Started to write something about aNNan after having written on thangai. marugan has to wait for some more time or He has to make me more productive.
Loosely based on
http://vedabase.net/sb/10/enSo far could write only 4 verses.
காப்பு (கட்டளைக் கலித்துறை)
பார்த்தன் தனக்குத் தவமுனி வர்போற் றுபாற்கடலான்
தூர்த்தர் தனையழித் தாழியான் தானிறங் கிச்சமர்க்கு
ஆர்த்தே புறப்படு இக்கண மேயென செப்பியானை
வார்த்தை பலகோர்த் துயான்பா டவேழமே செய்துணையே
தேமா புளிமா கருவிளம் தேமா கருவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா கருவிளம் கூவிளங்காய்
குறை பொறுத்தருள வேண்டல் (பலவிகற்ப பஃறொடை வெண்பா)
முகில்நிறத் தானிப் புவியில் இறங்கி
அகில்குழம் பும்சந் தனமும் தான்தரித்துக்
கோதை யரும்ஞா னியரும் நெஞ்சுவக்க
போதை அளித்த தொருகதை யைத்திரு
மாலோன் யதுகுலத்தில் வந்தகா தையினை
மேலோர் பலரிருக்க யானும் சொலப்போந்தேன்
நற்ற மிழறிவு மிக்காரும் தக்காரும்
குற்றம் பொறு
ருத்தருள் வீர்
கருவிளம் தேமா புளிமா புளிமா
கருவிளம் தேமா புளிமா கூவிளங்காய்
தேமா புளிமா புளிமா கூவிளங்காய்
தேமா புளிமா கருவிளம் கூவிளம்
தேமா கருவிளங்காய் கூவிளம் கூவிளம்
தேமா கருவிளங்காய் தேமா புளிமாங்காய்
தேமா கருவிளம் தேமாங்காய் தேமாங்காய்
தேமா கருவிளம் நாள்
காண்டம் ஒன்று (கட்டளைக் கலித்துறை)
பாண்டு குலமுதித் தான்பரீட் சித்தவன் கேட்டகேள்வி
தாண்டவ ருத்திரன் போற்சடை யன்வியா சன்மகற்குத்
தேனென தித்திக் கநன்றி நவின்று கலிதனிலே
வானெட் டியதுயர் தீர்ப்பான் திருடன் கதையுரைத்தே (௧)
தேமா கருவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளம் கூவிளங்காய்
கூவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா புளிமா கருவிளங்காய் (௧)
கூறுவீர் என்றுரைத் தார்கூ றினார்தன் செவிமடுத்தார்
பேறுமிக் குற்றார் வசுதே வனவன் மகற்கதையே
மேற்கீழ் நடுஉல கெல்லாம் முராரிதன் கால்நகத்தில்
தோற்றிய கங்கை யவள்தான் புனிதப் படுத்துமாறே (௨)
கூவிளம் கூவிளம் தேமா புளிமா கருவிளங்காய்
கூவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய்
தேமா கருவிளம் தேமா கருவிளம் கூவிளங்காய்
கூவிளம் தேமா புளிமா புளிமா கருவிளங்காய் (௨)
It is going to be quite a loooooooooooooooooooong bumpy ride, so if you have time and patience, please join .