட்டும் நிறுத்தி விடுவது. கொஞ்சமாகப் பூசுவதால், அதுவே உள்ளே போய் விடும். அதற்கு ‘அனாயிண்ட்’ பண்ணுவதென்பது பெயர்.

ஈச்வரனே அந்த மாதிரிச் சில பேரை லோகோத்தாரணம் பண்ணுவதற்காக ‘அனாயிண்ட்’ பண்ணி, அதாவது பட்டாபிஷேகம் பண்ணி, ‘மெஸையா’ (Messiah) என்று அனுப்புவதாகச் சொல்வார்கள். ஹீப்ரு ‘மேஷியா’ இங்கிலீஷில் ‘மெஸையா’ ஆயிற்று.

அதற்கே ஐரோப்பிய பாஷையான க்ரீக் (Greek)-ல் இருக்கிற பெயர் ‘க்ரைஸ் டோஸ்’ என்பது. அதன் அடியாகத்தான் இங்கிலீஷ் முதலான பாஷைகளில் ‘க்ரைஸ்ட்’ என்ற வார்த்தை ஏற்பட்டது. ஜீவ ஸமூஹ உத்தாரணத்துக்- கென்றே ஈச்வரன் அனாயிண்ட் பண்ணி அனுப்பினவரே ஜீஸஸ் என்கிற நம்பிக்கையுள்ள மதஸ்தர்கள் அவரொருத்தரையே குறிப்பாக அப்படிச் சொல்வதாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஜீஸ’ஸுக்கு ‘ஈச’ ஸம்பந்தம் காட்டின மாதிரி இந்த ‘க்ரைஸ்டு’க்கு க்ருஷ்ண ஸம்பந்தம் காட்டினாலென்ன என்று தோன்றுகிறது!

க்ருஷ்ணனை நாம் கிஷ்டன், கிட்டன், கிருட்டிணன் என்றெல்லாம் சொல்கிறோமோ இல்லியோ? இந்த மாதிரி ‘க்ரிஸ்டன்’ என்றும்தான் சொல்லலாம். முடிவிலே சொல்லும் ‘அன்’ விகுதி தமிழில்தான் உண்டு. நாம் ‘ஈச்வரன்’ என்பது வடக்கத்திக்காரர்களுக்கு ‘ஈச்வர்’தான்; நம் சங்கரன், ராமன் எல்லாமே சங்கர், ராம் என்றிப்படித் தான்! வர வர இங்கேயும் அதுவே ஃபாஷனாகி வருகிறது…

அது இருக்கட்டும்…. ‘அன்’ விகுதி போய்விட்டால் க்ரிஸ்டன் ஆன க்ருஷ்ணன் என்ன ஆவான்? ‘க்ரிஸ்ட்’ என்று தானே ஆவான்? ‘சிவ’ ஸம்பந்தமானது ‘சைவம்’, ‘விஷ்ணு’ ஸம்பந்தமானது ‘வைஷ்ணவம்’ என்று ஆரம்ப இகாரம் ஐகாரமாகிற மாதிரி ‘க்ரிஸ்ட்’ ஸம்பந்தமானது ‘க்ரைஸ்ட்’ என்றே ஆகும்! அப்படித்தானே?

ஆகக்கூடி, ‘ஜீஸஸ் க்ரைஸ்ட்’ = ‘ஈச க்ருஷ்ணன்’.

(நெடுநேரம் தாமும் சிரித்து உடனிருந்தோரையும் சிரிக்க வைத்து விட்டு மஹா பெரியவா தொடர்கிறார்: )

இப்படியாகத்தானே சிவ-விஷ்ணு அபேதம் காட்டுகிற மாஸத்திலே அந்த இரண்டு பேருக்குமான திருநாள்களுக்கு மத்தியிலே வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையின் காரண புருஷர் தம்முடைய பெயரிலேயே ஈச்வரன் என்று சொல்லப்படும் சிவன், விஷ்ணுவின் பூர்ணாவதாரமான க்ருஷ்ணன் ஆகிய இரண்டு பேரின் பேர்களையும் பேதம் பார்க்காமல் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்ட மாதிரிக் காட்டுகிறார் என்று ஸமய ஸமரஸத்தை மேலும் கொஞ்சம் நீட்டிப் பார்க்கலாமோ என்று தோன்றிற்று.

தோன்றினதைச் சொன்னேன்.''

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

"அடடா, சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போயிட்டானே"
கருணையுமல்ல, கிண்டலுமல்ல. எந்த உருவத்தில் இறைவன் வருவானோ, யாரறிவர்?

तस्कराणां पतये नमः

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

இறை தத்துவமுணர்ந்தோருக்கு
ஈசனும் இயேசுவும் ஒன்றன்றோ!
சமயங்கள் பலவாயினும்
சத்தொன்றன்றோ!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
Every 1st of Jan, all musicians including vocal artists used to come & sing at Periyava’s sannidhi. This seems to have an unwritten custom among themselves. In one of the gregorian new year, everyone sung at Periyav’s sannidhi.
Periyava blessed them all & gave prasad and sent them away. After some time Periyava called Sri Kannan Mama & Sri (Paattu) Ramamurthy Mama & told, “They say seven swarams…but origin is said to be only five places. In the song ‘Naatha Dhanumanisam Sankaram…’ he says seven swarams came from five faces: Sadyojaat, Vaamdeva, Tatpurusha, Aghora and Ishana. Ask them how?”
First, they went to Sri Vaasudevaachar at Kalakshetra. He is a senior even by age, at that time & also has a good command over sanskrit. His dialogues with Periyava have made people to wonder how pleasant sanskrit could sound & mean, if used for verbal communications. Periyava has called him ‘Aasu-Kavi’. He has written songs on Periyava. He however pleaded guilty & said that He heard from his Guru that only 5 swarams but he didn’t know the reason. And sought Periyava to clarify.
Next, they went to Karaikudi (Veena) Sri Sambasiva Iyer. He also said similar thing. Also requested that only Periyava should enlighten them else they’d be shamed, if someone ask that question.
Next, Sri Madurai Mani Iyer – “Nobody would be able to spell out the meaning..Everyone is singing & so do I…”
“Periyava is Eswaran!”
“He is ‘Nadha Dhaumanisam… What ‘Sankaram’ mean is only Him!”
“Only Periyava has to explain…”
Same way checked with Maharajapuram Sri Viswanatha Iyer.
Next day each one called other over phone & arrived at Periyava’s sannidhi. Sri Kannan Mama informed Periyava.
“Have they come for answering?” asked Periyava.
Then Periyava came out & gave darshan, “What answer have you brought?”
First, Sri Vasudevaachar, “Not knowing this basic is a big mistake for all of us…Only Periyava has to clarify..”
Maharajapuram Sri Viswanatha Iyer, “Everyone of us is taking some money & singing… Somehow music is feeding us…”
Periyava, “Venkatapathy has written Chatur-thandi-prakasigai… Wondering, if anyone has seen such works…”
Periyava said, “Though people say seven colors, red is not (actually) part of it… They use red light for film development, it doesn’t affect it…”
“Similarly, white is also not included in the color…Finally, there is only one color for Ambal, which is red and in the same way there is only one color for Paramaeswara, which is white”…Even for me this is only hearsay..”
‘Saa’, ‘Paa’ are called ‘Prathi-swaram’ & aren’t part of Swaram!”
On hearing it, everyone shed tears & did ‘namaskaram’. Every singer once on stage do check with ‘Saa… Paa…”
If someone is not fit we used to say, “He don’t even know ‘Saa…’ ‘Paa…’ “
Vidwans said after coming out of the darshan, “with this explanation from Periyava, now we can go and say all about this to outside..

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

"Though people say seven colors, red is not (actually) part of it… They use red light for film development, it doesn’t affect it…”

With due deference, I do not know whether such a statement has indeed been made by Paramacharya. If it is so, it is not factually correct.
https://answers.yahoo.com/question/inde ... 028AAoYay9

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

"இதை அணிந்து கொண்டால், பிறகு பொய்
பேசப்படாது.செய்வியா?"

தொகுத்தவர்-அழகர் நம்பி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஸ்வாமிகளின் பக்தர் ஒருவர் நேபாள் சென்று
திரும்பினார். அப்போது அணிந்து கொள்வதற்காக
ருத்திராட்ச மாலை ஒன்றை வாங்கி வந்திருந்தார்.

மாலையை பெரியவாளின் ஆசி பெற்ற பின்பு
அணிய வேண்டும் என்ற விருப்பம் அந்த பக்தருக்கு.

பெரியவாளை தரிசிக்க வந்த சமயம் ருத்ராட்ச
மாலையை ஸ்வாமிகளின் முன்பாக வைத்துவிட்டு
வணங்கினார்.

"இது யாருக்கு?" என்றார்கள் ஸ்வாமிகள்.

"நேக்கு தான், பெரியவா ஆசி செய்து கொடுத்தால்
அணிந்து கொள்ளலாம் என்று தான்-என்று
இழுத்தார் பக்தர்.

"இதை அணிந்து கொண்டால், பிறகு பொய்
பேசப்படாது.செய்வியா?" என்றார்கள் ஸ்வாமிகள்.

"அது சிரமம். நானோ வங்கி ஊழியன். என்
மேலதிகாரிகளின் உத்தரவு படிதான் கோப்புகளை
தயார் செய்ய முடியும்.அதில் பொய் கலப்பு
இல்லாமல் இருக்காதே" என்றார் பக்தர்.

"அப்படின்னா, இதை பொய் பேசாதவாளுக்குக்
கொடுத்து விடு" என்றார்கள்.

"என் பார்யாள் சொன்னபடியே ஆய்டுத்து"
என்றார் பக்தர், சிஷ்யர்களிடம்.

"நம்மாத்தில் இருக்கும் ஸ்வாமிகளின் (பெரியவா)
திருவுருவப் படத்துக்குப் போட்டு விடலாம்"
என்றிருக்கிறார் பார்யாள்.

"ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படியே செய்துடறேன்"
என்றார் பக்தர்.

மனிதனுக்கு ஏதாவது ஒரு சமயம் பொய் பேச
வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.

பொய்யே பேசாதவர் என்றால் ஸ்வாமிகளுக்கு
தான் போட வேண்டும் என்று நம்பினார்.

பக்தரின், பார்யாளின் விருப்பத்தையும் ஸ்வாமிகள்
பூர்த்தி செய்து விட்டார்கள்.

எவர் வாய் மூலமாகவும் கேட்காமலே, அந்த
அம்மாளின் விருப்பத்தை எப்படி அறிந்தார்கள்
பெரியவா. அனைத்தும் பெரியவாளின்
ஞான திருஷ்டிதான்.

"அசலும் போலியும் பொருளில் மட்டுமா
..ஆன்மிகத்திலும் இருக்கிறது
..மனிதனுக்கு அநேக முகங்கள்,அவன்
..நல்ல விஷயங்களைப் படிப்பான்
.நல்ல முறையாகப் பேசுவான்-ஆனால்
..படித்தபடியோ,பேசுகிறபடியோ
..நடப்பதேயில்லை,அவனது
..சொல்லும் செயலும் வேறாகவே இருக்கும்."

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

thanjavooran wrote:A share from my friend

"இதை அணிந்து கொண்டால், பிறகு பொய்
பேசப்படாது.செய்வியா?"

"அது சிரமம். நானோ வங்கி ஊழியன். என்
மேலதிகாரிகளின் உத்தரவு படிதான் கோப்புகளை
தயார் செய்ய முடியும்.அதில் பொய் கலப்பு
இல்லாமல் இருக்காதே" என்றார் பக்தர்.
I am writing this with great pain. This exhortation by Paramacharya is a kind of anugraha from him to make course correction in life. Unfortunately, the concerned devotee not only failed to comprehend the anugraha, but, on the contrary, justifies the practical side of his life.

This attitude of not only tolerance to corruption, but also abetment of the same, is highly regrettable. I am privy to this degradation of values right from the days our Independence. There was a classmate of mine who was employed in a Government department during late fifties. The father of my friend was not only very enthusiastic about the 'கிம்பளம்' being equal to the pay (then salary was Rs. 45/- per month) but also was very proud about his son's achievement. This is now only a tip of ice berg and is a rule rather than exception.

brAhmaNOsya mukhamAsIt is what purusha sUktam tells us. This face is now totally contorted and corrupted. I am deeply pained that the seriousness of this is still - after 60 of Independence - not comprehended - this post is a reflection of that continuing corrupt state.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

EXPLAINING DHARMA IN SUBTLE WAY
A devotee said, "Curd rice remained in excess. Gave it to the cow. It ate with satisfaction."
Periyavaa said: "Should not give curd rice or rice mixed with milk to the cow. The curd is obtained from the milk, and the milk from the cow."
The devotee was restless: "I have committed an apacaram (offense), should pardon me!"
"Let it go; don't repeat it. You can feed pranis (animals) like dogs with annam mixed with milk, ghee or curd; but not the cows."
It is possible only for Periyavaa to teach the dharma suksma (subtleties of dharma) in a way that sticks to the mind and heart!
author: Sri Matham Balu Mama

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

Periyava
ஒரு பிள்ளையார் கோயிலில் ஒருநாள் பூப்பந்தலெல்லாம் போட்டு, மிக அழகாக அலங்காரம் செய்து உற்சவம் செய்து அந்த புகைப்படங்களை ஒருவர் பெரியவா பார்வைக்கு எடுத்து வந்தார்.
“ரொம்ப நன்னாருக்கே அலங்காரம்!” என்று ஆச்சரியப்பட்டார் பெரியவா. அலங்காரமெல்லாம் ஓர் இஸ்லாமியர் செய்தது என்று வந்தவர் கூறியதும் பெரியவா அகமகிழ்ந்தார். “ எல்லாரும் இப்படித்தான் வித்தியாசம் பார்க்காமல் ஒற்றுமையாக இருக்கணும். அந்தப் பெரியவரை முடிந்தால் என்னை வந்து பார்க்கச் சொல்லு!” என்றார் பெரியவா.
எந்தப் பிரபுவைப் பார்க்க பிரதமர் முதல் ஜனாதிபதி வரை எல்லோரும் காத்திருக்கிறார்களோ அவர், தன்னைப் பார்க்க விரும்புவது தெரிந்ததும் ‘எனக்கு இப்படி ஒரு பாக்கியமா!’ என்று நினைத்த இஸ்லாமிய அன்பர், பெரியவாளிடம் உடனே வந்தார்.
அவரிடம், “ இப்படி மத வேற்றுமை பாராட்டாமல் நல்ல காரியங்களுக்கு உதவுகிறீர்கள். ஆனால் உங்கள் மத அனுஷ்டானங்களை விடாமல் செய்து வருகிறீர்களா? என்று கேட்டார். அவரும் “எனக்கு நம்பிக்கை உண்டு முடிந்தவரை விடாமல் பண்ணுகிறேன்!” என்றார். “எத்தனை முறை தொழுகை செய்வீர்கள்?” என்பதற்கு, ‘ஐந்து முறை’ என்றார் அந்த அன்பர்.
“இல்லை! உங்களுக்கு ஆறு காலத் தொழுகை உண்டு. நபிகள் நாயகம் அப்படித்தான் பண்ணி வந்தார்! ஆறாவது நடுநிசியில் பண்ணவேண்டிய தொழுகை. அந்த நேரம் ஜனங்கள் தூங்கி விடுவதால் விட்டுப் போய்விட்டது போலும்! என்றார் பெரியவா. இஸ்லாமிய அன்பர் வியப்பிலாழ்ந்தார்.
“நான் ஏதோ தெரிந்ததைச் சொன்னேன். நீ உன் மதாச்சாரியர்களிடம் இதை உறுதிப்படுத்திக் கொண்டு முடிந்தால் கடைப்பிடிக்கலாமே” என்றார் பெரியவா அடக்கமே உருவாக!
சர்வக்ஞன், சர்வ வியாபியான பரம்பொருள் பெரியவா

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

... உங்களுக்கு ஆறு காலத் தொழுகை உண்டு. நபிகள் நாயகம் அப்படித்தான் பண்ணி வந்தார்! ஆறாவது நடுநிசியில் பண்ணவேண்டிய தொழுகை. ..
Muslims are ordained to pray only five times a day - not six.
No prayer is done at 'midnight'.
The other statement is also not correct.
Wonder why Sankaracharya decided to misguide and confuse the poor Muslim.

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Kanchi Maha Periyava

Post by Ponbhairavi »

such anecdotes are nowadays increasingly floated by overenthusiastic bhakthas.Unfortunately,unless supported by incontrovertible genuine sources they only reflect the level of the bhakthas and cause harm to the memory of the saint. and thereby fetch mahapapam to the promoter.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Times of Prayer:

The saying of prayer is obligatory upon every Muslim, male or female, who has attained to the age of discretion. It is said five times a day as follows:

1. Salat al-Fajr, or the morning prayer, is said after dawn and before sunrise.

2. Salat al-Zuhr, or the early afternoon prayer, is said when the sun begins to decline, and its time extends till the next prayer. On Fridays, the Friday service takes the place of this prayer.

3. Salat al-`Asr, or the late afternoon prayer, is said when the sun is about midway on its course to setting, and its time extends to a little before it actually sets.

4. Salat al-Maghhrib, or the sunset prayer, is said immediately after the sun sets.

5. Salat al-`Isha, or the early night prayer, is said when the red glow in the west disappears, and its time extends to midnight. But it must be said before going to bed.

When a person is sick or on a journey, or when there is rain, the early afternoon and the late afternoon prayers may be said in conjunction, and so also the sunset and early night prayers.

Besides these five obligatory prayers there are two optional ones. The first of these is the Salat al-Lail, the tahajjud, or the late night prayer, which is said after midnight, after being refreshed with sleep, and before dawn. This prayer is specially recommended in the Holy Qur'an. The other is known as the Salat al-Dzuha, and it may be said at about breakfast time. This is the time at which the two `Id prayers are said.


http://aaiil.org/text/books/mali/muslim ... yers.shtml

Ponbhairavi
Posts: 1075
Joined: 13 Feb 2007, 08:05

Re: Kanchi Maha Periyava

Post by Ponbhairavi »

Shri Venkata kailasam,
Thanks for your clarification . I plead ignorance in the matter and I am sorry for MY "over enthusiastic " post

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Shri Ponbhairavi..

Intention is not to point out a mistake..Just to share what I have come across...
regards..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
ஒரு சமயம் காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் கோயிலில் கருடசேவை நிகழ்ந்து கொண்டிருந்தது. சென்னையை சேர்ந்த கணவன், மனைவி விழா காண வந்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்ததால், சமூக விரோதிகள் உள்ளே புகுந்து விட்டனர். ஒருவன், அந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த ஆறு பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு கூட்டத்தில் மறைந்து விட்டான்.
பெருமாளைத் தரிசிக்க வந்த இடத்தில், இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டதை எண்ணி அந்த தம்பதியரின் மனம் மிகவும் நொந்தது. அவர்கள் காஞ்சி மடத்திற்கு வந்து மகாபெரியவரைத் தரிசித்தால், தங்களுக்கு தீர்வு கிடைக்குமென நம்பி வந்தனர். பெரியவரைத் தரிசிக்க பெரிய கூட்டம் வரிசையில் நின்றது. தம்பதிகளும் வரிசையில் இணைந்து கொண்டனர். அந்த பெண்ணின் கண்களில் நீர் கோர்த்திருந்தது. வரிசையில் வந்தவர்கள் சுவாமியை வணங்கி விட்டு, நகர்ந்து கொண்டே இருக்க, அந்தப் பெண்ணைக் கவனித்த பெரியவர் அவரை அழைத்து, ""ஏன் அழுகிறாய்?'' என்று ஏதும் அறியாதவர் போல் கேட்டார்.
முக்காலமும் உணர்ந்த அந்த நடமாடும் தெய்வத்திற்கா இந்த சம்பவம் தெரியாமல் போயிருக்கும்! இருப்பினும், பெண்ணிடம் அந்தக் கேள்வியைக் கேட்டு வைத்தார்கள்.
அந்தப் பெண் நடந்த விபரங்களை ஒன்று விடாமல் சொன்னார். உடனே பெரியவர் அவரிடம்,""மடத்துக்கு எதிரே இருக்கிற கங்கைகொண்டான் மண்டபத்தில் தெற்கு நோக்கி ஒரு ஆஞ்சநேயரும், ஏகாம்பரநாதர் கோயில் மண்டபத்தில் மேற்கு நோக்கி தூணில் எழுந்தருளியிருக்கும் இரண்டு ஆஞ்சநேயர்களையும் தரிசிக்கச் செல். அந்த ஆஞ்சநேயர்களை 21 தடவை பிரதட்சணம்(வலம்) செய். பிறகு வீட்டிற்கு போ,'' என்றார்.
அந்தப் பெண்,""போலீசில் புகார் கொடுக்க வேண்டாமா?'' என்று கேட்டார்.
""வேண்டாம்...வேண்டாம்...நீ பிரார்த்தனை முடிச்சுட்டு வீட்டுக்குப் போ,'' என்றார் பெரியவர்.
பெரியவர் சொன்னபடி, அந்த அம்மையாரும் அவரது கணவரும் ஆஞ்சநேயர்களைத் தரிசித்த பிறகு பஸ்ஸ்டாண்ட் சென்றனர். அப்போது இவர்களுடன் சென்னையில் இருந்து வந்தவர்கள், ""மாமி..மாமி...உங்களைத் தான் தேடிக் கொண்டு இருந்தோம். உங்கள் செயினைப் பறித்தவனை போலீஸ் பிடிச்சு நகையை கைப்பற்றிட்டாங்க. நீங்க ஸ்டேஷனுக்குப் போய் அடையாளம் சொல்லி வாங்கிக்கலாம்,'' என்றனர்.
அவர்களும் ஸ்டேஷனுக்குச் சென்று பொருளைப் பெற்ற பிறகு, மிகுந்த மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினார்கள். கடவுளின் அருள் வேண்டுமானால், குரு பாதை காட்ட வேண்டும். காஞ்சி மகாபெரியவரை நமது குருவாக ஏற்று வேண்டுதல்களை வைத்து விட்டால் போதும்! நமது கோரிக்கைகள் உரிய தெய்வங்களின் உதவியுடன் நிறைவேறி விடும். காஞ்சிபுரம் சென்றால், இனி நீங்களும் இந்த ஆஞ்சநேயர்களிடம் உங்கள் வேண்டுதலை வைத்து வரலாம்

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

150-அலகிலா அருள் பொழியும் தூயவனே போற்றி!
ஆருதலளிக்கும் அமுதா போற்றி!
இகபரம் சுகமளிக்கும் இறைவா போற்றி!
ஈசா! மறை ஓதுவாய் போற்றி!
உறு துணையாய் வருவாய் போற்றி போற்றி!-5

ஊறுவை தவிர்தருள்வாய் போற்றி!
என்னெற்றும் காத்தருள்வாய் போற்றி!
ஏற்றமது தந்தருள்வாய் போற்றி!
ஐங்கரனின் துணைவா போற்றி!
ஒன்றாகி நின்றாய் போற்றி! போற்றி!- 10

ஓங்காரமாகினாய் போற்றி!
ஔவியம் நீக்கியருள்வாய் போற்றி!
கணமும் உன்னை மறவாதிரிக்க அருள்வாய் போற்றி!
சதுர் வேத நாயகனே! சங்கரனே போற்றி!
ஞான ஒளியே காஞ்சி நாதனே போற்றி ! போற்றி! 15

தரணி புகழ் சதாசிவனே போற்றி!
நடனமாடும் நடராஜ பெருந்தகையே போற்றி!
பற்றட்டவர் பற்றும் பத்ம பாதா போற்றி!
மறையோதும் மன்னவா போற்றி!
திருமகள் தநயா போற்றி போற்றி -20

யாதுமாகி நின்றாய் போற்றி!
ராஜாதி ராஜனே நின் தாள் பணிந்தேன் போற்றி!
லம்போதர சோதரா போற்றி!
வித்தகா போற்றி போற்றி!
பிரணவத்திற்கு மூலமே போற்றி! போற்றி! -25

நாத ஒலியே போற்றி!
நாத பொருளே போற்றி
ஸவரங்களின் மூலமே போற்றி!
வேத வித்தகா போற்றி!
வேத ரஷ்ஷகா போற்றி! போற்றி !-30

கருவுக்கு உயிரானாய் போற்றி
உயிருக்கு உணர்வானாய் போற்றி!
உணர்வுக்கு சொல்லானாய் போற்றி!
சொல்லுக்கு பொருளானாய் போற்றி !
நீயே பரம் பொருளானாய் போற்றி!போற்றி!-35

மெய் ஞான பொருளே போற்றி!
ஞான வித்தகா போற்றி!
ஞான பரம் பொருளே போற்றி!
ஞான பண்டிதா போற்றி!
பரம ஞானமருள்வாய் போற்றி! போற்றி!-40

இசையே போற்றி!
இசை வடிவே போற்றி!
இசை ஞானமே போற்றி!
இசையின் சுவையேபோற்றி!
நாதானந்த வித்தகா போற்றி!போற்றி!-45

அருமறை பொருளே போற்றி!
ஆனந்த ரூபனே போற்றி!
குருநகையரசே போற்றி!
சுந்தர வடிவே போற்றி!
தத்துவ கனலே போற்றி!போற்றி!-50

ஏகாம்பரேச்வரா போற்றி!
ஜம்பு லிங்கமே போற்றி!
ஜோதி லிங்கமே போற்றி!
காளஹஸ்தீஸ்வரா போற்றி!
தில்லை நாதா போற்றி!போற்றி-55

மழலைப் பேறு தரும் மார்க்கபந்து போற்றி!
மார்க்கம் காட்டுவாய் போற்றி!
தூரனுக்கு முருகனானாய் போற்றி!
அந்தகிககு ஜோதியை காட்டிய ஜோதிஸ்வரூபனே போற்றி!
கைலாசபதே போற்றி போற்றி !!- 60

ரோகமகற்றுவாய் போற்றி!
சுகம் தருவாய் போற்றி!
வறுமை நீக்குவாய் போற்றி!
செல்வமளிப்பாய் போற்றி!
தீயது நீக்கி நல்லதளிப்பாய் போற்றி!போற்றி!-65

கனகாம்பரி காமாட்சி தாசா போற்றி!
கமல மனோகரா! கலியுக வரதா போற்றி!
கமலாசனா போற்றி!
காருண்ய சாகரா போறறி!
ஏகாம்பரேசா! சங்கரா போற்றி!போற்றி!-70

தினகரா! பாஸ்கரா போற்றி!
மந்திர ரூபா மகேஸ்வரா கைலாச வாசா போற்றி!
விடையேரும் விமலா போற்றி!
கடலலை மேல் துயிலும் அமலா போற்றி!
செங்கமல மலர் பாதா போற்றி போற்றி!!-75

சிவஞான மெய் பொருளே போற்றி!
ஞான செழுஞ்சுடரே போற்றி!
ஞானியும் யோகியுமானவனே போற்றி!
வற்றாத கருணா சாகரா போற்றி!
தட்சிணாமூர்த்தி அவதாரா! போற்றி போற்றி!!-80

யாழின் நாதமே போற்றி!
குழலின் ஓசையே போற்றி!
புள்ளின் ஒலியே போற்றி!
குயிலின் கூவலே போற்றி!
குழவியின் மழலையே போற்றி!போற்றி!!-85

அந்தகன் பாடலுக்கு தாளமிட்டு ரசித்தவா போற்றி!
அறியவரின் காம்போஜி பாடலை ரசித்தவா போற்றி!
யாழில் கானம் இசைத்து மமதை நீக்கியவா போற்றி!
இசை ஞானிக்கு கண்ணொளி காட்டியவா போற்றி!
ரங்கன் பள்ளி கொண்ட காரணத்தை விளக்கியவா போற்றி! போற்றி!-90

பாடும் நாவிற்கு இனியனானாய் போற்றி!
கேட்கும் செவிகளுக்கு அமுதமானாய் போற்றி!
நோக்கும் கண்களுக்கு அழகனானாய் போற்றி!
எண்ணங்களுக்கு அரணானாய் போற்றி!
தொழும் அடியவர் வினை தீர்ப்பாய் போற்றி!போற்றி!!-95

மோகன கிரிதர கண்ணா போற்றி!
கஸ்தூரி கந்த மந்த காச வதனா போற்றி!
துளசீஹார ஷியாமளா போற்றி!
பாண்டு ரங்க விட்டலா போற்றி!
பங்கஜமுக ரங்கபுர வாசா போற்றி!போற்றி!!-100

ஷீரடி நகர நாயகா போற்றி!
அருணாசலா போற்றி!
துங்கா நதி தீர மாதவா போற்றி!
சுரத் குமாரா போற்றி!
வேங்கட ரமணா போற்றி!போற்றி!!-105

சதாவதானியே போற்றி!
அறிவின் வடிவமே போற்றி!
ஆனந்த கூத்தனே போற்றி!போற்றி!-108

இசைவடிவமே! ராகமும் பாவமும் ஆனவனே
நெஞ்சில் உரத்தையும் வாக்கில் உண்மையும் கூூட்டி
தஞ்சம் என்றுன்னை நாடினேன் தயாபரா!
ரட்சித்தருள்வாயென்னை!!!
ஸ்ரீஜயேந்திர சுவாமி சரணம்!
ஸ்ரீவிஜயேந்திர சுவாமி சரணம்!!
venkat k

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

திரு வே கை அவர்களே
மிக்க நன்றி. அருமையான கவிதை. நம் அனைவரையும் மஹா பெரியவர்கள் காப்பார்களாக.
வாழ்த்துக்களுடன்
தஞ்சாவூரான்
04 02 2015

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

நன்றி தஞ்சாவூரான்...அவர்களே!

Subject: பழைய பீடாதிபதிக்கு ஏத்த வாரிசுதான் !’

1907 ல் காஞ்சி காமகோடி பீடத்தின் 68 வது பீடாதிபதியாக தன் 13 ஆம் வயஸில் ஆரோஹணம் செய்து, தனது வாக் அம்ருதத்தாலும், சாஸ்திரங்கள் சொன்னதை இம்மியளவு கூட பிசகாமல், சிஷ்டாச்சாரத்தோடு தானே கடைப்பிடித்து காட்டியதாலும், நூறு வர்ஷங்கள் அல்பங்களான நம்மிடையே நடமாடி, இன்றும் ஆத்மார்த்தமாக நினைப்போர்க்கு அபயம் அளிக்கும் மஹா பெரியவா………இந்தப் பட்டத்தை ஏற்றுக் கொண்ட அன்று மாலை, உபன்யாஸம் பண்ணச் சொல்லி மடத்தில் உள்ள பெரியவர்கள் வேண்டிக் கொண்டார்கள்.
கும்பகோணமே நிரம்பி வழிந்தது! பெரியவா பேச ஆரம்பிக்கும் முன் கூட்டத்திலிருந்த ஒரு வயஸானவர் இந்த பால ஸ்வாமிகளை வியப்போடு பார்த்தார்.

“66 வது ஆச்சார்யாள் ரொம்ப அழகா உபன்யாஸம் பண்ணுவார்..அவரோட வாக்வன்மை எல்லாரையும் ஆகர்ஷிக்கும். ஆனா, இவரோ…… ரொம்ப சின்னக் கொழந்தையா இருக்காரே! என்னத்தை பேசப் போறார்?” என்று மனஸில் சந்தேகம் அலைபாய கூட்டத்தில் முன்னால் வந்து உட்கார்ந்தார்.

அன்று பெரியவாளுடைய முதன்முதல் உபன்யாஸம் “ஸ்யமந்தகமணி” திருட்டுப் போனது, கிருஷ்ணனுக்கு அபவாதம் வந்தது, அப்புறம் ஜாம்பவானோட சண்டை போட்டு ஜாம்பவதியை கல்யாணம் பண்ணிக் கொண்டு, ஸ்யமந்தகமணியை கொண்டுவந்து அபவாதம் நீங்கப் பெற்றது பற்றி ரொம்ப அழகாக பேசினார். அன்று அத்தனைபேரும் ஆனந்தக் கடலில் மூழ்கினர். என்ன அருமையான, கோர்வையான உபன்யாஸம்!

அந்த வயஸானவர் ஓடி வந்து பெரியவா பாதத்தில் விழுந்தார்……..”மஹாப்ரபோ!” என்று அரற்றினார். அப்புறம் கூட்டத்தினரை நோக்கி பேசினார்.

” 66 வது பீடாதிபதியான கலவை பெரியவாளோட உபன்யாசத்தை நான் நெறைய தடவை கேக்கற பாக்யத்தை அடைஞ்சிருக்கேன்…..இந்த பதிமூணு வயஸ் கொழந்தை என்ன பேசப் போறார்?…ன்னு நெனெச்சேன்…..ஆனா, இந்த மொதல்உபன்யாசத்லேயே……. ‘தான், பழைய பீடாதிபதிக்கு ஏத்த வாரிசுதான் !’ ன்னு நித்ரூபிச்சுட்டார்! என்னோட தப்புக்கு நான் மனஸார மன்னிப்புகேட்டுக்கறேன் ஆனா, என்னால இப்போ அழுகையை கட்டுப் படுத்த முடியலை………ஏன்னா, எனக்கு இப்போவே எம்பதுக்கு மேல வயசாச்சு. இன்னும் இந்த ஆச்சார்யாளோட உபன்யாசங்களை எவ்வளவு நாள் கேக்கப் போறேன்?..ன்னு நெனைச்சா ரொம்ப தாபமா இருக்கு. அழுகையை அடக்க முடியலை ” என்று அழுதார் அந்த பெரியவர்.

பெரியவாளோட முதல் உபன்யாசத்துக்கு அவருடைய பரமகுருவின் மஹா பக்தர் மூலம் கிடைத்த பாராட்டு!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

இவர்தான் பெரியவா, சந்யாசி, துறவி, முனிவர் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்
=======================================

காலை மூன்று மணியிலிருந்து நள்ளிரவு வரையில் அன்ன ஆகாரமின்றி, படுப்பதற்கு ஒரு பாயின்றி இவர் உழைப்பதெல்லாம் யாருக்காக?

இந்த உலகத்திலுள்ள ஏழை எளியவர்களுக்காகத் தான்.

அவர்களில் ஒருவராகத் தான் இவரும் இருக்கிறார். இவ்வுலகத்தில் உள்ள ஒரு பரம ஏழை காண்கிற சௌகரியத்தை விட, அதிகமாக எதையும் செய்து கொள்ளாதவர் அல்லவா இவர்?

உடுப்பது பரம ஏழைக்கும் கிடைக்க கூடிய முரட்டு கதர்த்துணி; உண்பது இராப்பிச்சைக்காரன் கூட அற்பம் என்று தள்ளிவிடும் பிடி அவல்;

இருள் நிறைந்த சிறிய அறையிலோ இயற்கை தந்த மரத்தடியிலோ தரித்திர நாராயணனுக்கு உள்ள அதே 'வசதி'யுடன் வாழ்கிறார்;

மின்சார விளக்கு, மின்சார விசிறி இவற்றின் சௌகரியங்களை நம் நாட்டின் வறியவர்களும் ஏதாவது ஒரு ரயில் பிரயாணத்திலாவது அடைந்திருப்பர். இவரோ அவற்றை தம் வாழ்நாளின் மிக நீண்ட பகுதியில் அடியோடு ஒதுக்கி விட்டவர்.

அவர் உபயோகித்த பொருள்கள் என்று இன்று அவரது பிருந்தாவனத்தில் உள்ளவற்றில் இருக்கும் அந்த அரிக்கேன் விளக்கே விளக்கும் - அந்த சக்கரவர்த்தி ஏழைக் குடிமகனாகவே இருந்தவர் என்பதை!

ரயிலில் இருந்து மாட்டு வண்டி வரை எந்த சக்கர வண்டிப் பயணமும் அறியாமல் 'ந'__ராஜா' சர்வீசே செய்த எளியோனின் பாதக் குறட்டையும் பாருங்கள்!

தரித்திரன் என்று ஸ்ரீ ருத்ரம் பரமேஸ்வரனை ஏன் விளிக்கிறது என்று இப்போது தான் புரிகிறது.

அவனே குபேரனின் மித்திரன் அன்றோ !

நன்றி: மைத்ரீம் பஜத புத்தகத்தில் 'ஒளியுடன் ஒரு நாள்' கட்டுரையில் அண்ணா ஸ்ரீ ரா கணபதி அவர்கள்.

thanks to Periyavaa Adimai

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பெரியவாளின் நகைச்சுவை (sharing message)

நகைச்சுவைக்கும் பெரியவா பெயர் எடுத்தவர். ஒரு நாள் இவர் படுத்துக்கொண்டிருக்கும்போது கிழவர் ஒருவர் வந்தார்.

பிரபு! என்னால் ஒண்ணுமே முடியலை: அடிக்கடி ஜுரம் வருது: ஹார்ட்ல பிராப்ளம் இருக்கு!" என்று பெரிய பட்டியல் போட்டு, "பெரியவாதான் காப்பத்தணும்!" என்று கும்பிட்டார்.

பெரியவா முனகிக் கொண்டே " ஒக்காரு! உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா.." என்று ஆரம்பித்தார்:

"ஒரு கிராமத்திலே, கோயிலில் குறி சொல்லும் பூசாரி ஒருவர் இருந்தார். அவர் சொன்னதெல்லாம் பலித்துவிடும்.அதே ஊரில் இருந்த ஒரு போலீஸ்காரர், பூசாரியின் நெருங்கிய நண்பன். ஒரு நாள் அந்த பூசாரி கோயிலைத் திறந்தார். பல சாமான்கள் திருட்டுப் போய்விட்டதைப் பார்த்தார். உடனே தன் போலீஸ் நண்பனிடம் தெரிவிக்க ஓடினார். அதே சமயம் அந்த போலீஸ்காரர் பூசாரியைத் தேடி ஓடி வந்து கொண்டிருந்தார்.. "தேடிப்போன மூலிகை காலில் சுத்திண்டதுபோல நீயே வந்துட்டியே!" என்று பூசாரி சந்தோஷப்பட்டார். "கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல நீங்க வந்துட்டிங்களே!" என்று போலீஸ்காரனும் சந்தோஷப்பட்டார்.

"என்னது, நீ என்னைத் தேடி வரயா? என்ன ஆயிற்று?" என்றார் பூசாரி. "என் சைக்கிளைக் காணோம்: யார் எடுத்திருப்பான்னு கொஞ்சம் குறி பார்த்துச் சொல்லணும். அதுக்குத்தான் ஓடி வரேன்!" என்றார் அவர்!.

"அட...ராமா! நானே கோயில் சாமான்களைக் காணோம் நீ கண்டு பிடித்துக் கொடுப்பாய் என்று, உன்னைத் தேடி வந்துண்டிருக்கேன். நீ இப்படிச் சொல்றயே?" என்றாராம்.

இது போலத்தான், நீ உடம்பு தேவலையாகணும்னு எங்கிட்ட வந்திருக்கே. 'எனக்கே மூணு நாளா ஜுரம்'. இது பூசாரியும் போலீஸும் சந்திச்சிண்ட மாதிரி இருக்கு!" என்று சிரித்தாராம். பெரியவா. கிழவரும் சிரித்துவிட்டார்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Read as to who is a Brahmin... தெய்வத்தின் குரல்
மஹாபாரதத்தில், யக்ஷ ப்ரச்னத்தில், பிராம்மணன் எத்தனை எளிமையாக இருந்தான். அவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.
பஞ்சமே (அ) ஹனி ஷனி ஷஷ்டே வா சகம் பசதி ஸ்வேக்ருஹேறீ(அ)
அந்ணீச ப்ரவாஸீ ச ஸ வாரிசர மோததேறீறீ (அ)
ஒரு நாளில் பகல் போதை எட்டுப் பங்காக்கினால், அதில் ஐந்தாவது அல்லது ஆறாவது பங்கில்தான் பிராம்மணன் கர்மாநுஷ்டானம் எல்லாம் முடித்துச் சாப்பிடுவான். அதன்முன், நாஸ்தா, கீஸ்தா எதுவும் கூடாது. இதுதான் பஞ்சமே அஹனி ஷஷ்டே வா. அந்த வேலையில்கூட என்ன சாப்பாடு. சக்கரைப் பொங்களும் பாதாம்கீருமா. அல்லது தேஹ புஷ்டி தரும் மாம்ஸாதிகளா. இல்லை. பதி என்றால் ஏதோ ஒரு கீரையைப் பிடுங்கி வேக வைத்துத் தின்ன வேண்டும் என்று அர்த்தம். ஏதோ ஒரு முள்ளிக் கீரையோ, பசலைக் கீரையோ,பொன்னாங்கண்ணியோ ஆற்றங்கரையில் யாருக்கும் சொந்தமில்லாமல் முளைத்திருப்பதை மட்டும் சமைத்துச் சாப்பிட வேண்டும். பிராம்மணன் நதி தீரத்தில் வசிக்க வேண்டும் என்று வைத்ததற்கு காரணமே அப்போது தான் அவன் அடிக்கடி ஸ்நானம் செய்ய முடியும் என்பது ஒன்று. இன்னொரு காரணம் அங்கே தான் பணம் காசே வைத்துக் கொள்ளக் கூடாத இவன், விலை கொடுக்கலாமா, யாசிக்கலாமா, நாலு கீரையைப் பிடுங்கி வேக வைத்து ஜீவனை ரக்ஷித்துப் கொள்ளலாம் என்பது யார் இந்தப் பார்ப்பான். பிடுங்கித் தின்ன வந்தான். என்று யாரும் அதட்ட முடியாதபடி வாழ வேண்டும் என்று அர்த்தம். கடன் வாங்கக் கூடாது. கடன் வாங்கலாமென்றால் போக்யங்கள். லக்ஷரிகளில் மனஸ்போதும். அதற்கு இடமே கொடுக்கக்கூடாது. இதுதான் அந்ருணீ என்றது. தரித்திரமும், அபரிக்ரஹமும் (அத்யாவசியத் தேவைக்கு அதிகமாக ஒரு புள்ளைக்கூட வைத்துக் கொள்ளாமலிருப்பதும்) தான் பிராம்மண லக்ஷணமானதால், கடனும் வாங்கக்கூடாது என்று இருக்கிறது.
இப்போது சர்க்காரிலிருந்து ஆரம்பித்து பெரிய பெரிய தொழிலதிபர்கள் உள்பட எல்லோருக்கும் கடன்தான். சாஸ்திரம் சொன்னபடி, கடன் இல்லாமலும், பிறகு ஏவுதலுக்கு ஸலாம் போடாமலும் தன் தர்மத்தைச் செய்து கொண்டு இப்போது யாராவது இருக்கிறார்களா என்றால் அது நரிக்குறவர்கள்தான் என்று தோன்றுகிறது.
கடைசியில் சொன்ன அப்ரவாசம் என்பதற்குத் தன் ஊரைவிட்டுப் போகக்கூடாது என்று அர்த்தம். மனமோ, அவமானமோ, கஷ்டமோ, நஷ்டமோ, நமக்கேற்பட்ட தர்மத்தைச் செய்துகொண்டு ஊரோடு கிடக்க வேண்டும். இப்போது இங்கிலாந்தில் ஸெட்டில் ஆகிறோம், அமெரிக்காவில் ஸெட்டில் ஆகிறோம் என்று வெறும் பணத்துக்காக ஆசாரங்களை விட்டுப் பறந்து கொண்டு, இததைப் பெருமையாக சொல்லிக் கொண்டிருக்கின்றோமே. இதை சாஸ்திரத்தில் ரொம்பவும் நிஷித்தமாக (இழுக்காக)ச் சொல்லியிருக்கிறது.
இந்த மாதிரி எல்லா ஜாதியாரும் நன்றாக உழைப்பது. எல்லா ஜாதியாரும் பரம எளிமையாக வாழ்வது என்று ஏற்பட்டு விட்டால் ஜாதி-த்வேஷமும், ஜாதிகள் போய்விட வேண்டும் என்ற பேச்சும் வரவே வராது. இப்போது ஒரு ஜாதிக்கு ஜாஸ்தி பணம்-செனகரியமும், இன்னொன்றுக்கு தரித்திரம்-உழைப்பும் வரும்படியாக ஜாதிமுறை அமைக்கப்பட்டிருக்கிறது என்ற நினைப்பு ஏற்பட்டிருப்பதால்தான் இந்தச் சீர்திருத்தம் எனப்படுகின்ற அபிப்ராயங்கள் வந்திருக்கின்றன.
எளிமையும் உழைப்பும்தான் திருப்தி தருவது. சித்த சுத்தி தருவது. ஆயிரம் பதினாராயிரம் வருஷங்களாக நம் தேசத்தில் இப்படித்தான் நடந்து வந்திருக்கின்றது. வர்ணாச்ரமத்தைச் சொன்ன சாஸ்திரங்கள் இவற்றையும் வலியுறுத்தியிருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
குணம் அல்லது மனோபாவம் என்பதை வைத்து இக்காலத்திலும் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை என்று சொன்னேன். இப்போது பணம், வசதி இவற்றை மட்டும் பார்த்து வேலை தேடுவதில்தான் அத்தனை கஷ்டமும் ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் எல்லா வேலைக்கும் வந்து விழுந்து போட்டியும், பொறாமையும் வேலையில்லாத் திண்டாட்டமுமாக ஆகியிருப்பதற்கு இதுதான் காரணம்.
ஆதியில் பிறப்பினால் தொழிலை நிர்மித்துக் கொடுத்தபோது, அதிலேயே தன்னால் ஒவ்வொருவனுக்கும் ஒரு aptitute, அதை சுலபத்தில் கற்றுக் கொண்டு செய்கிற திறமை எல்லாம் ஏற்பட்ட மாதிரி இப்போது இல்லை. பிதுரார்ஜிதச் சொத்துபோல அப்போது பெருமிதத்தோடு, பிடிமானத்தோடு ஒவ்வொருவனும் தன் தொழிலை எடுத்துக் கொண்டதனால் அதில் நல்ல செய்நேர்த்தி இருந்தது. இப்போது inefficiency (திறமையின்மை) யைத்தான் எல்லாத் துறைகளிலும் பார்க்கிறோம்

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

venkatakailasam wrote:... பஞ்சமே (அ) ஹனி ஷனி ஷஷ்டே வா சகம் பசதி ஸ்வேக்ருஹேறீ(அ)
அந்ணீச ப்ரவாஸீ ச ஸ வாரிசர மோததேறீறீ (அ)
पञ्चमेऽहनि षष्ठे वा शाकं पचति स्वे गृहे ।
अनृणी चाप्रवासी च स वारिचर मोदते ।।

பஞ்சமே அஹநி ஷஷ்டே வா சாகம் பசதி ஸ்வே க்ருஹே ।
அந்ரூணீ சாப்ரவாஸீ ச ஸ வாரிசர மோததே ।।

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

வீ.கே அவர்களே,
இதெல்லாம் சொல்லி ஏன் வயித்தெரிச்சலைக் கிளப்புகிறீர்? பிராமணன் தனது தர்மத்தினின்று நழுவக்கூடாதென்று மகாஸ்வாமிகள் சொன்னதைக் கேட்டு அவரை தூஷித்த பிராமணர்கள் (மற்றவரைவிட) அதிகம். பயித்தியம் தெளிந்தால் கலியாணமாகும் கலியாணமானால் பயித்தியம் தெளியும் என்ற முன்னுக்குப்பின் முரணான சூழ்நிலை இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. நாமெல்லாம் இந்த சூழ்நிலையில் தள்ளப்பட்டதற்கு ஆயிரக்கணக்கான சாக்குகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் அடிப்படைக் கோட்பாடுகளான 'सत्यं वद; धर्मं चर;' என்ற இரண்டைப்பிடித்துக்கொண்டால் போதும். அதுவும் இல்லாமல், கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று மதம் பிடித்து அலையும் மக்களுக்கு - பிராமணர்களுக்கு - என்ன சொல்லி என்ன பயன்? மகாஸ்வாமிகள் தன்னுடைய தேக விமுக்திக்கு முன்னரே மடத்தை விட்டு அகன்றுவிட்டார். அதன் காரணத்தை யாரும் பேசுவதில்லை - இதெல்லாம் ஊரறிந்த ரகசியங்கள். இன்று பணத்திற்கடிமை சாதாரண மக்கள் மட்டுமா? மதத்தையும் தர்மத்தையும் காக்கவேண்டியவர்களே தவறிவிட்டனர். தர்மம் எங்கே? சத்தியம் எங்கே? இன்றைக்கு இவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான். அப்படியேயானாலும், சத்தியமும் தர்மமும் யுக தர்மங்களல்ல, ஸனாதன தர்மம். அவை திரும்பவும் நிலைபெறும். இது முக்காலும் சத்தியம்.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

.
LAW & PRACTICE !
... அப்ரவாசம் என்பதற்குத் தன் ஊரைவிட்டுப் போகக்கூடாது என்று அர்த்தம் ...
பெரியவரின் மூதாதயர்கள் கர்நாடகாவில் இருந்த தமது ஊரை விட்டு தமிழகத்துக்கு வந்தவர்கள்!
அவருடைய தந்தை விழுப்புரத்தை விட்டு வேலைக்காக கும்பகோணம் வந்தார்!
... நமக்கேற்பட்ட தர்மத்தைச் செய்துகொண்டு ஊரோடு கிடக்க வேண்டும் ...
தந்தை அரசாங்க வேலையில் இருந்தார்!
தம்பி கும்பகோணத்தில் போட்டோ ஸ்டூடியோ தொழில் நடத்தி வந்தார்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
நமஸ்தே,

1990 ஆம் ஆண்டு நான் சங்கீத வித்வத் சபையில் உள்ள இசைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி. என்னுடன் படித்தவர்களில் பெரும்பான்மையோர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள்.
ஒரு நாள் எங்களுக்குள் ஒரு சிறு விவாதம் வந்தது. அப்போது அவர்கள், "சங்கீத மும்மூர்த்திகள் 3 பேருமே...சம்ஸ்க்ருதம் & தெலுங்கில்தான் பாடி இருக்கிறார்கள்.எனவே தெலுங்கும் சம்ஸ்க்ருதமும் இல்லை என்றால், சங்கீதமே இல்லை என்று தெலுங்கர்கள் கூறினார்கள்.தமிழ் சுத்த waste என்றார்கள். சாதாரணமாக நான் மொழிகளிக்கிடையில் எந்த வித்யாசமும் பார்ப்பதில்லை. ஆனால், அவர்கள் இப்படி சொன்னதும் எனக்கு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஆகையால் நானும் பதிலுக்கு ஏன்? தமிழில் தேவாரம், திருவாசகம் எல்லாம் இல்லையா? பழந்தமிழர் இசை எல்லாம் இல்லையா என்று வாதாடினேன்.அவர்களுக்கு பெரும்பான்மை பலம் இருந்ததால், தனியே வாதாடிக் கொண்டிருந்த என் வாதம் ஈடு படவில்லை.
அதற்குள் கல்லூரி முடிந்து அன்று சோர்ந்து போய் கிட்டத்தட்ட அழுத நிலையில் வீட்டுக்குப் போனேன்.
என் முக வாட்டத்தைக் கண்ட என் தாயார், என்ன விஷயம் என்று விசாரித்தார்கள். நானும் சொன்னேன். ஆனால், இதை ஒரு பொருட்டாகவே மதிக்காக என் அம்மா, " நாளைக்கு காஞ்சீபுரத்துக் போய் பெரியவாளை தரிசனம் பண்ணப் போறேன். நாளைக்கு காலேஜுக்கு லீவ் போட்டுவிட்டு நீயும் வா என்றார். எனக்கோ மன சங்கடம். நம் வருத்தத்தைப் பற்றி அம்மா கொஞ்சம் கூட கவலையே படவில்லையே....என்று. அன்று இரவு முழுவதும் தூக்கமே வரவில்லை. எனவே அடுத்த நாள், கல்லூரிக்குச் செல்லாமல் காஞ்சீபுரம் செல்வது என்று தீர்மானித்தேன்.
எனக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் உண்டு. எனவே நான் வரைந்த சங்கீத மும் மூர்த்திகளின் (தியாக ராஜர், முத்து சுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்த்ரிகள்) ஓவியங்களை மஹா சுவாமிகளுக்கும் காட்டி ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தேன்.
மறுநாள் நானும் என் அம்மாவும் மஹா சுவாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருந்தோம். தரிசனமும் நன்றாகக் கிடைத்தது. நான் கொண்டு சென்றிருந்த ஓவியங்களை, சுவாமிகளின் அருகில் இருந்த உதவியாளர் மூலமாக, சுவாமிகளிடம் கொடுத்தேன். அந்த மூன்று படங்களையும் பார்த்த பெரியவர், இதெல்லாம் யார் வரைஞ்சா? என்றார். அந்த உதவியாளர், என் பெயரையும் ஊரையும் கேட்டார். சொன்னேன். அப்படியே பெரியவாளிடம் சொன்னார். உடனே பெரியவா, அந்த குழந்தையை, என் முன்னாடி வர சொல்லு, என்றார். நானும் அம்மாவும் போனோம். எங்களை உட்கார சொன்னார்.
அதற்கு முன் அவரை அவ்வளவு கிட்டத்தில் பார்த்ததோ அவருடன் பேசியதோ இல்லை என்பதால், ஆச்சர்யம் சந்தோஷம் பயம் என பலவித உணர்சிகளுடன் எதிரே அமர்ந்திருந்தேன்.
என்னுடைய படிப்பு பற்றி எல்லாம் விசாரித்தார். நானும் சங்கீதக் கல்லூரியில் படிப்பதாகக் கூறினேன். அப்போது ஒரு க்ஷண நேரம் முதல் நாள் நடந்த வாக்கு வாதத்தைப் பற்றி பெரியவாளிடம் சொல்லி அதற்கு ஒரு தீர்வு கேட்கலாமா என்று தோன்றியது. அப்படி செய்தால், அதிகப் பிரசங்கி என்று நினைத்துவிடப் போகிறார்களே என்று என்னை நானே அடக்கிக் கொண்டுவிட்டேன்.
ஓவியங்களைப் பார்த்த பெரியவர், சங்கீத மும் மூர்த்திகளின் கீர்த்தனைகளைப் பாட சொன்னார். மூன்று பேருடைய கீர்த்தனைகளிலும் ஒவ்வொன்று பாடினேன்.
பிறகு அந்த ஓவியங்களைப் பற்றி விசாரித்தார்.
அதில் முத்து சுவாமி தீட்சிதரின் . கையில் உள்ள வீணையில் நான் ஒரு தவறு செய்திருந்தேன்.
முத்து சுவாமி தீட்சிதரின் வீணை மற்ற வீணைகளைப் போல் இல்லாமல், யாளி மேல் பக்கமாக இருக்கும். ஆனால், எவ்வளவு முயன்றும் ஏனோ அந்த இடம் மட்டும் எனக்கு சரியாகவே வரைய வரவில்லை. ஆகையால், எல்லா வீணைகளையும் போல் யாளியைக் கீழ்ப் பக்கமாகவே வரைந்திருந்தேன்.
அந்தத் தவறை சுட்டிக் காட்டிய பெரியவா, அந்த வீணை தீட்சிதருக்கு சாக்ஷாத் கங்கா தேவியே அனுக்ரஹம் பண்ணிக் கொடுத்தது. அதை மாத்தறது தப்பு. அடுத்த தரம் வரும் போது அதை சரியா வரஞ்சு எடுத்துண்டு வா. என்றார்.
பிறகு, "இவளோட ஜீவிய சரித்ரம் தெரியுமோ உனக்கு?" என்றார். நானும், " ஓரளவுக்குத் தெரியும் பெரியவா" என்றேன். தெரிஞ்சமட்டும் சொல்லு...என்றார்.
இவா மூணு பேரும் திருவாரூர்லே பிறந்தா.....என்று நான் ஆரம்பித்ததுதான் தாமதம். உடனே நிறுத்து என்று சைகை செய்த பெரியவர் தொடர்ந்தார். அவர் வாக்கிலேயே சொல்கிறேன்.
"தர்சநாத் அப்ர சதஸி ஜனநாத் கமலாலையே
காச்யாம் து மரணான் முக்தி: ஸ்மரணே அருணாச்சலே"
இதுக்கு என்ன அர்த்தம்னா....
சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணினா முக்தி, சிதம்பரத்தை அப்ர சதஸ் ன்னே சொல்லி லிருக்கு. சபைன்னா, சித் சபைதான். சபாபதின்னா நடராஜ மூர்த்திதான். ருத்ரத்துலே கூட சபாப்யோ சபாபதிப்யச்சவோ நமோ நமோ...ன்னு சொல்லி இருக்கு.
இப்பேர் பட்ட மஹா சபையான பொன்னம்பலத்தை தரிசனம் பண்ணிக்கணும்.
அடுத்தது, ஜனநாத் கமலாலையே....
இதுக்கு கடைசிலே வரேன்.....
காச்யாம்து மரணான் முக்தி: ன்னா...காசியிலே போய் ஜீவனை விட்டா, மோக்ஷம்...இது நம் எல்லாருமே கேள்விப் பட்டுருக்கற சமாச்சாரம்தான்.
ஸ்மரணே அருணாச்சலே.... சிதம்பரம் நடராஜ மூர்த்தியை தரிசனம் பண்ணிண்ட முக்தின்னா....இங்கே அருணாசலேஸ்வரரை நினைச்சுண்ட தத் க்ஷணத்திலே (அந்த நிமிஷத்திலேயே) முக்தி.
இப்போ கமலாலயம் சமாசாரத்துக்கு வருவோம்.
ஜனநாத் கமலாலையே ன்னா திருவாரூர்லே பிறந்தால் முக்தி. அந்த ஓவியங்களைக் காட்டி, இவா -மூணு பேருமே திருவாரூர்லே பிறந்திருக்கா. அங்கே பிறந்ததுனாலேயே ஜீவன் முக்தாள் ஆய்ட்டா.
இப்போது என்னிடம்.....
"ஆமா...உனக்கு ஒரு சமாசாரம் தெரியுமோ.....
இந்த திருவாரூர்...நம்ப தஞ்சாவூர் ஜில்லாலதான் இருக்கு....
ஆமாம் என்பது போல் நான் தலையை ஆட்டினேன்.
அவா எந்த பாஷையிலே பாடி இருந்தாலும் அவா பிறந்த இடம் நம் தமிழ்நாடுதான். அப்படி பார்த்தா....சந்கீதத்தினுடைய பிறப்பிடமே நம் தமிழ் நாடுதான்னு சொல்லலாம் இல்லையா.( மீண்டும் ஆமாம் என்ற பாவனையில் தலை ஆட்டினேன்.)
தமிழ் நாடு இல்லேன்னா சங்கீதமே இல்லை
...

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

thanjavooran wrote:... "தர்சநாத் அப்ர சதஸி ஜனநாத் கமலாலையே
காச்யாம் து மரணான் முக்தி: ஸ்மரணே அருணாச்சலே" ...
There are two versions of this sloka:-

(1)
दर्शनादभ्र सदसि जननात् कमलालये ।
काश्यां तु मरणान्मुक्तिः अथवा पुत्र सन्निधौ

(2)
दर्शनादभ्र सदसि जननात् कमलालये ।
काश्यां तु मरणान्मुक्तिः स्मरणात् अरुणाचले

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Thanks Shri P B Avl
Thanjavooran
20 02 2015

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend


Posted on 11.02.15 by Sanatana Dharma Foundation

It was the year 1965 in Mayiladuthurai during Thula snanam in Vadakarai. Periyava was standing on a 6 feet thinnai. About 150 were standing below.

Periyava called Kanchi Sri Kachchabeswara Sastrigal. Asked him to go to Thiruvarur and meet Sri Mudaliyar Swamy for taking up the ‘kaingaryam’ of putting a big bell in the tower being erected at Rameshwaram. Thiruvarur being the Sthalam of Sri Manu Needhi Cholan, Periyava asked Thiruvarur devotees to take it up. Sri Sastrigal took the order and left…

In Thiruvarur, Sri Mudaliyar Swamigal stood up on hearing the arrival of the Sastrigal. He took the prasadam from Periyava and asked what was the order. Sastrigal explained it. Sri Mudaliyar Swamigal told that he had become very old. He said, “I do not know the know-hows to take up the initiative nor do I have a person with reasonable intelligence to assist me”. He, therefore, prayed for permission to offer the cost involved. Sri Sastrigal came back to Periyava and informed that he couldn’t proceed with the initiative as Sri Mudaliyar offered only to pay for it and didn’t offer any assistance. Periyava asked a key question to the Sastrigal, which we need to follow before beginning every initiative/project…

Periyava, “சாஸ்திரிகளே! நீங்க போறத்தே பிள்ளையாருக்கு சிதறு தேங்காய் போட்டீரோ?” (“Sastrigale! Did you offer/break Sedharu Thengai (coconut) to Pillayar before you left?”)

Sri Sastrigal, “ஆஹா! பெரியவா கிட்ட இவ்வளவு நாள் இருந்துட்டு, சிதறு தேங்காய் விடாம போவேனா? அதுவும் பெரியவாளோட காரியம்னா…” (“Ahaa! Being with Periyava for so long, will I forget to offer Sedharu Thengai to Pillaiyar? That too, when I’m going on a task ordered by Periyava?”)

Sri Sastrigal continued, “அதோ அந்த முனையில இருக்கிற பிள்ளையாருக்கு மூணு சிதறு தேங்காய் ஒடச்சிட்டு தானே போனேன்… ஆனாலும் காரியம் இப்படி ஆயிடுத்து…” (“I offered three Sedharu Thengai to that Pillaiyar around the corner before I left… Still, the task didn’t succeed”)

Periyava, “அதுக்குளே ஏன் அவசரப் படரே? பிள்ளையார் உங்களை ஏமாத்திட்டாருன்னு சொல்ல வறியா?” (“Why are you hurrying so much and jumping into conclusion? Do you mean to say Pillaiyar cheated on you?”)

Sri Sastrigal, “அப்படி தோணலை… பெரியவா சொன்ன காரியம் முடிக்க முடியாத அசடா இருக்கேனேன்னு வருத்தப் படறேன்!” (“I didn’t think that way… I’m sad thinking, what kind of a dumbo I’m for not being able to carry out the task Periyava ordered me to do!”)

Periyava, “அப்படி இல்லை. பிள்ளையார் உன்னை ஒரு நாளும் கை விடவில்லை. நீர் உடைச்சிட்டு போனீரா… நீர் போனதும், தியாகராஜா முதலியார் (VST)வந்தார்… உன் சித்தப்பாவ பாக்கத்தான் சாஸ்திரிகள அனுப்பியிருக்கேன்னு சொன்னேன். அவரே அதை சிரசா முடிச்சி தரேன்னு சொல்லிட்டார்!” (“It is not like that. Pillaiyar won’t give up on you any day! You offered the coconut and started right?? After that, Thyagaraja Mudhaliyar (VST) came. I told him, I have sent you to see his Chittappa. On hearing that, VST offered that he himself will take up the task and finish it!”

Periyava continued, “பிள்ளையார் நீ ஒடச்ச உடனே அந்த காரியத்தை முடிச்சிட்டார். அதனால, பிள்ளையாருக்கு தேங்காய் ஒடச்சி ஒரு காரியம் நடக்கலேன்னு சொல்லாதே… அது அபச்சாரம்.” (“Pillaiyar got the task done instantly as soon as you offered the coconut to Him. So do not ever say that a task didn’t succeed even after offering Him coconut. It is a sin”)

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..
ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே
வழக்கமாகி விடும்.்

பெரியவாள் கலவையில் முகாம்.

காலை வேளை, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த
வழக்கறிஞர் தரிசனத்துக்கு வந்தார் காரில்.ஏக தடபுடல்,
மனைவி-மடிசார். பையன்கள்,வேட்டி-துண்டு.இவர பஞ்சகச்சம்-அங்க வஸ்திரம்,நவரத்தினமாலை இத்யாதி.

பெரியதட்டில்பழங்கள்,புஷ்பம்,கல்கண்டு,திராட்சை, முந்திரிப் பருப்பு,தேன் பாட்டில் அத்துடன் ஒரு காகித
உறையில் ரூபாய் நோட்டுகள்.

பெரியவாள் முன்னிலையில் சமர்ப்பணம் செய்து,
வந்தனம் செய்து கொண்டார்கள்.

பெரியவா அந்தத் தட்டை மெதுவாகக் கண்களால்
துழாவினார்கள். "அது என்ன, கவர்?"

"ஏதோ.....கொஞ்சம் பணம்..."

"கொஞ்சம்னா?...பத்து ரூபாயா, பதினோரு ரூபாயா?"

வழக்கறிஞர் நெஞ்சில் ஒரு கர்வம் தோன்றியிருக்கவேண்டும்.
தன்னைப் பற்றி, மாவட்டத்திலேயே பிரபலமான கிரிமினல்
லாயரைப் பற்றி, இவ்வளவு தாழ்வாக எடை
போட்டிருக்கிறார்களே பெரியவா? நான் எவ்வளவு பெரிய
அட்வகேட் என்று காட்டிக்கொள்ள வேண்டாமா?..

பொய்யான பவ்யத்துடன், "பதினைந்தாயிரம் ரூபாய்," என்றார்.

பெரியவா சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுக்
கேட்டார்கள்; " நீ எதில் வந்திருக்கே?"

"காரில் வந்திருக்கோம்..."

"அந்தக் கவரை எடுத்துக்கொண்டு போய் காரில் பத்திரமாக
வைத்துவிட்டு வா. பழம்,புஷ்பம் போதும்..."

அட்வகேட் வெலவெலத்துப் போய் விட்டார்.
பெரியவா சொன்னபடியே செய்தார்.
அவரிடம் வெகு சாந்தமாக நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்து
விட்டு, பிரசாதம் கொடுத்து அனுப்பினார்கள்.

கார் புறப்பட்டுச் சென்ற சத்தம் கேட்டது.

"பதினையாயிரம் ரூபாயை ஏற்றுக்கொள்ள மறுத்து
விட்டார்களே?" என்ற பொருமல் சிஷ்யர்களுக்கு
இருக்கும் என்பது பெரியவாளுக்குத் தெரியாதா என்ன?

"ஒரு பொய் வழக்கில் வாதாடி இவர் ஜெயித்தார்.
கிடைத்த பீஸில்,ஒரு பங்குதான் இந்தப் பதினைந்தாயிரம்.
பாப சம்பாத்யம். அதனால் தான் வேண்டாம் என்றேன்..."

தொண்டர்களுக்குத் தெளிவு உண்டாயிற்று.

ஸ்ரீ மடத்துக்கு, அந்த நாட்களில் அடிக்கடி பொருள்
தட்டுப்பாடு வருவதுண்டு. மானேஜர் கவலைப்படுவார்,
அப்போது கூட, "எப்படியாவது பணம் கிடைத்தால் சரி"
என்று எல்லோருடைய பணத்தையும் பெரியவாள்
ஏற்றுக் கொண்டதில்லை.

"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்..
ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே
வழக்கமாகி விடும்."

Hara Hara Sankara !! Jaya Jaya Sankara !!​​

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

இது மட்டுமல்ல. வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு லக்ஷம் ரூபாயையும் துச்சமாக மதித்து, ஒரு ரூபாய்க்கு பசுமாட்டுக்கு புல்கட்டு வாங்கிப்போடச் சொன்னாராம். அதெல்லாம் அந்தக் காலம்.
கெடாமல் காத்திட்ட பால் இன்று திரிந்துவிட்டதே என்றுதான் பொருமுகின்றேன்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

159- அகிஞ்சனனா நீ... நீ செந்தாமரையாள் தன் தனயன்!
எல்லாம் உடையவன்..எங்கும் நிறைந்தவன்!
காற்றும் கனலும் நீரும் மண்ணும் வெளியுமான
சர்வக்ஞன், சர்வ வியாபி நீ!
இது குவளையில்லை!
அட்சயம்! வரியவற்கும் அமுதூட்டும் அன்னை நீ!
ஆவினை காத்தருளும் பரமன்!
கேளாதளிக்கும் வள்ளல்!
தனக்கென்றுயின்றி பிறருக்கென்று
வாழும் குணமுடையோன்!
அடியும் முடியும் காணஇயலாத
வேதத்தை கண்ட பரம் பொருள்!
செந்தாமரையின் அழகும்
முல்லையின் மணமும் கலந்த மறையவன்!
உன் சிந்தையில் வேங்கடவன் எனக்குமோர்
இடம் தந்தருள வேணும் !
venkat k

Post Reply