Kanchi Maha Periyava

Post Reply
thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend
அப்பாவைப் பார்க்கணும்

ஈசுவரனைப் பலவாறாக உறவு கொண்டாடி, பக்தி செய்து மேன்மை அடைவது அடியார்கள் கைக்கொள்ளும் நெறி. இறைவனை, நண்பனாக,அன்னையாக,
யஜமானனாக, தந்தையாகப் பாவித்துப் போற்றுவார்கள். ஹாஸ்பெட் டாக்டர் ஆனந்தவல்லி அம்மாள், மகாப்பெரியவாளைத் தன்னைப் பெற்ற தந்தையாகவே-
இல்லை; அதற்கும் மேலே, மேலே ஓர் உயர்நிலையில் ‘அப்பா’வாகவே அடையாளம் கண்டு கொண்டுப் பழகினார்.
பெரியவாள் ஹம்பியில் தங்கியிருந்த காலம், நாள்தோறும் டாக்டர் அம்மாள் வந்துவிடுவார்-தரிசனத்துக்கு ஐந்து நிமிஷமாவது பெரியவாளுடன் பேசாமல் போக
மாட்டார். நம்மைப் போல், பெரியவா எதிரில், கூனிக் குறுகிக்கொண்டு, வாயைப் பொத்திக்கொண்டு பேசுகிற பக்திப் பாசாங்கு இல்லாமல் பேசுவாள்.பேச்சு மெய்ப்பாடுகள், குரல், எல்லாம் இயல்பாக இருக்கும். பெரியவாளுடன் பல
ஆண்டுகள் பழகி, ‘அவரை விட்டால் வேறு கதி இல்லை’ என்ற முடிவுக்கு வந்துவிட்டதைப் போலிருக்கும்.
ஐந்து நிமிஷத்துக்குள், ஐம்பது ‘அப்பா’ வந்துவிடும். அப்பா என்ற சொல்லே டாக்டர் ஆனந்தவல்லிக்காகவே படைக்கப்பட்டதாகத் தோன்றும். நொடிக்கு நொடி, ‘அப்பா’ என்பாரே தவிர, ஒவ்வொரு சொல்லிலும் ஒரு தாயாரின் கரிசனம் தெரியும். “நீங்க தினமும் ஃப்ரூட் ஜூஸ்,ரெண்டு தடவையாவது சாப்பிடணும்,அப்பா..’ ஏகாதசி
அன்னிக்கு நாலு தடவையாவது பால் சாப்பிடணும் அப்பா, அது ஒண்ணும் தப்பில்லே, உபவாசம் கெட்டுப் போயிடாது அப்பா.” – இப்படி எத்தனையோ உபதேசங்கள், பெரியவாளுக்கு ஆனால், இப்படிய்யெல்லாம் சொல்லும்போது, ஒரு தினையளவு கர்வம் தலைகாட்ட வேண்டுமே? இந்தச் சலுகை எனக்கு மட்டும் தான் என்ற
தன்முனைப்பு? ஊஹூம்.
டாக்டரின்’அப்பா’வில் தனியானதொரு மணம் வீசும். பின்னணியில் கந்தர்வக் குழுவினர் ஆனந்த பைரவி பாடுவதைப் போலிருக்கும். கின்னரப் பெண்டிரின் கால்
சதங்கையின் லயம் தவறாத ஒலி நெஞ்சை நிறைக்கும். பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் தொண்டர்களுக்கு, அந்த அம்மையாரிடம் ஓர் இளக்காரம்.
டாக்டர் வந்து, ஆயிரம் அப்பாக்களால் பெரியவாளுக்கு சஹஸ்ர நாமம் செய்து விட்டுப் போனபின்னர், தொண்டர்கள் தங்கள் ஏளனங்களை வாய்விட்டுப் பேசி, திருப்தி அடைவார்கள். ‘என்னப்பா,சந்த்ரமௌளி,குளிச்சுட்டயாப்பா? கண்ணா, துணி துவச்சுட்டயாப்பா..’ குமரேசன் அப்பா, இன்னும் சாப்பிடலயாப்பா..”
(தொண்டர்களின் ஏளனப்பேச்சு)
ஆனால் டாக்டரின் ‘அப்பா’ வைரக்கல்; பட்டை தீட்டப்பட்ட கோஹினூர். ஒருநாள் இரவு நள்ளிரவு தாண்டிவிட்ட நேரம். கட்டிடத்தின் வெளிப்புறக் கதவு தட்டப்படும் ஓசை. தொண்டர்களுக்கு அலுப்பு,ஆயாசம்,களைப்பு, அடியார்கள் சிலரும் அங்கே தங்கியிருந்தார்கள். வேறு வழியில்லாமல் ஒரு தொண்டர் தட்டுத் தடுமாறி நடந்து வாசற் கதவைத் திறந்தார்.
திகைத்தார், வேரோடிப் போனார், யா…யார்?
டாக்டர் ஆனந்தவல்லி அம்மையார்…!
“அப்பாவைப் பார்க்கணும்…”
கெஞ்சல் இல்லை; அதட்டல் இல்லை;
ஆவேசம் இல்லை. இயல்பான குரல்.
தொண்டருக்கு வந்ததே, கோபம். “உங்களுக்கு என்ன பைத்தியமா,டாக்டர்?..
இந்த ரத்திரி வேளையிலே பெரியவாளை எப்படிப் பார்க்கிறது?..”
“அப்பாவைப் பார்க்கணும்”
“என்னடா அங்கே தகராறு?” என்று உட்புறத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
“அப்பாவைப் பார்க்கணுமாம்..”
“யாரு? டாக்டரா?”
இந்தத் தொண்டர் எழுந்து சென்று வழி மறிப்பதற்குள் அம்மையார், இருவரையும் மீறிக்கொண்டு உள்ளே வந்து விட்டார்.
“அப்பாவைப் பார்க்கணும்” என்றார்,சாந்தமாக.
“நீங்க..மண்ணாங்கட்டி மரியாதை என்ன? நீ நிஜமான டாக்டரா? போலி டாக்டரா?..
ராத்திரியில் பெண்கள் மடத்துக்கு வரக்கூடாது.
“அப்பாவைப் பார்க்கணும்” என்றார்,உறுதியாக.
“இவ சொன்னா போகமாட்டா…அடிச்சுத்தான் அனுப்பணும். ஐந்தாறு ஆவேசக் குரல்களை மீறி, உள்ளே ஒரு கதவு திறக்கப்படும் மெல்லிய ஒலி.
திரும்பிப் பார்த்தார்கள், பெரியவாள்! தான் படுத்திருந்த அறைக்கு வெளியே வந்து
நின்று கொண்டிருந்தார்கள்.
தடாலென்று விழுந்து வந்தனம் செய்தார்,
அம்மையார். “அப்பா..அப்பா…அப்பா.”
அமுதத்தில் தோய்ந்தெடுத்த அப்பாக்கள்!
தரிசனம் ஆகிவிட்டது போகவேண்டியது தானே? போகவேண்டியது தான். ஆனால் சைகைகாட்டிப் பெரியவாள் அழைக்கிறார்களே?
அடடா…
அரைமணி நேரம் வெகுசங்கடமான நேரம். முன்னரோ,பின்னரோ நிகழ்ந்ததேயில்லை.
“பக்கத்து கிராமத்திலே ஒரு கேஸ், அப்பா, ரொம்ப க்ரிடிகல். தேவையான மெடிஸின்ஸ் கைவசம் இல்லே..சின்ன வயசுப் பொண்ணு.. ரொம்பப் போராடினேன். என்னாலே முடியல்ல.. அப்பா,அப்பான்னு நூற்றெட்டு தடவை சொன்னேன்…
உயிர் வந்துடுத்து..! பகல்லே அப்பாவைப் பார்க்கமுடியல்லே. கிராமத்திலேர்ந்து
வந்தவுடனே இங்கே வந்துட்டேன்..”
ஐந்து நிமிஷம் ஓர் அரவம் இல்லை.
பெரியவா மெல்லிய குரலில் கேட்டார்கள். “ராத்திரி வேளையிலே ஸ்திரிகள் மடத்துக்கு வரக்கூடாது..நான் தற்செயலா முழிச்சிண்டு வெளியே வந்தேன். இப்போ என்னைப் பார்க்க முடியல்லேன்னா என்ன பண்ணியிருப்பே?”
அம்மையார் விக்கித்துப் போய்விட்ட மாதிரி தெரிந்தது.
“என்னப்பா, இது? இவர்கள் மாதிரி, நீங்களும் கேட்கிறேள்? அப்பாவைப் பார்க்கணும் என்கிற எண்ணம் இருந்ததே தவிர அது முடியாமற்போகலாம் என்று எனக்குத்
தோன்றவேயில்லையப்பா !அது எப்படி முடியாமற்போகும்? என் அப்பாவைப் பார்க்கணும்..அவ்வளவு தான். ராத்திரியோ,பகலோ எனக்கு என்ன அப்பா?”
பெரியவாளின் சிரம், நாற்புறமும் சுற்றிவிட்டு, ஓர் இடத்தில் நிலைகொண்டது. அங்கேயிருந்த ஒரு முழம் மல்லிகைச் சரத்தையும்,மாம்பழத்தையும் தட்டில் வைத்து,
பெரியவாள் ஆசியுடன் அம்மையாரிடம் கொடுத்தார்,தொண்டர்.
வந்தனம் செய்துவிட்டு,”அஞ்சு மணிக்கு விசுவரூப தரிசனத்துக்கு வந்துடறேன்”ப்பா என்று சொல்லிவிட்டு ஓர் அரசகுமாரியின் வீறாப்புடன் வாசல் நோக்கி
நடந்து சென்றார்,டாக்டர்.
நடந்ததெல்லாம் கனவா,நனவா என்றே புரியவில்லை. தொண்டர்களுக்கு.
விடியற்காலம், விசுவரூப தரிசனத்துக்கு ஆஜரானார் டாக்டர்.
ஆனால், தொண்டர்கள் கண்களுக்கு ஒரு தேவதையாகக் காட்சி தந்தார்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

நரசிம்மரும்ரிய காஞ்சி மகா பெவாளும்

நரசிம்மரும்ரிய காஞ்சி மகா பெவாளும் – வைகாசி அனுஷம் – மஹா பெரியவா ஜெயந்தி
நரசிம்மர் ஓவியத்தை வரைந்தவர் ஹிந்து கேஷவ் தான்…
மஹா பெரியவரிடம் அளவு கடந்த பக்தி கொண்ட ஒரு தம்பதி. மகானை அனுதினமும் பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் அவர்கள் தொடங்குவதே இல்லை. இல்லத்தரசி கர்ப்பிணி ஆனார். தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தை நல்ல விதமாகப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் அனுதினமும் மகானை வேண்டாத நாள் இல்லை. இத்தனைக்கும் அவர்களது குலதெய்வம் நரசிம்மர்!
ஒரு நாள் இரவில், அந்த கர்ப்பிணிப் பெண் தூங்கிக்கொண்டு இருந்தபோது, நரசிம்மர் அவர் கனவில் தோன்றி, ‘பிறக்கப் போகும் குழந்தைக்கு தன் பெயரை வைக்கவேண்டும்’ என்று உத்தரவிடுகிறார். ஆனால் குழந்தையைச் சுமந்த தாயோ, “எங்களுக்கு எல்லாமே காஞ்சி மகான்தான். அவரைக் கேட்டுத் தான் எதையும் செய்ய வேண்டும்” என்று வாதம் புரிகிறாள்.
நரசிம்மர் பிடிவாதமாக இருக்கிறார்.
காலையில் கண் விழித்தவுடன் தான் கண்ட கனவை கணவரிடம் சொன்னார் அந்தப் பெண்.
“நரசிம்மன் என்றே வைத்து நாம் அழைக்கலாம். எதற்கும் காஞ்சி மகானை அணுகி இது விஷயமாகக் கேட்டு விடலாம்” என்று முடிவு செய்தார்கள். குலதெய்வத்தின் பொல்லாப்பு வரக் கூடாதல்லவா?
அவர்களுக்கு அழகான ஓர் ஆண் மகவு பிறந்தது. உரிய தினத்தில் எல்லா சடங்குகளும் முடிந்த பிறகு ஒரு நாள் குழந்தையுடன் அவர்கள் மகானின் தரிசனத்துக்காகப் போனார்கள். மகானிடம் தான் கண்ட கனவைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று யோசனை கேட்க மனைவி முடிவு செய்ய, அதுதான் சரி என்று கணவனும் ஆமோதித்தார்.
தங்கள் முறை வந்தபோது, குழந்தையை மகானின் முன்னால் கீழே போட்டார்கள். குழந்தையைப் பார்த்தவுடன், மகானின் முகத்தில் லேசான குறுநகை பிரகாசம். அவர், ‘பொதுவா குழந்தை பிறந்த பிறகு உரிய சடங்குகளுக்குப் பிறகு தான் அதற்குப் பெயர் சூட்டுவார்கள். அனால் இவன் வயிற்றில் இருக்கும்போதே பெயரை வைத்துக் கொண்டு பிறந்திருக்கிறான்… இல்லையா நரசிம்மா?” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்னார். பெற்றோர்கள் அதிர்ச்சிக்குள்ளாகக் கேட்பானேன்? அவர்களின் எண்ணம் போலவே மகானும் அந்த தெய்வத்தின் பெயரை வைத்தே அழைத்து விட்டார். தங்கள் கனவு, எண்ணம் எதையுமே சொல்லாமல் மகான் அதே பெயரைச் சொல்கிறாரே, அது எப்படி ? தன் பக்தர்களுக்கு இப்படித்தான் மஹா பெரியவா அருள் பாலிக்கிறார்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

சாண்டோ சின்னப்ப தேவரும், கண்ணதாசனும்...
ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது.
அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை.

ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம்
ஏற்பட்டு நினைவிழந்த நிலையில்
மருத்துவமனையில் இருந்தார்.
காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும்
மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம்
எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில்
பெரியவரைப்
பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’
என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன்
எப்படியிருக்கிறான்’
என்றும் பெரியவர் கேட்க,
அதிர்ந்து போனார் தேவர்.
கண்கள் கலங்க வியப்பும்
வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன்
நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்”
என நா தழுதழுக்கக் கூறினார்.

தேவரின் கவலையை உணர்ந்த
பெரியவர், ‘சரி, கவலைப்படாதே...
இந்த விபூதியைக் கொண்டுபோய்,
அவன் நெற்றியில் இட்டு, வாயிலும்
சிறிதளவு போடு, மீதி இருப்பதை அவன்
தலையணைக்குக் கீழ் வைத்துவிடு’
என்று தன் திருக்கரங்களால்
விபூதி எடுத்து மடித்துத் தர,
தேவர் விதிர் விதிர்த்து, பெரியவரை மறுத்துப் பேசவும் துணிவின்றி தயங்க, மீண்டும பெரியவரின் கட்டளைக்கிணங்கி தயக்கத்தோடு கைநீட்டி விபூதியைப் பெறுகிறார்.

தேவரின் தயக்கத்திற்குக் காரணம், கண்ணதாசன்
நாத்திகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு, திராவிட
கட்சிகளின் சார்பில் பிராமணர்களையும் சனாதன
தர்மத்தையும் நாக்கில் நரம்பில்லாது போல்
மேடைகளில் பேசி வந்த காலகட்டம் அது.
விபத்து நடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான்
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு எதிரிலேயே நடந்த
கூட்டத்தின் மேடையில் படுபயங்கரமாகப்
பேசி மடாதிபதிகளை இழிவுபடுத்திப்
பேசியிருந்தார்.
எனவே அவரிடம் போய் இந்த
விபூதியை எப்படிக் கொடுப்பது என்பதுதான்
தேவரின் பெரியத் தயக்கமாயிருந்தது.
ஆனால் முக்காலமுணர்ந்த ஞானியாகிய பெரியவர், தேவரின் மனத்தயக்கத்தை உணர்ந்து ‘தயங்காமல் கொண்டுபோய் பூசு. சூரியனை சில சமயம் மேகம்
மறைப்பது போல் நாத்திகமேகம்
இதுவரை அவனை மறைத்திருந்தது.
இனி அவன் சூரியனாகத் திகழ்வான்.
அவன் எப்பேர்ப்பட்ட
பரம்பரையைச் சேர்ந்தவன் தெரியுமா?

கோவில் திருப்பணி செய்வதற்கே பிறந்தவர்கள் போல்
திகழ்ந்தவர்கள் நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள்.

வரதராஜப் பெருமாள் கோவில் கோபுரத்
திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின் கொள்ளுத்
தாத்தா. ஏகாம்பரநாதர் கோவில் திருப்பணியைச்
செய்தவர் கண்ணதாசனின் தாத்தா. காமாக்ஷி கோவில்
திருப்பணியைச் செய்தவர் கண்ணதாசனின்
தகப்பனார். இப்ப புரியறதா?’ என திருவாய்
மலர்ந்தருளினார்.

தேவர் மனந்தெளிந்தவராய்
பெரியவரை வணங்கி விடைபெற்று, நேராக மருத்துவமனைக்குச் சென்றார்.
நினைவிழந்து படுத்திருந்த கண்ணதாசனின் நெற்றியில் விபூதியைப்
பூசிவிட்டு சிறிது விபூதியை வாயிலும்
இட்டு, மீதியை தலையணையின் கீழ்
வைத்துவிட்டு வீடு திரும்பினார்.
அவர் சிந்தனையெல்லாம் கண்ணதாசன்
நினைவு திரும்பி நடந்ததை அறிந்து என்ன
சொல்வாரோ என்றே நினைத்தது.

மறுநாள் தேவர் மருத்துவமனை சென்று கண்ணதாசனின் படுக்கையை சற்றே படபடக்கும் நெஞ்சோடு நெருங்கியபோது கண்ணதாசனுக்கு நினைவு திரும்பி கண் விழித்திருந்தார்.

தேவரைப் பார்த்தவுடன், ‘வாங்க,
எத்தனை நாளா இப்படி படுக்கையில் இருக்கேன்.
கொஞ்சம் கண்ணாடியை எடுத்துக் கொடுங்களேன்.
என் முகத்தைப் பார்க்கணும்’ என்றார்.

நேற்று இட்ட விபூதி இன்னமும் நெற்றியில் திகழ, தேவர்
தயங்கியபடியே தந்த கண்ணாடியில் தன் முகம் கண்ட கண்ணதாசன்
‘இதென்ன விபூதி?’
என்று தேவரை ஏறிட்டுப் பார்க்க,
வேறு வழியின்றி வந்தது வரட்டுமென தேவர், தான் பெரியவரைப் பார்த்ததையும்,
பெரியவர் ஆசீர்வாதம் செய்து விபூதி கொடுத்ததையும் சொல்ல,
கண்ணதாசனின் விழிகளில் அருவியெனக்
கொட்டியது கண்ணீர்.

திகைத்து நின்ற தேவரின்
செவிகளில் தேனாகப் பாயந்தது கண்ணதாசனின்
வார்த்தைகள், ‘எனக்கா?
என்னிடமா இவ்வளவு கருணை? போனவாரம்தான்
அவரை, ஐயோ’ என வாய்விட்டுப்
புலம்பி அழுததோடு, தேவரிடம்
ஒரு வேண்டுகோளையும் சமர்ப்பித்தார்.
‘எனக்கு உடல்நலமாகி மருத்துவமனையிலிருந்து
வெளியேறும் சமயம் நான் வீட்டிற்குச்
செல்லமாட்டேன். இந்தப் பாவியிடம் கருணைவைத்த
அந்த மகானிடம் முதலில்
என்னை தயவுசெய்து அழைத்துச் செல்லுங்கள்’ என
மனமுருகி வேண்டினார்.
கண்ணதாசன் வேண்டியபடியே அந்த நல்ல
சந்திப்பும், பாவமன்னிப்பும் நடந்தது.
மாறியது மனம், நன்றியில் ஊறியது தினம்,
வீறிட்டு வெளிவந்தது ஒரு கவிதை.
அக்கவிதையை எடுத்துக் கொண்டு,
பெரியவரை நேரில் கண்டு வணங்கி, கவிதையைச்
சமர்ப்பித்தார், கண்ணதாசன். அக்கவிதை இதோ :
பார்த்த மாத்திரத்தில் பாவத்தை அலம்புகின்ற
தீர்த்தப் பெருக்கு, திருவாசகத்தின் உட்கருத்து
கூர்த்த மதியால் மெய்ஞானக் கருத்துணர்த்தும்
முழுமூர்த்தம்
கலிமொய்க்கும் இவ்வுலகைக் காக்கவந்த கண்கண்ட
தெய்வம்
எம்மதத்தோரும் சம்மதத்துடன் தம்மதத் தலைவனென
தொழுதேத்தும் தெய்வக் கமலக் கழல் தொழுவோம் வாரீர்!

கவிதை வரிகளைக் கண்ட பெரியவர்,
கண்ணதாசனைக் கனிவோடு நோக்கி, ‘அனந்த
கோடி அற்புத லீலா சாகித்ய மாயமானுஷாய
நமோ நமஹ, அர்த்தநாரி திருவண்ணாமலை சேஷாத்ரி
மகானுக்கல்லவா இது பொருந்தும்’ என்று அருளாசிக்
கூறி, ‘அங்கிங்கெனாதபடி எங்கும்
நிறைந்திருக்கும் நிர்மலப் பொருள் ஞானசூரியனாம்,
மதத்தின் பெருமையை எழுது’ என்று திருவாய்
மலர்ந்தருள,
அக்கணமே கண்ணதாசனின் மனதில்
“அர்த்தமுள்ள இந்துமதம்” அழகாய் அரும்பி பலநாள்
உழைப்பில் இதழ் விரித்து மணம் வீசியது.

இந்து மதமே அர்த்தம் உள்ளதுதானே ...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

ஹாஸ்பிடல் எங்கேன்னு கேளு

“திருப்புகழ் மணி” என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட க்ருஷ்ணஸ்வாமி ஐயர், பெரியவாளின் அத்யந்த பக்தர். மைலாப்பூரில் இருந்தார். பெரியவாளிடம் அபரிமிதமான பக்தி உள்ள குடும்பம். திருப்புகழ் பாடல்களை ப்ரபலமாக்கியவர்களில் க்ருஷ்ணஸ்வாமி ஐயரை குறிப்பிட்டு சொல்லலாம். அவருடைய மனைவிக்கு காசநோய் (TB) கடுமையாகிவிட்டது. ஆந்த்ராவில் மதனபள்ளி ஹாஸ்பிடலில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
பெரியவா கால்நடையாக காஸி யாத்ரை புறப்பட்டு, மதனபள்ளியில் தங்கி இருந்தார். அதைக் கேள்விப்பட்டவுடன், “இவ்வளவு ஸமீபமா பெரியவா வந்திருக்கறச்சே கூட, என்னோட பாபம், பெரியவாளை தர்ஶனம் பண்ண முடியலியே! ” மனஸும், ஶரீரமும் உருகிப் போய் கண்ணீர் வடிக்க மட்டுந்தான் முடிந்தது. ஆனால் உடல்நிலை இடம் கொடுக்கவில்லை.
” என்னோட கடைசி மூச்சு, இந்த படுக்கைலதான்” என்று அரற்றினாள்.
” காலன் வரதுக்குள்ள, என் ஶங்கரனை [கால காலனை] பாத்துட்டேன்னா….போறும். எவ்வளவோ ஆறுதலா இருக்கும்….பாழும் உடம்பு, படுக்கையில் புரளக்கூட முடியாம இருக்கு. நான் குடுத்து வெச்சது அவ்வளவுதான்”
அந்தர்யாமி அறியாததா?
மதனப்பள்ளிக்கு பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்த பக்தர்,
“பெரியவாகிட்ட ஒரு விண்ணப்பம்….திருப்புகழ் மணி ஐயரோட ஸம்ஸாரம் இங்க ஒரு ஆஸ்பத்ரில ரொம்ப ஸீரியஸ்ஸா இருக்கா…..TB….ரொம்ப அட்வான்ஸ் ஸ்டேஜ்….”
அவர் சொல்லி முடிக்கவில்லை, பாரிஷதரைக் கூப்பிட்டு, ” மணியோட பத்னி எந்த ஆஸ்பத்ரில இருக்கான்னு விஜாரி.. நான் பல்லாக்குலேயே உள்ள போயி அவளைப் பாக்கலாமா…ன்னு கேளு…”
பொதுவாக மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளை பார்க்கும் ஸம்ப்ரதாயம் ஸ்ரீ மடத்தில் இல்லை. ஆனால் இது special கேஸ்! திருப்புகழை தமிழ்நாட்டில் பரப்பிய முருக பக்தரின் ஸம்ஸாரம்….ஶுத்தாத்மா!!!
ஹாஸ்பிடல் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி பெற்று அந்த அம்மா படுத்திருந்த கட்டில் வரை, பல்லக்கிலேயே சென்று தர்ஶனம் கொடுத்தார் பெரியவா!!
இது முன் பின் நடந்திராத அபூர்வ நிகழ்ச்சி!!
யாருக்குமே கிடைக்காத மஹாப் பெரிய பாக்யம்! பெரியவா தர்ஶனம் கிடைத்ததில் அம்மாவுக்கு மட்டற்ற மகிழ்ச்சி,
“நான் கனவுல கூட இதை நெனச்சு பாக்கல….பெரியவாளே வந்தாளே! இந்த ஜன்மத்தை கரையேத்தி விட்டுட்டாளே! இனிமே நேக்கு எந்த பயமோ, கவலையோ இல்ல….ஶங்கரா….ஶங்கரா” என்று ஈனஸ்வரத்தில் சொல்லி சொல்லி கண்ணீர் வடித்தாள். தர்ஶனத்துக்கு முன் வரை மனம் சோர்ந்திருந்தவள், பின்னர் எப்போதும் மனதெம்போடு இருந்தாள்..
சில நாட்களிலேயே ஶிவ கணங்கள் வந்து அவளை ஶிவபதத்தில் சேர்க்க அழைத்துச் சென்றனர்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
ர்காயுஷ்மான் பவ.

பல வருஷங்களுக்கு முன் செய்தி....
பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில்
நாலைந்து வித்வான்கள் தரிசனத்துக்கு வந்திருந்தார்கள்.
பேச்சு வாக்கில் ''நான் நாராயண ,நாராயண் ஏன்று
ஆசீர்வதிக்கிறேன், சம்சாரிகளான நீங்கள் என்ன சொல்லி
வாழ்த்துகிறீர்கள்'' என்று கேட்டார்கள்.
அதற்கு ''தீர்காயுஷ்மான் ஸௌம்ய'' என்று வாழ்த்துகிறோம்
என்று அந்த பண்டிதர்கள் சொன்னார்கள்.
''அதற்கு என்ன அர்த்தம்''?
''நீண்ட நாட்கள் சௌக்யமாய் இரு ''என்று அர்த்தம்.
அங்கிருந்த வித்வாங்களை த் தனித் தனியே கேட்டார்.
எல்லாரும் அதே பதிலையே சொன்னார்கள்.
கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்த பெரியவா''நீங்கள்
அனைவரும் சொன்ன அர்த்தம் தவறு ''என்றார்.
பண்டிதர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. அத்தனை
பேரும் சிரோமணி பட்டம் வாங்கியவர்கள்.
தீர்காயுஷ்மான் பவ ஸௌம்ய என்பதற்கு ஓரளவு
ஸம்ஸ்க்ருதம் பயின்றவர்களே பதில் பொருள் சொல்லமுடியும்.
அவ்வளவு எளிமையான சொல்லுக்கு விளக்கம் தப்பு
என்கிறாரே பெரியவா?
''நானே சொல்லி விடட்டுமா?''
பண்டிதர்கள் பொருள் விளக்கத்துக்குக் காதைத்
தீட்டிக் கொண்டார்கள்.
''இருபத்தேழு யோகங்களின் ஒன்றின் பெயர்
ஆயுஷ்மான்.பதினொரு கரணங்களில் , பவ
என்று ஒரு கரணம், வார நாட்களில் ஸௌம்ய
என்று வாஸரம் வருகிறது, புதன் கிழமை.
புதன் கிழமையில் ஆயுஷ்மான் யோகமும் பவ கரணமும்
சேர்ந்து வந்தால் அந்த நாள் ரொம்ப ச்லாக்யமான னாள்
என்று சொல்வார்கள்.வேகமா விருத்தி ஏற்படும்னு சொல்வா.
அதனாலே இந்த மூணும் கூடி வந்தால் என்ன பலன் கிடைக்குமோ
அதெல்லாம் உனக்குக் கிடைக்க வேண்டுமென ஆசிர்வதிக்கிறேன்''
என்று அர்த்தம் என்றார்.
அங்கிருந்த சிரோமணிகள் வித்யா வாசஸ்பதிகள்
கிளிப்பிள்ளை மாதிரி சொன்ன வாக்யத்துக்கு எத்தனை
அர்த்த புஷ்டியாந விளக்கம் கொடுத்தார் இந்த ஞானப்பிள்ளை!
ஹர ஹர சங்கரா...

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friend

: சங்கரன் எனும் teacher

ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர ஹர ஹர சங்கர

​கும்பகோணத்தில் வசித்து வந்த திரு சதாசிவம் ஒவ்வொருஅனுஷ தினத்தன்றும் காஞ்சியில் பெரியவாள் இருக்கிறாரா என்று உறுதி செய்து கொண்டு
தன் பயணத்தை துவங்கி விடுவார்.வேறு எங்கேனும் வெளியூர்களில் முகாமிட்டிருந்தால் அப்போது பயணிக்கமாட்டார்.

அப்படி ஒரு அனுஷதினத்துக்கு முதல் நாள் மாலை..... பழங்கள்.கல்கண்டு வாங்கப் போனவருக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.ஒரு கடையும் காணவில்லை
இவரின் முகத்தைப் பார்த்த கீரை வியாபாரி "என்ன சாமீ பையும் கையுமா கடைக்குப் பொறப்படறயா..மெட்ராஸ்ல ஏதோ அரசியல் பிரச்னையாம்.
ஒரு கட்சிக்காரங்க கூட்டமாக திரண்டு வந்து எல்லாக் கடைகளையும் மூடச் சொல்லி உத்தரவு போட்டுட்டு போறாங்க.

"அட ஈஸ்வரா வெளியூருக்கு பஸ்ஸெல்லாம் போறதோ!" என்று ஒரு கேள்வி போட்டார். கடைகளயே பூட்ட வெச்சவங்க பஸ்ஸுகளை போக
விடுவாங்களா..

பிறகு மனைவியிடம் "என்ன ஜானகி இப்படி ஆயிடுத்து? நாளைய அனுஷத்திற்கு காஞ்சிபுரம் போக முடியமானு தெரியலயே..ஏன் இந்த சோதனை?
என்று கலங்கியவர் மகா ஸ்வாமிகளை மனதுக்குள் நினைத்துப் பிரார்த்தித்துக் கொண்டார். ப்ராப்தம் இருந்தா அங்கே இருப்போம் என்று சொல்லிவிட்டு
வாசலில் இரு பக்கத்தையும் பார்வையால் துழாவிக் கொண்டிருந்தார்.

வாசலில் நின்று கொண்டிருந்த சதாசிவத்தின் அருகே வெள்ளை நிற அம்பாஸடர் கார் ஒன்று வேகமாக வந்து நின்றது.பஞ்சகச்சம் அணிந்து தும்பைப்பூ
மாதிரியான வெள்ளை நிறத்தில் சட்டையுடன் விபூதி தரித்த ஒருவர் காரிலிருந்து கீழே இறங்கினார்.இறங்கியதைப் பார்த்ததும் சதாசிவ தம்பதிகளுக்கு
ஒன்றும் புரியவில்லை.

"சார் நமஸ்காரம்...எம்பேரு சங்கரன்.உள்ளே இருக்கிறது என் மனைவி.தஞ்சாவூர்லேருந்து வந்திண்டிருக்கோம். மனைவிக்கு திடீர்னு தலைவலி.
அவளுக்கு நல்ல டிகிரி காபி சாப்பிட்டா சரியாயிடும்.இன்னிக்குன்னு பார்த்தா ஓட்டல் எதுவும் இல்லை.உங்களுக்கு சிரமம் இல்லேன்னா
இரண்டு பேருக்கும் ஸ்டாராங்கா காபி போட்டு கொடுக்க முடியுமா?

"தாராளமா..உள்ளே வாங்கோ.காபி என்ன..டிபன் வேணும்னா கூட பண்ணித் தர்றேன்" என்று கனிவாகச் சொன்னார். மணக்கும் காபியைக் குடித்து விட்டு
வாயார வாழ்த்தினார்கள். அப்போது சதாசிவம்,"இப்போது எதுவரைக்கும் பயணப் பட்டுண்டுண்டிருக்கேள்?" ஒருவேளை சென்னை என்று சொன்னால்
தொற்றிக்கொண்டு போகலாமே என்ற ஒரு நப்பாசை.

"நான் காஞ்சிபுரத்துல பெரியவாளைத் தரிசிக்கப் போயிண்டிருக்கேன்.ஆறு மாசம் ஆஸ்திரேலியாவில் இருந்துவிட்டு போனவாரம்தான் தஞ்சாவூர் வந்தேன்.
நாளைக்கு அனுஷமா இருக்கு.நீங்களும் வரேளா? என்று அழைப்பு விடுத்தபோது சதாசிவம் தம்பதிகளுக்கு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நள்ளிரவு வேளையில் கார் வந்து நிற்பதைப் பார்த்து ஒடோடி வந்தார் மடத்து வாட்ச்மேன். சங்கரன் உடனே அவர்களைப் பார்த்து "உங்களை மடத்து வாசலில்
இறக்கி விடுவதற்காகத்தான் இங்கே வந்தேன்.நண்பர் பக்கத்துல இருக்கார்.அவா கிரஹத்துல தங்கிட்டு நாளைக்குக் காத்தால உங்களை வந்து பார்க்கிறேன்.
என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன்.

காலை மடத்துக்கு அருகே உள்ள கடைகளில் வாங்கிய பழங்கள்,கல்கண்டு,புஷ்பங்கள் போன்றவற்றை ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக்கொண்டு பஞ்சகச்சம்
மற்றும் மடிசார் உடையுடன் பெரியவா தரிசனத்துக்காக காத்துக் கொண்டிருந்தனர் சதாசிவம் தம்பதிகள். சங்கரனை இடை இடையே தேடினார் நன்றி சொல்ல
வேண்டும் என்ற அவாவில்.

ஸ்ரீமடத்தின் உதவியாளர் ஒருவர்,சதாசிவத்தின் தோளைத் தொட்டு,"மாமா...கூப்பிட்டுண்டே இருக்கேன்..அப்படி யாரைத் தேடறேள்?
பெரியவா உங்களைக் கூப்பிடறா....வாங்கோ,.எம்பின்னால்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடந்தார்.பின் தொடர்ந்தனர் தம்பதிகள்.
"வாப்பா சதாசிவம்..கும்பகோணத்துல உனக்கு பழம்ஏதும் கிடைக்கலையோ? அதான் மடத்து வாசல்லயே வாங்கிண்டு வந்திருக்கே போலிருக்கு" என்று
கேட்டபோது ஆடித்தான் போனார் சதாசிவம்."ஆமாம் பெரியவா..அங்கே ஏதோ பிரச்னை.கடைகளும் இல்லை..பஸ்ஸும் இல்லை..."
"அதான் சொகுசா ஒரு கார்ல நன்னா தூங்கிண்டே மடத்துக்கு வந்து சேர்ந்துட்டியே...அப்புறம் என்ன...இந்தா" என்று பிரசாதத்தை நீட்டவும் என்ன பதில்
சொல்வதென்று தெரியாமல் பிரசாதத்தை வாங்கிக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டார்.

பிறகு "சங்கரன்னு ஒருத்தர்.. அவர்தான் தன்னோட கார்ல என்னைக் கூட்டிண்டு வந்து நேத்து ராத்திரி இறக்கி விட்டுட்டுப் போனார்.
அவருக்குத்தான் நன்றி சொல்லணும்"என்றார் குழைவாக. "மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே......இனிமே சங்கரனாவது,கிங்கரனாவது"
என்று பெரும் குரல் எடுத்து,சிரிக்க ஆரம்பித்தது அந்த பரபிரம்மம்.

சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது.ஆனால் புரியாதது மாதிரியும் இருந்தது.
"பஸ் எல்லாம் ஓட ஆரம்பிச்சுடத்து...மடத்துல போஜனம் பண்ணிட்டு,ஜாக்கிரதையா ஊர் போயிட்டு வா"என்று ஆசிர்வதித்தார் பெரியவா.

நடந்து முடிந்த காட்சிகளின் பிரமிப்பில் இருந்து மீள முடியாமல் வெளியே வந்த சதாசிவம்,நேற்று நள்ளிரவு தான் மடத்து வாசலில் இறங்கியபோது
பணியில் இருந்த வாட்ச்மேனைக் கண்டு அருகில் அழைத்து ""ஏம்ப்பா..நேத்து ராத்திரி பன்னிரண்டு மணிக்கு ஒரு வெள்ளை அம்பாஸடர் கார்ல நான் மடத்து
வாசல்ல இறங்கினபோது ஒரு பெரியவர் வண்டி ஓட்டிண்டு வந்தாரே ...அவர் திரும்ப இன்னிக்கு வந்தாரா?" என்று கேட்டார்.

"என்ன சாமீ.....நேத்து ராத்திரியா? எனக்கு டூட்டியே இல்லியே சாமீ...காலையில்தானே நான் வந்திருக்கேன்"

சதாசிவம் மீண்டும் அதிர்ந்தார்,"இல்லேப்பா....நேத்து ராத்திரி உன்னைப் பார்த்தேனே....இதே இடத்து வாசல்ல..." என்றார்.
புருவம் உயர்த்தி, "என்ன சாமீ நீங்க...சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்றீங்க.. நேத்திக்கு ராத்திரி செக்யூரிட்டி டூட்டிக்கு ஆளே இங்கு இல்ல சாமீ"
என்று சொல்லிவிட்டுப் போனார்.

சதாசிவத்தின் கண்களில் ஜலம் தளும்பியது. "அப்படி என்றால் ...நேற்று இரவு என்னையும் என் மனைவியையும் கும்பகோணத்தில் இருந்து
இங்கே கூட்டிக்கொண்டு வந்த சங்கரன் யார்?" என்று மனம் நெகிழ்ந்து அரற்றினார்.சர்வமும் உணர்ந்த சங்கரனாக அவருக்கு மகா பெரியவா
ஒரு விநாடி காட்சி தந்து மறைந்தார்,

"பெரியவா,,," என்று பெரும் குரலெடுத்து அழைத்து அந்த மடத்தின் வாசலில் ....மண் தரையில்.....பெரியவா இருக்கும் திசையை நோக்கி
சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தார் சதாசிவம். கூடவே அவரது மனைவியும்..

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
எல்லார் மனஸையும் நெகிழவைக்கும் மஹா பெரியவா பேரருள் மஹாபெரியவா சாதாரணமாக ரொம்ப கூட்டம் இல்லாவிட்டால் கூட ... , இரவு பத்து மணியானாலும் பக்தர்களின் குறைகளை கேட்டு உபாயமோ ஆறுதலோ சொல்லுவது வழக்கம்.

ஒருநாள் எல்லாரும் போனதும், பெரியவா ஸயனிக்க உள்ளே போனார். எனவே சிப்பந்திகள் தாழ்ந்த குரலில் ஏதோ பேசிக் கொண்டிருந்தபோது “நான் பெரியவாளை தர்சனம் பண்ணனும்” குரல் கேட்டு யாரென்று பார்த்தால், ஒரு 12 வயஸ் பையன் மிகவும் பரிதாபமான கோலத்தில் நின்று கொண்டிருந்தான்.

“இப்போல்லாம் பெரியவாளை பாக்க முடியாது……..சாப்டுட்டு ஒரு பக்கமா இங்கியே படுத்துக்கோ….காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர் சொன்னார். இப்படி ஒரு பரிதாபமான கோலத்தில் ஒரு பையன் வந்திருக்கிறான் என்று பெரியவாளை எழுப்ப முடியாது. சிறுவன் விடுவதாயில்லை.

“எனக்கு இப்போ பசிக்கலை…பெரியவாளை மட்டும் எப்பிடியாவது தர்சனம் பண்ணனும் அண்ணா…” என்று சொல்லிவிட்டு, மிகவும் களைத்துப்போய் இருந்ததால், ஒரு பக்கமாக படுத்துக் கொண்டுவிட்டான். மறுநாள் காலை மஹா பெரியவா சிறுவனை தன்னிடம் அழைத்தார்.

“ஏம்பா….எங்கேர்ந்து வரே? ஓம்பேரென்ன? ஒங்கப்பா அம்மா யாரு? எங்கேயிருக்கா?……..” ஸ்ரீ மாதாவின் குரலை அந்த கன்று இனம் கண்டுகொண்டது. கண்களில் நீர் பெருக அந்த குழந்தைப் பையன் சொன்னான்.

“பெரியவா…..நான் மெட்ராஸ்ல ஒரு ஸ்கூல்ல படிச்சிண்டிருக்கேன்..எங்கப்பா, அம்மா, தங்கை மூணுபேரும் வெளியூர்ல இருந்தா. அப்பா திடீர்னு செத்துப் போய்ட்டார். அம்மாவும் தங்கையும் ரொம்ப கஷ்டப்பட்டா…பாவம்! அப்புறம் பம்பாய்ல ஒரு பெரிய பணக்கார மாமாவாத்ல சமையல் வேலை பண்ணிண்டு இருந்தா…..[சிறுவன் மேலே பேச முடியாமல் விம்மினான்]

.திடீர்னு எங்கம்மாவும் செத்துப் போய்ட்டா பெரியவா..” இதற்கு மேல் குழந்தையால் தொடர முடியாமால், விக்கி விக்கி அழ ஆரம்பித்தான். அப்பா அம்மா ரெண்டு பேரையுமே என்னால கடைசி வரைக்கும் பாக்க முடியலை பெரியவா. அவாளுக்கு கார்யம் பண்ணக்கூட என்னால முடியாது. நேக்கு இன்னும் பூணூல் போடலை..ங்கறதால பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா…எனக்கு ரொம்ப அழுகையா வருது

பெரியவா…..இப்போ அந்த பம்பாய்ல இருக்கற மாமா வேற, “ஒன்னோட தங்கையை வந்து அழைச்சிண்டு போ!” ன்னு எப்போப்பாத்தாலும் ஆள் விட்டுண்டே இருக்கார்……பெரியவா. நானே கவர்ன்மென்ட் ஸ்கூல் ஹாஸ்டல்ல இருக்கேன். என் அப்பா அம்மாக்கு கர்மாக்களைப் பண்ணனும், என் தங்கையை நன்னா வெச்சுக்கணும்..ன்னு நேக்கும் ரொம்ப ஆசையாத்தான் இருக்கும் பெரியவா. ஆனா, நானே சோத்துக்கு

வழி இல்லாம இருக்கேனே! அதான்…..ஒங்களை தர்சனம் பண்ணினா எனக்கு வழி சொல்லுவேள்னு மடத்துக்கு வந்தேன்…..” அழுகையோடு தட்டுத் தடுமாறி ன்னான்.

அவனையே சிலவினாடிகள் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவன் சொல்லித்தானா அவருக்கு தெரியவேண்டும்? அவனைக் காப்பாற்றத்தானே இங்கே

வரவழைத்திருக்கிறார்!

“சரி. கொழந்தே! நீ கொஞ்ச நாள் இங்கியே இரு. என்ன?”

“சரி” என்று சந்தோஷமாக தலையாட்டியது அந்த குழந்தை. நாலைந்து நாட்களுக்குப் பிறகு, நெய்வேலியிலிருந்து சில உயர் அதிகாரிகள் மஹா பெரியவா தர்சனத்துக்கு வந்தார்கள். அவர்கள் கிளம்பும்போது, எதேச்சையாக அந்த பையன் அந்தப் பக்கம் வர, மஹா பெரியவா அவனிடம் ” சட்னு போய், அந்த நெய்வேலிலேர்ந்து வந்தவா

போய்ட்டாளான்னு பாரு! போகலைனா, நான் கூப்டேன்னு சொல்லு”……….அவருடைய திருவிளையாடலை யாரறிவார்?

அவர்கள் கிளம்பவில்லை. ஒவ்வொருவராக மஹா பெரியவா முன்னால் வர வர, “நீ இல்லை, நீ இல்லை” என்று திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்தவரைப் பார்த்ததும் மஹா பெரியவா முகத்தில் ஒரு புன்சிரிப்பு. “ம்ம்ம்ம்..இவரைத்தான் கூப்ட்டேன்.

இந்தாடா! கொழந்தே! ஒன்னோட கதையை இவர்கிட்ட சொல்லு” என்று சொன்னார். பையன் சொல்ல சொல்ல அதிகாரியின் முகத்தில் ஒரே ப்ரகாசம்!

“பெரியவா……..என்னோட அக்கா பம்பாய்ல இருக்கா.அவாத்துலதான் இந்த பையனோட அம்மா சமையல் வேலை பாத்துண்டு இருந்தா. அந்த அம்மா செத்துப் போனதும், என் மூலமாத்தான் இந்த பையனுக்கு தகவல் போச்சு! இவன் தங்கையை அழைச்சிண்டு போகணும்..ன்னு என் மூலமாத்தான் அவா சொல்லிண்டு இருந்தா…….” என்று மனஸார ஒப்புக்கொண்டார்.

“ரொம்ப நல்லதாப் போச்சு! இங்க பாரு. இந்த கொழந்தை பெத்தவாளை பறி குடுத்துட்டு தவிக்கறான்…..இவனோட, இவன் தங்கையையும் ஒன்னோட அழைச்சிண்டு போய், அவாளை படிக்கவெச்சு, ஆளாக்கறது ஒன்னோட பொறுப்பு! மொதல்ல இவனுக்கு உபநயனம் பண்ணி வை.

அவனைப் பெத்தவாளுக்கு கர்மாக்களை அவன் கையால பண்ண வை.

ஆகக்கூடி, இவா ரெண்டு பேரோட எதிர்காலத்துக்கு நீதான் எல்லாம் பண்ணனும். என்ன செய்வியா?”

அதிகாரிக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை! பிரமிப்போ அதை விட பன்மடங்கு ! என்ன ஒரு லீலை! எப்படி கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்! எல்லாரையும் விட்டுவிட்டு தன்னிடம் அவர் கட்டளை இட்டது, தனக்கு கிடைத்த பெரும் பாக்யம் என்று பூரித்துப் போனார்.

அக்ஷணமே மஹா பெரியவா பாதத்தில் விழுந்து அந்த பையனையும், அவன் தங்கையையும் தன் சொந்தக் குழந்தைகள் போல் பாதுகாப்பதாக உறுதி மொழி குடுத்தார். மஹா பெரியவாளை நம்பினார் கெடுவதில்லை என்று அந்த குட்டிப் பையனுக்குக் கூட.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Varagooran Narayanan
"சத்தம் அதிகம் வரும் பாகம் அடி,
குறைவாக உள்ளது நுனி."

(பெரியவாளின் சிற்பக்கலை நுட்பம்)

தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

பத்ராசலத்தில் ஸ்ரீராமர் கோயில் திருப்பணி
நடந்து முடிந்தது. கோயில் திருப்பணியில்
கை தேர்ந்த கணபதி ஸ்தபதி அந்த பொறுப்பை
ஏற்றிருந்தார்.

பத்ராசலத்துக்கு யாத்திரையாக வந்திருந்த
மகாபெரியவர்களிடம் "தாங்கள் அவசியம் வந்து
பார்வையிட வேண்டும்.தங்கள் கடாக்ஷம் வேண்டும்"
என அழைத்தார் ஸ்தபதி.பெரியவர்கள் கோதாவரியில்
ஸ்நானத்துக்குச் செல்லும் வழியில் அங்கே
நுழைந்தார்கள்.

கல்தூண் ஒன்றில் சிற்பம் செதுக்கும் வேலை
நடந்து வந்தது.

"இந்தத் தூணுக்கு அடிப்பாகம் எது,நுனிப்பாகம் எது"
என்று கேட்டார்கள் பெரியவர்கள். ஸ்தபதிக்கு ஒரே
திகைப்பு! 'இதைப் பார்த்தாலே தெரிகிறதே! இப்படி
ஏதோ குழந்தைத்தனமாகக் கேள்வி கேட்கிறார்களே!'
என்று எண்ணியபடி அந்தப் பாகங்களைச் சுட்டிக்
காண்பித்தார்.

"இந்த அடிப்பாகத்தை நுனியாகவும்,நுனியை
அடிப்பாகமாகவும் மாற்றலாமா?"என்று கேட்டார்கள்.

ஸ்தபதிக்கு ஒரே குழப்பமாக இருந்தது.

"செதுக்குவதற்கு முன்னால் ஒவ்வொரு தூணுக்கும்
இதுதான் அடிப்பாகம்,இதுதான் நுனி என்று எப்படித்
தீர்மானம் செய்வாய்" என்று கேட்டார்கள் சுவாமிகள்.

ஸ்தபதி பதில் சொல்லத் தெரியாமல் நின்றார்.

"சுத்தி எடுத்துவா, இதைக் கீழேயிருந்து மேல் வரை
கத்தியால் தட்டு.ஏதாவது தெரிகிறதா பார்"என்றார்கள்.

தட்டியபிறகு ஸ்தபதிக்கு ஏதோ ஒரு சந்தேகம்.
ஆனால் சொல்லத் தெரியவில்லை.

"மீண்டும் ஒருமுறை தட்டு.அதிலிருந்து வரும்
சத்தத்தைக் கவனி" என்றார்கள்.

"கீழே சத்தம் 'கணீர்' என்று வருகிறது. மேலே செல்லச்
செல்ல சத்தம் குறைகிறது" என்றார்,ஸ்தபதி.

"மரத்திலே வைரம் பாய்ந்த கட்டை என்பார்கள்.
அது சிகப்பாகக் கெட்டியாக இருக்கும். சுலபமாகப்
பிளக்க முடியாது.அதிலிருந்துதான் மரப்பாச்சி-
மரப்பொம்மை செய்வார்கள்.நீ அதைப்பற்றி
கேட்டிருப்பாய். அதுபோலதான் கல்லிலும்
வைரம் பாய்ந்த பாகம் கெட்டியாய் இருக்கும்.
அதிலிருந்து வெண்கலம் போல 'கணீர்' என்று
சத்தம் வரும். அதுவும் கெட்டியாக (அடர்த்தி
நிறைந்ததாக) இருக்கும். அந்தப் பகுதியைத்தான்
அடிப்பாகமாகக் கொள்வார்கள்.

"சத்தம் அதிகம் வரும் பாகம் அடி; குறைவாக
உள்ளது நுனி. நீ சரியாகத்தான் வைத்திருக்கிறாய்.
உனக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. சொல்லத்தான்
தெரியவில்லை" என்றார்கள் பெரியவர்கள்.

ஸ்தபதி உடனே சாஷ்டாங்கமாகப் பெரியவர்களின்
காலில் விழுந்து நமஸ்கரித்து, "தங்கள் அருளால்தான்
எல்லாம் நன்றாக அமைய வேண்டும்" என்று
பிரர்த்தித்தார். அப்படியே அமைய ஆசீர்வதித்தார்கள்
பெரியவர்கள்.

எல்லாக் கலைஞர்களுமே இப்படித்தான் முதலில்
சாமான்யமாக மதித்து,கடைசியில்,'இவர்களிடம்
நாம் கற்கவேண்டியது நிறைய இருக்கு' என்ற
முடிவுக்கு வருவார்கள்.

தெய்வத்துக்கு தெரியாத கலை ஏதும் உண்டா?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Maha Periyava

"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன"
பெரியவாள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
எதிரே, ஒரு பெரிய மரம். தடினமான குரங்கு ஒன்று வந்து மரத்தில் ஏறியது. பின், இருபது - முப்பது குரங்குகள் அந்த லீடர் குரங்கை தொடர்ந்து மரத்தில் ஏறின.
பெரியவாள், ஒரு கூடை மாம்பழத்தை மரத்தடியில் போட சொன்னார்கள்.
லீடர் குரங்கு என்ன உத்தரவு எப்படி போட்டதோ தெரியவில்லை! ஆனால், மற்ற குரங்குகள் ஒவ்வொன்றாக வந்து பழத்தை எடுத்துகொண்டு மேலே சென்றன. லீடர் குரங்கு மட்டும் ஒரு பழத்தை கூட தொடவில்லை!
பெரியவாள் சொன்னார்கள்:
"குரங்குகள் போன்ற மிருகங்களுக்கு கூட ஒரு discipline இருக்கு! லீடர் குரங்கு சொல்கிறபடி நடக்கின்றன.
"காட்டில், யானைகளுக்கு ஒரு தலைமை யானை இருக்கும். அந்த லீடர் யானையை follow பண்ணித்தான் மற்ற யானைகள் செல்லும்.
"ஒரு கட்டெறும்பு செத்துபோனால், மற்ற கட்டெறும்புகள் அதை இழுத்துச் செல்லும்.
"ஒரு காக்கை இறந்து போனால், மற்ற காக்கைகள் மரத்தில் உட்கார்ந்துகொண்டு துக்கமாய் கதறும்.
"ஆனால், ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் குரு சொல்கிறபடி நடப்பதில்லை. என்னை பார்த்து, நீங்களெல்லாம் ஆசார்யாள். பெரியவாள் என்றெல்லாம் சொல்கிறீர்கள். ஆனால், நான் சொல்வதை உங்களால் செய்ய முடிகிறதில்லை!"கவனமாக கேட்டுகொண்டிருந்த பக்தர்கள், ஒரே குரலாக, "பெரியவா என்ன உத்தரவு போட்டாலும் செய்கிறோம்" என்று பக்தியோடு பதிலளித்தார்கள்.
"சரி, காலையில் இரண்டு நிமிஷம், சாயங்காலம் இரண்டு நிமிஷம், எனக்காக ஒதுக்குங்கள். இருபத்திநான்கு மணி நேரத்தில், நாலு நிமிஷம் தான் கேட்கிறேன்.
"காலையில், இரண்டு நிமிஷம் "ராம, ராம" என்று சொலுங்கோ; சாயங்காலம் இரண்டு நிமிஷம் "சிவ, சிவ" ன்னு சொலுங்கோ..."
"அப்படியே செய்கிறோம்" என்று சுமார் நூறு பேர்கள் தெரிவித்து கொண்டார்கள்.
அமளி அடங்கியதும், பெரியவாள் அருகிலிருந்த தொண்டர்களிடம், "பத்து பன்னிரண்டு பேர்களாவது , சொன்ன சொல்லை காப்பாத்துவா" என்றார்கள்.
அந்த, யாரோ பத்து பன்னிரண்டு புண்ணியாத்மாக்களை உருவாக்குவதற்காகத்தான்., ஆழமான கருத்துடன், அரைமணி lecture!
குரங்கு, காட்டு யானை, கட்டெறும்பு, காக்கை - நமக்கு நல்ல வழிகாட்டிகள்; "ஆச்சார்யர்கள்".
அவர்களை (அவைகளை) யாவது follow பண்ணலாம் தானே?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Periyava

Once, an iyengar from Indian Express editorial board came for Periyava Darshan… Though he was retired, he was one of the members in the network board. Sri Gurumurthy brought the iyengar along with him from Delhi. He, Goenka ‘s grandson and others had come for Periyava darshan… At that time, begins Sri Kannan mama…

Periyava asked the Iyengar, Do you know it was your father who taught “Aacharam” for Sri Matam? Iyengar didn’t know how to respond. What could Periyava possibly know about his family? What possibly his appa could have said to the revered ones in Sri Matam? Several questions bounced in his mind within seconds…

Do you know it was your father who taught “Aacharam” for Sri Matam?, once again the same Voice of God!

Ahaa, Ahaa, how come, no words could come out of his mouth even after trying to respond !

Later, Sri Kannan Mama explained, it was the first time that the Iyengar had come to have Periyava darshan… So nobody understood why Periyava was asking a question like this…

Periyava’s next question doubled Iyengar’ surprise!!!

Periyava said, You are son of Kalyanam Iyengar, right?

Yes, replied Iyenger with renewed surprise… How come Periyava knew his father? Infact no one there would have known his father… Iyengar was more surprised!

But Periyava explained, Your face has so much resemblance of your father. This explanation only multiplied Iyengar’s surprise further.

Do you know it was your father who taught “Aacharam” for Sri Matam? Again Periyava was back to the first question. However, Iyengar still couldn’t answer this question. Periyava himself started to explain (Well, who else could?)

Once I was staying in Thiruvaiyaru… Your father told me, “In our Vaishnava Sampradhaya, we are the ones who wash all the vessels that we use for Bhagavat Aaradhana… Here in Sri Matam, outsiders are washing the vessels… As far as we could, it is always better for the brahmins in Sri Matam to take up that work and wash the vessels”…

Since then, I asked the brahmans here to take up that chore and wash the vessels , said Periyava…

Periyava HIMSELF is a pinnacle of ‘Aacharam’… If Periyava says someone taught HIM Aacharam, we need to find out the new meaning of the word ‘humbleness’?

Look at how humbly Periyava quoted about Iyengar’s father, says Sri Kannan Mama. (Do you know it was your father who taught “Aacharam” for Sri Matam?)

Likewise, there are so many incidents… Though we have been with HIM all the time, though we could decipher HIS sign language, though we could understand what HE says from His very sight, interestingly, there are times, we wouldn’t be able to understand a thing…

Sri Kannan Mama says, even if we have 1000 mouths, we can still keep talking endlessly about Periyava… There is a poem, “Vallaan Unnai Paada Paada Vaai Inikudhe”… Likewise, it is ecstatic for the mouth to keep talking about Periyava…

Today’s Nectar :

periyava sepia

When we talk about Periyava, our words get purified…
When we think of Periyava , our mind gets purified…
When we serve Periyava, our body gets purified…

Parameswaran HE is, what else can we say? We can keep talking of HIM, keep thinking of HIM , concludes Sri Kannan Mama.

Once, Periyava was about to enter Kasi, at the fag end of the yatra. Kasi was vibrating with the ‘Visit of JagadGuru’ that was about to happen. At that time, a team of people chosen to meet (intercept?) Periyava before the entry into Kasi posed a serious question: “How come you’re called ‘JagadGuru’?”
Though there are number of explanations possible, Periyava chose to answer, “This ‘Jagath’ is Guru for me, so the term ‘JagadGuru’…”. There was no dispute on seeing the ‘humbleness’!!!

Whether it’s a group in Kasi or a lonely Iyengar in a private meeting… Sri Ra Ganapathy Mama used to say, “Both in terms of ‘Balam’ & ‘Panivu’ of Periyava, we could only quote Lord Hanuman!”

Prayers to Periyava to bless us ‘Balam’ and more importantly ‘Panivu’.

Article Courtesy: Sri Rathinamv

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

"….காலேல தர்சனம் பண்ணு” பாரிஷதர் சொன்னார்.
பாரிஷதர் = पारिषद / pAriSada = Councillor / ஸபாதிகாரி

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Image

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Kanchi Paramacharya on South Indian Food – Extracted From Ra.Ganapathi’s Book

To the awe and amazement of his devotees, Paramacharya often discussed about down-to-earth laukika matters with keen interest, deep understanding and knowledge. In this lecture, he explains the origin and meaning of the names of common Indian dishes and their connection to spirituality.

In these explanations, I have mostly used the translated words of what Paramacharya actually spoke, extracted from the Tamil publication titled Sollin Selvar (The Expert of Words), Sri Kanchi Munivar by Sri Ra. Ganapathy.

A South Indian Meal

A typical South Indian meal is served in three main courses: sambar sAdam, rasam sAdam and more (buttermilk) sAdam.

Sambar is also known as kuzhambu in Tamil, a term that literally translates to ‘get confused’. Paramacharya explains how these three courses are related to the three gunas of spirituality: the confusion of sambar is tamo guna, the clarified and rarified flow of rasam is rajo guna and the all-white buttermilk is satva guna. Our meal reminds us of our spiritual path from confused inaction to a clear flow of action and finally to the realized bliss of unity.

sAdam
Cooked rice, the main dish of a South Indian meal is called sAdam. That which has sat is sAdam, in the same way we call those who are full of sat, sadhus. We can give another explanation for the term: that which is born out of prasannam is prasAdam. What we offer to Swami (God) as nivedanam is given back to us as parasAdam. Since we should not add the root ‘pra’ to the rice we cook for ourselves, we call it sAdam.

Rasam
Rasam means juice, which is also the name of filtered ruchi. We say ‘it was full of rasa’ when a speech or song was tasteful. Vaishnavas, because of their Tamil abhimAnam, refer to rasam as saatthamudhu. It does not mean the amudhu (amrita) mixed with sAdam. It was actually saatramudhu (saaru or rasam + amudhu), which became saatthamudhu.

Vaishnavas also have a term thirukkann amudhu that refers to our pAyasam. What is that thirukkann? If rudrAksham means Rudra’s eye, does ‘thirukkann’ mean Lakshmi’s eye? Or does the term refer to some vastu (article) added to pAyasam? No such things. Thiru kannal amudhu has become thirukkann amudhu. Kannal means sugercane, the base crop of suger and jaggery used in pAyasam.

I was talking about rasam. If something is an extraction of juice, then would it not be clear, diluted and free of sediments? Such is the nature of our rasam, which is clear and dilute. The other one, served earlier to rasam in a meal, is the kuzhambu. Kuzhambu contains dissolved tamarind and cut vegetable pieces, so it looks unclear, its ingredients not easily seen.

Buttermilk
A western meal normally ends with a dessert. In a South Indian meal, desserts such as pAyasam are served after the rasam sAdam. Any sweets that were served at the beginning are also taken at this time. After that we take buttermilk rice as our final course. Paramacharya explains that since sweets are harmful to teeth, our sour and salty buttermilk actually strengthens our teeth, and this has been observed and praised by an American dietician. We gargle warm salt water when we get toothache. The buttermilk is the reason for our having strong teeth until the end of our life, unlike the westerners who resort to dentures quite early in their life.

Vegetable curry
Even though cut vegetable pieces are used in sambar, kootoo and pacchadi, in curry they are fried to such an extent that they become dark in color (the term curry also means blackness or darkness in Tamil). May be this is the origin of the name curry.

Uppuma (kitchadi)
If the term uppuma is derived from the fact that we add uppu or salt, then we also add salt to iddly, dosa and pongal! Actually, it is not uppuma but ubbuma! The rava used for this dish expands in size to the full vessel where heated up with water and salt. The action of rava getting expanded is the reason for the term ubbuma.

Iddly
The term iduthal (in Tamil) refers to keeping something set and untouched. We call the cremation ground idukaadu (in Tamil). There we keep the mrita sarira (mortal body) set on the burning pyre and then come away. The term iduthal also refers to refining gold with fire. The (Tamil) term idu marunthu has a similar connotation: a drug given once without any repetition of dosage. In the same way, we keep the iddly wet flour on the oven and do nothing to it until it is cooked by steam.


Idiyaappam
(This is rice noodles cooked in steam). Brahmins call it seva while others call it idiyaappam. But unlike an appam which is a cake, this dish is in strands. The term appam is derived from the Sanskrit ApUpam meaning cake. The flour of that cake is called ApUpayam. This word is the origin of the Tamil word appam.

Appalaam
The grammatical Tamil term is appalam. This dish is also made by kneading (urad dhal) flour, making globules out of it and then flattening them. So it is also a kind of appam. Because of its taste a ‘la’ is added as a particle of endearment!

Laddu
ladanam (in Sanskrit) means to play, to throw. ladakam is the sports goods used to play with. Since the ball games are the most popular, ladakam came to mean a ball. The dish laddu is like a ball, and this term is a shortened form of laddukam, which derived from ladakam.

Laddu is also known as kunjaa laadu. This should actually be gunjaa laadu, because the Sanskrit term gunjA refers to the gunjA-berry, used as a measure of weight, specially for gold. Since a laddu is a packed ball of gunjA like berries cooked out of flour and sugar, it got this name.

The singer of mUka panca sati on Ambal Kamakshi describes her as Matangi and in that description praises her as ‘gunjA bhUsha’, that is, wearing chains and bangles made of gunjA-berries of gold.

Pori vilangaa laddu
Made of jaggery, rice flour and dried ginger without any ghee added to it, this laddu is as hard as a wood apple, though very tasty, and hence got its name from that fruit and the original pori (puffed rice) flour used to make it.

Indian Dishes of Turkish Origin
Our halwa is a dish that came from the Turkish invasion. bahU kalam (long ago) before that we had a dish called paishtikam, made of flour, ghee and sugar. But then the Arabian term halwa has stuck in usage for such preparation.

Sojji
sUji is another name from the Turkish. It has become sojji now. It is mostly referred to these days as kesari. In Sanskrit, kesaram means mane, so kesari is a lion with kesaram. It was a practice to add the title ‘kesari’ to people who are on the top in any field. Thus we have Veera Kesari, Hari Kesari as titles of kings in Tamilnadu. The German Keisar, Roman Caesar and the Russian Czar — all these titles came from only from this term kesari.

What is the color the lion? A sort of brownish red, right? A shade that is not orange nor red. That is the kesar varnam. The powder of that stone is called kesari powder, which became the name of the dish to which it is added for color.

Vada
A Tamil pundit told me that the name vada(i) could have originated from the Sanskrit mAshApUpam, which is an appam made of mAsham or the urad dhal. He also said that in ancient Tamilnadu, vada and appam were prepared like chapati, baking the flour cake using dry heat.

Dadhya Araadhana
Someone asked me about the meaning of this term. He was under the impression that dadhi was curd, so dadhiyaaradhana(i) was the curd rice offered to Perumal. Actually, the correct term is tadeeya AradhanA, meaning the samaaradhana(i) (grand dinner) hosted to the bhagavatas of Perumal. It got shortened in the habitual Vaishnava way.

Vaishnavas offer the nivedanam of pongal with other things to Perumal in their dhanur mAsa ushad kala puja (early morning puja of the Dhanur month). They call it tiruppakshi. The original term was actually tiruppalli ezhuchi, the term used to wake of Perumal. It became ‘tiruppazhuchi’, then ‘tiruppazhachi’ and finally ‘tiruppakshi’ today, using the Sanskrit kshakara akshram, in the habitual Vaishnava way. It is only vegetarian offering, nothing to do with pakshi (bird)!

The term dhanur mAsam automatically brings up thoughts of Andaal and her paavai (friends). In the 27th song (of Tiruppaavai), she describes her wake up puja and nivedanam with milk and sweet pongal to Bhagavan, which culminates in her having a joint dinner with her friends. Vaishnavas celebrate that day as the festival koodaara valli, following the same sampradhAyam (tradition). The name of this festival is from the phrase koodaarai vellum seer Govinda, (Govinda who conquers those who don’t reach Him) which begins the 27th song. It was this ‘koodaarai vellum’ that took on the vichitra vEsham (strange form) of ‘koodaara valli’.

pAyasam
payas (in Sanskrit) means milk. So pAyasam literally means ‘a delicacy made of milk’. This term does not refer to the rice and jaggery used to make pAyasam. They go with the term without saying. Actually pAyasam is to be made by boiling rice in milk (not water) and adding jaggery. These days we have dhal pAyasam, ravA pAyasam, sEmia pAyasam and so on, using other things in the place of rice.

Vaishanavas have a beautiful Tamil term akkaara adisil for pAyasam. The ‘akkaar’ in this term is a corruption of the Sanskrit sharkara. The English term ‘sugar’ is from the Arabian ‘sukkar’, which in turn is from this Sanskrit term. The same term also took the forms ‘saccharine’ and ‘jaggery’. And the name of the dish jangiri is from the term jaggery.

kanji
Before we become satiated with madhuram (sweetness), let us turn our attention to a food that is sour. As an alternative to sweetness, our Acharyal (Adi Sankara) has spoken about sourness in his Soundarya Lahiri.

Poets describe a bird called cakora pakshi that feeds on moon-beams. Sankara says in Soundarya Lahiri that the cakora pakshi were originally feeding on the kArunya lAvaNyAmruta (the nectar of compassion and beauty) flowing from Ambal’s mukha chanran (moon like face). They got satiated with that nectar and were looking for somthing sour, and spotted the full moon, which being only a reflection, issued only sour beams!

Acharyal has used the term kAnjika diya, which gives an evidence of his origin in the Malayala Desam. He said that since the cakora pakshis were convinced that the nectar from the moon was only sour kanji, they chose to feed on it as an alternative.

The term kAnjika means relating to kanji, but the word kanji is not found in Sanskrit. It is a word current only in the Dakshinam (south). There too, kanji is special in Malayala Desam where even the rich lords used to drink kanji in the morning. This was the variety came to be known as the ‘Mayalayam Kanji’.

Kanji is good for deham as well as chittam. And less expensive. You just add a handful of cooked rice rava (broken rice), add buttermilk, salt and dry ginger, which would be enough for four people.

The buttermilk added must be a bit more sour. The salt too must be a bit more in quantity. With the slight burning taste of dry ginger, the combination would be tasty and healthy.

tAmbUlam
It is customary to have tAmbUlam at the end of a South Indian dinner. In the North, tAambUlam is popularly known as paan, which is usually a wrap of betel nut and other allied items in a calcium-laced pair of betel leaves. In the South, tAmbUlam is usually an elaborate and leisurely after-dinner activity. People sit around a plate of tAmbUlam items, drop a few cut or sliced betel nut pieces in their month, take the betel leaves one by one leisurely, draw a daub of pasty calcium on their back and then stuff them in their month, chatting happily all the while.

The betel leaf is known by the name vetrilai in Tamil, literally an empty leaf. Paramacharya once asked the people sitting around him the reason for calling it an empty leaf. When none could give the answer, he said that the usually edible plants don’t just stop with leaf; they proceed to blossom, and bear fruits or vegetables. Even in the case of spinach or lettuce, we have to cook them before we can take them. Only in the case of the betel leaf, we take it raw, and this plant just stops with its leaves, hence the name vetrilai or empty leaf.

vgovindan
Posts: 1865
Joined: 07 Nov 2010, 20:01

Re: Kanchi Maha Periyava

Post by vgovindan »

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே

திருமூலர் 8-21
http://www.thevaaram.org/thirumurai_1/s ... rtLimit=21

दन्तिनि दारुविकारे दारु तिरोभवति सोऽपि तत्रैव |
जगति तथा परमात्मा परमात्मन्यपि जगत्तिरोधते || 28 ||

svAtmanirUpaNam (Page 94) Adi Sankara

https://books.google.co.in/books?id=F6i ... ru&f=false

This comparison was brought out by Maha Periava in his discourse on Adi Sankara (Dec 23, 1957) published in Acharya's Call (Part 1) (Page 115-119)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

PLEASE DONT MISS

தர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே! நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை! சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர் ஸ்ரீராமர்”னு சொல்லிட்டு, ”ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார் சொல்லுங்கோ?” என்று கேட்டார் கி.வா.ஜ. தொடர்ந்து, அவரே பதிலும் சொன்னார்…

”ஒருத்தர் ஆஞ்சநேயர். ஆத்ம லிங்கம் பண்ணி, தானே பூஜை பண்ணினார். இது ராமேஸ்வரத்தில் இருக்கு. ஆத்ம பூஜை பண்ணின மகா பெரியவாளை இப்போ பார்க்கறோம். ஆத்மாவை உயர்த்திண்டவா எத்தனை பேர்? இவர் ஒருத்தர்தான்! அவர் தனக்குத்தானே பூஜை பண்ணிண்டார். அதை நாம எல்லோரும் பார்த்து ஆனந்தப்பட்டோம்!”

எத்தனை சத்தியமான வார்த்தை!

பெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்…

அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.

‘ராம ராம’ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா.

அதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, ‘ராம்… ராம்’னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்.

இப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி… அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. ‘ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்’னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவா ளோட குரல் மாதிரியே இருந்துது.

அப்படியே அதிர்ந்து போயிட்டேன் நான். சாதாரணமா அதிஷ்டானத்துல, ‘ராம்… ராம்’னுதானே குரல் கேக்கும்! இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. ‘இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை’னு பெரியவா சொல்றாளே… அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை?!’

யோசிக்கும்போதே தலை சுத்தித்து எனக்கு. மனசு ஒடிஞ்சு, நொந்து போயிட்டேன்
சாப்பிடத் தோணலை. கண்ணை மூடிண்டு சித்த நேரம் தூங்கினா தேவலைன்னு பட்டுது. படுத்தா தூக்கம் வரலை. மனசுல இதே கேள்வி குடைஞ்சு, ஹிம்ஸை பண்ணிண்டிருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும்? பேசாம பஸ் பிடிச்சுக் கும்பகோணம் வந்துட்டேன். உடனே காஞ்சிபுரம் போய்ப் பெரியவாளைத் தரிசிக்கணும்னு தோணித்து.

”என்ன அவசரம்… ரெண்டு நாள் இருந்துட்டுத்தான் போயேன்! ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே? வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும்!”னு அம்மா சொன்னாள். சரின்னு, நானும் ரெண்டு நாள் கழிச்சுதான் காஞ்சிபுரம் போனேன். பெரியவரைப் பார்த்து, வழக்கம்போல் சேவைகள் பண்ணிண்டிருந்தேன்.

அதன்பிறகு, சில நாள் கழிச்சு… அதாவது 94-ஆம் வருஷம், 8-ஆம் தேதி மகா பெரியவா ஸித்தியாயிட்டா!

அன்னிக்கு, அதிஷ்டானத்துல பெரியவா சொன்னது நிஜமாயிட்டுது. பெரியவா ளைத் தவிர, வேற யாராலேயாவது இத்தனை தீர்க்கமா சொல்லமுடியுமா? தெரியலை.

அப்புறம்… எனக்கு மூணு, நாலு மாசத்துக்கு சுய நினைவே இல்லை. அப்படியே பெரியவாளோட நினைப் புலயே ஆழ்ந்துபோயிட்டேன். ‘பெரியவா முகத்தை இனி பார்க்க முடியாதே’ன்னு மனசு தவியாய்த் தவிச்சுது. சமாதானம் ஆகவே இல்லை. எப்படி ஆகும்?!


யோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே! படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது.

விஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும்.

பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ? மே மாசத்துல, ‘மேனா’ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார்! அப்பவும்கூட அவருக்கு வேர்க்காது. நானே பிரத்யட்சமா பார்த்திருக்கேன்.

ஸித்தியாகிறதுக்கு முன்னால, பெரியவா என்னைக் கூப்பிட்டார். ”நான் படுத்துக்கப் போறேன். நீ என்ன பண்ணப் போறே?”ன்னு கேட்டார்.

”நான் என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே! பெரியவாதான் சொல்லணும்”னு அழுதுட்டேன்.

பெரியவா என்னைக் கருணையோடு பார்த்தார். ”கவலைப்படாதே! என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும்! சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும்!”னார்.

அந்தப் பிரபுவோட ஸ்மரணையிலே என்னோட காலத்தைக் கழிச்சிண்டிருக்கேன். அதுவும் அவரோட அனுக்கிரஹம்தான்.

ஆனா, அன்னிக்குக் கோவிந்தபுரம் அதிஷ்டானத்துல அவர் குரல் கேட்டுதே… அதை மட்டும் என்னால மறக்கவே முடியலே. நான் மனசு சஞ்சலப்பட்டு எதுவும் செஞ்சுடப்படாதுன்னு என்னைத் தயார் பண்ணத்தான் அன்னிக்கு அவர் சொல்லியிருப்பார்ங்கறதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லே!” – சொல்லி நிறுத்திய பட்டாபி சார், பெரியவாளின் நினைவுகளில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

Shared from Manargudi Sitaraman Srinivasan

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

Shri VK Avl Thanx for sharing

A share
Very interesting. Can any one tell why Periyava used Man urundai while taking bath after kshavaram

காஞ்சி மகாப்பெரியவர் குறித்த மிக அபூர்வமான ஒரு தகவல்.
(வபனம் மற்றும் ஸ்நானம்)
மகா பெரியவர் வபனம் செய்வது(முடி மழித்தல் முறை) குறித்து தெரிந்து கொள்ளுங்கள். அவர் இரண்டு பவுர்ணமிக்கு ஒரு முறை, ஆறு அல்லது குளக்கரைக்குச் சென்று வபனம் செய்து கொள்வார்.
அவர் வபனம் செய்யச் செல்லும் போது, முதலில் சுவாமியை வணங்குவார். நீர்நிலையில் கரையில் அமர்வார். ஒரு வாழை இலையில் கத்தி, ஒரு கிண்ணத்தில் பால், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் வைக்கப்படும். ஒரு கடிகாரத்தையும் வைத்து விடுவார்கள்.
பெரியவர், முதலில் பாலை தன் தலையில் தடவிக் கொள்வார். கத்தியை தன் தலையில் வைத்து விட்டு, பிறகு இலையில் வைத்து விடுவார். முடி திருத்துபவர் பெரியவரை வணங்கி விட்டு தலைமுடியை மழிப்பார். பிறகு கை, கால்களிலுள்ள நகங்களை ஒழுங்குபடுத்துவார். இந்தப்பணி முடிந்த பிறகு, பெரியவர் நதி அல்லது குளத்திலுள்ள மண்ணை எடுத்து கை, கால்களில் தடவிக் கொள்வார். வாய் கொப்பளித்து விட்டு நீராடச் செல்வார்.
இதற்குள் சீடர்கள் ஐந்து பெரிய மண் உருண்டைகளை தயார் செய்து வைத்து விடுவார்கள். அவர் ஆற்றில் நீராடத் தயாரானதும், நான்கு சீடர்கள் அந்த உருண்டைகளை சின்ன சின்னதாய் பிரித்து உருட்டுவார்கள். நான்கு பேரும் 12 முறை அந்த உருண்டைகளை பெரியவர் கையில் கொடுப்பார்கள். அதை பெரியவர் காலில் தடவிக் கொண்டு 12 முறை மூழ்கி எழுவார்.
இதன்பின், திரும்பவும் 12 உருண்டைகளைக் கையில் கொடுப்பார்கள். அதை இடுப்பு வரை தடவிக் கொண்டு, மீண்டும் 12 முறை மூழ்கி எழுவார். அதையடுத்து இன்னும் 12 உருண்டைகள் தரப்படும். அதை மார்பு வரை தடவிக் கொண்டு 12 முறை குளியல்…பின் இன்னும் 12 உருண்டைகளைப் பெற்று முகம், தலையில் தடவி குளிப்பார்கள். கடைசியாக தரப்படும் 12 உருண்டைகளை உடல் முழுவதும் தடவிக் கொண்டு 12 முறை மூழ்கி எழுவார். பெரியவர் மூழ்கும் போது, ஒவ்வொரு முறையும் சீடர்களும் மூழ்கி எழுவர்.
அவர் குளிக்கும் போது, அவரது கையிலுள்ள தண்டம் ஒரு “ஸ்டாண்டில்’ வைக்கப்பட்டிருக்கும். அந்த தண்டத்தின் முன்னும் மண் உருண்டைகளை ஒரு மரத்தட்டில் வைத்துக் காட்டுவார்கள். கரைக்கு வரும் பெரியவர், அந்த தண்டத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் ஆற்றில் இறங்கி 12 முறை மூழ்கி எழுவார்.
பின், பெரியவர் தான் கட்டியிருக்கும் ஆடையை நீரிலேயே விசர்ஜனம் (களைதல்) செய்து விடுவார். இதை அதிர்ஷ்டமுள்ள ஒரு பக்தர் பிரசாதமாக எடுத்துக் கொள்வார். பின் பக்தர்கள் பெரியவருக்கு சால்வைகள் கொடுப்பார்கள். மங்கள ஆரத்தி எடுத்து, வாத்தியம் முழங்க மடத்திற்கு திரும்புவார்கள்
.
ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெள்ளிக்காசு பிரசாதம் தரப்படும்
இந்த அபூர்வத்தகவலை படித்த நாமும், பெரியவரின் அருட்பிரசாதம் பெற்றவர்களாகிறோம். நன்றி-19-11-2014 தினமலர்.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

காஞ்சி மகாபெரியவா ,ஒரு பக்தருக்கு நற்கதியடைய தினமும் பராயணம் பண்ணச் சொன்ன ஸ்லோகம் இது.
இந்த ஸ்லோகத்தை தினமும் எல்ல பாராயணமும் முடிந்ததும் சொல்லிப் பிரார்த்தித்தால் நற்கதி அடையலாம் என்ற நம்பிக்கையில் இந்த ஸ்லோகத்தை சொல்லலாம் .
அநாயாசேன மரணம்
விநா தைன்யேன ஜீவனம்
தேஹிமே க்ருபையா சம்போ
த்வயி பக்திம் அசஞ்சலாம்
அர்த்தம் :
உன்னையே எப்போதும் ஸ்மரணம் செய்துக் கொண்டிருக்கும் உன் பக்தனுக்குசர்வசாதாரணமான , வறுமை, கஷ்டம் இல்லாமல் மரணம் அமைய உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா !

Pranam - Poova Raghavan

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

The popular version:-

अनायासेन मरणं विना दैन्येन जीवनम् ।
देहान्ते तव सायुज्यं देहि मे पार्वतीपते ॥

anAyAsEna maraNaM vinA dainyEna jIvanaM
dEhAntE tava sAyujyaM dEhi mE pArvatIpatE

Death without strain, Life without affliction, and Your proximity upon leaving the body -- Grant me these, O Lord of pArvatI.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

(மாலை மாற்று-என்ற தலைப்பில் போன வருடம்
கல்கியில் வந்த அருள்வாக்கு)+ சிறு விளக்கம்.
(பாடலின் பொருள் சேர்க்கப்பட்டுள்ளது)


‘விகடகவி’, ‘குடகு’ முதலிய வார்த்தைகளைத் திருப்பிப் படித்தாலும், ‘விகடகவி’, ‘குடகு’ என்றே இருக்கும். ‘மலையாளம்’ என்பதை இங்கிலீஷில் Malayalam என்று எழுதினால் திருப்பிப் படித்தாலும் அதே ஸ்பெல்லிங் வரும்.

இப்படிப்பட்ட வார்த்தைகளை Palindrome என்கிறார்கள்.

காசியாத்திரை ஹிந்துவாகப் பிறந்தவர்களுக்கு முக்யமாக விதிக்கப் பட்டிருக்கிறது. அதோடு கயா ச்ராத்தம், த்ரிவேணி என்கிற ப்ரயாகையில் ஸ்நானம், பித்ரு கார்யம் எல்லாவற்றையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறது. இதையும் பாலின்ட்ரோமாகச் சொல்வதுண்டு.

காசிக்கு காசிகா என்றும் பெயர். இது பின்னிருந்து முன்னாகவும் ‘காசிகா’தான். ‘கயா ப்ரயாக’ என்பதும் இப்படியே.இப்படி ஒரு வார்த்தையைத் தலைகீழாகப் படிப்பதைப் பெரிய விளையாட்டாகப் பண்ணி காவ்ய ரஸத்தைப் பற்றியே ரஸமாக ஒரு ஸ்லோகம் இருப்பதாக ஒரு பண்டிதர் சொன்னார்.

‘ஸாக்ஷரா’ என்றால் வெறுமே படிப்பறிவு மட்டுமுள்ளவர்கள் என்று அர்த்தம். அதாவது வறட்டு வறட்டு என்று நிறையப் படித்திருப்பார்கள். இலக்கியச் சுவையில் ஊறியிருக்கமாட்டார்கள். ‘ஸரஸ’ என்றால் இலக்கியச் சுவையில், காவ்ய ரஸத்தில் ஊறியவன் என்று அர்த்தம். ரஸம் அறிகிற பக்வ மனஸ் இல்லாமலிருக்கிறவன் அந்தப் படிப்பு நெறியிலிருந்து மாறினால் குணம்கெட்ட ராக்ஷஸனாகி விடுவான்; ஆனால் ரஸிகனோ எப்படி வெளியிலே மாறினாலும் அவனுடைய உயர்ந்த ரஸிகத் தன்மை போகவே போகாது என்பது அந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம்.ஸாக்ஷரா, ஸரஸ என்ற வார்த்தைகளைத் திருப்பிப் போட்டே இந்த தாத்பர்யத்தை ஸ்லோகம் நிலைநாட்டி விடுகிறது. ‘ஸாக்ஷரா’வைத் திருப்பிப் படித்தால் ‘ராக்ஷஸா’! ‘ஸரஸ’வோ திருப்பிப் படித்தாலும் ‘ஸரஸ’வேதானே?

திருஞானஸம்பந்தர் ஸாக்ஷபத் பரதேவதையின் க்ஷீரத்தைப் பானம் பண்ணியதால் குழந்தையாக இருந்து கொண்டே எத்தனைவிதமான செய்யுள் வகை உண்டோ அத்தனையிலும் வர்ஷிக்கிறாற்போலக் கொட்டினவர். பாலின்ட்ரோமாகவே முழுச் செய்யுள் செய்வதற்கு ‘மாலை மாற்று’ என்று பேர். மிகவும் கஷ்டமான இந்த ‘மாலை மாற்று’ வகையில் பதினோரு இரட்டை வரிச் செய்யுள்களை ஞானஸம்பந்தர் அநுக்ரஹித்திருக்கிறார்.

படித்தால் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருக்கும். முதல் அடி இப்படி இருக்கிறது.

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

கடைசியிலிருந்து திருப்பிப் படியுங்கள்; அதுவே வரும்.

.....................................................................

கூடுதல் தகவல்;

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா

காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா

யாம் ஆமா – யாம் ஆன்மா என்னும் பசு, சீவாத்மா

நீ ஆம் மாமா – நீ பெரிய ஆன்மா, பரமாத்மா

யாழ் ஈ காமா – யாழிசை நல்கிய என் ஆசைப் பொருளே

காணாகா – இப்படியெல்லாம் கண்டு என்னைக் காப்பாற்று

காணாகா – இப்படியெல்லாம் பிரித்துக் காணாமல் என்னைக் காப்பாற்று

காழீயா – சீர்காழியானே

மாமாயா நீ – அம்மை அம்மை ஆம் நீ

மாமாயா – (இப்படி) பெரிய மாயமானவனே

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

... மிகவும் கஷ்டமான இந்த ‘மாலை மாற்று’ வகையில் பதினோரு இரட்டை வரிச் செய்யுள்களை ஞானஸம்பந்தர் அநுக்ரஹித்திருக்கிறார். ...
3.117 சீர்காழி - திருமாலை மாற்று
பண் - கௌசிகம்
http://www.shaivam.org/tamil/thirumurai/thiru03_117.htm

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

மேற்படி பதினொன்று பாடல்களுக்கும் பதவுரை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:-
http://www.visvacomplex.com/MaalaiMaaRRu4.html

முதற்பாடல்:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா


யாம் = சிற்றுயிர்கள் ஆகிய நாங்கள்
ஆமா = கடவுள் என்பது பொருந்துமா?
நீ = நீ ஒருவனுமே (கடவுள் என்றால்)
ஆம் ஆம் = பொருந்தும், பொருந்தும்
மா = பெரிய
யாழீ = யாழை ஏந்தியிருப்பவனே!
காமா = அனைவராலும் விரும்பப் படுபவனே!
காண்நாகா = காணத் தகுந்தவாறு பாம்புகளை அணிந்துள்ளவனே!
காணா = காண முடியாதவாறு
காமா = மன்மதனை(அனங்கனாக) செய்தவனே!
காழீயா = சீர்காழிக்குத் தலைவனே!
மாமாயா = பெரிய மாயைகளைச் செய்தலில் வல்லவனே!
மா = கரிய(கொடிய)
மாயா = மாயையினின்றும்
நீ = எம்மை நீக்கிக் காத்தருள்வாயாக!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

திரு ப்ரத்யக்ஷம் பாலா அவர்களே
விளக்கத்திற்கு நன்றி
தஞ்சாவூரான்
24 05 2015

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Periavaa

It all happened within a year or two before Periyava left the mortal coils. Periyava became silent and immobile after informing the ardent ‘Sevakas’ (‘Thuriyaasramam’) in the last 3 years.

“எல்லாத்தையும் விட்டாச்சுன்னு… சொல்லிட்டே துரியாஸ்ரமத்துகுள்ள நுழைஞ்சிட்டா!”, states Sri Kannan Mama.

His words illustrates the status, “ஒன்னும் பேசறது இல்லை! ஒன்னும் கேக்கறது இல்லை! வாயில போட்டாக்க சாப்பிடறது, வேண்டாம்னா துப்பிடறது! இருந்த இடத்துலேயே ஒன்னுக்கு, வெளிக்கி போறதுன்னு… அப்படீன்னு வச்சின்ட்டா! ரொம்ப கஷ்ட்டப் படறாளே… ஏதாவது பண்ணனுமான்னு கேக்கறதுக்காக ‘பிரக்ஷனம்’ பாத்துது…”, Sri Kannan Mama begins the episode.

In Kerala (Sri Parusuraama Kshetram), Sri Parasuramar gave the knowledge of ‘Josiya’ to 8 Sishyaas. One such Sishya line is Sri PuduSeri (புதுஸேரி).

“அவன் படிச்சாக்க…தலை எழுத்தை படிக்கிற மாதிரி! இப்ப கால மாயிட்டான்…”, says Sri Kannan Mama.

Also says, “அவன் பெரியவாவை பாத்ததில்லை… மடம்னா என்னனே தெரியாது… அவன் சொல்லறான்…

‘நவகிரகங்கள் பேசாது!’
‘நவகிரகங்களுக்கு அதீதமானவா அவா!’
‘அவா சொல்லறதை நவக்ரஹங்கள் கேக்கும்!’

And also in ‘prashanam’ , it was pointed that none of the ‘Navagraham’ can command. It is Periyava who could command them and it is His wish to leave the mortal coil that could prevail and not the position of ‘graham’ that is common for others.

At this point, it is interesting to note that in Sri Sivan Sar’s ‘Naadi’ (Josiyam), the palm leave script read, “இவனின் முன்னோன் அகிலத்தின் குருவாவான்! நவகிரகங்கள் போற்றும் நாயகன்!”, referring to Periyava!

After sometime, Sri Narayanan, brother of Sri Mettur Periyava had approached Sri Narayana Podua, another wealthy and famous ‘Josiyar’ in Kerala.

“முதலில் சந்திரசேகரேந்திர சரஸ்வதீன்னு வச்சப்போ ஒன்னும் வரலை…சுவாமிநாதன்னு வச்ச உடனே இதுதான் சொன்னான்…

‘ஆதேகம் பவித்ரமானு…(அவர்) பூஜை செய்கின்ற மகாதேவனையே ஸ்ரிஷ்டிச்ச தேகமானு’… பெரியவா பூஜை செய்யற மகாதேவனையே அவாதான் ஸ்ரிஷ்டிச்சா…அப்படீங்க்றான்!”, recollects Sri Kannan Mama.

Periyava_shivalingam

Also he said, “…’அவா எப்போ சித்தி ஆவான்னு (நவகிரஹங்களை) கேட்டு சொல்ல முடியாது! ஆனா ஒரு மாசத்துக்குள்ள சித்தி ஆயிடனும்னு தீர்மானம் பண்ணி இருக்கான்னு தெரியறது’… அப்படீங்க்றான்!”

Meanwhile, Devotees had plenty of darshan and also got plenty of ‘anugraham’ from the ‘immobile’ Periyava.

Sri Ponds Mama said, when Periyava was in Thuriyaasramam, people used to say Periyava is immobile and is not speaking… But once you’re there in His ‘sannidhi’ for darshan, you would clearly understand that Periyava is doing ‘Anugraham’ and after some time Periyava is giving ‘Utharavu’. “You can leave with satisfaction!”, he assured.

Sri Misra, Chief Justice of India had his darshan too. Prayed to Periyava that if Periyava wished He could stay in the mortal coils and hence Periyava should wish. Periyava replied to Sri Misra that he should know about the physical frame, which has to be abandoned at some point of time or other. Sri Misra again prayed for keeping the ‘immobile frame’ some more time.

Sri (Ugranam) Thiyagu Thatha said that he prayed for Periyava’s longer stay for which Periyava replied that he was also born to a father and mother and he had to leave!

Not even one week, the ‘frame’ lasted. Periyava left the ‘physical frame’ but continued to be the Almighty that is all pervasive!

Today’s Nectar :

How to have clarity?

தெளிவு பெரியவாவின் திருமேனி காண்டல்!
தெளிவு பெரியவாவின் திருநாமஞ் செப்பல்!
தெளிவு பெரியவாவின் திருவார்த்தை கேட்டல்!
தெளிவு பெரியவாவுரு சிந்தித்தல் தானே!!!

“அதாவது…’பெரியவாவிற்கு நவகிரகங்கள் பேசாது! நவகிரகங்களுக்கு அதீதமானவா அவா! அவா சொல்லறதை நவக்ரஹங்கள் கேக்கும்!’, அப்படீன்னு சொன்னாக்க, பெரியவாவை பத்தி நாம என்னத்தை சொல்லறது?”, questions Sri Kannan Mama and also concludes, “அவா ஈஸ்வரன்! ஈஸ்வரன்னு தவிர நாம என்னத்தை சொல்லறது!”

That immobile, unspoken but ‘Anugraha-Pravaaga’ Periyava…

ஆடாது அசங்காது இருந்த ஸ்வரூபம்…
கூடாது பிரியாது அமைந்த ஸ்வரூபம்…
தேடாது தெரியாது தெளிந்த ஸ்வரூபம்…
மூடாது மறையாது நின்ற ஸ்வரூபம்…
மூடன் எனக்கெனவே வந்த ஸ்வரூபம்!
மூடன் எனக்கெனவே வந்த ஸ்வரூபம்!
மூடன் எனக்கெனவே வந்த ஸ்வரூபம்!

Hara Hara Shankara
Jaya Jaya Sankara

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

எல்லாத்தையும் விட்டாச்சுன்னு… சொல்லிட்டே துரியாஸ்ரமத்துகுள்ள நுழைஞ்சிட்டா!
turIya means 'the fourth'; it is the state of pure consciousness.
The first three states are: waking consciousness, dreaming and dreamless sleep.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

தெளிவு பெரியவாவின் திருமேனி காண்டல்!
தெளிவு பெரியவாவின் திருநாமஞ் செப்பல்!
தெளிவு பெரியவாவின் திருவார்த்தை கேட்டல்!
தெளிவு பெரியவாவுரு சிந்தித்தல் தானே!!!
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 183

தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுருச் சிந்தித்தல் தானே.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Varagooran Narayanan

"குருமூர்த்தியே காமாக்ஷி
பெரியவாள்தான் காமாக்ஷி ஸ்வரூபம்"

(கட்டுரையின் நீளம் கருதி மூன்றாக பிரித்துள்ளேன்.)

சொன்னவர்; நாராயணன்,பாண்ட்ஸ் கம்பெனி.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கலவையில் நவராத்திரி மகோத்ஸவம்.
புதுப்பெரியவாள் பூஜை செய்து கொண்டிருந்தார்கள்.
காலை பதினோரு மணி, ஏராளமான கூட்டம்.

சென்னை, பாண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்த்துக்
கொண்டிருந்த நாராயணனுக்கு மகாப் பெரியவாளிடம்
எல்லையில்லாத பக்தி. நவராத்திரி புண்ணிய காலத்தில்
குருமூர்த்தியைத் தரிசிக்க வேண்டாமா?

பூஜை நடக்குமிடத்தில் நெருக்கடி.எதிரே இருந்த
கட்டிடத்தில் அமைதியாக உட்கார்ந்து விட்டார்.

"ஸார்...நமஸ்தே..."

எதிரே, ஓர் இந்தியப் பெண்மணி;ஓர் ஐரோப்பியப் பெண்மணி.

"எங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியுமா?" என்று
இந்தியப் பெண்மணி கேட்டார்.

"சொல்லுங்கள்...முடிந்தால் செய்கிறேன்."

"இவருடைய விஸா நாளையோடு முடிவடைகிறது.
இந்த அம்மையார் ஆஸ்திரியக்காரர்.மகாப்பெரியவாளை
தரிசனம் செய்ய வந்திருக்கிறார். சுவாமிகளை இப்போதே
தரிசனம் செய்தால்தான்,உடனே சென்னை சென்று,விஸா கெடு
முடிவதற்குள் புறப்பட்டுச் செல்லமுடியும். ப்ளீஸ்..எங்களுக்கு
உதவ முடியுமா?..." இந்திய வழிகாட்டிப் பெண்மணி
பவ்யமாகக் கேட்டுக்கொண்டாள்.

நாராயணன் உடனே உள்ளே சென்று அனுமதி
பெற்றுக்கொண்டு வந்தார்.

கிணற்றின் ஒருபுறத்தில் பெரியவாள் நின்று கொண்டார்கள்.
எதிர்ப்புறத்தில், நாராயணனும் இரண்டு பெண்மணிகளும்.

"...என்ன சொல்லணுமோ,சொல்லச் சொல்லு.
இல்லே...ஏதாவது வேணும்னா கேட்கச் சொல்லு..."

ஆஸ்திரியப் பெண்மணி, வைத்த விழி இமையாமல்,
ஒரு தெய்வத்தைப் பார்ப்பது போன்ற அந்தரங்கப்
பரவசத்துடன், பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
வாயைத் திறக்கவில்லை.மௌனமாகப் பேசிக்கொண்டிருந்தாள்
போலும்! அல்லது, சொற்கள் தேவைப்படாத ஒர் ஒட்டுறவில்
உரையாடிக் கொண்டிருந்தாளோ?.

பெரியவாள் ஒர் ஆப்பிள் பழத்தைப் பிரசாதமாகக்
கொடுத்துவிட்டு, உள்ளே சென்று விட்டார்கள்.

இவர்கள் மூவரும் வெளியே வந்தார்கள். சில நிமிஷங்கள்
சம்பாஷணை.வந்த காரியம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சி.
...................................................................................................
பகுதி-2

அந்த ஆஸ்திரியப் பெண்மணிக்கு, சிறு பருவத்திலிருந்தே,
'நான்,இந்திய நாட்டுப் பெண்' என்ற உணர்வு இருந்துகொண்டே
இருந்ததாம்.அவளுடைய சகோதரி ஒருத்தி,சிறிது காலம்
பாரதத்தில் இருந்திருக்கிறார்.அவளிடமிருந்து பாரதப்
பண்பாடு,கலாசாரம்,தத்துவம் பற்றி அறிந்துகொண்டாள்.

"நான் இந்தியாவுக்குப் போகணும்..ஆமாம்..
எப்போதாவது எப்படியாவது போயாகவேண்டும்."

மாத வருமானத்தின் ஒரு பகுதியைப் பாரதப்
பயணத்துக்காக ஒதுக்கி வைத்தாள்.போதுமான
தொகை சேர்ந்ததும், ஒரு மாத சுற்றுப்பயணமாக,
தன்னுடைய முப்பதாம் வயதில் பாரதம் வந்துவிட்டாள்.

நூற்றுக்கணக்கான துறவிகளை-ஆசிரமம் என்று
சொல்லப்பட்ட மாட மாளிகைகளில் - சந்தித்தாள்.

மனம் அடங்கவில்லை. வேறு எதையோ; பெரியதாக
எதையோ, மகத்தான எதையோ, மகத்துக்கும்
மகத்தான மகத்தையே கண்ணால் காணத் தவித்தது,

'கலவைக்குப் போங்கோ...' என்று யாரோ சொன்னார்கள்.

கலவை என்ன - கல்கத்தாவா,காட்மாண்டுவா-
தேசப்படத்தைப்பார்த்துத் தெரிந்துகொள்வதற்கு!

விஸா என்ற புலி, பின்னால் உறுமிக் கொண்டிருக்கும்
அவசரத்தில் கலவையைக் கண்டு பிடித்து விட்டார்கள்.

மாளிகைகள் இல்லை; சிம்மாசனங்கள் இல்லை;
ரத்தினக்கம்பளங்கள் இல்லை!

ஓ! இதுதான் இறைவியின் இருப்பிடமாக இருக்கமுடியும்.

அந்த ஆஸ்திரிய பெண்மணிக்கு சிறப்பான ஓர் ஆன்மீக
அனுபவம். வெகு காலமாக, ஒரு தேவமங்கை-
-சொற்கடந்த சோதிப்பிழம்பினாள்-கனவில் காட்சி கொடுத்து
வந்தாராம். அவளைத் தேடிக்கொண்டுதான் பாரதப்
பயணம்! ' 'அவளைக் காணவில்லையே?
கனவில் மட்டும் தான் காட்சி கொடுப்பாளோ?..

அதோ!..இதோ!.. கிணற்றுக்கு அந்தப் பக்கத்தில்.
(நாம் எல்லோரும் மகாப்பெரியவா என்று சொல்கிற
அந்தத் தெய்வ மடந்தை..)

மயக்கும் அருட்பார்வை; மணக்கும் சுற்றுச்சூழல்;
மாலைக் கதிரவனின் செம்மை;முழு நிலவின் அமுதப் பொழிவு..

எந்த ஓர் இந்தியனுக்கும் கிடைக்காத புதையலை நெஞ்சத்தில்
தாங்கிக்கொண்டு,ஆஸ்திரிய மங்கை விமானம்
ஏறிப்போய்விட்டார்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>..>>>>>..
பகுதி-3

அன்றைய தினம் பிற்பகல் மூன்று மணி.

"நாராயணா, அந்தப் பொண்ணு உன்னண்டை
என்ன சொல்லித்து?" பெரியவா கேட்டார்கள்.

நாராயணன்,நடந்தவற்றை,அப்படியே ஒப்புவித்தார்.

மறுநாள் விடியற்காலம் நான்கு மணி, விசுவரூப தரிசனம்.
அடியார் கூட்டத்தில் நாராயணனும் நின்றுகொண்டிருந்தார்.

பெரியவாள் அருகில் ஒரு துறவி. அவரிடம் சுவாமிகள்
ஆத்மார்த்தமாக எதையோ விளக்கிக் கொண்டிருந்தார்கள்.

'மூக பஞ்ச சதி - ஆர்யா சதகத்தில் ஒரு பாட்டு.'

குண்டலி குமாரி குடிலே சராசரஸவித்ர சாமுண்டே
குணினி குஹாரிணி குஹ்யே குருமூர்த்தே
த்வாம் நமாமி காமாக்ஷி.

(பாலா பரமேஸ்வரி,குண்டலினி,சண்டிகை,மாயை
- இவளே,அக்ஞானத்தைப் போக்குகிற குருமூர்த்தி.
இப்படிப்பட்ட காமாக்ஷியை வணங்குகிறேன்)

நாராயணன் நெற்றியில் பனித்துளியாய் ஓர் அலை.

அந்த அயல்நாட்டுப் பெண்மணி கூறினாளே?
"நான், பெரியவாளைக் காணவில்லை;அம்பிகையைத்
தான் பார்த்தேன்!" - என்று.

விஸா என்ற புலியின் உறுமல் இல்லாமல், இத்தனை
ஆண்டுக் காலமும், ஆஸ்திரியாவில் இரவு வேளைகளில்
விழித்திருந்து தரிசனம் கொடுத்தது இவர் தானா?

பெரியவாள், "நாராயணா, உன் சந்தேகத்தை நான்
தீர்த்து வைக்கிறேன்" என்று சொல்லவில்லை.

ஆனால் நைஸாகத் தீர்த்தே விட்டார்கள்

kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

From etouch 142 dt 1-6-2015:
Prof S.Kalyanaraman, Neurosurgeon , Chennai
Once we went for darshanam to Kancheepuram. There was need for a new elephant at Sri Ekambareswarar Temple. One of the senior officials of the Mutt asked me whether I could buy and donate an elephant to the temple. I replied that I was not in a position to do so because of my financial position and commitment at that time. That person then probably thought that if Maha Periyaval had asked me to buy an elephant and donate it I would certainly oblige. As I was having darsanam, he told Maha Periyaval, “Dr.Kalyanaraman wants to donate an elephant to Sri Ekambareswarar temple, Periyaval should bless him. Maha Periyaval did not reply to him and continued to talk to devotees and give them darsanam. Again the official repeated his statement to Maha Periyaval in a louder voice. There was no response. Then he stopped repeating the request. I had a feeling that Maha Periyaval knew my mind and financial position and did not reply to the official as He did not want me to place in an embarrassing position.
Once one of my patient’s mother came to Maha Periyaval to seek His blessings for her daughter’s operation. This was recounted by her to me later; I give below the summary of the conversation.
Mother: My daughter is to have an operation in two days. Please bless her so that the operation will be successful.
63
His Holiness: Do not worry. She will be all right.
Mother: She has to undergo a brain operation. They tell me it is very risky…
His Holiness: Do not worry. She will get better.
Mother: Dr. Kalyanaraman is going to operate on her. Will the Operation be successful?
His Holiness: Do not worry. Your daughter will get cured.
Mother: Can Periyaval please send a message to Dr. Kalyanaraman about my daughter?
His Holiness: Do not worry. Always just before each operation that he performs, Dr. Kalyanaraman prays to me. My blessing is there for your daughter.
The mother came to my clinic straight from Kancheepuram without even going to her house. She said “Maha Periyaval told me that you pray to him before every operation. Is that true?
I replied yes. "It is quite true. Whenever I wash my hands to perform an operation, I take off my operation theatre chappals. As I wash my hands I pray to Maha Periyaval that the patient should get cured. Sometimes my assistants ask me why I remove my chappals while washing my hands for surgery. I have never told them why. They imagine it is to prevent the chappals getting stained with soap and water. I have never even once told my wife or parents or children about this.
May be Maha Periyaval wanted to convey to me that my prayers are reaching Him and He chose you as His messenger."

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Varagooran Narayanan

"ஒரு தார்ல 1008 பழம் இருக்கிறதை
நீ இதுவரைக்கும் பார்த்திருக்கியோ.."

கட்டுரையாளர்-பி.சுவாமிநாதன்
'ஜீ தமிழ் டிவி புகழ்'
தட்டச்சு வரகூரான் நாராயணன்

(சுருக்கப்பட்டது சுவாமிநாதன் மன்னிப்பீராக)

சென்னையிலிருந்து ஒரு முக்யஸ்தர் அன்றைக்கு
ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தார். பெரியவாளின்
திருச்சந்நிதிக்கு சமர்பிக்க வேண்டும் என்பதற்காகத்
தன் தோட்டத்தில் விளைந்த இரண்டு தார்
வாழைப்பழ்ங்களைத் தன்னுடன் கொண்டு
வந்திருந்தார்.பெரியவாளுக்கு வாழைத்தார்களை
சமர்ப்பித்து விட்டு,அவருக்கு நமஸ்காரம் செய்து
பிரசாதம் பெற்றுக்கொண்டு புறப்பட்டார்.

மடத்திலேயே கைங்கர்யம் செய்யும்
கிருஷ்ணமூர்த்தியை அழைத்து 'இந்த ஒவ்வொரு
தார்லயும் எத்தனை பழம் இருக்குன்னு எண்ணிச்
சொல்லு' என்றார் மகா பெரியவா.

கைகளை உதறிக் கொண்டு கிருஷ்ணமூர்த்தி
எழுந்தார். பெரியவாளிடம், "எண்ணிட்டேன் பெரியவா
ஒரு தார்ல 275 பழம்,இன்னொரு தார்ல 375 பழம்
இருக்கு" என்றார்.

"சபாஷ்..சரி.." என்று இழுத்த பெரியவா,"ஒரு தார்ல
1008 பழம் இருக்கிறதை நீ இதுவரைக்கும்
பார்த்திருக்கியோ.."என்று கிருஷ்ணமூர்த்தியைப்
பார்த்துக் கேட்டார்.

ஒரு சில விநாடிகள் கழித்து கிருஷ்ணமூர்த்தி.
"இல்லே பெரியவா...இதுவரை நான் கேள்விப்
பட்டதில்லே..பெரியவா உத்தரவு கொடுத்தா அப்படி
ஒரு தார் எங்கிருந்தாலும் பிடிச்சுண்டு வந்துடறேன்"
என்றார்.

"ஓ...இந்தக் கேள்விக்கெல்லாம் நானே பதில்
சொல்லுவேன்னு ரொம்ப ஆவலா எம் மூஞ்சியை
பாத்துண்டிருக்கியா?" என்று புன்னகையுடன் கேட்ட
பெரியவா, "இதுக்கு நா பதில் சொல்ல வேணாம்.
இளையாத்தங்குடில மாரியம்மன் கோயில் இருக்கு.
அங்கே போ. அந்த அம்மனை தரிசனம் பண்ணு.
உனக்கு எல்லா விவரமும் தானா கிடைக்கும்"
என்று பொசுக்கென்று முடித்தார் மகா பெரியவா.

'1008 பழங்கள் அடங்கிய வாழைத்தாரைப்
பார்ப்பதற்கு இளையாற்றங்குடிக்குப் போ'
என்று பெரியவா கட்டளை இட்டதில் வியப்பு ஒன்றும்
இல்லை.இளையாற்றங்குடிக்கும் காஞ்சி ஸ்ரீசங்கர
மடத்துக்கும் நிறைய தொடர்பு உண்டு.

மகா பெரியவா சொன்னபடி அடுத்த நாளே தன் குடும்பத்தோடு
இளையாற்றங்குடி புறப்பட்டார் கிருஷ்ணமூர்த்தி.
பெரியவா திருவாக்கின்படி மாரியம்மனைத் தரிசித்தார்.
அப்போது கோயிலில் இருந்த யாரோ இருவர்
வாழைத்தார்களைப் பற்றி திடீரென பேசிக் கொண்டிருந்தனர்.
சட்டென்று இவர்கள் பேச்சு காதுகளில் விழ..ஆச்சர்யப்பட்டு
சம்பாஷணை நிகழ்ந்த திசை நோக்கித் திரும்பினார்.

அவர்களிடம், "ஐயா..1008 வாழைப்பழம் இருக்கிற மாதிரி
நல்ல வாழைத்தார் வேணும்.இந்த ஊரில் எங்கே கிடைக்கும்?"
என்று கேட்டார்.

ஏற இறங்கப் பார்த்த ஒரு ஆசாமி தன் வலக்கையை, நீட்டி,
"தோ...தெக்கால போங்க. ஒரு பெரிய கிணத்தைத்
தாண்டியதும் நிறைய வாழைமரம் இருக்கிற தோட்டம்
ஒண்ணு வரும்.அங்கே இருக்கிறவர்கிட்ட கேட்டுப் பாருங்க"
என்று சொன்னார்.

தலையில் முண்டாசு கட்டிய ஒருவர் இவரை எதிர்கொண்டு
விசாரிக்க 1008 வாழைப்பழங்கள் அடங்கிய தார் ஒன்று
வேண்டும் என்று சொன்னார்.சற்று முன் வாழைமரத்தில்
இருந்து அறுத்துத் தரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த
தார்களில் இருந்து ஒன்றைத் தூக்க முடியாமல் சுமந்து
வந்தார்.அவர். "இதான் சாமீ நீங்க கேட்ட 1008 பழத்தாரு.."
என்று இவர் முன்பாக வைத்தார்.

உடலெங்கும் புல்லரிப்பு. மகா பெரியவாளின் தீர்க்க
தரிசனத்தை நினைத்துப் பரவசப்பட்டார்.

தோட்டத்துக்காரன் சொன்ன விலையான ரூபாய் முப்பதைக்
கொடுத்து விட்டு,ஒரு ஆசாமியை கூலிக்கு அமர்த்தி
பெரியவா திருச்சந்நிதியின் முன்னால் அந்த வாழைத்தாரைக்
கொண்டு போய் வைத்தார்.

அதைப் பார்த்து பெரியவா புன்னகைத்தார்.

"1008 பழம் இருக்கிற தாரைப் புடிச்சுண்டு வந்துட்டே
போலிருக்கு?" என்று பெரியவா இடி இடியெனச் சிரித்தார்.

"நேத்து ஊர்ல பாக்கறதுக்குக் காயா இருந்தது. பெரியவா
சந்நிதிக்கு வந்தவுடனே மஞ்ச மசேல்னு பழுக்க ஆரம்பிச்சுடுத்து"
என்றார் கிருஷ்ணமூர்த்தி நெகிழ்ச்சியுடன்.

"விஷு (மலையாள புத்தாண்டு) வரப் போகிறது. இந்த தாரை
ரொம்ப கவனமா குருவாயூருக்கு அனுப்பிவிடு" என்றார்
பெரியவா தடாலென்று.

அப்போது பெரியவா கைங்கர்யத்தில் இருந்த சீடர்கள்
"விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே..அதுக்குள்ள
இந்த தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே"
என்று இவர் காதருகே வந்து குசுகுசுத்தனர்.

அப்போது கிருஷ்ணமூர்த்தி சொன்னார்;

"இது குருவாயூருக்குப் போகணும்னு பெரியவா உத்தரவு
போட்டிட்டாருன்னா, அது பதினாலு நாள் இல்லே...
பதினாலு வருஷம் ஆனாலும் கெட்டுப் போகாது.
அன்னிக்கிப் பழுத்த பழம் போல பொலிவோட பிரகாசமா
இருக்கும். பெரியவா வாக்கு என்னிக்குமே தப்பாது"
என்று சொல்லி தாரைப் பத்திரப்படுத்துமாறு ஒரு
சிஷ்யரிடம் சொன்னார்.

குருவாயூரில் சமர்ப்பிக்கப்படும் வரை அந்த 1008 பழத்தில்
ஒரு பழம்கூட தாரில் இருந்து கீழே விழவில்லை.
முனையில் கருக்கவில்லை. கொஞ்சமும் வீணாகாமல்
புத்தம் புதிதாக அப்படியே இருந்தது அதிசயம்தான்!.

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

.
1000+ காய்களைக் கொண்ட வாழைத் தார் !

Image
சற்று முன் வாழைமரத்தில் இருந்து அறுத்துத் தரையில் இறக்கி வைக்கப்பட்டிருந்த தார்களில் இருந்து ஒன்றைத் தூக்க முடியாமல் சுமந்து வந்தார்.அவர். "இதான் சாமீ நீங்க கேட்ட 1008 பழத்தாரு.." என்று இவர் முன்பாக வைத்தார்.
1008 பழத் தாரை ஒருவரால் தூக்க இயலுமோ ?
"விஷுவுக்கு இன்னும் பதினாலு நாள் இருக்கே..அதுக்குள்ள
இந்த தாரை இங்கே வெச்சிருந்தா அழுகி வீணாப் போயிடுமே"
என்று இவர் காதருகே வந்து குசுகுசுத்தனர்.
ஒரு வாழைத் தார் சாதாரணமாக இரண்டு வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். எத்திலீன் இல்லாத இடத்திலே மூன்று வாரங்கள் கெடாமல் இருக்கும். கட்டுப்பாட்டு அறைகளில் ஆறு வாரங்கள் வரையில் கெடாமல் வைத்திருக்கலாம்!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Varagooran Narayanan
"பாம்பு கடி என்றால் அரப்பும் தித்திக்கும்"

(நடக்காத இரண்டு (பயந்த) சம்பவங்களுக்கு
பெரியவாளின் அதிசய தீர்வு)

புதிய தகவல்-இதுவரை வெளியாகாதது.

அனுபவங்கள்-ஸ்ரீ பாலு மாமா

தொகுத்தவர்-திருமதி-ரேவதிகுமார்.

தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

சம்பவம்-ஒன்று

ஒரு பெண் குழந்தை.ஐந்து வயது இருக்கும்.
அந்த குழந்தை 25 பைசா காசு வைத்திருந்தது.
சிறிது நேரத்தில் பைசா காணவில்லை.
எல்லா இடமும் தேடியும் கிடைக்கவில்லை.
அந்த குழந்தை வாயில் முழுங்கி விட்டது
என்று எல்லோரும் அழுதார்கள்.என்ன செய்வது
என்று தெரியவில்லை.

ஸ்ரீ மகா பெரியவா சிரித்துக் கொண்டார். பின்
அவர்களிடம் இந்த பெண் குழந்தையை வேறு
இடத்திற்கு கூட்டிச் சென்று எல்லா உடைகளையும்
உதறி பாருங்கள் என்று அந்த குழந்தையின்
அம்மாவிடம் சொன்னார்.

அதன்படியே செய்ததில் குழந்தையின் பாவாடை
வழியாக குழந்தையின் இடுப்பில் அந்தக் காசு
ஒட்டிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.

சம்பவம்-இரண்டு.

ஒரு லம்பாடி கூட்டம். அதில் ஒரு மாது மிகவும்
குண்டாக இருந்தார். ஒரு நான்கு பேர் அவளைத்
தூக்கிக் கொண்டு வந்து ஸ்ரீ மகா பெரியவாளிடம்
இவளை பாம்பு கடித்து விட்டது என்றனர்.

ஸ்ரீ மகா பெரியவா,"நீ பாம்பை பார்த்தாயா?" என்றார்.
இல்லை. பாம்புதான் கடித்தது என்றனர்.

'சரி கொஞ்சம் சர்க்கரை,அரப்பு,தேன் கொண்டு வா" என்றார்.
சர்க்கரையை அவள் வாயில் போடு" என்றார்.
'எப்படி இருக்கு' என்றார். 'தித்திப்பாக இருக்கு என்றாள்.
'அரப்பை (சீயக்காய் பொடி) போடு என்றார்.
'இப்ப எப்படி இருக்கு' என்றார்.அந்த மாது கசக்கிறது என்றாள்.

"சரி போ பாம்பு கடியில்லை" என்றார்.

"பாம்பு கடி என்றால் அரப்பும் தித்திக்கும்" என்றார்.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Varagooran Narayanan
"கிளி மாதிரி இருக்கிற பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே..”

(விவாக ரத்து என்ற கட்டத்தைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்ட
நிலையில் சேர்த்து வைத்த பெரியவா)

எழுத்தாளர் சாவி சொன்னது:

கொஞ்ச நாளைக்கு முன்பு நான் பெரியவாளைப் பார்க்கப் போயிருந்தேன். அவ்வப்போது போய் என் மன அமைதிக்காக அவரை நமஸ்கரித்து விட்டு வருவது என் வழக்கம். என்னுடன் இந்தியன் எக்ஸ்பிரஸ் மானேஜரும் வந்திருந்தார்.

நான் எப்போது போனாலும் தனிப்பட்ட முறையில் என் நலத்தை விசாரித்து விட்டு, ஆசீர்வதித்துக் குங்குமம் கொடுப்பார்.

இந்த தடவை போனபோது வழக்கம்போல் நமஸ்கரித்தேன். ஆசீர்வதித்தார். குங்குமம் கொடுக்கவில்லை. ஏற்கனவே வந்திருந்த பக்தர்கள் அவர் முன்னே அமர்ந்திருந்தார்கள். அதனால் என்னை விசாரிக்கவில்லையோ அல்லது ஏதாவது பக்தி விஷயமாக சிறிய உரை நிகழ்த்தப் போகிறாரோ அல்லது அவர்கள் சென்ற பிறகு ஏதாவது என்னிடம் ஏதாவது பேசவேண்டும் என்பதற்காகவோ என்று எண்ணி ஒரு பக்கமாகத் தரையில் உட்காந்தேன்.

சில நிமிஷங்கள் கழிந்திருக்கும். அப்போது ஒரு .குடும்பம் வந்தது. அப்பா, அம்மா சுமார் 25 வயதுப் பெண், கூட இரண்டு ஆண்கள் என்று ஐந்து பேர்
.
நம்ப மாட்டீர்கள். அந்தப் பெண்ணின் அழகு கண்ணை பறித்தது. சிவப்பு என்றால் அத்தனை சிவப்பு. நிறமும், மூக்கும் முழியும், களையான முகமும், அடக்க ஒடுக்கமான பதவிசும் அந்த மண்டபத்தையே பிரகாசமாக்கியதைப் போல் உணர்ந்தேன்.

அவர்கள் பழத்தட்டைப் பெரியவாளுக்கு முன்னே பவ்வியமாக வைத்துவிட்டு நஸ்கரித்தார்கள். பம்பாய், கல்கத்தா போன்ற வெகு தூர இடத்திலிருந்து வந்தவர்கள் போல் எனக்குத் தோன்றியது, பெரியவா அவர்களை ஆசீர்வதித்தார். அவர்களுக்கும் குங்குமம் தரவில்லை.

அவர்களும் பெரியவா முன்னே அப்படியே தரையில் அமர்ந்தார்கள். தொடர்ந்து மேலும் பக்தர்கள் வந்து நஸ்கரித்துவிட்டு குங்குமம் வாங்கிக்கொண்டு போனபடி இருந்தனர்
.
பெரியவா எதுவும் பேசவில்லை. நான் அந்த குடும்பத்தினரையும், பெண்ணையும் அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த பெண்ணின் அழகு முகத்தில் லேசான சோகம் இருப்பதுபோல் எனக்குப் பட்டது.

சில நிமிடங்கள் கழித்து இன்னொரு குடும்பம் வந்தது. வெளிமாநிலக் களை. தொழிலதிபர்கள் மாதிரி இரண்டு, மூன்று ஆண்கள். நாலைந்து பெண்கள், அவர்கள் வருவதைப் பார்த்த அந்த அழகுப் பெண்ணின் குடும்பத்தினர் லேசான பரபரப்புடன் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். அப்படி, இப்படித் திரும்பி பார்த்தனர். ஏற்கனவே அறிமுகமான குடும்பமாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

வந்தவர்கள் பெரியவாளை நமஸ்கரித்தார்கள். அவர்களை உட்காரும்படி பெரியவா சைகையால் சொன்னார்
.
புதிதாக வந்த குடும்பத்தினரையும் பெரியவாளையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தேன். குங்குமம் தந்ததும் கிளம்பலாம் என்று உட்கார்ந்து இருந்தோம். ஏற்கனவே குங்குமம் பெற்றவர்கள் எல்லாரும் எழுந்து கைகூப்பியபடியே போனார்கள்
.
அந்த அழகுப் பெண் குடும்பம், புதிதாக வந்த குடும்பம். நாங்கள் இருவர் மட்டும் அமர்ந்திருந்தோம்.

திடீரென்று பெரியவா ‘தொழிலதிபர்’ குடும்பத்தினரைச் சைகையால் அழைத்தார். அந்த இளைஞனையும் அழைத்தார். அவனும் வந்து குடும்பத்தினருடன் சேர்ந்து நின்றான்

. அவனைப் பார்த்து “நான் சொல்றதைச் செய். உனக்குக் குறையில்லாத வாழ்க்கை அமையும்... கிளி மாதிரி இருக்கிற பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே..” என்று சொல்லியபடியே அந்த அழகுப் பெண்ணைத் தன்னிடம் வரும்படிக் கூப்பிட்டார். அவள் பொல பொலவென்று கண்ணீர் விட ஆரம்பித்தாள். அவளுடைய. அம்மா “ போம்மா .. போ.. பெரியவா கூப்பிடறா பார்” என்று சொல்லியபடியே பாசத்துடன் அவளை அணைத்து, லேசாகத் தூக்கி விட்டாள். அந்தப் பெண் துக்கம் நெஞ்சை அடைக்க , கேவலை அடக்கி கொண்டு, கண்ணீரை துடைத்தபடியே எழுந்து வந்து நின்றாள்.

பெரியவா மறுபடியும் அந்தப் பையனைப் பார்த்து “ இப்படி வா.. இவளை அழைச்சிண்டு போ.. சந்தோஷமா இருங்கோ” என்று சொல்லி அவர்களுக்குக் குங்குமம் கொடுத்தார். அந்தப் பையன் அடக்கமாகத் தலையை ஆட்டினான். யாரும் எதுவும் பேசவில்லை.

திடீரென்று இரண்டு குடும்பத்தினரின் முகங்களில் பிரகாசம். பரவசம்!

விவாக ரத்து என்ற கட்டத்தைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்ட ஒரு தம்பதியை தனது அற்புத சக்தியால் பெரியவா சேர்த்து வைத்து விட்டார். இத்தனைக்கும் பெண்ணின் குடும்பத்தினர் அவருக்குத் தெரிந்தவர்கள் இல்லை (என்பது எனக்குப் பின்னால் தெரிந்தது.). அவர்கள் தங்கள் பிரச்னையைக் கூட அவரிடம் சொல்லவில்லை. அந்தப் பையனும் சிறிது நேரத்தில் அங்கு வரப்போகிறான் என்பதை பெரியாவாள் தனது தெய்வீக சக்தியால் உணர்ந்திருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ குங்குமம் கொடுக்காமல் பெண்ணின் குடும்பத்தினரைக் காக்க வைத்திருந்தார்.

அவர்கள் எல்லாரும் போன பிறகு எனக்குக் குங்குமம் கொடுத்தார்!”

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share from my friendசூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !

சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !

Thanks to Mannargudi Sri Sitaraman Srinivasan Mama for the article.

பெரியவர்எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…?
“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார்
மஹாபெரியவர் வழிகாட்டி, தேர்வு செய்த பல சுலோகங்களையும், கீதங்களையும் எம்.எஸ்.அம்மா பாடி ஒலிப்பதிவு செய்து அளித்துள்ளார். மேளராக மாலிகை இவர்உத்தரவின் பேரில்தான் பாடப்பட்டது. பாலாஜி பஞ்சரத்ன தொகுப்பில்சுலோகங்களும் அவர் தேர்வு பண்ணிக் கொடுத்தவைதான். உச்சரிப்பு திருத்தமாக உள்ளதா என்று சரி பார்ப்பதும் உதவுவதும் எனக்குத் தரப்பட்ட பணி. இதை ஒரு மிகப் பெரிய கௌரவமாக நான் கருதிச் செய்து வந்தேன்.
எத்தனை முறை திருத்தம் சொன்னாலும் மனதிலே சோர்வு இல்லாமல் திருத்திக் கொள்வார் அம்மா. ஸ்ரீரங்க கத்யம் மிகக் கடினமான உச்சரிப்பு கொண்டது. அதைத் துல்லியமாக பதம் பிரித்துப் பாட அம்மாவால் தான் முடிந்தது. அதிலே தோஷம் கண்டுபிடிக்க வேண்டும் என்று தேடினாலும் முடியாது! அப்படி ஒரு அப்பழுக்கில்லாத சுத்தம். மேளராக மாலிகையின்வார்த்தைகள் அர்த்தங்களைப் பொதித்துப் பொதித்து அடக்கிய அமைப்பில் இருக்கும்.
‘கெளரிமனோஹர தம்பர சத்தம்‘ என்று வந்தால் ‘கௌரிமனோஹரி‘ என்பது ராகத்தைக் குறிக்கும். ’ஹரிதம்பர சத்தம்‘ என்பது பரமேசுவரனைக் குறிக்கும். (திக்கெல்லாம் தன் ஆடையாகக் கொண்டவன் என்று பொருள்).
இந்த இடத்தில் ஒரு கணத்துக்கும் குறைவாக இடைவெளி கொடுத்து இரண்டு அர்த்தங்களும் விளங்கும்படிப் பாட வேண்டும் என ஆணையிட்ட மஹா பெரியவர்களிடம்‘இது எப்படி சாத்தியம்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்னார்:
“நீயா பாடப் போறே…? அவா பாடிடுவா… நீ ஏன் கவலைப்படறே!”
அதேமாதிரி, பெரியவர்களின் ஆசி அனுக்கிரஹத்தால் உரிய முறையில் துல்லியமாக அந்த இடத்தில் எம்.எஸ்.அம்மா பாடியிருப்பது, கவனித்துக் கேட்டால் புலனாகும்.
இந்த ஒலிப்பதிவு முடிந்து காஸெட் வெளியாகிற தருணத்தில் மஹா பெரியவர்எம்.எஸ்.ஸிடம் என்ன சொன்னார் தெரியுமோ…?
“சூரிய – சந்திரர்கள் உள்ள வரை உன் கியாதி (புகழ்) இருக்கும் !” என்றார்.
இதை விட பெரிய அனுக்கிரஹம் என்ன வேண்டும்?
நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர்எம்.எஸ். அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி, இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.
எம்.எஸ். அம்மாவின் அன்பு, கனிவு, கருணை அனைத்தும் அவரது இசையைப் போன்றே கம்பீரம் நிறைந்தது. மூத்த கலைஞர்களிடம் அவர் காட்டிய பணிவு அலாதியானது; புதியதைக் கற்றுக்கொள்ள அவர் மேற்கொண்ட முயற்சி அபூர்வமானது; சக கலைஞர்களை அவர் ஊக்கப்படுத்திய முறை, வழிநடத்திய முறை தாய்மை நிறைந்தது.
அவரோடு பழகிய ஒவ்வொருவரும் அந்த இனிய நினைவுகளை தம் மனத்தில் அசைபோட்டுக்கொண்டே இருக்கின்றனர். அவரது எளிமையும் பக்குவமும் பாந்தமும் ஒவ்வொருவரின் மனத்திலும் நீங்கா இடம் பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும்எம்.எஸ். அம்மாவின் ஒவ்வொரு பரிமாணம் பிடிபட்டு இருக்கிறது.
’எங்கள் எம்.எஸ்.’ என்ற இந்தப் புத்தகத்தில், ஒவ்வொருவரும் தாம் புரிந்துகொண்ட விதத்திலேயே எம்.எஸ். அம்மாவைச் சித்திரிக்க முயன்று இருக்கின்றனர்.
நினைத்தாலே மகிழ்ச்சியும் மனநிறைவும் மரியாதையும் ஏற்படுத்தக்கூடிய பெயர்எம்.எஸ்.அவரது இசையை வியந்து போற்றியவர்களுக்கு மட்டுமின்றி,இசையே தெரியாத பல்லாயிரம் பேர்களுக்கும் கூட ஆதர்சமானவர். அதிசயப் பிறவி என்றே சொல்ல வேண்டும்.
எம்.எஸ்.அம்மாவின் இசையையும் ஆளுமையையும் ஒருசேர உணர்ந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் இந்த நூல் உதவும் என்பது உறுதி.

kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

From Amritavarshini:
Mannargudi Sitaraman Srinivasan August 2 at 5:38pm
கச்சேரியின்போது மகா பெரியவாள் தனக்கு முன்பு தட்டில் வைத்திருந்த ஆரஞ்ச்
பழத்தின் சுளைகளை எடுத்துவிட்டு அதன் மூடியால் தரையில் மணி அய்யரின்
பாட்டுக்கு தாளம் போட்டு ரசிக்கிறார். கச்சேரி முடிந்ததும் மணி அய்யர் ” நான்
பாடும்போது லயம் தப்பாமல் தாளம் போட்டு வந்தாரே, அவர் யார்?” என்று கேட்க,
உடன் பாடியவர் மகாபெரியவாள் தான் என்று சொல்ல மணி அய்யர் தன்னை அறியாமல்
“கைலாசநாதா! கபாலீஸ்வரா! என் தெய்வத்தை பார்க்க முடியவில்லையே” என்றாராம். இதை
கேட்ட அத்தனை ரசிகர்களின் கண்களில் தாரையாக கண்ணீர் வந்தது என்று தனது
அனுபவத்தை எழுதியிருக்கிறார். ஒரு சமயம் நாட்டில், பஞ்சம் பட்டினி ஆகியவற்றால்
மக்கள் அவதிப்பட்டபோது பெரியவாள் மதுரை மணி அய்யரிடம் ” நீ கச்சேரியில் கோளறு
பதிகம் பாடு, நவகிரக கீர்த்தனைகளை பாடு” என்றார். அவரது வேண்டுகோளை ஏற்று
கடைசிவரை தன் கச்சேரியின்போது அவைகளைப் பாடாமல் இருக்கமாட்டார்.

kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

From a forward:

வரகூர் முகாம். என்னை,கிட்ட வரும்படி
கூப்பிட்டா. "நான் பாட்டுப் பாடட்டுமா?
நீ கேட்கிறியா?"ன்னா, சரீன்னேன், உடனே,
எனக்கு மட்டும் கேட்கிற குரலில்,

' கண்ணா, சந்த்ரமௌளீஸ்வரர் கிட்ட
...வேதபுரி.....வேதபுரி,,,
...இந்தக் கட்டைவிளக்கில்
...நாலு திரிபோட்டு, எண்ணெய் விட்டு,
...ஏத்தி வை, வேதபுரி...

-அப்டீன்னு, சரளமா பாடினா.

விளக்கு ஏற்றி வை-ன்னு உத்தரவு போட்டிருக்கலாம்.
அப்படிச் செய்யல்லே.ரொம்ப நயமா,சொல்லிக்காட்டிட்டா!,

தினம் எல்லோரும் பஞ்சாங்கம் படிக்கணும்.
திதி,வார,நக்ஷத்ர, யோக,கரணம் தெரிஞ்சுக்கிறதினாலே,
நெறைய பலன் உண்டு-ன்னு சொல்லுவா.
தினம் பஞ்சாங்கம் படிக்கச் சொல்லி கேட்பா.

கொட்டகைக்குப் போனா, தையல் இலை மேலே
கங்காஜலம் வைக்கணும், ஆசமனத்துக்காக.

எனக்கு சமையல் சொல்லிக் கொடுத்திருக்கா,
பெரியவா ! (என்ன, அப்படிக் கண்ணை முழிச்சுப்
பார்க்கிறேள்? பெரியவா, எப்போ சமையல் கட்டுக்குப்
போயிருக்கான்னு தானே? பொஸ்தகம் படிக்காமலே
பெரியவாளுக்கு எல்லாம் ஸ்புரிக்கும்)

"கூட்டு செய்யத் தெரியுமோ"ன்னு ஒரு நாள் கேட்டா.

தெரியாதுன்னேன்.

"நான் சொல்றபடி செய்யி.கூட்டு மிச்சமே இருக்காது.."

"ஜலம் வெச்சு பயத்தம் பருப்புப் போடு.

கொஞ்சம் வெந்தவுடனே, காயைப் போடு.

நன்னா வெந்தப்புறம் கடலைப் பருப்பு,

கொத்தமல்லி விதை, தேங்கா அறைச்சு விடு.

மொளகு சீரகம் போடு.

இப்படிப் பண்ணினா,கூட்டு மிச்சமே இருக்காது.."

பெரியவா சொன்னபடியே பண்ணுவேன்.
அப்போ, கூட இருந்த யதிதிகளும் சாப்பிடுவா.
கூட்டு முழுக்க ஆயிடும்.

-எங்கிட்ட கூட்டு பண்றதைப் பற்றித்தான்
பேசமுடியும்.உபநிஷத் பேசினா,எனக்கு என்ன புரியும்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

பெரியவா சரணம்

மகா பெரியவா சேலத்துக்கு ஒரு தடவை வந்த போது நடந்த சம்பவம் இது.

பெரியவா சேலத்திற்கு வந்தால் சேலம் சுகவனேஸ்வரர் கோயில் நந்தவனத்தைச் சேர்ந்தாற் போல் இருக்கும் குளத்தில் தான் மகான் குளிப்பது வழக்கம்.

குளித்து விட்டு வெளியே வந்ததும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவார். சிவன் கோயில் பாதை வழியே நுழைந்தவுடன் வலப்புறம் முதலில் உள்ள வீட்டில் இருந்தது விசாலாட்சி அம்மாள். மகானின் பரம பக்தை.

கும்பலோடு கும்பலாக நின்று அதுவும் சற்று தூரத்தில் இருந்து மகானைத் தரிசிக்க முடியுமே தவிர அருகில் போக முடியாத அளவுக்கு பக்தர்களின் கூட்டம்.

பெரியவா சேலத்தில் தங்கி இருக்கப் போவதோ சில தினங்கள் தான். அதற்குள் அவர் அருகில் முண்டி அடித்துக் கொண்டு போய்ப் பார்க்க இந்த அம்மாவினால் நிச்சயம் முடியாது. தனக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று திருப்திபட்டுக் கொண்ட அந்த அம்மாள் எட்ட இருந்தே தரிசனம் செய்து வந்தாள்.

பெரியாவா ஊருக்குக் கிளம்பும் தினம். அன்று காலையில் குளியல் முடிந்ததும்… வேகமாக வெளியே வந்த பெரியவா விசாலாட்சியம்மாள் வீட்டு வாயிற்படியில் ஏறி நின்று கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார்.

உள்ளே இருந்து வெளியே வந்த விசாலாட்சி அம்மாளுக்குத் தான் காண்பது கனவா அல்லது நனவா என்கிற சந்தேகம். தனது வீட்டில் மகாபெரியவா.. தனக்கு அருகில் மகான்.. கண்குளிர தரிசித்தார். எப்பேர்பட்ட பேறு அந்த அம்மையாருக்கு!

பக்தர்களுக்கு ஆசி வழங்கி விட்டு படியை விட்டு இறங்கும் போது, புன்னகையுடன், விசாலாட்சி அம்மாளைத் திரும்பிப் பார்த்தார் பெரியவா. அதற்கு ஆயிரம் அர்த்தங்கள்…

தன்னை நாடி வரும் பக்தர்களின் உள்ளத்தில் என்ன எண்ணம் இருக்கிறது என்பதை அறிந்து அருள்பாலித்த மகான், இவரைத் தவிர கலியுகத்தில் வேறு யார் இருக்க முடியும்?

kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

A.S. Raman was the first Indian editor of The Illustrated Weekly of India. He shares his memorable moments with Divinity…

The 107th Jayanthi of the Paramacharya of Kanchi falls on May 19. A.S. Raman looks back nostalgically at the moments he shared with the Swami in 1963.

I had looked forward to the day when I could have the privilege of a brief glimpse of the Paramacharya of Kanchi at least from a distance. At last that day came in 1963. I was at Madurai on holiday.

It so happened that the Paramacharya had been camping at Narayanapuram outside the city. One July morning I decided to take a chance at the Matam. I wrote my local address on the visiting card and gave it to one of the aides who immediately sent it for the Mahaswami’s attention. No reaction. I sat in a corner resignedly prepared for a long wait.

After a couple of hours Paramacharya came out to perform “Gho Puja”. Through I was within his sight he did not take notice of me. Since it was time for his other rituals, he disappeared into solitude office of his private retreat.

Hours passed. No response from him till 7 p.m. I was told not to wait any longer, because it was time for Mahaswami’s evening puja after which he would retire for the day.

This went on for five long frustrating days. But I would not give up. The longer I had to wait, the stronger my resolve to have an audience with him. At last on the sixth day, at about 1 pm I received word from the Matam that “Periaval” would like to see me.

I rushed to the Matam without a minute’s delay. But no, it was not that easy. I was told to wait. After four hours, Paramacharya agreed to see me.

The moment of ecstasy had arrived. I was face to face with divinity in flesh and blood. I was immediately reminded of what Arthur Koestler, a tough, intellectually arrogant atheist and iconoclast said about Paramacharya.

After an audience with him, the controversial author of the irreverent book on India and Japan “The Lotus and the Robot”, said in effect that if God exists, here He is!

Receiving me with the sort of smile one saw only on the bronze icons of deities, the sort of smile about which Koestler said: “If ever Jesus smiled, he must have smiled like this great Hindu saint”, the Paramacharya began comfortingly: “Did you have to wait too long? I was only testing the strength of your faith. Now relax. Before you ask about me, I must ask about you.

His questions reflecting his transparent, fatherly concern focused on my family background, early life, my main interests, details of my professional career, my health problems, if any, my life in Bombay, and the like. He was now in a communicative mode, which prompted me to share my ten-page questionnaire with him.

After a casual glance at the questionnaire, he returned it to me saying, “Read out the questions first, before I react to them. After you have finished, I’ll try to answer one by one. No hurry, we can go through the exercise at leisure.

The real reason for my making you wait for nearly six days was my selfish desire to spend a sufficiently long time with you for a meaningful, mutually beneficial discussion. Now you ask and I answer. Let us settle for a long, unhurried tete-a-tete as the French might say.”

Our two-day long discussions that covered a wide range of areas as divergent as Aristotle and Adi Sankara at one extreme and astrophysics and Atharvaveda at the other, were spread over nearly ten hours, five hours each day. The venue was a most unlikely one; The store room with rats, spiders, cockroaches and lizards all over the place.

Paramacharya sitting on the bare floor rested against a rice sack. As we were talking, the stream of bhaktas from different parts of the world and India continued and every one of them received his attention.

They spoke to him in their respective languages in which he also seemed to feel thoroughly comfortable, handling each of these with the ease and grace of his own mother tongue, Kannada.

To my astonishment, his aides told me that he had a mastery of 17 languages.

Three weeks later. The first installment of my two part article had just appeared in my paper. I went to the matam with the issue. The Paramacharya’s aides has already shown him a copy.

Greeting me with an embarrassed smile, he said gently: “After reading your article I feel taller by a few inches. I wish you had not praised me so much.” I said: “It’s nothing, Your Holiness, compared with what the Western intellectuals keep saying about you.”

To which he replied: “I wish you had praised other Sankara peethams also. You see, we have no protocol problems. We are all engaged in the same task of continuing Bhagavatpada’s mission. You could have avoided that unfavourable reference to another matam an equally great institution set up by one of Aid Sankara’s senior disciples. I hope you will not run into rough weather because of your over enthusiasm for the Kanchi matam.

Placing my copy of the weekly before him, I requested him to autograph it. Politely refusing, he said: “Sanyasis don’t sign. Narayana!”

Paramacharya made every devotee feel specially favoured. What endeared him to his devotees was, not his stunning scholarship, which sat lightly on his frail shoulders, but his intensely humane concern and compassion beyond words and his charmingly disarming humility and transparency. He shared his erudition and wisdom with everyone around.

He could explain J.M. Keynes’ General Theory of Employment or Einstein’s Theory of Relativity as lucidly and gracefully as he would narrate a fairy tale to a tiny toddler.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
Mayavaram Sri Sivaramakrishna Sastrigal (Mayavaram Periyava) has come with tears & seem highly disturbed.
‘Bhagavata Saptagam’ by him is highly appreciated by Periyava. Mayavaram Sastrigal always know that Sri Krishna himself is hearing the ‘Bhagavatam’ & hence he’ll never mind anyone around & never deviate from ‘Bhagavatam’.
Such a Mahan, came with tears & was speaking to the Manager Sri Viswanatha Iyer of the mutt…
Manager has called Sri Kannan Mama & told, “Sastrigal has come here with lot of stress and anxiety…Let Periyava know this and arrange for His darshan soon”
Sri Kannan Mama approached Periyava who was in ‘visraanthi’
“Yennappa?”, Periyava
Sri Mama informed about Sastrigal.
Periyava asked, “He came in car, right?”
“Yes”
“Ask him to wash his feet and bring him through the backdoor”.
Periyava went & sat under a ‘Nelli’ tree in the mutt. Sastrigal came…
Sri Sastrigal did namaskaram & said with tears, “Periyava! My son-in-law is not feeling well. We took X-rays and it seems half the lungs are gone and doctors say only one lung is functional. They say that he might survive for 27 days or so”
Sri Sastrigal continued & told his prayer, “Even if my worst nighmare comes true, I want Periyava to bless me so that this dhukham does not affect me!” (how many of us know to pray like this…only true mahan/vedantist can think in this line!!!!)
He reiterated, “Even if the sareera goes away, this dhukkam should not affect me”.
Later, Sri Kannan Mama recollected, “although he says it should not affect him…he says it while weeping”
Periyava asked a peculiar question back, “Why can’t the machine lie?”
Sastrigal, “we have taken 27 x-rays…all say the same thing…they have given only 20-27 days for him”.
Periyava, “you have read lots of vedanta…it says “baghavan bhaya nasanaha”..pray to Him”.
Sri Sastrigal took the prasad & left with a (relatively!) lighter heart but rushed back to the mutt within 15 days…
Sri Kannan Mama again recollected, “he was crying uncontrollably”.
Manager, “He cries so much…looks like his son-in-law is gone…take care of him quickly”.
Sri Kannan Mama rushed to Periyava.
Periyava was in ‘Vishraanthi’ this time too. On hearing, “why? Has the son-in-law gone? I am sure all rituals must have been over? Hope he has come here after all that?? He is a learned person – he knows these”
Sri Mama nodded in agreement.
Later, Sri Kannan Mama recollected, “Periyava talked like a common person at that time”.
Same ‘Nelli’ tree, same Periyava, same Sastrigal but totally a different situation.
“Prabho! The words that came from your mouth is true – all machines lied….doctors say that everything is fine…My son-in-law is doing fine!”
Periyava smiled, “Oh! even the machines started lying? I thought only humans lie!”
Periyava heard all the details. Gave prasad & ‘utharavu’ to Mayavaram Sri Sivaramakrishna Sastrigal. Later, Mayavaram Periyava has written a book & mentioned about this incident and mentioned the highlighted, “When words come out of mahans’ mouth, anything can happen!”.
Sri Kannan Mama opines that Mayavaram Sastrigal’s Saptaagam is like ‘express mail & you’ll miss the story if you miss the attention for few minutes. And also says Sastrigal knows every slokam in ‘Bhagavatham’ & will almost say every sloka unlike the ‘Puraanikas’ today.
Sri Mayavaram Sivaramakrishna Sastrigal himself is a ‘Mahaan’ who always knows Sri Krishna is sitting there & hearing his ‘Bhagavatha Sapthaagam’. Even, Triplicane Sri Govinda Damodara Swamigal used to say, “I have a hero worship for him!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
ஸந்நிதிக்கு வரும் குழந்தைகளுக்கு வாழைப்பழமோ கற்கண்டோ பெரியவாள் தவறாமல் வழங்குவார். தாமே நேராகக் கொடுப்பதுண்டு; அணுக்கத் தொண்டர்களைக் கொண்டு கொடுப்பதுமுண்டு.

விடுமுறை நாள்களில் பள்ளி ஆசிரியர்கள் பஸ் அமர்த்திக்கொண்டு பசங்களுடன் வருவது வழக்கம். அதனால் அந்நாள்களில் பணியாளர்கள் முன்னதாகவே வாழைப்பழமும் கற்கண்டும் நிறைய எடுத்து வைத்து விடுவார்கள்.

ஒரு விடுமுறை தினத்தன்று பெரியவாள் “இன்னிக்குக் கொழந்தைகளுக்கு வாழைப்பழம், கல்கண்டு குடுக்க வேண்டாம்” என்றார். ஏன் அப்படிச் சொன்னாரென்று புரியவில்லை.

தப தப என்று ஒரு பஸ்-லோட் பள்ளிச் சிறுவர்கள் ஆசிரியர்களுடன் வந்து விட்டனர். தம்மைக் காண வந்த சிட்டுக்களுக்கு ஒன்றும் தராமலா இந்த மா மதுர மஹா தாத்தா திருப்பி அனுப்பி வைப்பார் என்று பணியாளர் எண்ணினார்.

சரியாக அதே சமயம் திருமாளம் பஞ்சாபகேச ஐயர் என்ற பக்தர் ஒரு மூட்டை ஸஹிதம் வந்தார். மூட்டையைப் பெரியவாளுக்கு ஸமர்ப்பித்து, “பெரிவா ப்ரயோஜனப் படுத்திக்கணும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

மூட்டையிலிருந்து குண்டு மல்லிகைகள் போன்ற நெற்பொரி. பெரியவாள் திருவமுது செய்து வந்தது அதைத்தான். இதை நினைத்தே அவர் ‘ப்ரயோஜனப் படுத்தி’க் கொள்ளச் சொன்னது. ஆனால் பெரியவாளோ தம்முடைய பிக்ஷைக் காலம் வரை தள்ளிப்போடாமல் அப்போதே அதைப் பிரயோஜனப்படுத்திக் கொண்டு விட்டார்.

பணியாளரைப் பார்த்து, “தேவாளுக்குப் பொரி ரொம்ப இஷ்டம். தெரியுமோ? கல்யாணத்துலகூட லாஜ ஹோமம்னு பொரி ஹோமம் பண்றாளோன்னோ? இந்தக் கொழந்தைகள்ளாம் தேவாள்தான். இவாளுக்கு வெல்லச் சக்கரையும் கொஞ்சம் சேர்த்து பொரி நெறய்ய விநியோகம் பண்ணுங்கோ. ஒடம்புக்கும் ஹிதம். மனஸுக்கும் ஸத்வம். பொரி சாப்பிட்டா பாபம் போறதுன்னு சாஸ்த்ரம்” என்றார்.

அவ்வாறே சிறாருக்கு வெல்லச் சர்க்கரை சேர்த்த பொரி வழங்கப்பட்டது. ஆவலாக வாங்கிக் கொண்டனர்.

தலைமையாசிரியர் வியப்பில் ஏற்பட்ட மகிழ்ச்சியுடன் சொன்னார் : “பசங்களில் பல பேருக்கு மஞ்சட்காமாலையும், வயிற்றுப்போக்கும். வாழைப்பழம் கூடாதென்று டாக்டர் சொல்லியிருக்கிறார். ‘பெரியவர்களோ வாழைப்பழம் கொடுப்பதுதானே வழக்கம்? அப்படிக் கொடுத்தால் பிரஸாதத்தை என்ன செய்வது?’ என்று கவலைப்பட்டுக் கொண்டேதான் வந்தேன். பெரியவர்களுக்குத் தெரியாததா? அதுதான் நெற்பொரி கொடுத்து அநுக்கிரஹித்திருக்கிறார்”.

அந்த தீர்க்க திருஷ்டி இருக்கட்டும். அது எல்லா மஹான்களுக்குமே உண்டுதான். ஆனால் அந்தப் பள்ளிப் பாலர்களை தேவர்கள் என்றாரே! அந்த எளிமை அவரொருவருக்கே உரித்தானதல்லவா?

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

பெரியவா சரணம்

வித்வான் பெரியசாமித் தூரன் சிறந்த தேசியவாதி. தமிழ் அறிஞர். பல சிறந்த பாடல்களை எழுதியுள்ளார்.

அவர் ஒரு சமயம் யோகி ராம்சுரத்குமாரிடம் சென்று தனக்கு முருக தரிசனம் கிடைக்க யோகியார் அருள வேண்டும் என்று யாசித்து நின்றார். யோகி அவர்கள், “காஞ்சிபுரம் செல், மகா பெரியவரைப் பார். அவர் தான் முருகன்” என்றார்.

வியப்பில் ஆழ்ந்த தூரன் உடனே தேனம்பாக்கத்தில் இருந்த மாமுனிவரை தரிசிக்க வந்தார். கிணற்றுக்கு அருகில் இருந்த மகா பெரியவரை தரிசித்தவுடனேயே தூரன் மெய்மறந்தார்; புளகாங்கிதம் அடைந்தார்.

அதுவரை மௌனமாக இருந்த மாமுனிவர் தூரனின் அருகில் வந்தார். “எனக்கு தரிசனம் கிடைத்து விட்டது. பெரும் பேறு பெற்றேன்” என்றார் தூரன்.

மகானோ, பேச்சை திசை திருப்பும் விதமாக, “உங்கள் கால் எப்படி இருக்கிறது?” என்று குசலம் விசாரித்தார். “தரிசனம் கிடைத்துவிட்டது; தரிசனம் கிடைத்துவிட்டது” என்றே தூரன் சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர பெரியவா கேட்டதற்கு பதில் தரவில்லை.

தூரனுடைய மகள் ‘கொஞ்சி கொஞ்சி வா! குகனே! என்ற கமாஸ் ராகப் பாடலைப் பாட இடமே தேவலோகமானது.

பிறகு தூரன் ‘புண்ணியம் பல கோடி செய்தேனோ’ என்ற கீரவாணி ராகப் பாடலையும், ‘என்ன பெருந் தவம்’ என்ற சகானா ராகப் பாடலையும் இயற்றினார்.

கலியக தெய்வம் நம் பெரியவா!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
பணத்துக்காக விடாதே- மஹாபெரியவா

கும்பகோணம் ரங்கராஜ ஐயங்கார் (இன்றைய அஹோபில மட ஜீயங்கார் ஸ்வாமிகள்) 1971ம் வருடம் ரிக்வேதம் பயின்றதும் அதன் பின் வைதீகத் தொழிலில் தன் ஜீவனத்தை மேற்கொள்ளலாமென்று நினைத்ததும் சரிதான் என்றாலும் மஹாபெரியவா அதற்கான உத்தரவைத் தரவில்லை.

அந்த வைணவ அன்பர் 1968ம் ஆண்டிலிருந்தே மஹாபெரியவாளின் பக்தர்களில் ஒருவர். வைதீகத் தொழில் வேண்டாம் என்ற அவரிடம் மஹான் என்ன சொன்னார் தெரியுமா?
“நீ மேற்கொண்டு எல்லா வேதங்களையும் படிக்கணும். அதற்கு உபகாரம் செய்ய நான் ஏற்பாடு பண்றேன். நீ மேலே படி” என்று அன்புக் கட்டளை இட்ட மஹான், அவர் குடும்பம் நடத்த மாதம் ரூ.200/- கொடுக்க ஏற்பாடு செய்ததோடு நில்லாமல், சுயமாக அவரே தனது ஆகாரத்தை சமைத்து சாப்பிடும் உயர்ந்த வழக்கத்திற்கும் வழி செய்து அருளினார்.
ரங்கராஜ ஐயங்காரின் குடும்பமோ பெரியது. இவருடைய சகோதரிகளின் திருமணத்தையும் தமது கருணை உள்ளத்தால் பெரியவா நடத்தி வைத்தார்.மஹான் பண்டரிபுரத்தில் இருந்தபோது ஐயங்கார் ஸ்வாமிகள் அங்கே சென்று அவரை நமஸ்கரித்தார். அப்போது மஹான் அவரிடம் கேட்டார்:
“நீ எனக்கு நமஸ்காரம் செய்யலாமா?”
அதற்கு ஐயங்கார் ஸ்வாமிகள் சொன்ன பதில்:“எங்கள் சம்பிரதாயம் பிரகாரம் யக்ஞோபவீதம், சிகை இல்லாத சன்னியாசிகளை தரிசித்தாலே ஸ்நானம் செய்யணும்னு இருக்கு” என்றார்.
“அப்போ நீ ஏன் எனக்கு நமஸ்காரம் செய்யறே?”
“சாட்சாத் விஷ்ணு அம்சம்தான் இந்த ஜோதி ஸ்வரூபம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தன் வைணவப் பார்வைக்கு ஈஸ்வரரான மஹா பெரியவா அருளிய தரிசனத்தை மெய்சிலிர்ப்போடு கூறி மகிழ்ந்தார்.
இந்த பரம பக்தரான வைணவப் பெரியவருக்கு மஹானின் அருள், ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.
இவரது குடும்பம் பெரியதென்றாலும் அதை நன்றாக நடத்திச் செல்லக்கூடிய அளவுக்கு வருமானமே இல்லை. சகோதரிகளின் திருமணம், தினசரி நடைமுறைகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர காரியங்கள் எல்லாவற்றிற்கும் பணம் தேவை. தொடர்ந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள இவர் முயற்சி செய்து கொண்டு இருந்தபோதுதான் 1978ம் வருடம் இவரை ஜெர்மனிக்கு வரச்சொல்லி ஒரு அன்பர் கேட்டுக் கொண்டார்.
“ஜெர்மனிக்குச் சென்றால் கை நிறையப் பணம். அதனால் குடும்பத்தின் வறுமை நீங்கும்” என்றெல்லாம் ஐயங்கார் ஸ்வாமிகளின் உள்ளத்தில் ஆசை தோன்ற ஆரம்பித்தது. மாத சம்பளம் மூவாயிரம். அத்துடன் திரும்பி வரும்போது கையில் மூன்று இலட்சம் பணம் தரப்படும் என வாக்குறுதி. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தால் தன் குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்” என்று நினைத்த ஐயங்கார் ஸ்வாமிகள் அழைப்பு விடுத்தவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டு ‘மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து, அக்டோபர் 31ம் தேதி புறப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இவ்வளவு நடந்திருந்தும், இதுபற்றி இவரது கிராமத்தில் இருந்த தந்தையிடம் கூட சொல்லாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமல் அயல் நாட்டிற்குப் போக முடியுமா? அக்டோபர் 27ம் தேதி கிராமத்திற்குப் போனார்.
தகவலைக் கேட்டவுடன், தந்தை ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டார்.
“மஹாபெரியவா கிட்டே உத்தரவு வாங்கிட்டியோ?”
“இல்லேப்பா, மஹானிடம் சொன்னா அவர் உத்தரவு தருவாரோ மாட்டாரோங்கிற சந்தேகம் எனக்கிருக்கு. அப்படி அவர் உத்தரவு தரலைன்னா, இவ்வளவு வருமானத்தை விட்டுட மனசு கேட்காதே. அதனாலே தான் நானே முடிவு எடுத்துண்டு கிளம்பறேன். நமக்கோ பணத்தேவை அதிகம். எனக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியல்லேப்பா” என்றார்.

அன்றிரவு அவர் கிராமத்தில் தங்கி விட்டார். மன உளைச்சலில் அவர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் முன் மஹான் தோன்றினார்.

மஹான், ஐயங்கார் ஸ்வாமிகளின் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்துவிட்டு,“நீ போகத்தான் போறாயா?” என்று ஏக்கத்தோடு கேட்பதாக ஐயங்கார் ஸ்வாமிகளுக்குத் தோன்றியது.

அது முழுமையான கனவுமல்லாமல், முழுமையான நினைவுமல்லாமல் தெரிந்ததில் இவருக்கு மஹா பெரியவா ஏதோ உத்தரவிடுவது போலத் தெரிந்தது. அதனால் மறுதினம் தாமதிக்காமல் மஹானைத் தரிசித்து அவரது அனுமதியைப் பெறக் கிளம்பிவிட்டார்.

அப்போது மஹான், கர்நாடகாவில் பதாமி என்னும் நகருக்கு அருகில் இருந்த வனசங்கரி என்னும் சிறுகிராமத்தில் முகாமிட்டிருந்தார்.

மஹானின் தரிசனத்திற்கு முன், ஐயங்கார் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தபோது, மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து இவரிடம், “உன்னை பெரியவா வரச்சொல்லி உத்தரவாகியிருக்கிறது” என்றார்.

தான் வந்திருப்பதையோ, வந்திருக்கும் நோக்கமோ யாருக்குமே தெரியாத நிலையில், மஹான் வரச் சொல்லியிருப்பது இவருக்கு அளவுகடந்த வியப்பைத் தர நேராக மஹானின் முன் நின்று தரிசித்தார்.

“எப்போ கிளம்பப் போறே?” என்று பெரியவா கேட்டதும், தரிசனம் முடிந்ததும் தன் ஊருக்கு எப்போது போகிறோம் என்பதைத்தான் மஹான் கேட்கிறார் என்று ஐயங்கார் ஸ்வாமிகள் நினைத்துத் “தரிசனம் முடிந்ததும் கிளம்புவதாக உத்தேசம்” என்றார்.

மஹான் லேசாகப் புன்முறுவலித்தவாறே,

“நீ ஊருக்குப் போறதே பத்தி நான் கேட்கலே, அசல் தேசம் போகணும்னு ஏற்பாடு செஞ்சுண்டிருக்கியே, அதைத் தான் கேட்டேன்” என்று மஹான் சொல்ல, ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள், மஹான் தொடர்ந்து அதிர்ச்சிகளை அளித்தவாறு பேசலானார்:

“நீ இங்கு வந்த காரணத்தை நான் சொல்லவா? முந்தா நாள் நான் உன்னைத் தடவிக்கொடுத்து, ‘என்னை விட்டுப் போறயா?’ன்னு கேட்டேன்…. இல்லையா? அதனாலேதான் போகும்போது பார்த்துட்டுப் போகலாமுன்னு இங்கே வந்திருக்கே” என்றார். எப்பேற்பட்ட அதிசயத்தை மஹான் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் என்று திகைத்துப் போய் நின்றார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

தன்னை கிராமத்துக்கு வந்து ஆட்கொண்டது பிரமை அல்ல என்பதை அறிந்த அவர் கண்களில் நீர் மல்க, மஹானின் பொற்பாதங்களில் வீழ்ந்தார். மஹான் அவரை ஆசீர்வதித்தவாறே சொன்னார்.

“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்” என்பது மஹானின் அருள்வாக்கு. ஐயங்கார் ஸ்வாமிகள் என்ன செய்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்…….

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
வைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை.
மெல்ல பெரியவாளிடம் விண்ணப்பித்தாள் ” குடும்பத்துல பலவித கஷ்டங்கள். வியாதி வெக்கை. ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ஏழெட்டு வருஷம் ஆகியும், குழந்தை இல்லை. இன்னொரு பொண்ணுக்கு வயசு எகிறிண்டே போறதே ஒழிய வரன் அமைய மாட்டேங்கறது. பையனுக்கோ படிப்பே வரலை. பண கஷ்டம்………கேரளா போய் நம்பூதிரி கிட்டே பிரச்னம் பாத்தோம். பித்ரு தோஷமாம். பித்ரு கர்மாக்களை ஒழுங்கா பண்ணாம விட்டதுக்கு ராமேஸ்வரம் போய் பரிகாரம் பண்ணணும்…ங்கறார். வைஷ்ணவ சம்பிரதாயப்படி, ராமேஸ்வர யாத்ரை, பரிகார சடங்கு எதுவுமே பண்ணக் கூடாது. என்ன பண்ணறதுன்னே தெரியலை. பெரியவாதான் வழி காட்டணும்” என்றாள்.
“நீங்க தென்கலையா?”
“ஆமா”
“உப்புச்சாறு, சாணிச்சாறு, சடைச்சாறு….ங்கற மூணும் தென்கலைக்கு கெடையாது…….”
” ஆமாமா, எங்க அம்மா கூட உப்புச்சார், சாணிசார், சடைசார்…..ன்னு சொல்லுவா”
“அதேதான். ராமேஸ்வர சமுத்ர ஸ்நானம், உப்புச்சாறு. பஞ்சகவ்ய பிராசனம் சாணிச்சாறு. கங்காஸ்நானம் சடைச்சாறு. ஏன்னா, பரமேஸ்வரனோட சடையில் இருந்துதானே கங்கை வரது! அதுனால, சம்பிரதாய விரோதமா போகவேணாம். அதுக்கு பதிலா, நித்யம் சாளக்ராமம் [பெருமாள்] திருவாராதனம் பண்ணி, திருமஞ்சன தீர்த்தம் சாப்பிடணும். அப்புறம், எகாதசியன்னிக்கு உபவாசம் இருங்கோ. பால், பழம், கிழங்கு சாப்பிடலாம். அன்னிக்கு ஓங்காத்துக்காரர் பன்னெண்டு திருமண் இட்டுண்டு திருவாராதனம் பண்ணணும். சரியா? மறுநா, த்வாதசியன்னிக்கி சீக்கிரமாவே திருவாராதனம் பண்ணிட்டு, துளசி தீர்த்தம் சாப்டுட்டு பாரணை பண்ணணும். தெனமும் ஒரு பசுமாட்டுக்காவது ஒரு கைப்பிடி புல் தரணும். இப்பிடி பண்ணினா, சர்வ பிராயச்சித்தம் பண்ணினாப்ல ஆகும். பண்ணுவியா?”
பெரியவாளோட உபதேசம் ஆக ஆக, அந்த அம்மா அழுகையை அடக்க முடியாமல் மாலை மாலையாக கண்ணீர் விட்டாள்.
“பெருமாளே வந்து சொன்னா மாதிரி இருக்கு பெரியவா. என்னென்னமோ நெனச்சு குழம்பிண்டு இருந்தேன். ராமேஸ்வரம் போகத்தான் வேணும்னு சொல்லுவேள்னு நெனச்சேன். பெரியவா சுத்த ஸ்படிகம். சம்பிரதாய விரோதமில்லாம வழி காட்டிட்டேள்! ”
காமத்தை வென்ற காமேஸ்வரனே நம்மை மாதிரி அல்பங்களுக்காக இறங்கி வந்து நாவினிக்க “நாராயண நாராயண” என்று சொல்லி ஆசிர்வதிக்கும்போது, எல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்தானே!

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
My encounters with His Holiness Paramacharya – 1

I was first introduced to the Paramacharya way back in 1981 at the age of 11. My maternal grandparents are big devotees of his. They had the habit of getting his blessings before every marriage at home. It was before my youngest aunt’s marriage that year we made our way to Pandharpur in Maharashtra. At around 3:00 pm, the doors to his room were open to public and I saw him for the first time. The man who opened the door was none other than Balu Mama who is now Swaminadendra Saraswathi Swamigal. After about 2 hours of Darshan in the presence of 20 people, we returned to see him the next morning and once again in the evening. These three Darshans were my first encounters with him. I wondered why people keep asking him for things! Some people asked for his blessings so that their children could get married. One lady asked for Putra Bhagyam. Another man prayed for a promotion at work. The answer for all these queries was a silent blessings. My grandparents kept the wedding invitation and sought blessings. The two day trip to Pandharpur ended and we continued to Mantralayam and onwards to Madras later. Until then, my father did not get to meet him. In fact I don’t remember seeing him with a spiritual guru. But little did I know this was a start of something more profound.



My encounters with His Holiness Paramacharya – 2

My second meeting with him occurred when we visited Kanchipuram in 1984. Bala Periyavaa came into the Kanchi Mutt just 1 year before and we went to see the 3 of them. It was a routine visit for my grandparents. My mother could not come and my father was not so much into Mutt related activities then. He always believed work is worship. Paramacharya was seeing so many visitors come in. He enquired about my grandfather’s relatives and also asked about my parents and aunts/uncles. It was the first time I saw Bala Periyavaa and Nadu Periyavaa. I didn’t think much about the whole visit. Upon returning to Madras we continued with our work. It was around this time that my father who was a psychiatrist (Yes, he is the famous Lord Labak Das in Pennin Manathai Thottu) got a call from one of the Mutt folks regarding a patient. Since this involves confidential information I do not know much about the patient himself. But I do know that he was connected with the people in the Mutt. My father treated him as another patient and moved on as usual. However, one day he got a call from the mutt. The caller said that the paramacharya wanted to meet him at the mutt. As was always the case he was extremely busy and could not give any time for that. Then on a Sunday morning he just asked the driver to come home and asked him to drive to Kanchi. Two hours later he landed at the mutt. Then this happened.

Gentleman: Saar, are you Dr Mathrubootham.

Dad: Yes.

Gentleman: Are you the one who gives TV programs?

Dad: Yes.

Gentleman: Vanakkam saar, I am with the Kanchi Mutt. Swamiji said you will come today. So we were expecting you.

It was this moment that transformed our lives. It was a beginning of something that we will carry with us for lifetimes.



My encounters with His Holiness Paramacharya – 3

My parents had just been stunned by what they heard from the man at the entrance. Upon entering the mutt, my dad quickly changed over to the standard attire and walked towards him. This is what followed:

பெரியவா: உன் பேர் என்ன?

அப்பா: மாத்ருபூதம்

பெரியவா: சொந்த ஊர்?

அப்பா: கூத்தனூர். பேரளம் பக்கத்துல. தாத்தா குட்டக்கரை ராமசாமி ஐயர்.

பெரியவா: ஓ அன்னதானம் ராமசாமி ஐயரா!அவனுக்கு நான் தான் தீக்ஷை கொடுத்தேன். ராமனந்தா சாமி.

My great grandfather passed away in 1952 and this conversation was in 1985. How could someone remember an event so far back. My father could not believe it at all. At that point he sensed he was dealing with an extraordinary man. The conversation later meandered around the patients and my father’s work. Periyavaa was impressed with the progress made by the patient and blessed my parents. My dad was a totally transformed man after this event. Many in the mutt became his friends. Dad then decided not to get any fees from the patient he was treating. He then went for an interview with All India Radio. He said.
“We all get name, fame, health and wealth. But nothing can come close to the blessings we get from holy saints. That way, I am blessed.”



My encounters with His Holiness Paramacharya – 4

At the outset, thanks to one and all who have encouraged me with your likes and comments. Truly overwhelming :-) .

Upon completing his first visit to the mutt, my parents started going back there pretty often. For someone who didn’t believe in the concept of swamijis this was a total transformation. For many years we made frequent trips to Tirumala and other shrines. But not once did I see my father visiting saints. Yes, things do happen. Often, my brother and I would accompany them to Kanchi. Some other times, my maternal grandparents would also join in.

During such visits, the mutt officials would just inform that my dad has come. Swamiji would simply say “நீ இங்கேயே கொஞ்சம் நேரம் உட்காரு”. My dad would then talk about lots of things. Out of nowhere Swamiji would ask about small things in the temples near Koothanur. My grandfather (maternal) was also from Tanjore district and is a cousin to former President RV. He would also enquire about the Prez. It often amused me to hear him say “Avan, Ivan” when it came to the President of India (not yet then). Invariably the conversation would meander and come back to the specific patient. Upon hearing about developments he would say “நீ மடத்துக்கு இவ்வளவு செய்யறியே! நன்னா இரு! இந்த கோயிலுக்கு போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வா.” We would go to those temples and return there. Then he would specifically ask about people in that temple once we returned. I always used to think that he just knows them so well and so he asked about them.

Few months later the patient returned to the mutt. I remember it was around 1986 when it happened. Upon return of the patient, he said “இவன் நன்னா ஆயிட்டானா! க்ஷேமமா இரு! எல்லாம் உன் தயவு தான்”. He gave a சால்வை to my dad and blessed him. I remember seeing him smile big then! “அத்தருணத்தில் நடமாடிய தெய்வம் தான் எங்களைப் பார்த்து நகைத்தது என்று நான் உணரவேயில்லை”!


My encounters with His Holiness Paramacharya – 5

It was 1986 and we continued our regular visits to the mutt. My dad’s conversation with him continued. The wonders never stopped. My dad had to help out a Madras US consulate officer and meet his holiness with her. She had a strange question in her mind. She wondered if she should marry again for the 4th time! She was divorced thrice already. She smoked while traveling by car. Thankfully when she entered the mutt she stopped all of that. Upon meeting the swamiji she sat in front of him and neither of them spake. 15 minutes later she just stood up, did her pranams, walked out and thanked my dad later. She later told that his holiness told her not to marry for the 4th time now. My dad had written about this episode in a Tamil magazine after Swamiji’s Siddhi in 1994. In a tailpiece he had specifically mentioned. இவரின் தேவை பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? அது ஒரு புரியாத புதிர். அது புதிராகவே இருக்கட்டும். தெய்வீகமே ஒரு புதிர் தானே!



My encounters with His Holiness Paramacharya – 6

After about 5 or 6 visits in 85-86, my dad was called by the Mutt office. The message was “Sri
Jayendra Saraswathi wants to meet you.” I was there with him. In fact our entire family including
cousins, aunts, uncles were there in full force. We rented two additional cars as well. At the
mutt we met His Holiness. After blessing all of us he called my dad into his room and
discussed for over 1 hour. This was a one on one meet. We were curiously watching the
proceedings. After that my dad came out.

His Holiness said thus in a nutshell.

Jayendra Saraswathi: உன்னை இந்த மடத்துல எல்லாருக்கும் தெரியறதே! நீ
என்ன டாக்டர்?

Dad: I am a psychiatrist working in Madras.

His Holiness: உனக்கு ஒரு வேலை இருக்கு. கலவைன்னு ஒரு இடம்
காஞ்சியிலிருந்து 40 கிமீ தூரம். அங்கே ஒரு விருத்தாஸ்ரமமும், குழந்தைகள்
நல இடமும் இருக்கு. குடும்பத்தோடு நீ போய் அங்கே இருக்கிறவாளுக்கு
மருத்துவ சேவை செய்யணும்.

Dad: OK. I will do it.

His Holiness: மாசத்துக்கு ஒரு தடவை இல்லைன்னா ரெண்டு மாசத்துக்கு ஒரு
தடவை அவாளை போய் கவனிச்சுக்கோ.

Until then none of us knew that it was in the same kalavai swamiji had attained Sanyasam and
is considered the holiest of places for his devotees. The children’s home was for special
needs kids. Upon completion of the conversation we took leave and met with Paramacharya.
When told about this new mission, He was full of smiles and blessed us all. We returned home
after visiting a few temples in kanchi. Thus began the mission that has till date given us all the
bountiful blessings that we enjoy.

*****

Narrated by the blessed devotee Shri Basker Mathrubootham.

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

"சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே?"

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு


சிவராஜன் வீட்டில் பலவகையான கஷ்டங்கள், எந்தக் காரியத்தைத் தொட்டாலும் தோல்வி. இன்னது என்று கண்டுபிடிக்க முடியாத சிறு சிறு நோய்கள். வீட்டில் அன்யோன்யம் குறைந்தது. ஜோஸ்யர் சொன்னார், "உங்கள் ஜாதகப்படி பெரிய குற்றம் (தோஷம்) ஏதுமில்லை.அம்பாள் க்ஷேத்திரங்கள் ஐந்து இடங்களுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள்.அதுவே போதும்" காஞ்சி காமாக்ஷி,மதுரை மீனாக்ஷி, காசி விசாலாக்ஷி என்று பிரபலமாகக் கூறப்படுகின்ற அம்பிகைகளைத் தரிசனம் செய்துவிட்டார், சிவராஜன். இன்னும் இரண்டு சக்திபீடங்கள் போக வேண்டும். பெரியவாளிடம் வந்து விண்ணப்பித்துக்கொண்டார்.

"பெரியவா உத்திரவு செய்கிற க்ஷேத்திரம் போய் தரிசனம் செய்கிறேன்." தொண்டு செய்யும் சிஷ்யரைப் பார்த்தார்கள், பெரியவாள், " நீதான் ரெண்டு அம்மன் க்ஷேத்திரம் சொல்லேன்..." அவர் உடனே, "திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, திருவொற்றியூர் வடிவுடையம்மன் (திரிபுரசுந்தரி)" என்றார்.

"ரொம்ப சரி...இந்த ரெண்டு கோயில்லேயும் ஆதிசங்கரர் தரிசனம் பண்ணியிருக்கார். நான் ரெண்டு க்ஷேத்ரம் சொல்றேன். அங்கே முதல்லே போயிட்டு வா, வந்து திருவானைக்கா திருவொற்றியூர் போகலாம் என்ன?"

"உத்திரவுப்படி..."

"சிருங்கேரி சாரதாம்பாள், கொல்லூர் மூகாம்பிகை தரிசனம் பண்ணு முதல்லே..."

சிவராஜன் திருப்தியுடன் சென்றார்.

அருகிலிருந்தவர்களுக்குத்தான் ஆச்சரியமாக இருந்தது.எவ்விதத் தயக்கம் இல்லாமல்,சிருங்கேரி சாரதாம்பாள் தரிசனம் செய்யச் சொல்கிறார்களே?.

சிருங்கேரி மடம், காஞ்சி மடத்துக்கிடையே ஏதோ கசமுசா என்று சிலர் பேசுவார்களே? அது பொருளற்ற வார்த்தை என்பதைப் பெரியவாள் சுட்டிக் காட்டி விட்டார்கள். "அந்த ரெண்டு க்ஷேத்திரத்திலும் ஆதிசங்கரர் தபஸ் பண்ணியிருக்கார். க்ஷேத்திரவாசமே ரொம்பப் புண்ணியம்" என்றார்கள்,பெரியவாள்.

grsastrigal
Posts: 861
Joined: 27 Dec 2006, 10:52

Re: Kanchi Maha Periyava

Post by grsastrigal »

சரவணப் பொய்கை-சாக்ஷாத் பராசக்தியின் சரீரம்."

முருகனின் பூர்வ அவதாரம்-பெரியவா சொன்னது

(கிழக்கு தாம்பரத்தில் 30-09-2015 அன்று திரு சுந்தர் குமார் தன் உபன்யாஸத்தில் (சுப்ரமண்ய புஜங்கம்) அற்புதமாக விளக்கிக் கூறினார்).

(Thanks to Annadhanam mama of varagur)

பிரம்மாவின் மனஸிலிருந்து உதித்தவர் ஸனத்குமாரர். அவர் பிரம்ம ஞானி. சுகாசாரியார் மாதிரி, உள்ளும் புறமும் எல்லாம் ஒன்று என்று ஸதாகாலமும் உணர்ந்திருந்தவர். இப்படிப்பட்டவருக்கு விசித்திரமாக ஒரு நாள் ஸ்வப்னம் வந்தது. ஸ்வப்பனத்தில் தேவர்களும் அசுரர்களுக்கும் சண்டை நடந்தது. அதில் ஸனத்குமாரர் தேவ சேனாபதியாக யுத்தம் செய்து, அசுரர்களை எல்லாம் சம்ஹரிக்கிறார்.
விழித்தெழுந்ததும் அவருக்கே ஆச்சரியமாக இருந்தது. தகப்பனாரான பிரம்மாவிடம் போய் ஸ்வப்பனத்தைச் சொல்லி, அதற்கென்ன அர்த்தம் என்று கேட்டார்.


“குழந்தை! நீ பூர்வ ஜன்மத்தில் வேத அத்யயனம் செய்தாய். அதில் தேவாசுர யுத்தம் என்று வருவது உன் மனஸில் ஆழப் பதிந்துவிட்டது. வேத யக்ஞங்களால் ஆராதிக்கப்பட்டு அநுக்கிரகம் செய்கிறவர்கள் தேவர்கள். இவற்றை அழிக்க நினைக்கிறவர்கள் அசுரர்கள். உனக்கு வேதத்தில் இருந்து ஆழ்ந்த பிடிமானத்தால், “அசுரர்களையெல்லாம் நாமே சம்ஹாரம் செய்துவிட மாட்டோமா?’ என்று பூர்வஜன்மத்தில் ஆத்திரப்பட்டாய். அந்த நினைப்புத்தான் இந்த ஜன்மாவிலும் தொடர்ந்து வந்து ஸ்வப்னமாக வெளியாகி இருக்கிறது” என்றார் பிரம்மா.


ஸனத்குமாரரிடம் பிரம்மா, “உனக்கு எந்த எண்ணம் உண்டானாலும் அது வாஸ்தவத்திலேயே நடந்துவிடும். அதனால் நீ யதார்த்தமாகவே ஒருநாள் தேவ சேனாதிபதியாக அசுர சம்ஹாரம் செய்யத்தான் போகிறாய்
.
இந்த ஜன்மாவில் நீ, ‘தேவராவது, அசுரராவது, எல்லாம்
ஒரே பிரம்மம்’ என்று இருப்பதால், இன்னொரு ஜன்மா எடுத்து இதைச் செய்யப் போகிறாய்” என்றார்.


வாக்கு, மனம், சரீரம் மூன்றும் ஒருத்தருக்கு சத்தியத்திலேயே பிரதிஷ்டையாகிவிட்டால், அப்படிப்பட்டவர் உத்தேசிக்காமலே அவருக்கு ஒரு பெரிய சக்தி வந்துவிடும். அதாவது, அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும் என்றில்லாமல், அவர் எது சொன்னாலும் அதுவே சத்தியமாகிவிடும். தவறுதலாகவோ, தெரியாததாலோ அவர் உண்மைக்கு விரோதமாக ஒன்றைச் சொன்னால்கூடத் வாஸ்தவத்தில் அப்படியே நடந்துவிடும். பரம சத்தியத்திலேயே ஸ்திரமாக நின்ற ஸனத்குமாரர் எதை நினைத்தாலும் – ஸ்வப்னத்தில் நினைத்தால்கூட – அதுவே சத்தியமாகிவிடும்.


இந்த சமாசாரம் தெரிந்து கொண்ட பின் ஸனத்குமாரர் ஆத்மாராமராக, பரப்பிரம்மத்தைத் தன்னில் தானாக அநுபவித்துக்கொண்டு, பழையபடியே உட்கார்ந்து விட்டார். லோகமெல்லாமே அவருக்கு ஸ்வப்னமாகி விட்டதால் தம் ஸ்வப்பனத்தைப் பற்றி நினைக்கவேயில்லை.


ஆனால் இவர் ஸ்வப்பனத்தில் நினைத்த நினைப்பு அசத்தியமாக போய்விடக்கூடாதே என்று பரமேசுவரனுகக்கு விசாரம் வந்துவிட்டது. அதனால், இவர் தரிசனத்துக்காகத் தபஸ் பண்ணாதபோதே, அவராகப் பார்வதீ ஸமேதராக இவருடைய ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.


ஸனத்குமாரருக்கோ மரம், மட்டையிலிருந்து சகலமும் ஒரே பிரம்மமாகத்தான் தெரிந்தது. பிரம்மத்தில் உசந்த பிரம்மம் தாழ்ந்த பிரம்மம் என்று உண்டா என்ன? எல்லாம் பிரம்மம் என்ற மாதிரியே பரமேசுவரனும் பிரம்மமாகத் தெரிந்தார். அவரை உபசரிக்க வேண்டும், பூஜை பண்ண வேண்டும் என்ற எண்ணமே ஸனத்குமாரருக்குக் கொஞ்சம் கூட உண்டாகவில்லை. அவர் தம்பாட்டுக்கு உட்கார்ந்தது உட்கார்ந்தபடி இருந்தார்.


பார்வதீ – பரமேசுவராள் ரொம் நேரம் நின்று பார்த்தார்கள். ஒரு பலனும் இல்லை. இப்படி மகா ஞானியாக ஒரு பிள்ளை இருப்பதைப் பார்த்து அவர்களுக்குப் பரமப் பிரீதிதான். இருந்தாலும் ஈசுவரன் பொய்க் கோபத்துடன் ‘ஞானி என்ற அகங்காரம்தானே உனக்கு? நாங்கள் லோகத்தின் மாதா பிதாக்கள் வந்திருக்கும்போது அவமதித்துவிட்டாயே. நான் சாபம் கொடுத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார்
ஸனத்குமாரர் பயந்துவிடவில்லை. அலட்சியமாக, “நீர் சாக்ஷாத் மகா கோபிஷ்டரான ருத்திரராக இருந்து சாபம்தான் கொடும். அது ஆத்மாவைப் பாதிக்காது” என்று சொல்லிவிட்டு நிச்சிந்தையாக இருந்தார்.


‘அடடா, எப்பேர்ப்பட்ட உண்மையான ஆத்ம ஞானி!’ என்று ஈசுவரனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.
இன்னும் கொஞ்சம் பரீட்சை பார்த்து, பூராவும் ஞானி தானா என்று தெரிந்துகொள்வோம் என்று நினைத்து, “அப்பா; உன்னுடைய ஞானத்தை நான் ரொம்பவும் மெச்சுகிறேன். என்ன வேண்டுமானாலும் வரம் கேள். தருகிறேன்” என்றார்.
ஸனத்குமாரர் சிரித்தார். ‘உம் வரத்தை நீரே வைத்துக் கொள்ளும். எதை அடைந்தபின் இன்னொன்று வேண்டும் என்ற ஆசை லவலேசமும் இருப்பதில்லையோ, அப்படிப்பட்ட நிறைந்த நிறைவாக இருக்கிற எனக்கு வரத்தினால் ஆக வேண்டியது கடுகத்தனைக்கூட இல்லை’ என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.


அதற்கும் ஒரு படி மேலே போனார். “பரமேசுவரா! நீ பேசுவதிலிருந்து பார்த்தால் நீதான் வரம், சாபம் இதுகளிலெல்லாம் ஏதோ அர்த்தம் இருக்கிறதென்று நினைப்பதாகத் தெரிகிறது. அப்படியானால் சரி, உனக்கு ஏதாவது வரம் வேண்டுமானால் கேள். தருகிறேன்” என்றார்.


ஸனத்குமாரர் சொன்னதைக் கேட்டு ஈசுவரனுக்குப் பெருமையாக இருந்தது. நம் குழந்தை நம்மிடம் ‘தாட்பூட்’ செய்தால், நமக்கு சந்தோஷமாகத்தானே இருக்கும்? சர்வ லோக மகேசுவரனான அவர் ரொம்பவும் தழைத்து தம்மைச் சிறியவராக்கிக் கொண்டு ஸனத்குமாரரிடம் வரம் கேட்டார். இவருடைய ஸ்வப்பனத்தை நிஜமாக்க இதுவே வழி என்று நினைத்துக் கேட்டார்.


“அப்பா! இப்பேர்ப்பட்ட மகா ஞானியான நீ பிரம்மாவுக்குப் பிள்ளையாகப் பிறந்திருக்கிறாய். பிரம்மா செய்த பாக்கியம் எனக்கும் கிடைக்கும்படியாக வரம் கொடுப்பாய்! இன்னொரு ஜன்மாவில் நீ எனக்குப் புத்திரனாகப் பிறக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.


“ஆஹா, உனக்குப் பிள்ளையாகப் பிறக்கிறேன்” என்று ஒப்புக் கொண்டார் ஸனத்குமாரர். ஞானம் வருகிறவரையில்தான் இனிப் பிறவி வேண்டாம் என்று அழுவோம்.
ஞானம் வந்துவிட்டால் எப்போதும் ஆனந்த ஸாகரம்தான். ஜன்மா கின்மா எல்லாம் அதில் ஒரு சின்னக் குமிழி மாதிரிதான். அது வேண்டும் வேண்டாம் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாது.


ஸனத்ககுமாரர் சொல்வதெல்லாம் சத்தியமாகிவிடும் அல்லவா? இப்போது ஈசுவரனை மட்டும் பார்த்ததுதான் ‘உனக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்றார். அம்பாளையும் சேர்த்து, ‘உங்களுக்குப் பிள்ளையாகப் பிறப்பேன்’ என்று சொல்லவில்லை.


இதையும் ஸனத்குமாரர் யோசித்துப் பார்த்தார். ஸனத்குமாரருக்கும் தாம் பார்வதியை நீக்கி பரமேசுவரனுக்கு மட்டும் பிள்ளையாகப் பிறப்பதாகச் சொன்னதிலும் ஒரு நியாயம் தெரிந்தது. அவருக்கு எவரிடமும் நிர்ப்பயம் தான். அதனால் அந்த நியாயத்தை வெளிப்படையாகவே சொன்னார்.


‘கேட்காதவருக்கு ஒன்றைத் தரக்கூடாது என்று சாஸ்திரம். அந்த நியாயப்படி நீதான் என்னிடம் வரம் கேட்டாயே தவிர, பார்வதி கேட்கவில்லை. ஆகவே, உனக்கு மட்டுமே பிள்ளையாகப் பிறப்பேன். நீ மட்டுமாக என்னை எப்படி உற்பவிக்கச் செய்வாயோ, அப்படிச் செய்துகொள்” என்று ஸ்வாமியிடம் சொன்னார்.


இதைக் கேட்டதும் அம்பாளுக்கு ரொம்ப ஏமாற்றமாக, பரம துக்கமாக ஆகிவிட்டது. லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் அவள் குழந்தைகள்தாம் என்றாலும், இது அந்த ஞானாம்பாளுக்கே தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட ஒரு பிரம்மஞானி மறுபடியும் பிறக்கிறபோது, அவன் நேராகத் தனக்குப் பிள்ளையாகப் பிறக்கவேண்டும் என்று அவளுக்கும் ஆசையிருந்தது.


இவர் சாஸ்திரத்திலிருந்து நியாயம் காட்டினமாதிரி, அவளும் காட்டித் தர்க்கம் பண்ணினாள். “சாஸ்திரங்களில் பதியையும் பத்தினியையும் ஒன்றாகத்தான் சொல்லியிருக்கிறது. பதி பிரார்த்திப்பதெல்லாம் பத்தினியையும் உத்தேசித்துத்தான். ஆனதால் நான் தனியாக வரம் கேட்க வேண்டும் என்றில்லை. அவர் கேட்டதாலேயே நீ எனக்கும் புத்திரனாக வரத்தான் வேண்டும்” என்று ரைட் கேட்டாள்.


ஸனத்குமாரர் யோசித்தார். “அம்மா, நீ சொல்வது நியாயம்தான். இருந்தாலும் நான் ஈசுவரனிடமிருந்து மட்டும் உற்பவிப்பது இன்னொரு தினுசில் எனக்குத் திருப்தி தருவதாகத் இருக்கிறது. எல்லாம் பிரம்மம் என்று எனக்குத் தெரிந்தாலும், அதற்கே நீங்கள் இரண்டு பேரும் எனக்கு இத்தனை ‘டைட்டில்’ கொடுத்தாலும், ஒரு விஷயத்தில் எனக்குப் பக்குவம் வரவில்லை. அதாவது, ஸ்திரீ புருஷ சம்பந்தத்தில் நாம் பிறப்பதாவது, கர்ப்பவாசம் செய்து கீழ்முகமாக ஜனிப்பதாவது என்று இன்னமும் எனக்கு அருவருப்பாகத்தான் இருக்கிறது. பிரம்ம ஞானிக்கு இப்படி இருக்கக் கூடாததுதான். ஆனால் ஏனோ இருக்கிறதே. அதனால் இதைச் சொல்கிறேன். ஆகையால் நீ பெரிய மனசு பண்ணி, உன் பதி மட்டுமே என்னைச் ஜனிக்கச் செய்வதற்கு அநுமதி தர வேண்டும்” என்றார்.


ஆனால் அம்பாளுக்கு மனசு வரவில்லை.
யோசித்துப் பார்த்துக் கடைசியில் ஒரு ‘ராஜி’ க்கு – ‘காம்ப்ரமைஸு’க்கு – வந்தார்கள்.


ஆதியில் பரமேசுவரன் பஸ்மாசுரனுக்கு வரம் தந்திருந்தார். இந்த வர பலத்தால், அவன் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிவிடுவார்.


வரம் பலிக்கிறதா என்று பரமேசுவரனிடமே பரீட்சை பார்க்க வந்தான் அசுரன். உடனே அவர் அந்தர்த்தானமாகி விட்டார்.
அந்தச் சமயத்தில் அம்பாள் ஏதோ லீலா நிமித்தம் தன்னுடைய ஸர்வக்ஞத்வத்தை மறைத்துக்கொண்டு சாதாரண ஸ்திரீ மாதிரி இருந்தாள். எனவே, திடீரென்று பரமேசுவரனின் சரீரம் மறைந்ததைப் பார்த்ததும் அவளுக்குப் ‘பகீர்’ என்றது. பதிவிரதா ரத்தினமான அவளால் ஈசுவரனின் பிரிவைத் தாங்க முடியவில்லை. அப்போதே அப்படியே உருகிவிட்டாள்.


யதார்த்தத்திலேயே அவளுடைய சரீரம் உருகி ஒரு ஜலாசயமாக (நீர் நிலையாக) ஆகி விட்டது. அதுதான் சரவணப் பொய்கை.


பிறகு பஸ்மாசுரன் மறைந்து ஸ்வாமி சரீரத்துடன் வந்ததும், அம்பாளும் தன் திவ்விய தேகத்தை எடுத்துக் கொண்டாள். இருந்தாலும் அவளுடைய பதிவிரதா தர்மத்துக்கும் பிரேமைக்கும் அடையாளமாக சரவணப் பொய்கையையும் அழியாமலிருக்கும்படியாக அநுக்கிரகத்தாள். சரவணம் சாட்க்ஷாத் இவள் சரீரம்தான். அது இப்போது நினைவுக்கு வந்தது.


அதனால், ஸனத்குமாரர் அடுத்த ஜெனமாவில் பரமேசுவர தேஜஸாக ஜனித்து விடுவதென்றும், பிறகு அதை அம்பாள் சரவணம் என்ற தன் சரீரத்தில் தாங்கி ஸுப்ரம்மண்ய ஸ்வரூபமாக்கித் தருவதென்றும் முடிவு செய்து கொண்டார்கள்.


இதன்படியே பிற்பாடு ஈசுவரன் தன் நெற்றிக் கண்களிலிருந்து பொறிகளை வெளியிட்டார். ஸனத்குமாரர்தான் இப்படி ஆவிர்பவித்தவர். அந்தத் தேஜசின் உக்கிரத்தை எவராலும் தாங்க முடியவில்லை. முதலில் கங்கை தாங்கப் பார்த்தாள். முடியவில்லை.


அப்போது பிரம்மா அவளிடம், “இதைக் கொண்டுபோய் சரவணத்தில் சேர்த்துவிடு” என்றார்.


“ஆனானப்பட்ட என்னாலேயே தாங்க முடியாத உக்ர ஜ்வாலையை அந்தச் சின்னப் பொய்கை எப்படித் தாங்கும்?” என்று கங்கை அவரைக் கேட்டாள்.


அவர், “சரவணம் என்பது சாக்ஷாத் பராசக்தியின் சரீரமாகும். அது ஒன்றாலேயே ஈசுவர தேஜஸை தாங்க முடியும்” என்றார்.


இதன்படியே கங்கை செய்ய, சரவணபவனாக முருகன் அவதரித்தான். பிறகு ஸனத்குமாரர் கண்ட ஸ்வப்னப்படி தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாகி, அசுரர்களை ஸமூலம் இருந்த இடம் தெரியாமல் சம்ஹாரம் செய்து சர்வ லோகங்களையும் ரக்ஷித்தான் இந்த சரவணபவன். அவருக்கு எத்தனை பெயர்கள் இருந்தாலும் இதுவே ஷடக்ஷரி, ஆறெழுத்து என்று மகாமந்திரமாக இருக்கிறது. சரவணமாக இருக்கும் அம்பாளின் மகிமை!


ஸனத்குமாரர்தான் ஸ்கந்தர் என்று சந்தோக்ய உபநிஷத்திலும் ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறது. அதில் அவரே ஞான பண்டிதர் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனானப்பட்ட நாரத மகரிஷி ஸனத்குமாரரிடம்தான் ஞானோபதேசத்துக்காக வருகிறார். ‘சகல வேதங்களையும், இதிஹாச புராணங்கள், சகல சாஸ்திரங்கள், தேவ வித்யை, பிரம்மவித்யை, பூத வித்யை, நக்ஷத்திர வித்யை என்று ஒன்று பாக்கியில்லாமல் எல்லா விஷயங்களையும் கரைத்துக் குடித்து விட்டேன். ஆனால், இதனாலெல்லாம் வெளி சமாசாரங்கள், மந்திரங்களைத்தான் தெரிந்து கொண்டேனே யொழியத் தன்னைத்தெரிந்து கொள்ளவேயில்லை. ஆத்மாவை அறியாததால் துக்கத்தில்தான் இருக்கிறேன்.நீங்கள்தான் என்னைத் தூக்கி அக்கரை சேர்க்க வேண்டும்’ என்றார் நாரதர்.


ஸனத்குமாரர், “ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்று தேடிப்போக வேண்டியதில்லை. கீழும் மேலும், முன்னும் பின்னும், வலது பக்கமும் இடது பக்கமும் எல்லாம் ஒரே ஆத்மாதான். அதைப் பற்றியே ஒருத்தன் தியானித்து தியானித்து, அதுவாகவே ஆகிவிட்டால், அப்புறம் அதிலேயே அவன் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கிறான். உண்மையான ஸ்வராஜ்யம் தன்னைத்தானே ஆண்டு கொள்கிற இந்த நிலைதான். இவன்தான் ‘ஸ்வராட்’ – உண்மையான சக்கரவர்த்தி. இந்த உத்தம நிலையை அடைய முதலில் ஆகார சுத்தியில் ஆரம்பிக்க வேண்டும். பிறகு படிப்படியாக சித்தசுத்தி உண்டாகி, மனசு நன்றாக தியானத்தில் நிலைத்து நின்று, எல்லாக் கட்டுக்குள் தெரித்து விழுந்து, ஆத்ம ஸ்வரூபமாகவே இருப்பான்” என்று வழிகாட்டினார்.


‘இப்படியாக பகவான் ஸனத்குமாரர், இருள் கடந்த நிலையைக் காட்டினார். ‘அவருக்குத்தான் ஸ்கந்தன் என்று பேர்;


அவருக்குத்தான் ஸ்கந்தன் என்ற பேர்’ என்று உபநிஷத்து இரண்டு தடவை முத்தாய்ப்பு வைக்கிறது.


இருள் கடந்த ஒளி, ஞானாக்னி முருகன்தான். அதைத்தான் சாந்தோக்யம் சொல்கிறது

--

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

அருமையான தொகுப்பு. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
தஞ்சாவூரான்
03 10 2015

kvchellappa
Posts: 3598
Joined: 04 Aug 2011, 13:54

Re: Kanchi Maha Periyava

Post by kvchellappa »

From FB:
கும்பகோணத்திலிருந்து கல்லூரி மாணவன்
ஒருவன் வந்து நமஸ்கரித்து நின்றான்.
'எந்த ஊர்""
''கும்பகோணம்''...என்ன படிக்கிறாய்?''

''தாவர இயல் முதலாம் ஆண்டு.''

அந்த சமயம் பக்தர் ஒருவர் தட்டு நிறைய
பழம், வெற்றிலை இத்யாதி களை
சமர்ப்பித்தார்.
தட்டில் இருந்த வெற்றிலையை சுட்டிக் காட்டி,
''இது என்ன?''
''வெற்றிலை''
''வெற்றிலை என்று பெயர் வந்த காரணம்
தெரியுமா'' என சம்பாஷணையைத்
தொடர்ந்தார்.
மாணவன் ஒன்றும் பதில் சொல்லாமல்
திகைத்து நின்றான்.
ஸ்ரீ ஸ்வாமிகளே தொடர்ந்தார்.

''நீ வெற்றிலைக் கொடிக்காலைப்
பார்த்திருக்கியோ''
அனேகமாக எல்லாக் கொடிகளிலும்
வளர்ந்தபின் பூ பூக்கும், காய் காய்க்கும்.
இதில் மட்டுந்தான் பூவும் கிடையாது ;
காயும் கிடையாது. வெறும் இலை மட்டும்
கொண்ட தாவரம் இது...அதனால்தான்
வெற்றிலை!''

தாவரையல் மாணவனுக்கு வியப்பு
அடங்கவில்லை. எப்படி?

அவர் ஸர்வேச்வரன்..அவருக்குத்
தெரியாதது பூவுலகில் என்ன இருக்கிறது!
ஜய ஜய சங்கரா....

கும்பகோணம் வேணுகோபாலன் தகவல்.


thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share

Varagooran Narayanan

"லோசனா கமல லோசனா-தர்பார்
( முக்காலமும் உணர்ந்த ஞானி)

(நவராத்திரியில் நடந்த ஒரு சம்பவம்)

காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு ஆசியளிக்கும் போது, நகைச்சுவையாக பேசுவதும் உண்டு. ஒரு சமயம், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடந்து கொண்டிருந்தது. அதில் தினமும் வித்வான்கள் பாடுவர்.விழாவின் ஒருநாள் மாலையில், பெரியவரை தரிசிக்க பக்தர் ஒருவர் வந்தார். எழுத்தாளரான அவர், தன் புத்தகங்களை பெரியவரிடம் காட்டி விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார். பக்தர்கள் பலர் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் பெரியவர் எழுத்தாளரிடம்,

""இப்போது நீ காமாட்சியம்மனைத் தரிசித்து விட்டு வா. அங்கு தர்பார் நடக்கிறது. சீக்கிரம் முடிந்து விடும், வேகமாகச் செல்,'' என்றார்.

எழுத்தாளர் சென்றபோது, அம்மன் தர்பார் அலங்காரத்தில் இல்லாமல் வேறு அலங்காரத்தில் காட்சியளித்தாள்.

""பெரியவர் "தர்பார் அலங்காரம்' என்று சொன்னாரே!. இங்கு வேறு அலங்காரத்தில் அம்பாள் இருக்கிறாளே!'' என்று குழப்பமடைந்தார்

. அப்போது, இனிய கானம் காற்றில் மிதந்து வந்தது. தர்பார் ராகத்தில், ""லோசனா.. கமல லோசனா'' என்று பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிக்கொண்டிருந்தார்.

""அடடா..நாமோ தர்பார் அலங்காரம் என்று நினைத்து வந்தோம். இங்கே தர்பார் ராக பாடல் அல்லவா பாடப்படுகிறது! பெரியவர் சொன்னதை இப்படி புரிந்து கொண்டோமே! அவருடைய நகைச்சுவை உணர்வு தான் என்னே!'' என்று சிரித்தபடியே, மற்றவர்களிடமும் இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொண்டார்.

மற்றவர்களும் இதுகேட்டு சிரிக்க, ""அது சரி...தர்பார் ராகத்தில் எம்.எஸ்., பாடுவார் என்பது முன்கூட்டியே எப்படி பெரியவருக்குத் தெரிந்தது! முக்காலமும் உணர்ந்த ஞானி என்று சொல்வது இதனால் தானோ என்று பரவசமும் அடைந்தனர்

thanjavooran
Posts: 2972
Joined: 03 Feb 2010, 04:44

Re: Kanchi Maha Periyava

Post by thanjavooran »

A share
சாப்பாட்டுராமரான ஸ்ரீ ராமர்
சாப்பாட்டில் அதிகம் விருப்பம் உள்ளவர்களை "சாப்பாட்டுராமா!" என கேலி செய்வதுண்டு.
ஸ்ரீ ராமருக்கு இந்த சாப்பாட்டுராமன் என்ற பெயர் எப்படி வந்தது? --ஸ்ரீமஹாபெரியவா....
இலங்கையில் போர் முடிந்து ராவணனை வதம் செய்தபின் ஸ்ரீ ராமர் சீதை லஷ்மணர் சுக்ரீவர் விபீஷணர் மற்றும்
வானரப்படைகளுடன் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில், அயோத்திக்கு செல்லு முன்பாக பரதவாஜ முனிவரை
தரிசிக்க விரும்பினார்.
ஆனால் அயோத்திக்குச் செல்ல நேரம் தாமதமானால் பரதன் தீமூட்டி அதில் தான் விழுந்துவிடுவதாய் சொன்னதை
நினைத்துப் பார்த்தார். 14 ஆண்டுகள் முடிந்த உடனேயே அண்ணன் வராவிடில் தான் தீயில் விழுந்து மாண்டுவிடுவதாக
முன்னமே பரதன் சொல்லி இருந்தான். பரதன் சொன்னதை செய்யக்கூடியவன் என ராமர் அறிவார். ஆனாலும் பரத்வாஜ
முனிவரை தரிசிக்காமல் செல்ல மனமுமில்லை. முனிவரை விரைந்து சென்று தரிசித்து பின் அயோத்தி செல்ல
முடிவுசெய்தார். பரத்வாஜமுனிவர் ஸ்ரீ ராமர் சீதா பிராட்டியயும் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.
”இரவாணனை வெற்றிகொண்ட ஸ்ரீராமா! என் ஆஸ்ரமத்திற்கு நீ வந்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று இரவு இங்கே தங்கிவிட்டு
நாளை இங்கு நடக்கும் ததீயாராதனையில் கலந்துகொண்டு (திருமாலடியார்க்கிடும் விருந்துணவு) உணவு உண்டு செல்ல
வேண்டும்”என்று கேட்டுக்கொண்டார். ராமரால் முனிவரின் வேண்டுகோளை நிராகரிக்க முடியவில்லை. ஆனால் அதே
நேரம் தன் வருகை தாமதமானால் தம்பி உயிர் துறப்பான் என்றும் அஞ்சினார்.ஆகவே அனுமனை அழைத்தார்.
”அஞ்சனைகுமாரனே !என் அருமை பக்தனே! எனக்காக நீ பரதனிடம் சென்று நான் எல்லோருடனும் வந்துகொண்டிருப்பதை
சொல்லி விட்டுவா.வாயு புத்திரனான நீ இதை காற்றாய் ஓடிச்சென்று முடித்து உடன் இங்குவரவேண்டும்”. அனுமன்
அண்ணல் சொன்ன சொல்லை நிறைவேற்ற இறைப்பொழுதில் அங்கிருந்து அகன்றான்.

மறுநாள்...

விருந்திற்காக இலையினைப் போட்டார் முனிவர் பெருமான். அனைவரும் அமர்ந்துவிட்டனர். அனுமன் பரதனை
சந்தித்துவிட்டு வந்துவிட்டான் அனுமன் விருந்துக்குவருவாரென முனிவர் நினைக்கவில்லை.அனுமனுக்கு இலை எதுவும்
காலி இல்லை. ராமன் அன்புடன்.அனுமனை தன் இலைக்கு எதிர்ப்புறம் அமரச்சொல்கிறார். அனுமன் காய் பழங்களைத்தான்
உண்பார் என ராமருக்குத்தெரியும் ஆகவே பரிமாறுபவர்களிடம் இலையின் மேல்பக்கத்தில்(அனுமன் அமர்ந்த திசையில்
அல்லது அவருக்கு அருகிலிருந்த இடத்தில்) காய் பழங்களைபரிமாரச்சொல்கிறார். அரிசி சாதம் மற்ற உணவு
வகைகளைத் தன் பக்கம் போட சொல்கிறார். இருவரும் ஒரே இலையில் சாப்பிட்டுமுடிக்கின்றனர்
சாப்பாட்டிற்காக முனிவர் கேட்டுக்கொண்டார் என்று தன் பயணத்தின் இடையே தங்கி சாப்பாட்டினை முடித்துக்
கொண்டதால் ராமர் சாப்பாட்டு ராமன் ஆகிறார் ..அப்படியே காலபோக்கில் சாப்பாட்டில் விருப்பம் உடையவர்களை
இப்படிப் பெயரிட்டு அழைப்பது வழக்கமாகிவிட்டது

Pratyaksham Bala
Posts: 4164
Joined: 21 May 2010, 16:57

Re: Kanchi Maha Periyava

Post by Pratyaksham Bala »

... அனுமன் பரதனை சந்தித்துவிட்டு வந்துவிட்டான். அனுமன் விருந்துக்கு வருவாரென முனிவர் நினைக்கவில்லை ...
இது எந்த ராமாயணத்தில் இருக்கிறது ?
வால்மீகி ராமாயணத்தில் இல்லை !

பரதனிடம் செய்தியைக் கூறிய பின், ராமன் அயோத்திக்கு வரும் வரையில், ஹனுமான் அயோத்தியிலேயே இருந்தார் என்றே வால்மீகி ராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.

Post Reply